முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காபி தோட்டமும் காமன்மேனும்!


-சரவணன் சந்திரன்


காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன.
இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான பாடங்கள் கற்பதற்காகக் காத்துக் கிடக்கின்றன.
எங்கிருந்து எதைக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதில்தான் எங்கே இருக்கப் போகிறோம் என்பது உறுதியாகிறது. கர்நாடகா செல்லும் போதெல்லாம் உடனடியாகவே இரண்டு பேர் நினைவிற்கு வருவார்கள். கேப்டன் கோபிநாத்தும் சித்தார்த்தாவுமே அவர்கள். “FISHIN" துவங்குவதற்கு முன்னால், அது மாதிரியான கடைகள் பெங்களூரில் ஏற்கனவே இருப்பதாகக் கேள்விப்பட்டு அதைப் பார்க்கப் போயிருந்தோம். கடையின் முகப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு, “இதோ அதை மாதிரி” என நண்பன் ராஜ்மோகனிடம் காட்டியது, காபி டே கடையின் முகப்பைத்தான். கத்தரிப்பூ நிறத்தினுள் வெள்ளை வெளிச்சம். அதை மாதிரியாக வைத்தே ஊதா நிறத்தில் வெள்ளை எழுத்துக்களைப் பொறித்தோம். அந்த வகையில் சித்தார்த்தாவிற்கு எங்களது குட்டி நிறுவனம் நன்றிக்கடனோடு அஞ்சலியும் செலுத்துகிறது.
காபி தோட்டத்து உரிமையாளர் வீட்டுப் பையனான சித்தார்த்தா இயல்பாகவே கோப்பைக்குள் காபியை அடைத்து விற்கிற கனவை வந்தடைந்தார். சித்தார்த்தாவுக்கும் இராணுவத்தில் சேர விருப்பம் இருந்திருக்கிறது. ஒருவேளை சேர்ந்து விட்டு மறுபடி தொழில் துவங்கியிருந்தால் இந்த முடிவிற்கு வந்து சேர்ந்திருக்கவும் மாட்டார். அதற்கு முன்னர் அவருக்கு எல்லா விதங்களிலும் நல்ல கல்வியும் நற்சூழலும் கிடைத்திருக்கிறது. எவருக்கும் கிடைக்காத அரும்பாக்கியமது என்றே வர்ணிப்பேன் அதை. எதுவுமே இல்லாதவர்களுக்கே அதன் அருமை புரியும். காபி தோட்டத்தினுள் சுற்றும் குளுகுளுவென்ற வாழ்க்கையே அது. என்னுடைய கல்லூரியில் அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த காபி தோட்டத்து உரிமையாளர்களது பையன்கள் பலரைப் பார்த்திருக்கிறேன் என்கிற வகையிலேயே இதைக்கூடச் சொல்கிறேன். சித்தார்த்தா பற்றிய மேற்படி தகவல்களையெல்லாம் இணையத்தில் தேடினால் அதிகமாகவே கிடைக்கக்கூடும்.
ஆனால் இங்கே வேறொரு விஷயத்தைப் பேசப் பிரியப்படுகிறேன். அதே கர்நாடகத்தில் இருக்கிற குக்கிராமம் ஒன்றில் இருந்து கிளம்பிய வேறோருத்தரின் கதையும் நம்முன்னே ஏற்கனவே கடைபரப்பப் பட்டிருக்கிறது. எட்டுப் பிள்ளைகள் கொண்ட வீட்டில் இரண்டாவதாகப் பிறந்தவர் அவர். ஆசிரியரான தந்தையிடம் வீட்டில் இருந்தே கல்வி கற்றார். ராணுவத்தில் சேர்ந்தார். அதற்குப் பிறகு கேப்டன் கோபிநாத் இவரென உலகம் அடையாளம் காணத் துவங்கியது அவரை. இந்தியாவின் முதல் உள்ளூர் குறைந்த கட்டண விமான சேவையைத் துவக்கியவர் அவரே. 2003 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் தன்னுடைய சேவையைத் துவக்குவதற்கு முன்பு வரை அப்படியொன்று நடக்கும் என எவருமே நம்பவில்லை. விமானப் பயணம் என்றாலே, இன்னொரு தட்டினருக்கானது என்றே இருந்த புரிதலை அடித்து நொறுக்கியவர் அவர்.

