முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோச்சடையான் (2014): 3D – Tamil


Kochadaiyaan_movie__2014__hd_wallpaper_655698556


Uncanny Valley – when human features look and move almost, but not exactly, like natural human beings, it causes a response of revulsion among some human observers.
1. ’அன்கேன்னி வேலி’ என்று இங்லீஷில் ஒரு உளவியல் பதம் உள்ளது. என்னவென்றால், மனிதர்களைப் போலவே சில உருவங்களை உருவாக்கி நடமாடவிடுகிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். அவைகள் மனிதர்கள் போலவே கைகால்களை ஆட்டுகின்றன. பேசுகின்றன. நடக்கின்றன. அவைகளைப் பார்த்த மாத்திரத்தில் நிஜமான மனிதர்களுக்கு முதலில் மனதில் தோன்றும் உணர்ச்சி வெறுப்புதான் என்று இந்தத் தியரி சொல்கிறது.
2. ஹாலிவுட்டின் சரித்திரத்தில் முழுவதும் Performance Capture தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் – Polar Express.  இந்தப் படத்தைப் பார்த்த பலரும்,  அதன் அனிமேஷன் மிகவும் கொடுமையாக இருந்ததாகச் சொல்லியிருக்கின்றனர். சிலருக்கு அந்த அனிமேஷனைப் பார்த்ததும் பய உணர்ச்சியும் வந்திருக்கிறது. இது ஏனெனில், நாம் மேலே பார்த்த உளவியல் விஷயம்தான். Uncanny Valley. எதுவுமே முதன்முதலாக இப்படிச் செய்யப்படும்போது அதனை அடிமனம் வெறுக்கத்தான் செய்யும் என்பதே இதன் சாராம்சம்.

ஒரு அனிமேஷன் படத்தில் ஒலி எப்படி இருக்கவேண்டும்? என்னதான் நாம் பார்ப்பது அனிமேஷன் என்றாலும், ஒலியைப் பொறுத்தவரை எத்தனைக்கெத்தனை நிஜமான ஒலிகளோடு ஒன்றுபடுகிறதோ, அத்தனைக்கத்தனை அந்தப் படத்தின் செயற்கைத்தன்மை குறையும். இந்த விஷயத்தைக் கோச்சடையானில் துல்லியமாகச் செய்திருக்கிறார் ரஸூல் பூக்குட்டி. படத்தில் வரும் போர்க்களக் காட்சிகளுக்காக 150 பேரை வெறியுடன் கத்தச்செய்து அதனைப் பதிவு செய்து படத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறார். இதெல்லாம் ஹாலிவுட்டில் சர்வ சாதாரணம். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் ஒலியைக் கச்சிதமாகக் கொண்டுவர என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை யூட்யூபிலும் behind the scenes ப்ளூரேக்களிலும் பார்த்துக்கொள்ளலாம். அதேபோல் கோட்டைகளுக்கு நேரில் சென்று அங்கு தர்பார்களில் பேசும்போது எப்படியெல்லாம் ஒலி அதிர்கிறது, எதிரொலிக்கிறது என்பதையும் தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். அந்த சாம்பிள்களை வைத்துக்கொண்டுதான் படத்தின் தர்பார் காட்சிகளில் வசனங்கள் பேசும் ஒலிமுறையையும் சத்தங்களையும் வடிவமைத்திருக்கிறார்.
இது மட்டும் இல்லாமல், கவசங்கள், அணிகலன்கள் ஆகியவற்றை அணிந்துகொண்டு ஒரு மனிதன் நடக்கும்போது என்னென்ன சத்தங்கள் எழும்? இதையும் நன்றாக ஆராய்ச்சி செய்து, படத்தில் உபயோகித்திருக்கிறார். பொதுவாக இதுபோன்ற அனிமேஷன் படங்களில் அனிமேஷன் ஒவ்வொரு அடுக்காகத்தான் உருவாக்கப்படும். உதாரணமாக ஒரு மனிதனைக் காண்பிக்கவேண்டும் என்றால் முதலில் அவனது உடலின் ஔட்லைன், பின்னர் அந்த உடலின்மீது முடி, உடைகள், அணிகலன்கள் ஆகிய ஒவ்வொன்றுமே அடுக்கடுக்காக உருவாக்கப்படும். இதனால் ஒலியையும் அதேபோல் ஒவ்வொரு அடுக்காகவே உருவாக்கும் நிர்ப்பந்தம். அதையும் கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார் ரஸூல்.
அவரது முயற்சிகளைப் பற்றி இந்தப் பேட்டியில் விரிவாகப் படித்துக்கொள்ளலாம்.
ஒரு அனிமேஷன் படம் மிகச்சுலபமாக உருவாகிவிடும் என்ற பொதுவான நம்பிக்கையில் உண்மை இல்லை என்று சொல்வதற்காகவே ஒலியைப் பற்றி எழுதினேன். இதுபோன்ற பல அம்சங்கள் ஒன்றுசேர்ந்தால்தான் அனிமேஷன் வெற்றிகரமாக உருவாகும். நிஜத்தில் ஒரு திரைப்படம் எடுப்பதைவிடப் பலமடங்கு கஷ்டப்பட்டால்தான் அனிமேஷன் படம் எடுக்கமுடியும்.

