முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

| சரவணன் சந்திரன் - இயல்பு நோக்கும் ஆளுமை!





சமகால இலக்கிய உலகில் வளர்ந்து வரும் முக்கிய இளம் எழுத்தாளர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாதவராய், அடுத்தடுத்த தனது மூன்று படைப்புகளின் மூலம் இலக்கிய வெளிச்சத்தை தன் மீது விழச் செய்திருக்கிறார் சரவணன் சந்திரன்.
ஹாக்கி ப்ளேயர், பத்திரிக்கையாளர், சுயதொழில் முனைவோர் என பல்வேறு அடையாளங்களைக் கொண்டுள்ள சரவணன் சந்திரன, தன்னை வளர்ந்து வரும் ஓர் எழுத்தாளராக இலக்கிய உலகில் நிலைநிறுத்திக் கொள்ள கடந்து வந்த பாதையும் அவரது படைப்புகளைப் போலவே அத்தனை யதார்த்தங்களை கொண்டுள்ளது.
குறுகிய காலங்களிலே 'ஐந்து முதலைகளின் கதை', 'ரோலக்ஸ் வாட்ச்', 'வெண்ணிற ஆடை' என மூன்று புத்தகங்களை எழுதிய சரவணன் சந்திரன் தனது நான்காவது படைப்பான 'அஜ்வா' நாவலை முடித்த மகிழ்ச்சியில் நம்மிடையே பேசினார்.
ஓர் எழுத்தாளராக நமக்கு அறிமுகமான சரவணன் சந்திரன் முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது ஒரு ஹாக்கி ப்ளேயராகதான். சரவணன் சந்திரனுக்கு பள்ளிப் பருவம் முதல் தான் ஒரு ஹாக்கி ப்ளேயராக இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே விருப்பமாக இருந்ததாம்.
வாழ்க்கையின் பாதை எங்கு, எப்படி மாறும் என்பது சொல்லப்படாத ரகசியம் என்பது போல, சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு விபத்தில் தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் தனது ஹாக்கி கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சரவணன்.
ஹாக்கி விளையாட்டு வீரருக்கு பேனாவைப் பிடிக்கும் சூழல் எப்படி நேர்ந்தது என்று கேட்டேன். "ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்கும்போதே எங்கள் கல்லூரியில் நடக்கும் 'வனம்' என்ற கவிதை, சிறுகதை வாசிப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வேன். அந்த ஆர்வம்தான் நான் எழுத அடித்தளமாகவும் அமைந்தது.
அதன்பின் கல்லூரி படிப்பை முடித்தவுடன் சினிமா, வேலை என்ற இரு பாதைகள் என் கண்முன்னே இருந்தன. பொருளாதார நெருக்கடியால் வேலையைத் தேர்ந்தெடுத்து விட்டேன். 'ஆறாம்தினை' என்ற இணைய இதழில்தான் முதல்முதலாக வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு காலச்சுவடு, இந்தியா டுடே, கதையல்ல நிஜம் போன்ற நிகழ்ச்சிகளில் பணிபுரிந்தேன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் இயக்குனராகவும் பணிபுரிந்தேன்" என்று தொடர்ந்த சரவணன் சந்திரன், பத்திரிகையில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே இடையிடையே மீன் தொழில், பட்டாசுக் கடை, பிபிஓ என பல தொழில்களை செய்து வந்திருக்கிறார்.
இலக்கிய உலகில் தொடர்ந்து பயணப்பட்டிருந்தும் புத்தகம் என்று ஒன்றும் வராமலிருந்தது ஒருவிதக் குற்றவுணர்ச்சியை அவருக்குள் ஏற்படுத்தியதாக கூறுபவர், தனது முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை' எப்படி உருவானது என்பதை சுவாரசியம் மிகுந்த குரலில் பகிர்ந்தார்.
"நான் தொழில்ரீதியாக ஒருமுறை தைமூர் நாட்டிற்கு பயணம் சென்றிருந்தேன். அங்கு கிடைத்த அனுபவத்தை கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனிடம் சொல்லும்போது ''நீ எவ்வளவோ விஷயங்களை செய்கிறாய். ஆனால் அது எதுவுமே நிலைக்காது. உன் அனுபவங்கள் மூலம் நீ எழுதும் புத்தகங்கள்தான் கடைசி வரை உன்னை நினைவுபடுத்தும்'' என்றார். அதில் உருவானதுதான் 'ஐந்து முதலைகளின் கதை'.