பூனைநடை நடந்தெல்லாம் அந்த இடத்தை வந்து சேரவில்லை அவர். “Simply Fly” என அவர் எழுதிய புத்தகத்தில் கடந்து வந்த பாதையை சமரசமில்லாமல் விரித்து வைத்திருப்பார். அந்தப் புத்தகம் தமிழில்கூடக் கிடைக்கிறது. தொழில் தொடங்க நினைப்பவர்கள் தவறவே விடக்கூடாத புத்தகம் அதுவென்பேன். ஆரம்பத்தில் ஹெலிஹாப்டர் சேவையாகத் துவங்கிய பயணம் எப்படிப் படிப்படியாக விமானச் சேவையாக வளர்ந்தது என்பதை வர்ணித்திருப்பார் அதில். அவர் பட்ட துயரங்களையெல்லாம் வேறு யாராவது சந்தித்திருந்தால், ஆரம்பத்திலேயே விலகி ஓடியிருப்பார்கள். நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்றார் கேப்டன் கோபிநாத்.

இப்போது தோற்றுப் போன தொழிலதிபர் என்கிற அடைமொழியோடு இன்னொரு நாட்டில் தஞ்சமடைந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் விஜய் மல்லையா ஏர் டெக்கானின் பெரும்பாலான பங்குகளை விலை கொடுத்து வாங்கி விட்டு, கேப்டன் கோபிநாத்தை என்ன பாடு படுத்தினார் என்பதையெல்லாம் படித்தால், மல்லையாவை காலம் ஊரை விட்டு விரட்டியது சரிதான் என்கிற முடிவிற்கு இயல்பாகவே வந்து சேர்ந்து விடுவோம். என்னையெல்லாம் கேட்டால் காலம் அவரை தண்ணியில்லாத காட்டிற்குத்தான் துரத்தியிருக்க வேண்டுமென்பேன். ஏற்கனவே பல இடங்களில் பலநேரங்களில் சொன்னதைத்தான் திரும்பவும் இந்த இடத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது. வெயிலடி படுகிற செடிகளே எல்லா வறட்சிகளையும் எதிர்த்து நிற்கிற திராணியைப் பெறுகின்றன.
சித்தார்த்தா விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே இருந்த தங்களுடைய குடும்ப வணிகத்தைத் திறம்பட எடுத்து விரித்துப் பறந்தார். ஆனாலும் நிழலடி பட்ட செடியே அவர். எதிர்த்து நிற்கிற திறத்தை எங்கே இழந்தார்? என்ன இல்லை அவரிடம்? எதற்காக காலத்தின் முன்னால் மண்டியிட்டார்? கேப்டன் கோபிநாத் கதை அப்படியில்லை. வெறும் கையில் முழம் போட்டு வானத்தில் தனக்கான அடையாளத்தைப் பறக்க விட்டார். சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். ஏர் டெக்கானின் முதல் விளம்பரத் தூதர் ஆர்.கே.லட்சுமண் வரைந்த காமன்மேன் வரைசித்திரமே. தரையிலிருந்து புறப்பட்ட காமன்மேன் எதிர்ப்புகளை எளிதாகவே எதிர்கொண்டார்.
இதைப் பொதுமைப்படுத்த முடியாது என்பது நன்றாகவே புரிகிறது. எல்லா இடங்களிலும் எல்லா மாதிரியான ஆட்களும் இருக்கவே செய்வார்கள். ஆனாலும் பொதுவாகவே முதல் தலைமுறையாய் முட்டி மோதுகிறவர்களிடம் இருக்கிற தீரம் மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோர்களிடம் இருப்பதில்லை. நன்றாகத் தெரிந்த சரவண பவன் ஹோட்டல் சங்கிலியையே எடுத்துக் கொள்வோம். சில கிளைகளுக்கு இப்போது போய்ப் பார்த்த போது, அருளடங்கி இருப்பதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. உணவிலும் தரத்திலும் எப்போதோ அது சரிவை நோக்கி நகர்ந்து விட்டதென அதன் நிரந்தர வாடிக்கையாளர்கள் புலம்புவதைக் காதுபடவே கேட்க முடிகிறது. எதனால் என்பதை இந்தப் பின்னணியில் வைத்து ஆராய்ந்தால் புரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் மூன்றாம் தலைமுறை கைமாற்றி விடுவதிலும் இழுத்து மூடுவதிலுமே அதிகமும் ஆர்வம் காட்டுகிறது. கிளைபரப்பி நிற்கிற ஆலமரத்தை பாடுபட்டாவது வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் சுணங்கி விடும் ஆட்களை அங்கேதான் அதிகமும் பார்க்க முடிகிறது.
மாறாக இழப்பதற்கு ஒன்றுமில்லையென முட்டி மோதி முன்னுக்கு வருகிறவர்கள் பலரிடம் இயல்பான தீரம் ஒட்டியிருப்பதைப் பார்க்கவும் முடிகிறது. சித்தார்த்தா விஷயத்தில் இருந்து இதையே நான் கற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன். சுபிக்‌ஷா நிறுவனர் இப்போதும் எங்கேயாவது முட்டி மோதிக் கொண்டிருப்பார் என்பதை உறுதியாகச் சொல்லி விடமுடியும். எல்லாவற்றையும் இழந்த பிறகும் இப்படி முட்டி மோதுகிறவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர் குறித்து ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் ஏர்செல் சிவசங்கரனே மிகச் சிறந்த உதாரணம்தான். அவரும் சித்தார்த்தாவும்கூட நல்ல நண்பர்கள் என்கிற மாதிரி ஒரு குறிப்பொன்றையும் இப்போது படித்தேன். எங்களுடைய கடையின் வாடிக்கையாளராகவும் அவர் இருக்கிறார்.
இந்தியாவில் இருக்கும் போதெல்லாம் கடைக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் அவர், எங்களுக்கு சொத்தாய் பல அறிவுரைகளை எங்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் சொல்லியிருக்கிறார். அவருக்கு வணிகத்தில் ஏற்படாத சிக்கல்களா? நாட்டை விட்டே ஓடி ஒளிய வேண்டிய நிலை ஏற்பட்ட போதுகூட எப்படி முட்டி மோதி எதிர்த்து நின்றார்? இவர்களிடமிருந்தே புதிய தொழில்முனைவோர்கள் பாடம் கற்க வேண்டுமெனவும் தோன்றுகிறது.
சித்தார்த்தா விஷயத்தில் வேறொரு கோணத்தில் ஒரு சிக்கல் இருப்பதையும் கவனிக்க வேண்டும். தினமும் புழங்குகிற பெரிய இடத்தில் “தோற்றுப் போன தொழில்முனைவோனாக” நிற்க விரும்பாத மன அயர்ச்சியே அவரை இந்த முடிவிற்குத் தள்ளியிருக்கக்கூடும். அவர் தன்னுடைய நிறுவன சகாக்களுக்கு எழுதிய கடிதத்தை முழுமையாகப் படித்த போது, அதை உணரவும் முடிகிறது. ஏனெனில் தொழில்முனைவோன் என்பது பதவியல்ல. அது ஒரு பொறுப்பு. நம்மை நம்பி வந்த பணியாளர்களைக் கரை சேர்க்க வேண்டுமென்கிற துடிப்பு அந்தப் பொறுப்பிற்கு முன்னால் இருக்கிறது. அதனால்தான் அந்தக் கடிதத்தில் கவனமாக அந்த வார்த்தைகளைக் கையாள்கிறார்.