’ராணா’ என்ற கோச்சடையான் ரணதீரன், கோட்டைப்பட்டினம் என்ற நாட்டில் இருந்து சிறுவயதில் காளிங்கபுரிக்குக் கடலில் தத்தளித்து வந்துசேர்கிறான். அந்த ஊரில் பெரும் விரனாக வளர்ந்து மன்னன் ராஜமஹேந்திரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, அந்த நாட்டின் தளபதி ஆகிறான். அவர்களது எதிரி நாடு கோட்டைப்பட்டினம். அந்த நாட்டின் அரசன் ரிஷிகோடகன். கோட்டைப்பட்டினத்தின் மூவாயிரம் வீரர்கள் காளிங்கபுரியில் கைதிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் கவனிக்கும் ரணதீரன், அவர்களுக்கு விடுதலை அளித்து அவர்களைத் தாய்நாடான கோட்டைப்பட்டினத்துக்கு எதிராகவே திருப்பிவிடுகிறான். போர் மூள்கிறது. அப்போது நடக்கும் சில சம்பவங்களால் காளிங்கபுரியின் மன்னன் ராஜமஹேந்திரன் ரணதீரனின் மீது கோபமடைகிறான். அதேசமயம் கோட்டைப்பட்டினத்தின் மன்னன் ரிஷிகோடகனுக்குமே ரணதீரனின் மீது பொறாமை கலந்த கோபம். இரண்டு மன்னர்களின் கோபத்துக்கும் ஆளாகும் ரணதீரன் யார்? அவனது நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறானா என்பதே கதைச்சுருக்கம் (சுருக்கத்தைப் படித்ததும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ‘A Fist Full of Dollars’ படம் போலவே இருக்கிறதே என்று தோன்றுகிறதா? அதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை).
கடைசியாக ரஜினி நடித்து எனக்குப் பிடித்த படம் – 1995ல் வெளிவந்த ‘முத்து’. அதற்கு முன்னர் ’பாட்ஷா’. முத்துவுக்குப் பின்னர் வந்த படங்கள் எதுவுமே சுவாரஸ்யமாக இல்லை (சந்திரமுகி உட்பட) என்பது என் கருத்து. ‘முத்துவுக்குப் பின்’ என்றதும் ரஜினி எக்கச்சக்கமான படங்கள் நடித்துவிட்டதாக நினைத்துவிடவேண்டாம். கௌரவ வேடங்களை விட்டுவிட்டுப் பார்த்தால், முத்துவுக்குப் பின்னர் ரஜினி 19 ஆண்டுகளில் ஹீரோவாக ஏழே படங்களில்தான் நடித்திருக்கிறார் (அருணாச்சலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன்). இவைகள் எல்லாவற்றிலுமே எதுவோ ஒன்று மிஸ்ஸாவதுபோலவே எனக்குத் தோன்றியது. இந்தப் படங்களை என்னால் முழுதாக ரசித்துப் பார்க்க முடியவில்லை. குறிப்பாக எந்திரன் படம். இத்தனை வருடங்கள் கழித்து இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் ரஜினி நடித்து நான் ரசித்துப் பார்த்த படமாக ‘கோச்சடையான்’ படத்தைத்தான் சொல்லுவேன்.
காரணம்? ரஜினியின் ப்ளஸ் பாயிண்ட்களை கச்சிதமாகக் கோச்சடையான் capture செய்திருக்கிறது. ரஜினிக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள். ரணதீரனாகவும் கோச்சடையானாகவும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ரஜினிக்கே உரிய மேனரிஸங்கள், ஸ்டண்ட்கள், நடனங்கள், வசனங்கள் என்று முழுமையாக ’முத்து’வுக்குப் பின்னர் ரஜினியை ரஜினியாகவே காட்டியிருக்கிறது இந்தப் படம் என்பது என் கருத்து (படையப்பாவில் கொஞ்ச நேரம் இது இருந்தாலும், பின்னர் வேறு ரேஞ்சில் போய்விடும். அதில் ரஜினியைப் பார்த்து அவ்வப்போது ‘வயசாயிருச்சு’ என்னும் விதத்தில் அமைந்த டயலாக்ஸ் வேறு இருக்கும். பாபாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சந்திரமுகியில் ரஜினி ஹீரோவா இல்லை நகைச்சுவை நடிகரா என்ற சந்தேகம் நீண்டநேரம் இருந்தது. சிவாஜியில் ஷங்கர் ரஜினியை வைத்துப் பல கோமாளித்தனங்களை அரங்கேற்றினார்.  குசேலன் & எந்திரன் – ஆளை விடுங்க சாமி).
படத்தின் ஆச்சரியம் – நாகேஷ். அவரது கதாபாத்திரம் ரஜினிக்குப் பிறகு நன்றாகவே கேப்சர் செய்யப்பட்டிருக்கிறது. வசனம் உட்பட. படத்தில் தீபிகா, சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷ்ராஃப் உட்பட பிறர் எல்லாருமே கௌரவ வேடம்தான். ரஜினிக்கு சரிசமமாகப் படம் முழுக்க வருபவர் நாசர் மட்டுமே. கூடவே நாசரின் கைத்தடியாக வரும் சண்முகராஜனையும் சொல்லலாம்.
படத்தின் ஒலிக்குப் பிறகு என்னைக் கவர்ந்த விஷயம் – படத்தின் காட்சிகளில் பின்னணிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம். படத்தின் களத்தின் பிரம்மாண்டத்தை நன்றாகவே பின்னணிகள் பிரதிபலிக்கின்றன. அதேபோல் படத்தின் பாடல்களும் இசையும் அவசியம் படத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. படத்தின் இன்னொரு அட்வாண்டேஜ் – படத்தின் நீளம். மொத்தம் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவு என்பதால் வேகமாகவே முடிந்துவிடுகிறது படம்.
எந்த நடிகராக இருந்தாலும் சரி – அவரது வளர்ச்சியில் சில இயக்குநர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருப்பார்கள். எண்பதுகளில் ரஜினிக்கும் கமலுக்கும் ஏற்ற பல படங்களை எஸ்.பி. முத்துராமன் எடுத்தார். குறிப்பாக ரஜினியைப் பிரபலப்படுத்தியவர்களில் இவர் முக்கியமானவர் (ஹிந்தியில் இதே காலகட்டத்தில் அமிதாப்பின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியவர்களில் ப்ரகாஷ் மெஹ்ராவும் மன்மோஹன் தேஸாயும் முக்கியமானவர்கள்). அதே எண்பதுகளில் கமலுக்கு ராஜசேகர் கிடைத்தார். ராஜசேகருக்குப் பின் சுரேஷ் கிருஷ்ணாவும் சிங்கீதம் சீனிவாசராவும். அப்படி ரஜினிக்கு இந்தப் படத்தில் கே.எஸ். ரவிகுமார் (படத்தின் இயக்குநர் அவர் அல்ல – சௌந்தர்யா என்றபோதிலும், கதை, வசனம், திரைக்கதை ஆகியவை கே.எஸ் ரவிகுமாரின் பங்களிப்புதான்). எனக்குப் பிடித்த கடைசி ரஜினி படமான முத்துவும் ரவிகுமாரின் கைவண்ணம்தான்.
படத்தின் நெகட்டிவ் அம்சம் என்ன?
படத்தின் ஸிஜி சரியாக செய்யப்படவில்லை என்பது உண்மை.

