அதிமுக கட்சி ஒரு லும்பன்களின் கட்சி என்பதை பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. மொழி, இனம், பார்ப்பன எதிர்ப்பு என்ற கொள்கைகளால் உருவான கட்சி திமுக. ஆனால் வெறும் நடிகரின் முகத்தைப் பார்த்து உருவான கட்சி அதிமுக. நடிகரால் உருவான ஒரு கட்சியை பின்னாளில் ஒரு நடிகை கைப்பற்றி, அந்த நடிகையின் காலில் விழுந்து கிடந்தவர்களே இன்றைய அதிமுக உறுப்பினர்கள். அந்தக் கட்சியில் லும்பன்கள் இல்லாமல் வேறு யார் இருப்பார்கள் ? அந்தக் கூற்றை உண்மையாக்கும் சம்பவங்களைத்தான் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்கிறார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சசிகலா அதிமுகவின் பொதுச் செயலளாராக தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை எடுத்துக் கொண்டு பன்னீர் செல்வமே சசிகலாவை சந்திக்க போயஸ் தோட்டம் செல்கிறார். போயஸ் தோட்டம் சென்றதும், சசிகலாவின் காலில் விழுகிறார். அவரைத் தொடர்ந்து இதர அமை...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்