இறுதியில் அவர் தன்னுடைய பணியாளர்களுக்கு அவநம்பிக்கையையே பரிசாக அளித்து விட்டும் சென்றிருக்கிறார் என்கிற வகையில் ஆழமான வருத்தமே மேலிடுகிறது. எதைக் கொண்டு வந்தோம், எதை இழப்பதற்கு என்பதை வணிகத்தில் மட்டுமாவது பின்பற்றலாம் என்றே நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும், அதைச் செலுத்துவது மனமென்னும் லகான்தான். அதன் பிடியை விட்டு விட்டால், பல்லாயிரம் கோடி ரூபாய்கூட அற்பமாய் ஆற்றில் மிதக்கும்!





 சரவணன் சந்திரன் ,லகுடு ,பார்பி  உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்



கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

வஞ்சிர மீன்கள் மீதான காதலும் சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்களும்!

                                                              இப்போது சொல்லும் விஷயத்தை நீங்கள் நேரிடையாகவும் புரிந்து கொள்ளலாம். மறைமுகமாகவும் பொருள் கொள்ளலாம் நண்பர்களே! அது உங்கள் விருப்பம் சார்ந்தது. கடந்த ஆறேழு வருடங்களாக ‘FISHIN' என்ற பெயரில் கடை ஒன்று நடத்தி வருகிறேன். அங்கே சொல்லி வைத்தாற்போல வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது வஞ்சிரம் மீனைத்தான். இத்தனைக்கும் பாரம்பரியக் கடலோடிகள் இந்த மீனைச் சக்கை என்று சொல்லி ஒதுக்கி விடுவார்கள். அவர்கள் சத்தானதாகவும் சுவையானதாகவும் கருதுபவை சிறிய மீன்களான அயிலா, சங்கரா, மத்தி, பாறை, வவ்வால், சூரை போன்றவற்றையே. நமக்கு எப்போதும் எல்லா விஷயங்களிலும் எல்லாமே பெரியதாக இருக்க வேண்டும். நோகாமல் நொங்கு தின்ன வேண்டும். நொங்கு தின்னலாம். நோகாமல் மீன் சாப்பிட விரும்பினால் எப்படி? ஒருமுறை ஆங்கிலத்தில் வெளியாகும் நவநாகரீக பெண்கள் பத்திரிகை ஒன்றின் ‘பாவமன்னிப்பு’ பகுதியில் பெண் ஒருவர் கடிதமொ...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...