கோச்சடையான் & Performance capture.
இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் படமாகக் கோச்சடையான் வரப்போகிறது. படத்தின் ட்ரெய்லர் வந்துவிட்டது. இதைப்பற்றிச் சொல்லவேண்டும் என்றால், இதற்குமுன் வந்திருக்கும் பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படங்களைப் பற்றிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் இது என்ன ஏது என்பது தெளிவாகப் புரியும். பின்னர்தான் அது மொக்கையா சுவாரஸ்யமா என்றெல்லாம் விவாதிக்கமுடியும்.
பொதுவாக இந்தத் தொழில்நுட்பத்துக்கு அவதார்தான் எல்லா இடங்களிலும் உதாரணமாகச் சொல்லப்படும். ஆனால் க்ளாடியேட்டரிலேயே இது வந்துவிட்டது. அதற்கும் முன்னர் மம்மி. உலகின் முதல் 3d பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படம் (முழுதாக இதே தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டது) – போலார் எக்ஸ்ப்ரஸ். அதேபோல், லார்ட் ஆஃப் த ரிங்ஸின் ட்வின் டவர்ஸ்தான் ஆஸ்கரால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படம்.
ரைட். இப்போது கோச்சடையான்.
அவதாரின் பட்ஜெட் – 237 மில்லியன். அதாவது, தோராயமாக 1443 கோடி ரூ. கோச்சடையானின் பட்ஜெட், அஃபிஷியலாக 125 கோடி என்று தெரிகிறது. அந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பெர்ஃபார்மன்ஸ் காப்சரிங் கன்வெர்ஷன் தான் இதில் இருக்கும்.நாம் எல்லோரும் இங்லீஷ் படங்கள் பார்த்தே ஒப்பிட்டுப் பழகிவிட்டதால், தற்போது ட்ரெய்லர் பார்த்ததும் விமர்சனம் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் முதல் பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படமாக இது வரப்போகிறது என்பதை மறக்கக்கூடாது. ஒருவேளை இதைப்போன்ற படங்கள் பல வந்தபின்னர் அவதாரின் ரேஞ்சுக்கு ஒரு படம் சாத்தியமாகலாம்.
விஸ்வரூபம் படம் டிடிஹெச்சில் வரப்போவதாகக் கமல் அறிவித்ததைப்போல் இதுவும் தொழில்நுட்பத்தில் ஒரு பாய்ச்சல்தான். இந்தத் தொழில்நுட்பத்தை வரவேற்றுப் பார்க்கலாம் என்பது என் கருத்து. அஃப்கோர்ஸ் படம் மொக்கையாக இருந்தால் அதை விமர்சிக்கத்தான் போகிறோம். ஆனால் நான் சொல்லவருவது இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி.
இதனால் விரைவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி போன்றவர்கள் விரைவில் அதிரடியாக இணைந்துகூட நடிக்கமுடியும். தமிழர்கள் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்பார்கள் என்பதால் சில்க் ஸ்மிதாவைக் கதாநாயகியாகப் போட்டுக்கூட விரைவில் படம் வரலாம். (அவர்கள் உயிரோடு இல்லாததால் அவர்களைப் போன்றவர்களைக் கேப்ச்சர் செய்யவேண்டும்).
படம் வரட்டும். விமர்சனம் செய்வோம்.

