முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கவின்மலரின் பிழைப்பு வாதம்...!

கத்துக்குட்டி கவின்மலரின் பிழைப்பு வாதம்...! கத்துக்குட்டியின் புகைப்படம் ந ம் அலுவலகத்திற்கு திடீரென்று வருகை தந்த கழுகார், ஒரு செய்தி சொல்கிறேன்,செய்தி பழையது என்று நினைக்காதீரும்.ஆனா இப்ப வரைக்கும் அப்டேட் இருக்கு என்றார். சொல்லும்  என்றோம். "ஆனால் ஒரு நிபந்தனை.கடைசி வரைக்கும் குறுக்கே பேசக் கூடாது.யார் என்று பெயரையும் கேட்கக் கூடாது" என்றார். சரி என்று ஒப்புக் கொண்டு காதைக் கொடுத்தோம். இனி கழுகார் வார்த்தைகளில்... 'நாட்டில் நிறைய பேர் ஸ்டாலின்,மார்க்ஸ்,பிரபாகரன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.நாம் இப்பொழுது பேசுவ‌து புரட்சியாளர் பெயரை வைத்துள்ள‌ ஒரு பத்திரிகையாளர் பற்றி. இதில் சம்பந்தப் பட்ட பத்திரிகையாளர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.இவருக்கு இவரது தந்தையார் ரஷ்யப் புரட்சியாளர் பெயரைப் பெருமையுடன் சூட்டினார்.(ஆனால் யார் நினைவாய்ப் பெயர் சூட்டப் பட்டதோ,அவர் புரட்சியாளர் கிடையாது,தீவிரவாதி என்று பத்திரிகையாளர் இப்பொழுது உளற ஆரம்பித்துள்ள‌து தனி செய்தி) அவர் அண்ணா சாலை 'மலர்' நாளிதழிலும் அதன் பின் அம்பத்தூரில் இருந்து வெளிவரும் தினமும் ஒலிக...

டாஸ்மாக் தமிழ்

“ஆல் ப்ராப்ளம்ஸ் ஓவர் ப்ரோ” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். “என்னடா தலைவா ரிலீஸைப்பத்திதானே சொல்ற ?” என்றான் வடிவேல். ”ஆமாம் மச்சான்.. உங்கப் பத்திரிக்கைக்குத்தான் கஷ்டம்” ”ஏன்டா.. எங்கப் பத்திரிக்கைக்கு என்ன கஷ்டம் ? ” ”ஆமாடா… ரெண்டு வாரமா தலைவா படத்தை வச்சு கவர் ஸ்டோரி பண்ணிட்டீங்க.  ஊர்ல வேற பிரச்சினையே இல்லாத மாதிரி ரெண்டு இஷ்யூவுக்கு இதுதான் கவர் ஸ்டோரியா… ? வாரமிருமுறை பத்திரிக்கைக்கு செய்திகள் இல்லாம கஷ்டப்பட்றது உண்மைதான். அதுக்காக விஜய்க்கு இத்தனை முக்கியத்துவம் தரணுமா ? இதுதான் நிகழ்காலத்தின் குரலா ? ” ”தலைவா மேட்டர்தானேடா ஹாட் டாப்பிக் ? ” ”தலைவாதாண்டா ஹாட் டாபிக்.  ஆனா தலைவா மட்டுமா ஹாட் டாபிக் ? ” ”சரி இந்தப் பிரச்சினை எப்படிதாம்பா முடிவுக்கு வந்துச்சு ? ” என்றார் கணேசன். ”தலைவா படப்பிரச்சினையை திமுக கையில எடுக்கப்போறாங்கன்னு தெரிஞ்சதும்தான் அரசாங்கம் வேக வேகமாக களமிறங்குச்சு.  படம் வெளியாகலைன்னதும், தயாரிப்பாளர் சார்பில உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டாங்க. ஆனா அனுமதி வழங்கப்படல.  விஜய் தரப்புல ஏதாவது வேகமா...

சினிமா :தலைவா

திரையில்  காணாத    தவிப்பு Monday, August 19, 2013   மகேஸ்சசி  அதிகாரம் Vs ஒரு திரைப்படம் மதராஸ் கஃபே பற்றிய பேச்சு வந்துவிட்டது. இப்போது தலைவா வெளியாகப் போகிறது. எதற்கு இப்போது இந்தக் கட்டுரை என்று கேட்கலாம். ஆனால் தலைவா குறித்து எழுதவேண்டிய தேவை இருக்கிறது. சினிமாவிலிருந்து ஆட்சியதிகாரம் செலுத்த வந்த காலம் போய் சினிமாவை ஆட்சி செய்வதாக ஆட்சியதிகாரம் மாறியிருக்கிறது.  தற்போது தலைவா 20ம் தேதி வெளியாகும் என்று செய்தி வந்துவிட்டது. விஜய் முதல்வருக்கு நன்றி கூறியிருக்கிறார். எதற்கு நன்றி கூறியிருக்கிறார்? இந்த நன்றியின் பின்னணி என்ன? தலைவா - எப்போது வரும் என்கிற கேள்வியைவிட எல்லோர் மனதில் தொக்கி நினறது பின்வரும் கேள்விகள்தான். ஏன் அந்தப் படத்துக்கு இத்தனை சிக்கல்கள்? என்ன காரணம்? யார் காரணம்? தலைவா அரசியல் படமா? அதில் வரும் வசனங்கள் காரணமா? அல்லது படத்தின் கேப்ஷனாக வரும் ‘டைம் டு லீட்’ என்கிற வார்த்தைகள் காரணமா? அல்லது உண்மையில் திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததா? ...

பஞ்சாயத்துக்கு வந்த பஞ்சாயத்து நடிகையின் வாழ்க்கை!

பஞ்சாயத்துக்கு வந்த பஞ்சாயத்து நடிகையின் வாழ்க்கை! Posted Date : 14:56 (14/08/2013) Last updated : 15:00 (14/08/2013) ஊரில் உள்ள பிரச்னைகளுக்கெல்லாம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பஞ்சாயத்துப் பேசும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தன் வாழ்க்கையிலும் அதற்கான சூழல் வரும் என கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். லட்சுமியும், பொற்காலம் படத்தின் தயாரிப்பாளரும், குணசித்ர நடிகருமான ஜெயப்பிரகாஷ் இருவரும் இணைந்து வாழ்கிறார்கள் என்பது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கிசுகிசு. இரண்டு, மூன்று படங்களில் சேர்ந்து நடிக்கும் ஹீரோ - ஹீரோயினை இணைத்துத்தான் பொதுவாகவே கிசுகிசுக்கள் கிளம்பும். ஆனால், துணை நடிகர் - நடிகைகள் எப்போதாவது அரிதினும் அரிதாகத்தான் இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டுவார்கள். அப்படித்தான் லட்சுமியும், ஜெயப்பிரகாஷும் தற்போது சிக்கியுள்ளனர். 'நான் மகான் அல்ல' படத்தில் தான் இருவரும் முதன்முதலாக இணைந்து கார்த்தியின் அப்பா - அம்மாவாக நடித்தனர். அந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்துப்போக, அதன்பிறகு சில படங்களிலும் அவர்கள் சேர்ந்து நடித்தனர். லட்சுமி ராமகிருஷ்ணன்...