வேலை கிடைக்காம இருந்தப்பவும் சரி, வேலை கிடைச்சு சென்னையிலேயே செட்டிலான பிறகும் சரி... ஒவ்வொரு தடவை சொந்த ஊருக்குப் போகும்போதும், நமக்குனே காத்துட்டிருக்கிற டிக்கெட்டுகளை சமாளிக்கணும்னா, கொஞ்சம் கஷ்டம்தான். இவங்களுக்கெல்லாம் 'நாம என்ன வேலை பார்க்கிறோம்’னு விளக்குறதுக்குள்ளேயே, நொந்துடுவோம். அதுவும் இந்த ரிப்போர்ட்டர் வேலையை விளக்குறது இருக்கே... ஊர்ல இறங்கி, பேக்கோட நடந்துபோனாலே, நாலு திசையில இருந்தும் நோக்கு வர்மம் மாதிரி நோக்குவாங்க. ''எங்கே இருக்கீங்க தம்பி?, ஆளையே பார்க்க முடியலை''னு ஆரம்பிப்பாங்க. 'இதென்னடா கொடுமையா இருக்கு? ஊர்ல உள்ளவங்க அப்படித்தானே கேட்பாங்க?’னு யோசிக்கிறீங்க. எக்ஸ்கியூஸ் மீ.... அந்தாளு இந்தக் கேள்வியை என்கிட்ட கேட்கிறது எட்டாவது முறை. 'எங்கே இருக்கீக தம்பி?’னு ஆரம்பிக்கிற ஆம்பளைங்களை விட, 'என்ன வேலை பார்க்கிற?’னு ஆரம்பிக்கிற பெண்கள் கொஞ்சம் டேஞ்சர். 'ரிப்போட்டர்னா? இந்தக் கணக்கு எடுக்கிற வேலையா?’ 'அது இல்லடி, ஊரு ஃபுல்லா சுத்துவாங்கள்ல அது...’ 'இல்லை.. டி.வி-யில மைக்கைப் பிடிச்சுக்கிட்டு நிப்பாங்கல்ல... அந...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்