முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

| சரவணன் சந்திரன் - இயல்பு நோக்கும் ஆளுமை!





சமகால இலக்கிய உலகில் வளர்ந்து வரும் முக்கிய இளம் எழுத்தாளர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாதவராய், அடுத்தடுத்த தனது மூன்று படைப்புகளின் மூலம் இலக்கிய வெளிச்சத்தை தன் மீது விழச் செய்திருக்கிறார் சரவணன் சந்திரன்.
ஹாக்கி ப்ளேயர், பத்திரிக்கையாளர், சுயதொழில் முனைவோர் என பல்வேறு அடையாளங்களைக் கொண்டுள்ள சரவணன் சந்திரன, தன்னை வளர்ந்து வரும் ஓர் எழுத்தாளராக இலக்கிய உலகில் நிலைநிறுத்திக் கொள்ள கடந்து வந்த பாதையும் அவரது படைப்புகளைப் போலவே அத்தனை யதார்த்தங்களை கொண்டுள்ளது.
குறுகிய காலங்களிலே 'ஐந்து முதலைகளின் கதை', 'ரோலக்ஸ் வாட்ச்', 'வெண்ணிற ஆடை' என மூன்று புத்தகங்களை எழுதிய சரவணன் சந்திரன் தனது நான்காவது படைப்பான 'அஜ்வா' நாவலை முடித்த மகிழ்ச்சியில் நம்மிடையே பேசினார்.
ஓர் எழுத்தாளராக நமக்கு அறிமுகமான சரவணன் சந்திரன் முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது ஒரு ஹாக்கி ப்ளேயராகதான். சரவணன் சந்திரனுக்கு பள்ளிப் பருவம் முதல் தான் ஒரு ஹாக்கி ப்ளேயராக இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே விருப்பமாக இருந்ததாம்.
வாழ்க்கையின் பாதை எங்கு, எப்படி மாறும் என்பது சொல்லப்படாத ரகசியம் என்பது போல, சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு விபத்தில் தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் தனது ஹாக்கி கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சரவணன்.
ஹாக்கி விளையாட்டு வீரருக்கு பேனாவைப் பிடிக்கும் சூழல் எப்படி நேர்ந்தது என்று கேட்டேன். "ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்கும்போதே எங்கள் கல்லூரியில் நடக்கும் 'வனம்' என்ற கவிதை, சிறுகதை வாசிப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வேன். அந்த ஆர்வம்தான் நான் எழுத அடித்தளமாகவும் அமைந்தது.
அதன்பின் கல்லூரி படிப்பை முடித்தவுடன் சினிமா, வேலை என்ற இரு பாதைகள் என் கண்முன்னே இருந்தன. பொருளாதார நெருக்கடியால் வேலையைத் தேர்ந்தெடுத்து விட்டேன். 'ஆறாம்தினை' என்ற இணைய இதழில்தான் முதல்முதலாக வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு காலச்சுவடு, இந்தியா டுடே, கதையல்ல நிஜம் போன்ற நிகழ்ச்சிகளில் பணிபுரிந்தேன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் இயக்குனராகவும் பணிபுரிந்தேன்" என்று தொடர்ந்த சரவணன் சந்திரன், பத்திரிகையில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே இடையிடையே மீன் தொழில், பட்டாசுக் கடை, பிபிஓ என பல தொழில்களை செய்து வந்திருக்கிறார்.
இலக்கிய உலகில் தொடர்ந்து பயணப்பட்டிருந்தும் புத்தகம் என்று ஒன்றும் வராமலிருந்தது ஒருவிதக் குற்றவுணர்ச்சியை அவருக்குள் ஏற்படுத்தியதாக கூறுபவர், தனது முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை' எப்படி உருவானது என்பதை சுவாரசியம் மிகுந்த குரலில் பகிர்ந்தார்.
"நான் தொழில்ரீதியாக ஒருமுறை தைமூர் நாட்டிற்கு பயணம் சென்றிருந்தேன். அங்கு கிடைத்த அனுபவத்தை கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனிடம் சொல்லும்போது ''நீ எவ்வளவோ விஷயங்களை செய்கிறாய். ஆனால் அது எதுவுமே நிலைக்காது. உன் அனுபவங்கள் மூலம் நீ எழுதும் புத்தகங்கள்தான் கடைசி வரை உன்னை நினைவுபடுத்தும்'' என்றார். அதில் உருவானதுதான் 'ஐந்து முதலைகளின் கதை'.
'ஐந்து முதலைகளின் கதை' நாவலில் உலகமயமாக்கலின் விளைவு குடும்ப உறவுகளை எப்படிப் பாதிக்கிறது. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அந்தந்த கதாபாத்திரங்களின் வாயிலாக தத்ரூபமாக விளக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு இயல்பு நிறைந்த படைப்புகளைத் தருவதற்கு எழுத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பத்திரிகை உலகில் பணியாற்றியது உதவியதா? என்றதற்கு, "பணியின் நிமித்தமாக இதுவரை கிட்டத்தட்ட 5000 பேரையாவது சந்தித்து அவர்களது வாழ்க்கையைக் கேட்டறிந்திருப்பேன். எழுதுவதற்கு நிறைய அனுபவமும், கதைகளும் என்னுள் இருந்தன. இதனால் களத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்து ஒரு நூலை எழுத வேண்டிய நிலை எனக்கு ஏற்படவில்லை. அதனாலேயே ஒரு வருடத்திலேயே 'ஐந்து முதலைகளின் கதை' உட்பட 'ரோலக்ஸ் வாட்ச்', 'வெண்ணிற ஆடை' என மூன்று படைப்புகளை வெளியிட முடிந்தது" என்றார்.
எளிய நடையில் தனது படைப்புகளை வாசகரிடம் சேர்க்கும் சரவணன் சந்திரனிடம் எழுத்தாளராவதற்கு வலிமையான இலக்கியப் பின்னணி அவசியமா என்பதற்கு, நிதானமாக தனது பேச்சைத் தொடர்ந்தார்.
"அப்படி ஒன்றும் இல்லை. எழுத்தின் மீது ஆர்வம் இருந்தால் போதும். பெரும்பாலான மூத்த எழுத்தாளர்கள் எனது படைப்பைப் பாராட்டிதான் எழுதினார்கள். இலக்கியத் தரம் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோட்பாடு, கொள்கையும் வைத்திருக்கிறார்கள். இதில் நிறைய குழுக்கள் உள்ளன. அது மிக சிக்கலானது. என்னுடைய பாதை வெரி சிம்பிள். எனக்குத் தெரிந்த வாழ்க்கையை எனக்குத் தெரிந்த மொழியில் வாசகனிடம் எளியமையாக சொல்ல வேண்டும்" என்று கூறும் சரவணன் சந்திரனின் முதல் படைப்பான 'ஐந்து முதலைகளின் கதை' என்ற நாவலுக்கு 2016ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது வழங்கப்பட்டுள்ளது.
கேரளா, மேற்கு வங்கம்போல் எழுத்தாளர்களை தூக்கிப் பிடிக்கும் சமூகமாக தமிழகம் இல்லையே, இந்த நிலை மாற எழுத்தாளர்கள் தங்களை சுய திருத்தம் செய்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வியை முடிக்கும் முன்பே, "எழுத்தாளர்கள் சுய திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் கூற மாட்டேன். ஆனால் நான் என்னை சுயதிருத்தம் செய்து கொண்டேன். என்னுடைய ஆரம்ப நாட்களை சில புத்தகங்களின் விலையைக் கண்டு வாங்கமுடியாமல் தவிர்த்திருக்கிறேன். என் புத்தகங்களை பக்கங்களையோ, விலையையோ வைத்து யாரும் தவிர்த்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் என்னை சுய திருத்தம் செய்து கொண்டேன்" என்று வாசகர் தந்த நம்பிக்கையுடன் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
"தமிழகத்தில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே காட்சி ஊடகத்துக்கு அளித்த முக்கியத்துவத்தை எழுத்துக்கு அளிக்கமால் போனதுதான் முக்கிய காரணம். நமது தமிழ் சமூகத்திடம் எதையும் பதிய வைக்கும் பழக்கம் இல்லை. உ.வே. சாமிநாதையர் இல்லையென்றால் சங்க இலக்கியமே நமக்கு கிடைத்திருக்காது. வரலாற்றைப் பதிவு செய்யும் மரபு நம்மிடையே முறையாக இருந்ததா என்ற குழப்பம் எனக்கு உண்டு. இன்றும் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டுதான் இருக்கிறார்கள் அவர்களது காலத்துக்குப் பிறகு அதுதான் வேறுபாடு" என்று தனது நிலைப்பாட்டை கூறினார்.
சரவணன் சந்திரனுடனான கலந்துரையாடலின் இறுதியாக வளரும் இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை என்ன என்று வழக்கமான கேள்வி ஒன்றை கேட்டபோது, "ஒன்றே ஒன்றுதான். எழுத்தை முழு நேரத் தொழிலாளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். வருமானத்துக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து எழுதுங்கள், பயணப்படுங்கள்" என்று அன்பான இயல்பு மீறாத அறிவுரையை முன்வைக்கிறார் சரவணன் சந்திரன்.
சரவணன் சந்திரனின் நூல்கள்:
ஐந்து முதலைகளின் கதை - உயிர்மை பதிப்பகம் | ரோலக்ஸ் வாட்ச் - உயிர்மை பதிப்பகம் | வெண்ணிற ஆடை- உயிர்மை 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

