முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உணர்வைச் சுரண்டும் கலை

சி.சரவண கார்த்திகேயன் அருண் பிரபு புருஷோத்தமன் என்ற அறிமுக இயக்குநரின் திரைப்படம் அருவி. மிகச் சிக்கலான, அதே சமயம் மிக மலினமான வெற்றிச்சூத்திர மாயைகள் நிரம்பிய தமிழ் திரைப்பட உலகில் இப்படி ஒரு உள்ளடக்கம் வெல்லும் என்று நம்பிக்கையுடன் களம் புகுந்திருக்கும் அவரை முதலில் எந்த ifs and buts-ம் இன்றி அணைத்துக் கொள்ளலாம். Asmaa என்ற எகிப்தில் எடுக்கப்பட்ட, அரேபிய மொழித் திரைப்படத்தைத் தழுவியே அருவி எடுக்கப்பட்டது என்ற வாதப் பிரதிவாதங்களுக்குள் போக விரும்பவில்லை. அதைத் தாண்டி இரண்டு விஷயங்களை எடுத்துக் கொண்டு பேச நினைக்கிறேன். ஒன்று திரைப்படம் பற்றியது; மற்றது நம் திரைப்படப் பார்வையாளர்கள் பற்றியது. முன்பொரு காலத்தில் - சுமார் இருபதாண்டுகள் முன் - இந்தியாவில் எய்ட்ஸ் பற்றி படைப்பில் பேசுவது என்பது முற்போக்காக, சமூக அவசியமாக இருந்தது. நிறைய எழுத்துக்களும், படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அது பற்றி வந்தன. (ஒரு நகைச்சுவைத் துணுக்கு நன்றாய் நினைவில் உள்ளது: சவரக்கத்தி மூலம் எய்ட்ஸ் பரவும் என்பதால் அதற்கு ஆணுறை போட்டுச் சிரைப்பார் ஒரு நாவிதர்.) அருவியும் அப்போது வந்திருக்க வே...

முத்தலாக் ஒரு பார்வை

BY  SADIK SAMADH   ·  மாநிலங்களவையில் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேற்றப்படாமலேயே நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்திருக்கிறது. அடுத்தமாதம் கூடும் பட்ஜெட் தொடரில் மீண்டும் விவாதிக்கப்படும். ஆனால் மசோதாவை நிறைவேற்ற போதுமான பெரும்பான்மை ஆளும் பாரதீய ஜனதாவிற்கில்லை. பல்வேறு திருத்தங்களை காங்கிரஸ் கோருகிறது. அவை குறித்து விவாதிக்க தனிக் குழு ஒன்று அமைக்கவேண்டுமென அதுவும் இன்னும் வேறு சில கட்சிகளும் வலியுறுத்துகின்றன. முஸ்லீம்களைக் குறிவைப்பதில் பாஜக சற்று அதிக தூரம் சென்றுவிட்டதோ என்றஞ்சி கூட்டணிக்கட்சிகளே ஆதரிக்கத் தயங்குகின்றன. பாஜகவின் பெரும்பாலான நடவடிக்கைகளில் துணை நிற்கும், தெலுகு தேசம் கட்சியே இந்த விவகாரத்தில் பிஜேபிக்கு எதிராக நிற்கிறது.    எனவே பட்ஜெட் தொடரில் மசோதாவை முழுமையாக ஆராய தனிக் குழு அமைக்கப்படக்கூடும் என்றே கருதப்படுகிறது. அப்படிக் கொண்டுவரப்பட்டால் முஸ்லீம், மற்றும் மதச்சார்பற்ற அமைப்புக்களும் சிந்தனையாளர்களும் அக்குழுவின் மீது அழுத்தம் கொண்டு வந்து,  முஸ்லீம் சமுதாயத்த...