முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

2.0 கதை /விசும்பு - சிறுகதை /-ஜெயமோகன்

எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது தெய்வத்துக்கு என்றும் சொன்னார். நான் இரண்டாம் கொள்கையைப் பின்பற்றினேன். ஆட்டிப்படைத்த சீசரின் பெயர் டாக்டர் நஞ்சுண்ட ராவ். மெளனமாக உயிரை வாங்கிய தெய்வம் அவர் அப்பா டாக்டர் கருணாகர ராவ். என் மூக்கு இன்றுகடைந்த மோரையும் நேற்று கடைந்த மோரையும் அடையாளம் காணும். முளைக்கீரைக் கூட்டையும் அரைக்கீரைக் கூட்டையும் பிரித்தறியும். ஆனால் பறவை எச்சம் என் மூக்குக்கு எட்டாது. சுசீந்திரம் வலது மண்டபத்தில் டன் கணக்கான வவ்வால் எச்சம் மத்தியில் நின்று என் மாமா மூக்கைப்பொத்திய போது ‘ நாத்தமா ?அனுமாருக்கு சாத்தற வெண்ணை மக்கிப்போச்சு போல ‘ என்று சொல்லி பித்துக்குளிப் பட்டம் வாங்கியவன். நான் வேலைபார்க்கும் இடம் அப்படி . வந்தவை, செல்பவை, வாழ்பவை என எப்படியும் ஒரு ஐம்பதாயிரம் பறவைகள் உள்ள இடம் அது. கருணாகர ராவ் தொழில்முறை டாக்டர். பாதியில் விட்டுவிட்டு பறவை ஆய்வாளரானார். அவரது அப்பா திருவிதாங்கூர் திவானாக இருந்தபோது ஏலமலைப் பகுதியில் கடலோரமாகக் கிடைத்த அறுநூறு...

சூதாடி!

- ஜொலிக்கிற துறையொன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் குறித்துச் சொல்வதற்கு முன்னால் சில வார்த்தைகள். ஏனெனில் இது வெறுமனே கட்டுரையாக மட்டும் இல்லை. வண்ணமயமான உலகமொன்றினுள் நுழைவதற்கான முஸ்தீபுகள். சுபிட்ச முருகன் என்று சொல்லிக் கொண்டு சீக்குப் பிடித்த தாடியை வறக் வறம் என சொறிந்தபடி, வானத்தைப் பார்த்து அமர்ந்து பார்த்தாயிற்று. எப்போதுமே ஆனந்தத்தை அடைய வழி ஒன்றுமட்டுமே என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்ததே இல்லை. பழனி மலைப் படிக்கட்டு போல, ஏராளமான படிக்கட்டுக்கள் ஆனந்தத்தை அடைவதற்கு வழிகாட்டுகின்றன. இடைப்பட்ட சில நாட்களாக எங்கேயாவது ஓடிப் போனால்தான் தப்பிப்பேன் என்கிற மனநிலையில் உழன்று கொண்டிருந்தேன். எப்போதும் போல அடிவாரத்தில் போய் அமர்ந்தேன். சுபிட்ச முருகன் மெதுவாக தன் சட்டையை உறித்து மலைப் படிக்கட்டுகள் வழியாக ஏறிப் போனார். அந்தக் கணத்தில் சூதாடியாகவே மாறிப் போயிருந்தேன். சோர்ந்திருந்த தோள்களை நிமிர்த்தி அமர்ந்தேன். ஆனந்தி சுந்தரவதனன் என்கிற பெயரைக் கொண்ட ஒருத்தி, கையில் ஜாக் டானியல் மதுக்குவளையோடு படியிறங்கி வந்து கொண்டிருந்தாள். எல்லோரையும் ஒருநாள் ஒய்யாரமாய...

The Story Behind The Pointy 'Bullet Bra' Trend Of The 1950s

by  Manon Baeza   |   1 year ago Remember the pointy corset Jean Paul Gaultier created for Madonna? In the fashion world, that's what we call a " bullet bra ." The thing is, Jean Paul Gaultier didn't even invent the strange contraption. To learn more about the origins of the bullet bra, we have to rewind to the 1950s, when it was in perfectly good taste to walk around with giant triangle boobs. At the time, pointy bras were the hottest trend. A new circular sewing technique (called the "whirlpool circle stitch") gave your bosoms that sexy "missile" look that went perfectly with the skin-tight sweaters of the period. The tight sweater-bullet bra pairing was then dubbed the "pointy look." The bras, which gave the wearer an especially voluptuous chest, were quickly snapped up by big 1950s stars like Patti Page, Elizabeth Taylor, Marilyn Monroe and Brigitte Bardot. However, as  Dangerous Minds   tells us, the t...

கேடி சர்க்கார்

BY  SAVUKKU சர்க்கார் திரைப்பட சர்ச்சை ஒரு வழியாக முடிந்துள்ளது.   இந்த சர்ச்சையில் சந்தடியில்லாமல் 200 கோடிகளை வாரிச் சென்றுள்ளனர் கேடி சகோதரர்கள். யாருக்கும் வெட்கமில்லை என்றே சொல்ல வேண்டியதாக உள்ளது. இன்று தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணியில் உள்ள இரண்டு குதிரைகள் என்றால் அது அஜீத் மற்றும் விஜய் என்று தெளிவாக சொல்லலாம்.  அஜீத் தனது அரசியல் ஆசைகளை வெளிப்படையாக கூறியதில்லை.  ஆனால் விஜயோ, தனது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தகுதியின் காரணமாக, முதல்வர் கனவோடுதான் இருக்கிறார்.  அவரை விட அவர் தந்தை சந்திரசேகர் உள்ளாட்சித் துறை அமைச்சர் கனவோடு இருக்கிறார்.  இதன் காரணமாகத்தான் தனது ரசிகர்கள், ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் செய்யும் கூத்துக்களை, விஜய் மவுனமாக ரசித்து வருகிறார். தமிழ்த் திரையுலகில் முதலிடத்தில் இருப்பதால், எவ்வளவு விரைவாக முடியுமோ, அத்தனை கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு.  பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரை மீதுதானே பணம் கட்டுவோம்.   ஆனால், பந்தயத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியலை அதில் கலந்து, ப...