முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு நல்ல செய்தி!

இந்திய‌ ஊடகத்துக்கு இது முக்கியமான ஆண்டு. ஏனென்றால், இந்த ஆண்டில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் ஊடகத்துறையில் நிகழ்ந்துள்ளன. ஒன்று, ‘ராம்நாத் கோயங்கா விருது’ வழங்கும் விழாவில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ஆசிரியர் ராஜ் கமல் ஜா, பிரதமர் முன்னிலையில் அவரது அரசையே விமர்சனம் செய்திருக்கிறார். இன்னொன்று, என்.டி.டி.வி. மீதான தடையும் அது சார்ந்த விவாதங்களும்! இந்த இரண்டும் சொல்லும் நல்ல செய்தி... ஊடகச் சுதந்திரத்தை யாரும் நெரிக்க முடியாது என்பதே! இவற்றில் என்.டி.டி.வி. மீதான மத்திய அரசின் தடை உத்தரவு, பல கேள்விகளை எழுப்புகிறது. என்.டி.டி.வி. செய்தது சரியா, அரசு செய்தது சரியா என்று தீவிரமாக அலசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் வெளியாகியிருக்கிறது, ‘மோர் நியூஸ் இஸ் குட் நியூஸ்’ எனும் புத்தகம். என்.டி.டி.வி. ஆரம்பித்து தற்போது 28-வது ஆண்டில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் ஊடகத்துறையில் தனது 25 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்ததன் நினைவை அசைபோடும் விதமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது. என்.டி.டி.வி.யின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஆயி...

500 / 1000 நோட்டு: சாதாரணர்கள் என்ன செய்யலாம்?

500 / 1000 நோட்டு: நேற்றைய நள்ளிரவு முதலாக‌ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கேபினெட் முடிவு செய்திருக்கும் நிலையில், இதனால் கறுப்புப் பணம் வெளியே வருமா, கள்ளப் பணம் ஒழிக்கப் படுமா என்றெல்லாம் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்துக் கொள்ளட்டும். ந‌ம் போன்ற சாதாரணர்கள் இச்சிக்கலைக் கடப்பதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். சாதாரணர்கள் என்றால் ஏழையோ, பணக்காரரோ, மத்யமரோ கறுப்புப் பணம் பற்றிய கவலையற்ற எளியோர். இந்திய ஜனத்தொகையில் உத்தேசமாய் 90 விழுக்காடு இவ்வகைமையில் தான் வரும். 1. நாளை முதல் வங்கிகளில், தபால் அலுவலகங்களில் பழைய 500 அல்லது 1000 நோட்டுக்களைக் கொடுத்து விட்டு புதிய நோட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம். (நவம்பர் 24 வரை தலைக்கு ரூ. 4,000 உச்ச வரம்பு. பிற்பாடு இது உயர்த்தப்படும்.) 2. மேற்கண்ட‌ எல்லா இடங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்கேனும் கூட்டம் பெரிய அளவில் இருக்கும். பணியிடத்தில் விடுப்பு / அனுமதி பெற்றே இதைச் செயல்படுத்த வேண்டி இருக்கலாம். அதற்குத் தயார் செய்து கொள்ளுங்கள். 3. அத்தியாவசியங்கள் தவிர்த்து முடிந்த அளவு உங்கள் மற்ற‌ செலவுகள...

பாலியல் வன்முறை - ஒரு சமூக பார்வை -

தினமும் செய்தித்தாள்களைத் திருப்பினால் பாலியல் வன்முறை, பாலியல் கொலை, ஒருதலைக் காதல் கொலை மற்றும் பாலியல் சீர்கேடு தொடர்பான செய்திகள் இல்லாமல் இருப்பதில்லை. இவ்வாறு ஏன் எப்போதைக்கும் இல்லாமல் தற்போது நிகழ்கிறது. இதற்கு என்ன காரணம்? இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களிடம் இவ்வாறான நிலைபாடு இல்லாத போது ஆறு அறிவு படைத்த மனித இனம், பகுத்தறிவு படைத்த மனித இனம் மற்றும் மகான்களும்,பெரியவர்களும் வழிகாட்டி வழிநடத்தப்படுகின்ற மனித இனம், இவ்வாறான அவல நிலைக்கு ஆட்பட வேண்டிய காரணம் என்ன? என்று ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஹோமியோபதி ஆய்வாளர் என்ற முறையில் இதை „சமூகத்தால் திணிக்கப்பட்ட வியாதி… என்ற கூற வேண்டியுள்ளது. பாலுறவு என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. மற்ற உயிர்களுக்கு பாலுறவு என்பது இனவிருத்தி என்பது முதன்மையானதாகவும், இன்பம் துய்ப்பது இரண்டாம் நிலையாகவும் இருக்கிறது. ஆனால் மனிதனில் மட்டும் இன்பம் துய்ப்பது முதன்மையானதாகவும் இனப்பெருக்கம் என்பது இரண்டாம் நிலையாகவும் இருக்கிறது. விலங்குகளில் பெண் விலங்குகள் எவ்வளவு அழகானதாக இருந்தாலும் அந்தப...