முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ



























பிரா..ஆம்..பிரா!
இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று.

பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை.

பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன் ஒன்றாக சேர்த்து பிராக்களை காயப்போடுவது கூட அநாகரீகமாம்.அதுவும் வீட்டில் அண்ணன்,தம்பி யாரவது  இருந்துவிட்டால்..பார்த்துவிட்டால் போதும் நிலைமை இன்னும் மோசம்,துண்டுக்குள் வைத்துச்  சுருட்டிக் கொண்டுதான் குளியல் அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமாம்.."ஷாப்பிங் போறியா அண்ணா.. எனக்கு பிங்க கலர்ல் ஒரு பிரா வாங்கிட்டு வாயேன்" என எங்கேயாவாது பெண்கள் சொல்லிக் கேட்டு இருக்கிறீர்களா? மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்  விளம்பரங்களில்கூட  உதிரபோக்கைக் குறிக்க நீல நிற நீரைத்தான் காட்டுகிறார்கள். மாதவிடாய்,நாப்கின்,பிரா எனப் பெண்கள் சார்ந்த விஷயங்களைச் சுற்றி எதற்கு தேவை இல்லாத இத்தனை மர்மங்கள்?அதுவும் "பிரா" என்ற வார்த்தை உச்சரிக்கபடவே கூடாத கெட்ட வார்த்தையா என்ன?

ஆடைகளுக்கு உள்ளே அணியப்பட்டிருக்கும் பிரா ஸ்ட்ராப் அவ்வப்போது வெளியே தெரிவது ஓர் இயல்பான விஷயம்தானே என,ஏன் நம்மால் பார்க்க முடிவதில்லை.அப்படி வெளியே தெரியும் பிரா ஸ்ட்ராப்பை உள்ளே தள்ளமால் விட்டால் போதும், வளர்ப்பு சரியில்லை,பெத்தவங்களைச் சொல்லணும்" என ஒட்டுமொத்த குடும்ப மானத்தையே அந்த சிறிய பிரா ஸ்ட்ராப்பில் பதுக்கி வைக்கவேண்டிய அவசியம்தான் என்ன?


இவ்வாறான அத்தியாவசிய விஷயங்களைக்கூட நாம் யாருக்காக  taboo வாக மாற்றி வைக்கிறோம்? திரைப்படங்களில் எத்தனை  உள்பாடி ஜோக்குகள் இன்னும் வந்துகொண்டே இருக்கின்றன!
செருப்பு,சாக்ஸ்,சுடிதார்,லெக்கின்ஸ், வாட்சு போல பிராகூட பெண்கள் பயன்படுத்தும் மற்றொரு தேவையே என்பதை இந்த வாட்ஸப் காலத்திலாவது மக்கள் உணர்ந்தால் நல்லது!.




                                              கட்டுரையாளர் கோ.இராகவிஜயா...
2015‍ ‍_2016 ஆம் ஆண்டுக்கான விகடனின் சிறந்த பயிற்சி பத்திரிக்கையாளர் விருது பெற்றவர்





