முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

PARCHED: உலர் பெண்டிர்



Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான் PARCHED படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன.

பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.)


ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள், குடித்து விட்டு வந்து அவளை மலடி எனச் சொல்லி அடிக்கும் கணவனைப் பெற்றவள். ஒருத்தி ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவள், அதன் நீட்சியாய் பாலியல் தொழில் செய்பவள். ஒருத்தி தன் காதலைத் துறந்து விட்டு 14 வயதிலேயே 4 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு பெற்றோறால் இன்னொருவனுக்குக் கல்யாணம் செய்து வைக்கப்படுகிறவள். இவர்கள் நால்வரும் இவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் கதை.

ராஜஸ்தானின் ஏதோ ஒரு பட்டிக்காட்டில் கதை ந‌டப்பதாகக் காட்டுகிறார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாத பத்தாம்பசலிக் கிராமம் என்பதைக் காட்ட டிவி கூட இன்னும் அங்கே வரவில்லை எனக் காட்டியிருப்பது கொஞ்சம் நம்பச் சிரமமாக இருக்கிறது. போலவே ஷாரூக் கான் யாரென்றே தெரியாத பெண்கள் கொண்ட‌ வட இந்தியக் கிராமம் என்பதும்.

Bhopal: Prayer for Rain, Angry Indian Goddesses ஆகிய படங்களில் நடிப்பின் மூலம் முன்பே கவர்ந்தவர் நடிகை தன்னிஸ்தா சேட்டர்ஜி. இப்படம் அவரது மாஸ்டர்பீஸ். ராதிகா ஆப்தே பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தான் கர்ப்பமுற்றதை உணரும் காட்சியில் அவர் முகபாவங்கள் ஓர் அற்புதம். இன்னொரு காட்சி குழந்தை பெற இன்னொரு ஆடவனுடன் கலவியில் ஈடுபடும் காட்சி. அக்காட்சியில் பெருமாள்முருகனின் மாதொருபாகன் நினைவு வந்தது. (அது வேறு மனநிலை என்றாலும்) பொன்னாவின் எதிர்வினையும் கிட்டத்தட்ட அப்படியானதாகவே இருக்கும். மாதொருபாகன் திரைப்படமாக எடுக்கப்பட்டால் பொன்னாவாக ராதிகா ஆப்தேவே நடிக்க வேண்டும்! விரைவில் ராதிகா தேசிய விருது பெறுவார். (இப்படத்திலேயே சிறந்த துணை நடிகையாக வாங்கக்கூடும்.) பாலியல் தொழிலாளியாக வரும் சுர்வீன் சாவ்லாவும் சிறப்பான பங்களிப்பு. இவர்களின் உயிர்ப்பான‌ நடிப்புக்காகவே படத்தை நிச்சயம் பார்க்கலாம் என்பேன்.

படத்தில் ஒரு காட்சி வரும். Motherfucker, Sisterfucker என்றெல்லாம் சொற்கள் உருவாக்கியது ஓர் ஆணாய்த் தான் இருக்க முடியும். ஏன் எப்போதும் பெண்களே தான் அப்படிக் கலவி செய்யப்பட வேண்டுமா? நாம் இப்போது புதுச் சொற்கள் உருவாக்குவோம் எனச் சொல்லி Sonfucker, Brotherfucker என மலை மீது உரக்கக் கூவுவார்கள். தற்காலிகச் சுதந்திரம் கிடைத்த உற்சாகமான பாமரப் பெண்கள் ஆணாதிக்கத்திற்கு வெளிப்படுத்தும் வெள்ளந்தித்தனமான ஒரு குறியீட்டு எதிர்ப்பாய் அதை இயக்குநர் முன்வைக்கிறார் என்றே எடுத்துக் கொள்கிறேன். சோகம் என்னவென்றால் இணையத்தில் பெண்ணுரிமை பேசினால் கிடைக்கும் அகண்ட புகழையும் செல்வாக்கையும் கண்டு ஈர்க்கப்பட்டு வீராவேசமாய் உருவாகும் பெரும்பாலான self-proclaimed பெண்ணியவாதிகள் பலரும் பெண் சுதந்திரம் என்பதே அப்படிக் கதறுவதோடு முடிந்து விடுகிறது என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் அந்தக் கதாபாத்திரங்கள் அப்படிக் கத்துவதோடு நின்று விடுவதில்லை. பெரும்பாலான பெண்கள் எடுக்கத் தயங்கும் சிரமமான தேர்வுகளைத் தம் வாழ்வில் எடுக்கின்றனர். தம் மனம் விரும்பியபடி வாழத் தீர்மானிக்கின்றனர். சுருக்கமாய்ச் சொன்னால் பெண்ணியம் என்ற சொல்லை ஒருமுறையும் பயன்படுத்தாமல் அவர்கள் தம் செயலால் பெண்ணியம் பேசி விடுகின்றனர். அவர்கள் நம் மனதில் நிறைகிறார்கள்.