ரகசியத்தின் அரூப நிழல்கள் ( சிறுகதை )

ஒரு நிமிடம் பொறுங்கள். இந்தக் கதையில் வரும் வினோத் ஒருவேளை உங்களுக்கு அறிமுகமானவனாய் இருக்கலாம். முதல் பக்கத்திலோ அல்லது நான்காவது பக்கத்திலோ அவனை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தால் பதட்டப்படாமல் பாதியில் நிறுத்தாமல் முழுவதும் வாசிக்க முயற்சி செய்யுங்கள். அவன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பது தனிமனித உடல் இச்சைகளை அல்ல. காமத்தின் சுவிசேஷத்தை. Story of a male whore….. Whore? இந்த வார்த்தை எத்தனை அபத்தமானது தெரியுமா? உடல் என்பது பிரார்த்தனைக்கானது, சமயங்களில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிரார்த்திக்க, இன்னும் சில சமயங்களில் ஒரு ஆணும் சில பெண்களும் அல்லது சில ஆண்களும் சில பெண்களுமென தேவை எதுவோ அதுவாக கொண்டாடுவது. அதிகாரத்தின் வழியாய் தனிமனித விருப்பங்களை ஒடுக்க நினைக்கும் சர்வாதிகார மனம் கொண்டவர்களை வேண்டுமானால் இப்படி சொல்லலாம், whore. அந்த இணையத் தளத்தில் முகம் மட்டும் மறைக்கப்பட்ட இவன் படத்திற்குக் கீழ் தன்னை இப்படி அறிமுகம் செய்திருந்தான். Hi I am foot fetish slave. Looking for a mistress who wants me to be her slave dog. This relation is full of submission and domin...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...