பர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் அறிமுகப்படுத்தப்பட்ட 2004ல்,  Polar Express படத்தின் பட்ஜெட் – 165 மில்லியன் டாலர்கள். அதே பட்ஜெட்டில் அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தால், அப்போது பர்ஃபார்மன்ஸ் கேப்சர் தொழில்நுட்பப் படங்கள் இந்தியாவில் வந்திருக்காததால் கோச்சடையான் இன்னும் பெரிதாகப் பேசப்பட்டிருக்கலாம். ஆனால் நாம் எக்கச்சக்கமான ஹாலிவுட் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் திரைப்படங்களைப் பார்த்துவிட்டதால் கோச்சடையானின் ஸிஜி அந்த அளவுக்கு நமக்குப் பிடிக்காது. கூடவே, இந்தக் கட்டுரையின் முதல் வரியையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவும். இந்தியாவில் இதுதான் முதல். இப்போதுதான் வந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடையும்போது இன்னும் துல்லியமான பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.
கூடவே, இந்தியாவில் அனிமேஷனுக்கும் கார்ட்டூனுக்கும் வித்தியாசம் தெரியாத பிரச்னையும் இருக்கிறது. இன்னுமே நம்மில் பலரும் அனிமேஷன் என்றால் அது குழந்தைகளுக்கானது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். காரணம் நம்மில் 90% மக்கள் காமிக்ஸ் படிக்காமல், தொலைக்காட்சியில் அனிமேஷன்கள் பார்க்காமல் வளர்ந்தவர்கள்தான். அதில் தவறும் இல்லை என்றாலும், இப்போதாவது அந்த வித்தியாசத்தைத் தெரிந்துகொண்டால் நல்லது.  மேன்மேலும் இதுபோன்ற முழுநீள அனிமேஷன் படங்கள் இந்தியாவில் வருவதை அது இன்னும் ஊக்கப்படுத்தும்.
கோச்சடையான், அதில் இருக்கும் சில குறைபாடுகளை மீறியும் ஒரு சுவாரஸ்யமான entertainer என்பதில் எனக்கு சந்தேகமில்லை. படத்தைப் பார்த்தவர்கள் அவர்களின் கருத்தை இங்கே பின்னூட்டங்களில் சொல்லலாம்.
கோச்சடையானின் மேக்கிங் பற்றிய ஒரு வீடியோ இங்கே.