"Women who read do not make good wives" என்ற வசனம் படத்தில் வருகிறது. கல்வி மறுக்கப்படும் பெண் அடிமையாகத் தான் இருப்பாள் என்ற பெரியாரின் கருத்தை அது முன்வைக்கிறது என்றாலும் "Women who (just) read do not make good feminists either" என்று தோன்றியது. வாசிப்போடு கூடிய நேர்மையும், நல்லறிவுமே அசல் பெண்ணியத்திற்கு அடிகோலும்.

இன்னொரு விஷயம் இந்தப் படத்தில் பெரும்பாலான ஆண்கள் ஆணாதிக்கவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும், கெட்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் எல்லா ஆண்களும் அப்படியே என இயக்குநர் முத்திரை குத்தவில்லை. அதே ஊரில் தான் பெண்கள் வேலைக்குச் சென்று முன்னேறுவதை ஊக்குவிக்க அவர்களை நம்பி, மதித்து வாய்ப்புகள் வழங்கும் ஆணும், ப‌டுக்கையில் பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் அளித்து அவளைச் சமமாய் நடத்தி இன்பத்தைத் தரும் / பெறும் ஆணும், பெண் மீது கொண்ட பிரியத்தால் அவளுக்காக பல கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதித்து வந்து அவளைச் சந்திக்கும், இன்னொருவனுடன் திருமணமாகி அவள் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதால் கற்பு என்பதை மறுதலித்து அவளை மறுமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கும் ஆணும் இருக்கிறார்கள். அது முக்கியப் புரிதல்.

பெண்ணியம் என்பது கண்மூடித்தனமாய் ஆண்களை எதிர்ப்பதும், திட்டுவதும், மறுப்பதும், துறப்பதுமல்ல; அவர்களுடன் இணையாய்க் கை கோர்த்து நடப்பதும், பரஸ்பரம் உதவியாய் வாழ்க்கையை நடத்துவதும், அது சாத்தியப்படாத போழ்து அவர்களிடமிருந்து விலகி தன் மனம் சரியெனத் தீர்மானிக்கும் வழியைச் சுதந்திரமாய்த் தேர்ந்தெடுப்பதுமே பெண்ணியம் என அழுத்தம் திருத்தமாய் இப்படத்தில் எழுதி வைத்திருக்கிறார் இயக்குநர் லீனா யாதவ். அவருக்கு என் வந்தனங்கள்.

லீனா பளிச்சிடும் ஒரு காட்சி அடி வாங்கிய‌ காயத்துடன் வீட்டுக்கு வரும் ராதிகாவுக்கு தன்னிஸ்தா மேலாடையை அகற்றி மருந்து தடவும் இடம். அங்கே அவர்களுக்குள் பரஸ்பரம் எழும் மெல்லிய காமம் வலுவான தாய்மையாக முதிர்ச்சியுறுகிறது. அதை மேலும் உயரே நகர்த்தும் காட்சி அடுத்து தன்னிஸ்தா இல்லாத போது அதே சூழலில் ராதிகா வரும் போது பதின்ம‌ வயதவளான தன்னிஸ்தாவின் மருமகள் (லெஹர் கான்) மருந்திடும் காட்சி. தாய்மை என்ற உணர்வுக்கு தன் வயதோ எதிராளியின் வயதோ பொருட்டில்லை என்பதும் பெண்கள் வயதுக்கு மீறியும் சக பெண்களின் பிரச்சனைகளை உணர்வர் என்பதும் அதில் சொல்லப்படுகிறது. இது போல் ஆங்காங்கே வலுவான காட்சியமைப்புகள்.

தொடர் அடர்குடியின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படும் ஆண் பாத்திரம் ஒன்று அது தெரிந்தும் தன் மனைவி தான் குழந்தையின்மைக்குக் காரணம் எனத் தினமும் குடித்து வந்து அவள் மீது உடல்நீதியான, மனரீதியான‌ வன்முறைகளைப் பிரயோகிக்கிறது. அவள் வேறு ஒருவனின் மூலம் தாய்மையடையும் போது அதற்கும் அவளைப் போட்டு அடிக்கிறது. அதன் மனோவியலை யோசித்துக் கொண்டிருக்கிறேன். (அன்னக்கொடி மனோஜ் பாத்திரம் நினைவுக்கு வருகிறது.)

ஆண்கள் அதீதமாய்க் குடிப்பதும், பாலியல் தொழிலாளிகளிடம் போவதும் பெண்களின் பெரும் பிரச்சனையாகப் படம் நெடுகிலும் சித்தரிக்கப்படுகிறது. கணவன் அப்படி நடப்பதால் திருமணமாகி வரும் பெண்கள் சொந்த‌ மாமனார் உள்ளிட்ட அந்த வீட்டு ஆண்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதும் சொல்லப்படுகிறது. "நான் எனது கரு ஒன்றைக் கலைத்துக் கொண்டேன். அதன் தந்தை யாரெனத் தெரியாததால்" என்று தன் தாய் வீட்டிற்கு ஓடி வந்து விடும் ஒரு குடும்பப் பெண் பேசும் வசனம் வருகிறது. ஆனால் அவளைக் கட்டாயப்படுத்தி அவளது புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அவளது அடிபட்ட‌ பார்வையைப் பார்த்த பின்பும் நாம் இந்தியக் கலாசாரம் பற்றி எப்படி மார் தட்டிப் பேச முடியும்!
ரைட்டர்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...