வீட்டுவாடகை தருவதற்காக மேல்மாடியில் வசிக்கும் உரிமையாளர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். உரிமையாளரின் 10 வயது பையன் ஐ திரைப்படத்தை விசிடியில் பார்த்துக் கொண்டிருந்தான்.
அண்மையில் இந்தப் 10 வயது யைனின் அம்மாவுக்கும் இவளுக்கும் விவாதம் ஒன்றாகிப் போனது. அவர்களது வீட்டிற்குச் சென்ற பத்ரி படுக்கையறை வரைக்கும் ஓடி விளையாடியிருக்கிறான். உலர்த்திக் குமியலாகக் கிடந்த துணிகளில் சில கட்டிலில் இருந்து வழுவிக் கீழே விழுந்திருக்கிறது. அதில் இந்தப் பெண்ணின் ப்ராவும் விழுந்திருக்கிறது. அவற்றை எடுத்துக் கட்டிலிலேயே போட்டுவிட்டு ”ஆன்டி உங்க ட்ரெஸ் ப்ராவெல்லாம் கீழே விழுந்திச்சி எடுத்து கட்டிலில் வைச்சிருக்கேன்” என்று சொல்லியிருக்கிறான்.
”ச்சீ, என்ன பேசுற நீ வீட்டுக்கு போ” என்று அவனை அனுப்பிவிட்டிருக்கிறார். சாதாரணமாக பத்ரி யார் வீட்டுக்குள்ளும் நுழைய மாட்டான். இவளும் அனுப்புவதில்லை. அதற்கான அவகாசம் எங்கள் இருவருக்கும் கிடைப்பதுமில்லை. சொற்பமாகத்தான், ”மேலே போய்ட்டு வரட்டுமா, ஐஞ்சே ஐஞ்சு நிமிஷம்தான்” என்று கேட்பான். அப்படியே குரல் கொடுப்பதற்குள்ளாக வந்துவிடுவான்.
மேல் வீட்டு ஆன்டி முகத்தைச் சுழித்துக் கொண்டு வீட்டுக்குத் திருப்பியனுப்பியது குறித்து பத்ரி எதுவும் சொல்லவில்லை. அன்று மாலை அந்தப் பெண் ஏதோ ரகசியமாகப் பேசுகிறவர் போல இவளிடம் வந்தார். ”என்ன பத்ரியம்மா, பிள்ளையை இப்படி வளர்த்திருக்கீங்க” என்றபோது நெஞ்சுக்குள் பகீரென்றது.
சிங்கிள் மதராக பிள்ளையை வளர்ப்பதென்பது சாதாரண தாயின் பொறுப்புக்களை விடவும் இரு மடங்கு அதிகமானது. எங்களுரில் ஒரு சொலவடை உண்டு. ”கண் பொஞ்சாதி வளர்த்த கழிசடை போல” என்று. ஆண் துணையில்லாத பெண் வளர்த்த பிள்ளை கழிசடையாகிப் போவான் என்கிற சொலவடை இது.
”பிள்ளையை இப்படி வளர்த்திருக்கீங்களே” என்றபோது கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது. ப்ராவை அவன் தெரிந்திருப்பதுதான் பிரச்சினை என்று தெரிந்து கொண்டபோது ஆசுவாசமாக அவர் சொல்வதைக் கேட்டேன். பத்து வயசுப் பையனுக்கு அது ப்ரா என்றுகூடத் தெரியாதாம். அதை அவன் கண்ணில் படும்படியாக அணிந்ததோ துவைத்ததோ காயப்போட்டதோ கிடையாதாம். பத்ரி 6 வயசுப் பையன் , இது தப்பில்லையா என்றார்.
”இதில என்ன தப்பு இருக்கு. புடவை, பாவாடை, சல்வார் கமீ்ஸ் மாதிரிதானே ப்ராவும். அவன் ஜட்டி போட்டிக்கிறான். நான் பேன்டி போட்டுக்கறேன். அவன் பெனியன் போட்டுக்கிறான். நான் ப்ரா போட்டுக்கறேன். இதில என்ன தப்பு இருக்கு” என்றேன்.
”நீங்க தப்பா புரிஞ்சிருக்கீங்க.... செய்தியெல்லாம் பார்க்கவே மாட்டீங்களா? அது சரி உங்களுக்கு எங்க அதுக்கெல்லாம் நேரமிருக்கு, காலையில வீட்டைப் பூட்டிட்டுப் போனீங்கன்னா, நைட்டு வர்றீங்க... உலக நடப்பு எங்க தெரியப்போவுது.... பிள்ளைகளை அவதானத்தோட வளர்க்கணும்” என்றபடியாக அவர் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
”இல்லை, நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க. எப்பவுமே அறியாத ஒன்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதுதான் மனித இயல்பு. எப்போதும் அறிந்து பழகிப்போன ஒன்றுக்காக நாம் யாரும் ஓடுவதில்லை. நீங்க ரொம்ப மூடி மூடி வளர்க்காதிங்க.” என்ற இவளது நியாயம் ஒன்றையும் அந்தப் பெண் உள்வாங்கத் தயாராக இருக்கவில்லை.
உரையாடல் முற்றிப் போகிற நிலையை அடைந்தபோது வேண்டாமே என்று முடித்துக் கொண்டோம்.
அதன் பிறகு சில நாட்களாக மனது இறுக்கமாக இருந்தது. பத்ரிக்கும் இவளுக்குமான உறவு நிலை, பழக்க வழக்கங்கள் குறித்து அசைபோட்டபடியே எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டியதாக இருந்தது.சூப்பர் மார்க்கெட் போனால் ”மம்மீ இது வாங்கலயா” என்று விஸ்பர் அல்ரா நப்கீன் பாக்கெற்றைக் காண்பித்துக் கேட்கிறளவு உறவு அவனது.
அண்மையில் உம்மா வந்திருந்தபோதுகூட ”ஆம்பிளைப் பிள்ளையை வளர்க்கிறாய்.... அப்படிப் பண்ணாத இப்படிப் பண்ணாத” என்று ஏகப்பட்ட பண்ணாதே சொல்லிருந்தாங்க. அதுவும் மனதை நெருடிக் கொண்டேயிருந்தது.
இந்தப் பெண் பேசிய சொற்களும் விலகிச் செல்வதாக இல்லை!
இவை நடந்து சில வாரங்கள் இருக்கும்.
இன்று -
அம்மாவின் ப்ரா எப்படியிருக்கும் அல்லது அம்மா ப்ரா அணிகிறாரா இல்லையா என்று தெரியாத 10 வயதுப் பையன் ”ஐ” திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். எமி ஜாக்சனின் ப்ராவை பார்க்கிறான். டூ பீஸ் உடையில் எமியைப் பார்த்து விக்ரம் சரிந்து விழுவதை ”உங்க கூகிளை மூடுங்க” என்று அவர் மார்புகளைப் பார்த்து சந்தானம் சொல்வதை, ”இதை எனக்குக் கொடுத்திடுடா இட்லித்தட்டா யூஸ் பண்ணிக்கிறேன்” என்று பிராவைத் தூக்கிப் பிடித்தபடி விக்ரமிடம் அம்மா சொல்வதையெல்லாம் குலுங்கிச் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான்.


