முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.. சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனு...