முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா டுடே


இருபத்தைந்து ஆண்டுகள் என்பது வரலாற்றுக்கு வேண்டுமானால் மிகச்சிறிய காலக்கட்டமாக இருக்கலாம். ஆனால் ஒரு தனிமனிதனின் வாழ்வில் பெரும் பங்கை எடுத்துக் கொள்ளும் காலம். சமகாலத்தில் என் கண் முன்னே பிறந்து, தன்னுடைய இறுதியை ‘இந்தியா டுடே’ எட்டுகிறது என்பது ஜீரணிக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது. அருண்பூரி தன் ஊழியர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகால இந்தியா டுடே தமிழ் பதிப்பின் காலம் நிறைவடைகிறது.


அப்பத்திரிகையின் கொள்கைப்பாதையாக அடிநாதமாக தோன்றும் வலதுசாரிய தாராளமயவாத பார்வை நமக்கு ஏற்புடையது அல்ல என்றாலும், நவீனத்தமிழ் வாழ்வின் அடையாளங்களை, சிக்கல்களை, அருமை பெருமைகளை அவ்வப்போது பளிச்சென்று வெளிப்படுத்த இந்தியா டுடே தவறியதில்லை.


‘இண்டியா டுடே’ என்கிற பெயரை சண்டை போட்டு ‘இந்தியா டுடே’வாக மாலன் சார் மாற்றினார் என்பார்கள். ‘ரோஜா’ திரைப்படம் வருவதற்கு முன்பாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியை (கால்பக்க அளவுக்குதான்) வெளியிட்ட பத்திரிகை. இந்தியா டுடே பரிந்துரைக்கும் புள்ளிகள், பிரபலங்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள் என்கிற எண்ணம் உடனடியாக ஏற்படும். நினைவில் நிற்கக்கூடிய பல கவர்ஸ்டோரிகளை வெளியிட்ட இதழ். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி.சிங் அரசாங்கம் அமல்படுத்த முனைந்தபோது டெல்லி பல்கலைகழக மாணவர் ராஜீவ்கோஸ்வாமி, தன் உடலில் தீ வைத்துக்கொண்டு மாண்ட காட்சியை இந்தியா டுடே அட்டைப்படமாக வெளியிட்டிருந்தது. இட ஒதுக்கீடு கொள்கைகளின் தாயகமான தமிழகத்தில் அது பெரிய சச்சரவினை உருவாக்கியது. ஷங்கர் இயக்கிய முதல் படமான ‘ஜெண்டில்மேன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடையக்கூடிய கருத்தியல் பார்வைக்கும் அதுவே காரணம். நக்கீரன் பத்திரிகை வீரப்பனை முதன்முதலாக பேட்டி கண்டபோது, அதே படங்கள் இந்தியா டுடேவிலும் வெளியிடப்பட்டு ஏற்பட்ட சர்ச்சையும் நினைவுக்கு வருகிறது.


வெகுஜன வாசகர்களுக்கு இலக்கியத்தை நெருக்கமாக்கிய முயற்சிகளை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா டுடே தொடர்ந்துக் கொண்டிருந்தது. பத்திரிகையுலகில் பிரபலமான ‘கதை’ ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது.


அது ஒரு புலனாய்வு வார இதழ் (இப்போது வாரமிருமுறை). இதழ் அச்சுக்கு போகவேண்டிய நாளில் பணியாளர்கள் எல்லோருக்கும் மூச்சு முட்டுமளவுக்கு வேலை இருக்கும். அதிரடியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த உதவி ஆசிரியர் ஒருவர் திடீரென மூர்ச்சை ஆனார்.


விஷயம் அறிந்த ஆசிரியர், முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்து வெளிவந்து மலங்க மலங்க விழித்துக்கொண்ட உதவி ஆசிரியரை உடனே தன்னுடைய ஜீப்பில் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாராம். பரிசோதித்த மருத்துவர், பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்து, “இதை ஒருவேளை சாப்பிடச் சொல்லுங்க. எல்லாம் சரியாயிடும்” என்றிருக்கிறார். மருத்துவமனையிலேயே இருந்த பார்மஸிக்கு போய் பிரிஸ்கிரிப்ஷனை காட்டியிருக்கிறார் ஆசிரியர். பார்மஸி ஆள் சிரித்துக்கொண்டே, “என்ன எழுதியிருக்கிறது பாருங்கள்” என்று திருப்பிக் கொடுத்திருக்கிறார். ‘ஒரு ஃபுல் மீல்ஸ்’ என்று எழுதியிருக்கிறார் குறும்புக்கார டாக்டர். அதாவது உதவி ஆசிரியருக்கு ஏற்பட்டிருந்தது பசி மயக்கம். தன்னுடைய ஊழியன் ஒருவன் பசியால் மயங்கிய அவலத்தை ஆசிரியரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.


எதுவும் பேசாமல் உதவி ஆசிரியரை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். வயிறு நிரம்பச் சாப்பிட்டபிறகு ஆசிரியர் கேட்டாராம்.


“ஏன் தம்பி, சாப்பிடலை?”


“காசு இல்லை அண்ணாச்சி!”


“இஷ்யூ முடிக்கிற தேதி அன்னிக்கு எல்லாருக்கும் சாப்புட காசு கொடுக்கணும்னு அக்கவுண்டண்ட் கிட்டே சொல்லியிருக்கேனே? காசு கொடுக்கலையா?”


“அய்யோ. அப்படி இல்லைண்ணே. அவரு அதெல்லாம் கரெக்டா கொடுத்துடுவாரு”


“அப்போன்னா அந்த காசை என்ன பண்ணே?”


“இந்தியா டுடே இலக்கிய மலர் வாங்கிட்டேண்ணே”


நிஜமாகவே நடந்த சம்பவம் இது. இந்தியா டுடேவின் இலக்கிய மலர்களுக்கு எத்தகைய செல்வாக்கு இருந்தது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை.


இந்தியா டுடே தமிழில் தொடங்கியபோது நான் பள்ளி மாணவன். அப்போது ஆசிரியர்கள் இந்த இதழை தொடர்ந்து வாசிக்குமாறு மாணவர்களுக்கு பரிந்துரைப்பார்கள் (பிற்பாடு இதுமாதிரி ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்ட பத்திரிகை ‘புதிய தலைமுறை’).


என்னுடைய அண்ணன் பாலாஜி, ஆரம்பகால இந்தியா டுடே இதழ்கள் அத்தனையையும் சேகரித்து தனித்தனியாக ‘பைண்ட்’ செய்து வைத்திருப்பார். அப்போதெல்லாம் அதுதான் எனக்கு இயர்புக். இன்றைய தலைமுறையினருக்கு இந்தியா டுடே, அதன் செக்ஸ் சர்வேக்களால் அடையாளம் காணப்படுகிறது என்பது துரதிருஷ்டவசமான நிலைமை. கமல்ஹாசனின் கலையுலகப் பொன்விழாவின் போது இந்தியா டுடே வெளியிட்ட சிறப்பிதழ் என்றென்றும் எனக்கு நினைவில் நிற்கும்.


லுங்கி கட்டிக்கொண்டு செல்பவர்கள் மால்களிலும், சினிமா தியேட்டர்களிலும் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற சூழல் இருந்தபோது, அதுகுறித்த என்னுடைய கருத்து போட்டோவோடு இந்தியா டுடேவில் வெளியானது. எப்படியோ சின்ன துண்டு போட்டு பாஸ்போர்ட்சைஸ் படமாகவாவது வரலாற்றில் இடம்பெற்று விட்டோம்.


குட் பை இந்தியா டுடே!

எழுதியவர் யுவகிருஷ்ணா 


கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...