முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டாஸ்மாக் தமிழ்

“ஆல் ப்ராப்ளம்ஸ் ஓவர் ப்ரோ” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். “என்னடா தலைவா ரிலீஸைப்பத்திதானே சொல்ற ?” என்றான் வடிவேல். ”ஆமாம் மச்சான்.. உங்கப் பத்திரிக்கைக்குத்தான் கஷ்டம்” ”ஏன்டா.. எங்கப் பத்திரிக்கைக்கு என்ன கஷ்டம் ? ” ”ஆமாடா… ரெண்டு வாரமா தலைவா படத்தை வச்சு கவர் ஸ்டோரி பண்ணிட்டீங்க.  ஊர்ல வேற பிரச்சினையே இல்லாத மாதிரி ரெண்டு இஷ்யூவுக்கு இதுதான் கவர் ஸ்டோரியா… ? வாரமிருமுறை பத்திரிக்கைக்கு செய்திகள் இல்லாம கஷ்டப்பட்றது உண்மைதான். அதுக்காக விஜய்க்கு இத்தனை முக்கியத்துவம் தரணுமா ? இதுதான் நிகழ்காலத்தின் குரலா ? ” ”தலைவா மேட்டர்தானேடா ஹாட் டாப்பிக் ? ” ”தலைவாதாண்டா ஹாட் டாபிக்.  ஆனா தலைவா மட்டுமா ஹாட் டாபிக் ? ” ”சரி இந்தப் பிரச்சினை எப்படிதாம்பா முடிவுக்கு வந்துச்சு ? ” என்றார் கணேசன். ”தலைவா படப்பிரச்சினையை திமுக கையில எடுக்கப்போறாங்கன்னு தெரிஞ்சதும்தான் அரசாங்கம் வேக வேகமாக களமிறங்குச்சு.  படம் வெளியாகலைன்னதும், தயாரிப்பாளர் சார்பில உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டாங்க. ஆனா அனுமதி வழங்கப்படல.  விஜய் தரப்புல ஏதாவது வேகமா...

சினிமா :தலைவா

திரையில்  காணாத    தவிப்பு Monday, August 19, 2013   மகேஸ்சசி  அதிகாரம் Vs ஒரு திரைப்படம் மதராஸ் கஃபே பற்றிய பேச்சு வந்துவிட்டது. இப்போது தலைவா வெளியாகப் போகிறது. எதற்கு இப்போது இந்தக் கட்டுரை என்று கேட்கலாம். ஆனால் தலைவா குறித்து எழுதவேண்டிய தேவை இருக்கிறது. சினிமாவிலிருந்து ஆட்சியதிகாரம் செலுத்த வந்த காலம் போய் சினிமாவை ஆட்சி செய்வதாக ஆட்சியதிகாரம் மாறியிருக்கிறது.  தற்போது தலைவா 20ம் தேதி வெளியாகும் என்று செய்தி வந்துவிட்டது. விஜய் முதல்வருக்கு நன்றி கூறியிருக்கிறார். எதற்கு நன்றி கூறியிருக்கிறார்? இந்த நன்றியின் பின்னணி என்ன? தலைவா - எப்போது வரும் என்கிற கேள்வியைவிட எல்லோர் மனதில் தொக்கி நினறது பின்வரும் கேள்விகள்தான். ஏன் அந்தப் படத்துக்கு இத்தனை சிக்கல்கள்? என்ன காரணம்? யார் காரணம்? தலைவா அரசியல் படமா? அதில் வரும் வசனங்கள் காரணமா? அல்லது படத்தின் கேப்ஷனாக வரும் ‘டைம் டு லீட்’ என்கிற வார்த்தைகள் காரணமா? அல்லது உண்மையில் திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததா? ...

பஞ்சாயத்துக்கு வந்த பஞ்சாயத்து நடிகையின் வாழ்க்கை!