'ஐந்து முதலைகளின் கதை' நாவலில் உலகமயமாக்கலின் விளைவு குடும்ப உறவுகளை எப்படிப் பாதிக்கிறது. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அந்தந்த கதாபாத்திரங்களின் வாயிலாக தத்ரூபமாக விளக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு இயல்பு நிறைந்த படைப்புகளைத் தருவதற்கு எழுத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பத்திரிகை உலகில் பணியாற்றியது உதவியதா? என்றதற்கு, "பணியின் நிமித்தமாக இதுவரை கிட்டத்தட்ட 5000 பேரையாவது சந்தித்து அவர்களது வாழ்க்கையைக் கேட்டறிந்திருப்பேன். எழுதுவதற்கு நிறைய அனுபவமும், கதைகளும் என்னுள் இருந்தன. இதனால் களத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்து ஒரு நூலை எழுத வேண்டிய நிலை எனக்கு ஏற்படவில்லை. அதனாலேயே ஒரு வருடத்திலேயே 'ஐந்து முதலைகளின் கதை' உட்பட 'ரோலக்ஸ் வாட்ச்', 'வெண்ணிற ஆடை' என மூன்று படைப்புகளை வெளியிட முடிந்தது" என்றார்.
எளிய நடையில் தனது படைப்புகளை வாசகரிடம் சேர்க்கும் சரவணன் சந்திரனிடம் எழுத்தாளராவதற்கு வலிமையான இலக்கியப் பின்னணி அவசியமா என்பதற்கு, நிதானமாக தனது பேச்சைத் தொடர்ந்தார்.
"அப்படி ஒன்றும் இல்லை. எழுத்தின் மீது ஆர்வம் இருந்தால் போதும். பெரும்பாலான மூத்த எழுத்தாளர்கள் எனது படைப்பைப் பாராட்டிதான் எழுதினார்கள். இலக்கியத் தரம் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோட்பாடு, கொள்கையும் வைத்திருக்கிறார்கள். இதில் நிறைய குழுக்கள் உள்ளன. அது மிக சிக்கலானது. என்னுடைய பாதை வெரி சிம்பிள். எனக்குத் தெரிந்த வாழ்க்கையை எனக்குத் தெரிந்த மொழியில் வாசகனிடம் எளியமையாக சொல்ல வேண்டும்" என்று கூறும் சரவணன் சந்திரனின் முதல் படைப்பான 'ஐந்து முதலைகளின் கதை' என்ற நாவலுக்கு 2016ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது வழங்கப்பட்டுள்ளது.
கேரளா, மேற்கு வங்கம்போல் எழுத்தாளர்களை தூக்கிப் பிடிக்கும் சமூகமாக தமிழகம் இல்லையே, இந்த நிலை மாற எழுத்தாளர்கள் தங்களை சுய திருத்தம் செய்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வியை முடிக்கும் முன்பே, "எழுத்தாளர்கள் சுய திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் கூற மாட்டேன். ஆனால் நான் என்னை சுயதிருத்தம் செய்து கொண்டேன். என்னுடைய ஆரம்ப நாட்களை சில புத்தகங்களின் விலையைக் கண்டு வாங்கமுடியாமல் தவிர்த்திருக்கிறேன். என் புத்தகங்களை பக்கங்களையோ, விலையையோ வைத்து யாரும் தவிர்த்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் என்னை சுய திருத்தம் செய்து கொண்டேன்" என்று வாசகர் தந்த நம்பிக்கையுடன் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
"தமிழகத்தில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே காட்சி ஊடகத்துக்கு அளித்த முக்கியத்துவத்தை எழுத்துக்கு அளிக்கமால் போனதுதான் முக்கிய காரணம். நமது தமிழ் சமூகத்திடம் எதையும் பதிய வைக்கும் பழக்கம் இல்லை. உ.வே. சாமிநாதையர் இல்லையென்றால் சங்க இலக்கியமே நமக்கு கிடைத்திருக்காது. வரலாற்றைப் பதிவு செய்யும் மரபு நம்மிடையே முறையாக இருந்ததா என்ற குழப்பம் எனக்கு உண்டு. இன்றும் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டுதான் இருக்கிறார்கள் அவர்களது காலத்துக்குப் பிறகு அதுதான் வேறுபாடு" என்று தனது நிலைப்பாட்டை கூறினார்.
சரவணன் சந்திரனுடனான கலந்துரையாடலின் இறுதியாக வளரும் இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை என்ன என்று வழக்கமான கேள்வி ஒன்றை கேட்டபோது, "ஒன்றே ஒன்றுதான். எழுத்தை முழு நேரத் தொழிலாளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். வருமானத்துக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து எழுதுங்கள், பயணப்படுங்கள்" என்று அன்பான இயல்பு மீறாத அறிவுரையை முன்வைக்கிறார் சரவணன் சந்திரன்.
சரவணன் சந்திரனின் நூல்கள்:
ஐந்து முதலைகளின் கதை - உயிர்மை பதிப்பகம் | ரோலக்ஸ் வாட்ச் - உயிர்மை பதிப்பகம் | வெண்ணிற ஆடை- உயிர்மை 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...