LikeShow more reactions
51 Comments
Comments
Tamilosai Siva பயனுள்ள பதிவு .....
Theepika Theepa பாலியல் கல்வியின் தேவை சிறியவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அவசியமாகவே இருக்கிறது. மிகவும் ஆபாசமான வக்கிர அர்த்தங்களுடன் வெளிப்படும் சினிமாத் திரைப்பட வெளிப்பாடுகளை குழந்தைகள் பார்க்க அனுமதிக்கிறது எவ்வளவு பெரிய தப்பில்லையா? மரபு வழியாக பல சரிகளை தவறு என்றும் பல தவறுகளை சரியென்றும் இறுக்கமாக தீர்மானித்து வைத்திருக்கிற நம் மனங்கள் மேற்கொண்டு எதையும் சிந்திக்க மறுத்திருப்பது மிகப் பெரிய இழப்பே.
Nila Loganathan இதைத்தான் எங்கள் முதல்த்தலைமுறை செய்வதே இல்லையே. இதனால்த்தான் இவ்வளவு அக்கப்போரு. இவ்வளவென்ன, சாமத்தியப்படுவதற்கு முதல் நாள் வரை கூட நப்கினின் பாவனை என்னவென்று தெரியாமல் இருக்கும்படியல்லவா பெண் குழந்தைகளை வளர்த்தார்கள். என்னத்த சொல்ல.
Appanasamy Apps குழந்தைகளுக்கு எது தெரியலாம், தெரியக்கூடாது என நாம் விவாதிப்பதற்கு அவசியமேயில்லை.. ஏனென்றால் அவர்களிடமிருந்து நாம் விரும்பினாலும் எதையுமே மறைக்க இயலாது.. ஏனெனில் அவர்கள்தாம் நவீன ஊடகங்களின் முதன்மைப் பயனாளர்களாக மாறிவறுகிரார்கள்.. கூடியவிரையில் மடிகணிண...See More
Sharmila Seyyid உண்மை Nila Loganathan Theepika Theepa நம் குழந்தைகள் அப்படி வளர வேண்டாம். பால்நிலை சமத்துவம் என்பதை இதுதான் பால்நிலை சமத்துவம் என்று கட்டம் போட்டுக் காட்ட முடியாது. வளர்ப்பு முறையிலிருந்து தானாக பாலில் தண்ணீர் போல கலந்து வரவேண்டும்.
Sharmila Seyyid வளர்ந்த நாடுகளில் குழந்தைகளுக்கான பாலியல் கல்வி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நமது நாடுகளில் பெற்றோருக்கான பால் நிலைக் கல்வியே அவசியம் என்று தோன்றுகிறது. Appanasamy Apps
Nila Loganathan உண்மைய. பாலியல்/பால்நிலைச் சமத்துவம் வீட்டிலிருந்து தான் குழந்தைகளுக்கு வர வேண்டும்.
Appanasamy Apps சில வளர்ந்த நகரங்களில் குழந்தைகளின் பால் அடையாளத்தை வெளியிடுவதை விரும்பாதவர்கள் மன்றங்கள் உள்ளன. குறிப்பிட்ட வயதுவரை பெயர், உடை, அலங்காரம் எதிலும் பால் அடையாளம் தெரியவிடுவதில்லை. பாலர் மற்றும் தொடக்கப்பள்ளிகளிலும் சேர்க்கையின்போது பால் அடையாளத்தை வெளிப்படையாகக் கோரக்கூடாது என்று கோரிக்கை வைக்கிறார்கள். Sharmila Seyyid
Appanasamy Apps ஆமாம், பெற்றோருக்குத்தான் இங்கு முதலில் பாலியல் அறிவு தேவைப்படுகிறது. உண்மைதான். Sharmila Seyyidஆனால் குழந்தைகள் பதின்பருவ வயதை எட்டும்போது அவர்களுக்குக் குறைந்த பட்சம் உடல் பற்றிய தகவல்கள் மற்றும் உரிமைகள் குறித்த தகவல்கள் அறியச்செய்வதில் பெற்றோர் முக்கியப்பங்களிப்பு செய்ய முடியும்..
Sharmila Seyyid நீங்கள் சொல்வதை அறிவேன். நம்ம சமூகத்தில வயிற்றில இருக்கும்போதே பாகுபாடு துவங்கிவிடுகின்றது.Appanasamy Apps
Sikkandar Basha இன்று 6 வயது ரயான் கோழி வயிற்றில் எப்படி முட்டை வந்தது என்று கேட்டான். சேவல் அப்பா கோழி அம்மா என்று ஆரம்பித்தால் மேரேஜ் பண்ணுச்சாங்கிறான்.ரொம்ப கொழப்புறாய்ங்களே
நரேந்திர குமார் //சாதாரணமாக பத்ரி யார் வீட்டுக்குள்ளும் நுழைய மாட்டான். இவளும் அனுப்புவதில்லை// தவறாக எண்ண வேண்டாம் தோழி. இந்த அணுகுமுறையும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் .....
Kolanji AB Positive வாய்பிருந்தால் தலைமுறைகள் படத்தை பார்க்க சொல்லுங்கள்
Sharmila Seyyid மனிதர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பு இறைந்து கிடக்கிறது அவனுக்கு. சும்மா சும்மா உள்ள வீட்டுக்கெல்லாம் விசிட் அடித்துக் கொண்டிருப்பதால் ஒன்றும் நேர் எண்ணங்கள் விளைந்துவிடப் போவதில்லையே..... நரேந்திர குமார்
நரேந்திர குமார் சந்தோஷம் தோழி, ஏன்னா இன்னிக்கு பசங்களுக்கு இருக்குற மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் அவர்கள் அக்கம் பக்கம் போய் விளையாடாமல் இருப்பதுதான் ...
Sharmila Seyyid அவனுக்கு அக்கம் பக்கம் போக நேரமில்லை. பணம் செலவு பண்ணி விளையாட அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
காதர் அலி சூழல்தான் வாழ்வை தீர்மானிக்கிறது.அவருக்கு ஏதுவான சூழல் அமைய வாழ்த்துவோம்.
Punithan Gopal அவசியமான அழகான பதிவு. நேற்று ஒருவரது முகநூலில் எதோ ஒரு முஸ்லிம் அமைப்பு ஒன்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது முஸ்லிம் பெண்கள் இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டுமாம். இவ்வாறான சமூக சூழலில் வாழும் நீங்கள் இப்படியாக அதுவும் ஒரு ஆண்குழந்தையை வளர்ப்பது ஆரோக்கியமான செயலே....
Jeeva Giridharan குழந்தைகளுக்கு 'கெட்ட' விஷயங்கள் தெரியாமல் வளர்ப்பதாக நிறைய பெற்றோர்கள் நம்புகின்றனர். ஆனால் ஒரு காலத்தில் வீட்டு வாசலைத் தாண்டியதும் அவை வெளியெங்கும் நிறைந்து கிடந்தன. தற்போது நம் வீட்டின் நடுக் கூடத்திலேயே உட்கார்ந்து வகுப்பெடுக்க ஓரளவு தணிக்கைக்குட...See More
Karuna Karan y r great sharmila. Bhadriku vazhukkal
Sharmila Seyyid நாம் எப்போது நம் குழந்தைகளின் கேள்விகளையும் சந்தேகங்களையும் எதார்த்தமாக அணுகின்றோமோ அப்போதிருந்து நம்மீதான, நெருக்கம், நம்பிக்கை எல்லாமும் பன்மடங்காகி விடுகிறது. இந்ந உறவுதான் நாளை தவறு செய்யாது தடுக்கவும் தெரியாது நேருகின்றபோது பெற்றவர்களோடு தயக்கமின்றி உதவியும் ஆலோசனையும் கோரவும் வழி செய்கிறது.
Balaji G Sekar அருமை
Karthikeyan Subramanian நல்லதுமா
Sirajdeen Shaik இப்படி எதார்த்தமான சம்பவங்களை பதார்த்தமாக பதிவிட்டு விட்டீர்களே! இது சரியான கண்ணோட்டமா
Sharmila Seyyid இது சரியான கண்ணோட்டமா இல்லையா என்பது நீங்கள் எத்தகைய மனிதர் என்பதைப் பொருத்து மாறுபடக்கூடியது. 