பஞ்சாயத்துக்கு வந்த பஞ்சாயத்து நடிகையின் வாழ்க்கை! Posted Date : 14:56 (14/08/2013) Last updated : 15:00 (14/08/2013) ஊரில் உள்ள பிரச்னைகளுக்கெல்லாம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பஞ்சாயத்துப் பேசும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தன் வாழ்க்கையிலும் அதற்கான சூழல் வரும் என கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். லட்சுமியும், பொற்காலம் படத்தின் தயாரிப்பாளரும், குணசித்ர நடிகருமான ஜெயப்பிரகாஷ் இருவரும் இணைந்து வாழ்கிறார்கள் என்பது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கிசுகிசு. இரண்டு, மூன்று படங்களில் சேர்ந்து நடிக்கும் ஹீரோ - ஹீரோயினை இணைத்துத்தான் பொதுவாகவே கிசுகிசுக்கள் கிளம்பும். ஆனால், துணை நடிகர் - நடிகைகள் எப்போதாவது அரிதினும் அரிதாகத்தான் இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டுவார்கள். அப்படித்தான் லட்சுமியும், ஜெயப்பிரகாஷும் தற்போது சிக்கியுள்ளனர். 'நான் மகான் அல்ல' படத்தில் தான் இருவரும் முதன்முதலாக இணைந்து கார்த்தியின் அப்பா - அம்மாவாக நடித்தனர். அந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்துப்போக, அதன்பிறகு சில படங்களிலும் அவர்கள் சேர்ந்து நடித்தனர். லட்சுமி ராமகிருஷ்ணன்...

கற்க கசடற...ப.கலாநிதி

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகிவரும் ‘கற்க கசடற’ என்ற கல்வி நிகழ்ச்சியின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார் ப.கலாநிதி. பொதுவாக, செய்தித் தொலைக்காட்சிகளில் கடைசி பட்சமாக இருக்கும் கல்விச் செய்திகளை முதன்மைப்படுத்திய பணி அவருடையது.  அவரிடம் பேசியதிலிருந்து “ஒவ்வொருவருக்குமே கல்லூரி என்பது கனவுகளின் கருவறை. எனது கனவுகள் எல்லாம் ஆனந்த விகடனில் நிருபராகச் சேர வேண்டும்; பழ.நெடுமாறன் ஐயாவை பேட்டி எடுக்க வேண்டும். என்பது போலத்தான் இருந்தது.ஆனால் நேர்காணலில் தோல்வியடைந்தேன். அதன் பிறகு, நக்கீரனில் கல்லூரி நிரு பர் திட்டம் கொண்டு வந்தார்கள். அதிலும், முதல் இரண்டு கட்டத் தேர்வில் வெற்றி; நேர்காணலில் தோல்வி. 2002-ல் கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு, கும்பகோணத்தில் ஓர் அச்சகத்தில் பணியாற்றிய படியே நண்பர்க ளோடு சேர்ந்து ‘ரோஜாமலர்’ என்ற பத்தி ரிகையை நடத்தி னோம். இதனை ஒரு முக்கியத் தகுதியாக கருதி, எனக்கான முதல் செய்தித்துறை வாய்ப்பை 2004-ல் வழங்கியது தினமலர் (சி.என்.எஸ்). பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளிலேயே, 2006 சட்டமன்றத் தேர்தலையொட்டி ‘தினமலர் தேர்தல் களம் 2006’ பகுதிக்...

டாஸ்மாக் தமிழ் 16

“வாங்கண்ணா வணக்கங்கண்ணா.. செய்தியைச் சொல்லுங்கண்ணா” என்று தமிழ் உள்ளே நுழையும்போதே வரவேற்றான் ரத்னவேல். ”டேய் என்னடா கிண்டலா ?” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். “வெல்கம்மு வெல்கம்மு ப்ரோ…” என்று தன் பங்குக்கு தமிழை கலாய்த்தான் பீமராஜன். ”டேய்… கோடிக்கணக்குல பணம் புழங்குற விவகாரம் இது…  உங்களுக்கு ஜாலியா இருக்கா ?” என்றபடியே அமர்ந்தான் தமிழ். ”என்னதான்டா நடக்குது தலைவா விவகாரத்துல ?” என்று கேட்டான் வடிவேல். ”மச்சான்… இந்த பட விவகாரத்தால, ஒரு நல்லது நடந்தா சரி.  கண்ட படத்துக்கெல்லாம் வரிவிலக்கு குடுக்குற வழக்கம் இத்தோட ஒழிஞ்சா சரி. கருணாநிதி ஆட்சிக் காலத்துல தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்குன்னு அறிவிச்சார்.  சிவாஜிக்கெல்லாம் வரி விலக்கு குடுத்தாங்க. கேட்டா, அது பெயர்ச்சொல்னு விளக்கம் வேற.  அரசாங்கத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுச்சு.  கோடிக்கணக்குல இவனுங்க லாபம் சம்பாதிக்கிறதுக்கு எதுக்காக அரசாங்கம் பணம் குடுக்கணும் ? ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் இருந்தால் மட்டும் போதாது… தமிழ் கலாச்சாரத்துக்கு ஏ...