நன்றி: .ராஜேஷ் கார்ப்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

TAMIL MAGAZINES

JAGADEESH N.V. TAMIL MAGS Thousand Lights In The Pocket Small in format, but brimming over with articles and photos on everything under the sun, explaining politics, films, gobar gas VAASANTHI   I am sure that to the outside world, Tamil Nadu appears queer: those conservative, retrograde, idli-dosa-eating, film-crazy, ves­hti-clad Madrasis! But to me, an insider, the most enduring image of my state is that of rickshaw-pullers reading Tamil newspapers and magazines during their free time, unmindful of the scorching sun. Tucked under the passenger seat of every rickshaw, there would always be some reading mate­rial, some daily or periodical. And the roadside petti-­kadais (small shops that sell cigarettes, paan, bananas, cold drinks and even tea) have one major attraction—rows of Tamil periodicals, many of them pocket-sized, bestriding the string by the middle-page, or columns held in place by clips. You’ll never find last week’s iss­ue of  Vikatan, Kumudam, K...

Politics is a dangerous game: Rajinikanth

In an in-depth interview at his home in Poes Garden, Rajinikanth spoke candidly to India Today not only about his life and films but also his political vision for Tamil Nadu, and a range of burning public issues. Raj Chengappa  Amarnath K. Menon  New Delhi  November 30, 2018 ISSUE DATE: December 10, 2018 UPDATED: December 1, 2018 10:26 IST Photographs by Bandeep Singh Will he, won't he? Southern superstar Rajinikanth has exhibited Hamletian indecision about pursuing a political career ever since he announced he was joining the fray in December 2017. So far, he has not even announced the name of his political party, choosing instead to deploy his massive fan following under the umbrella of his Rajini Makkal Mandrams and using them to build a cadre of party workers across Tamil Nadu. Meanwhile, the ageing star (he is 67) continues to do what he knows best-make iconic films. His latest-2.0, releasin...

இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:

இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தினார்.இதனை...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

சொன்னதும் செய்ததும்.

தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டு வருகிறது.  முடங்கிப் போன நிர்வாகம், பெருகிய ஊழல், செயல்படாத அரசு, தலைகாட்டாத முதல்வர் என்று அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது, மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார் ஜெயலலிதா.    கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசுகையில், “அரசில் 36 துறைகள் உள்ளன. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகளையும் சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் பதில் வழங்க வேண்டும். அவற்றை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லும் அளவுக்கு சுருக்கி, பார்த்து பார்த்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் செயல்பாடுகள், திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான். எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பொது நலம், மக்கள் நலம் மட்டும்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம். நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தன...