Sirajdeen Shaik
Bala Guru நல்லதை விதைப்போம்.., நல்லது, நன்றாக வளரட்டும்.
Anand Skn True. very difficult
Sirajdeen Shaik உள்ளாடை என்ற வார்த்தை இருக்கும் போது , வக்கிரமான வார்த்தை பதிவிட்டது தவறு, நல்ல கண்ணோட்டத்தில் இருப்பதால்தான் இந்த பதிவு .
Sharmila Seyyid எதை வக்கிரமான வார்த்தை என்கிறீர்கள். ப்ரா என்பது உங்களுக்கு வக்கிரமாகத் தெரியும்போது உங்கள் கண்ணோட்டம் எப்படி நல்லதாக இருக்க முடியும்?
Sharmila Seyyid /இப்படி எதார்த்தமான சம்பவங்களை/ என்று நீங்களே குறிப்பிட்டுள்ளதன் படியும் பிரா என்பது இயல்பான பிரயோகம். நாங்கள் பிராவை ப்ரா என்றுதான் சொல்கிறோம் நீங்கள் ஜட்டியைப் பாவிப்பது போல....
விலாசினி ரமணி Sharmila Seyyid என் சின்னப்பையன் இருக்கானே, அவனுக்கு ப்ரா விளையாட்டுப் பொருள்தான். எனக்கு போக்கு காண்பிக்கவே அதை எடுத்துக்கொண்டு ஓடுவான், தூக்கி ஃபேன் மீது எறிவான். பெரியவன் அதை சமத்தாக வாங்கிவைத்து, "அம்மாவோட ட்ரெஸ்டா இது. விளையாடக்கூடாது. தூசு இருந்தா அரிக்கும்ல?" என்பான்.  
Sirajdeen Shaik உருவும்போது ஜாக்கெட் கிளிஞ்சிட்டா" என்ற வார்த்தை உங்களுக்கு எப்படி மேடம் 'சுருக்' பட்டது ! உங்கள் அந்தரங்க ஆடைகள் பற்றி நீங்கள் எழுதினால் தப்பில்லை! அது பெண் உரிமை அப்படி தானே
Sharmila Seyyid இங்கு ப்ரா பற்றி எழுதப்பட்டதையும் உருவும்போது ஜாக்கெட் கிளிஞ்சா என்பதும் ஒன்றாகிடுமா?
Sirajdeen Shaik உங்கள் வீட்டு உரிமையாளர் மானமும்,உங்கள் மானமும் சேர்த்து வாங்கி விட்டீர்கள் ஏன்எனில் ,பதிவு உங்கள் வீட்டில் நடந்து கொஞ்சம் அடக்கியே பதிவிடுங்கள் .
உங்கள் நலம் விரும்பி
Muralitharan Mayuran Mauran அம்மா எனும் ஒரு பெண்ணால் ஓர் ஆணின் மனவோட்டங்களை, நடத்தைக்கோலங்களை எவ்வளவு தூரம் புரிந்துகொள்ள முடியும்?

அம்மாவால் மட்டும் வளர்க்கப்பட்ட பிள்ளையாக நான் இல்லாதபோதிலும், பெரும்பாலும் அம்மாவின் அதிகாரத்தினுள் வளர வேண்டிய சூழல் எனக்கு இருந்தது. அம்மாக்களுக
...See More
Sharmila Seyyid Muralitharan Mauran 

//அம்மா எனும் ஒரு பெண்ணால் ஓர் ஆணின் மனவோட்டங்களை, நடத்தைக்கோலங்களை எவ்வளவு தூரம் புரிந்துகொள்ள முடியும்?//
...See More
Latha Swaathi சேலை, சூடிதார், ப்ராசியர் / ப்ரா என்று தான் சொல்ல முடியும். உள்ளாடை, வெளியாடை என்று எல்லாம் பிள்ளைகளிடம் தூய தமிழில் உரையாடுவதில்லை. கூகுள் முடு என்பது போன்ற வசனங்களை திரை உலகினர் குறைத்துக் கொள்வது சமுதாயத்திற்கு நல்லது அறிவாளிகள் உணர்த்த வேண்டும்.
Nila Loganathan ஆணும் ஆணும் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் அதில் ஒரு ஆணே தாயின் வகிபாகத்தை ஏற்க வேண்டி இருக்கிறது. அந்த ஆண் தம்பதிகள் வளர்க்கும் பிள்ளைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். இலங்கையில் அவ்வாறு இல்லையென்று சொல்லிவிட வேண்டாம். எனக்குத் தெரிந்த பெண் தம்பதி...See More
Sharmila Seyyid "பெண்ணினால் மட்டுமே அம்மாவாக முடியும்" என்பதும் "அம்மாவாக இருப்பது" என்பதும் வேறு வேறு நிலா Nila Loganathan
அ. ராமசாமி வார்த்தைகளின் நேரடி அர்த்தம் தெரியாத பிள்ளைகளுக்கு - வளர்ந்த மனிதர்களுக்கும் கூடப் புனைவுகளாகத் தரப்படும் சூழல் அர்த்தங்கள் எதிர்மறை மனநிலைகளையே உருவாக்கும் என்பதை நாம் உணராமல் இருக்கிறோம். உணரத்தொடங்கினால் எல்லாவகைக் கல்வியின் தேவையும் - பாலியல் கல்வி உள்பட உணரப்படும் . கற்றுத்தரப்படும்.
Muralitharan Mayuran Mauran Sharmila Seyyid நீங்கள் இந்த status ல் சொல்லியிருக்கும் சம்பவம், உங்கள் குழந்தை ஆரோக்கியமான சூழலில் வளர்வதையே காட்டுகிறது. பத்ரிக்குக் கிடைத்திருக்கும் நல்ல அம்மாவைப்போலவே நல்ல நண்பர்களும் ஆசிரியர்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவருக்கு என் அன்பு.
Thevakumar Kanagaratnam Yes sharmi, sariya soneega. Nanum Europavil valum Tamil pen,enakum nalantham oru kelvi en 4 vayathu Magal Kindergarten la irunth veetukuvanthathum ketpal, arambathil kovam vanthathu,pinbu therinthathu (multikulti)panmolzi, ella kalasarathudanum pillagal palagumoothu miga kavanamaga pillaigaluku ella visayamum sollikoduthu vallakanum nu.
Thevakumar Kanagaratnam Intha nadugali neraya pengal aangal thunaiyindri ondru alla, nerraya kullanthaigali vallarkurrargal, EM nattil than ithu ellam puthusu.... So dont worry u go head... Narambila nakku ellam soll um, 
bahthri ungaluku kidacha puthaiyal, so take More care of him,god bless u two.
Appanasamy Apps நேற்று மாலை நடைப்பயிற்சியின்போது தனது ஆறு வயசு மகனை டியூசனிலிருந்து அழைத்துச் செல்லும் மிடில்கிளாஸ் தாய்க்குலம் தனது மகனிடம் இப்படிக் கடிந்து கொண்டது காதில் விழுந்தது: 

“யூரின் வந்தா உச்சா வருதுன்னேு ஏன் சொல்றே? யூரின் வருதுன்னு சொல்லனும்னு எத்தனைதடவை சொல்லீருக்கேன்.. யூஸ்லெஸ்... “
...See More
KN Senthil உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் இடையில் இருக்கும் உறவைப் பற்றி(அவன் குழந்தையாக இருந்தது முதல் கொண்டு ஏதேனுமொன்றைக் குறித்து) நீங்க ஏன் ஒரு சிறுகதை ஒன்றை எழுதக் கூடாது !?


கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...