முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்னிந்திய சூரியன் :கலாநிதிமாறன்

இந்தியாவின் மிகப்பெரிய மீடியா கம்பெனியை உருவாக்கியவரின் கதை



மகேஸ்வரன் பாண்டியராஜ் 

நான் காண்பிப்பதைதான் மக்கள் பார்க்க வேண்டும்; நான் சொல்வதைத்தான் மக்கள் கேட்கவேண்டும்; நான் கொடுப்பதைதான் மக்கள் படிக்க வேண்டும்
மீடியா உலகின் தன் இலட்சியம்பற்றி இப்படி சொன்னவர் யார் தெரிய்மா? கலாநிதிமாறன்.வெறுமனே சொன்னது மட்டுமல்ல;அதனை நடைமுறைப்படுத்திக்காட்டியதற்கு இன்றைக்கு ஊடகத்துறையில் பரந்து விரிந்துகிடக்கும் சன் குழுமம் தான் சாட்சி
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடத்தில் மொத்தம் 33 தொலைக்காட்சி அலைவரிசைகளுடன் 27 உலக நாடுகளிலும் தென்னிந்தியாவிலும் காட்சி ஊடகத் துறையில் முதலிடத்தில் இருக்கிறது சன்


அமெரிக்காவில் பென்சில்வேனியாவிலுள்ள யுனிவர்சிட்டி ஆப் ஸ்க்ரான்டனில் எம்.பி.ஏ முடித்த கலாநிதிமாறன் தனது குடும்பத்தின் "குங்குமம்" பத்திரிக்கையின் பொறுப்பை ஏற்பதற்காக 1980 களில் மத்தியில் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.இருந்தாலும் அவரின் காதல் தொலைக்காட்சியின் மீதுதான் இருந்தது.தூர்தார்ஷன் மட்டுமே அப்போது இருந்தது.1990 களில் பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில் தாராளமயமாதல் கொள்கையினால் தனியாருக்கு திறந்துவிடப்பட்ட போது கலாநிதிமாறனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் நடந்தது எல்லாம் அவருக்கு தொட்டட்தெல்லாம் பொன்

இன்றைக்கு கலாநிதிமாறன் தொட்டதெல்லாம் பொன் என்கிறார்கள்.ஆனால் அன்றைக்கு அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு முயற்சியும் அவருக்கு தோல்வியையும் நஷ்டத்தையுமே பரிசாகக் கொடுத்தன.ஒவ்வொன்றிலும் கிடைத்த அனுபவம் மட்டுமே அவர் கண்ட பலன்."தமிழன்" என்ற பெயரில் முதன்முறையாக முழு வண்ணத்தில் ஒரு நாளிதழ் கொண்டுவந்தார்,மூன்றே மாதங்களில் பெரும் வீழ்ச்சி கண்டது அந்த பத்திரிக்கை.பெரும் செலவு.எக்கச்சக்க நஷ்டம்.அடுத்து கம்ப்யூட்டருக்கான லேசர் பிரிண்டர் விற்பனை செய்தார் லாபம் ஒன்றுமில்லை. அப்போது இந்தியா டுடே நடத்தும் "நியூஸ் ஸ்ட்ரோக் "வீடியோ கேசட்  போல தமிழில் செய்தார்."பூமாலை" வீடியோ கேசட்டுகள் பைரசி திருட்டால் தோல்விமாலை ஆனது.
அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போன கலாநிதி, தொழில் சிந்தனைகளால் எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ,குங்குமத்திலேயே காலத்தை ஓட்டியிருக்கலாம்,அவர் என்ன செய்தார்?
பிஸினஸ் பண்ணணும் .ஆனா குறிப்பா இதுதான் செய்யணும்கிற யோசனை எதுவும் எனக்கு முதலில் இல்லை.படிப்பு முடிஞ்சதும் அப்போவோட குங்குமம் பத்திரிக்கையில் சேர்ந்தேன்.அப்படியே மெள்ள ஒவ்வொரு செக்சன்லயும் வேலை பார்த்து அந்த நிறுவனத்தின் எம்.டி ஆனேன்.ஒரு கட்டத்துல,பத்திரிக்கையோட விற்பனையில் தேக்கம் வர ஆரம்பிச்சது.அதுக்குக் காரணம் டிவியோட ஆதிக்கம்னு தெரிய வர அப்ப ஒரு பொறி கிளம்பிச்சு!

பூமாலைனு  ஒரு வீடியோ பத்திரிக்கை ஆரம்பிச்சோம்.21 பேர் தான் டீம்,ஒரு பத்திரிக்கையை பேட்டி ,நாடகம் , நியூஸ்,சினிமானு அப்படியே 3 மணி நேரம் ஓடுற வீடியோ காசேட்டாகத் தயாரிச்சு அதை மார்க்கெட் பண்ணினோம்.அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.ஆனால் யார் யாரோ லாபம் பார்க்க...எங்களுக்கு அதுல ஒண்ணுமே இல்லை.
தனியார் டீவிங்கிறது  அப்போ புதுசான விஷயம்.ZEE,ATN ரெண்டே கம்பெனி வந்தாங்க.நாங்க அவங்களோட காண்ட்ராக்ட பேசினோம்"எங்களுக்கு ஒரு மூணு மணி நேரம் கொடுங்கனு ஒரு ஓப்பந்தம். ஜீ டிவி ஆர்வம் காட்டலை. ATN சம்மதிச்சாங்க  என்று ஒரு பேட்டியில் சொன்னார் கலாநிதி


1993 ஏப்ரல் 14 (சித்திரை முதல் நாள்)

மாலை 6 மணி

பத்திரிக்கை நிருபர்கள் கூடியிருந்தார்கள்.ஒரு தொலைக்காட்சிப் பெட்டி அவர்கள்முன் வைக்கப்பட்டிருந்தது

இதோ அதோ என்று கலாநிதியும் அவர் டீமும் குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
6.00
6.30
7.00 என மணி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது ஆனால் டீவியில் ஒளிபரப்பு தொடங்கியபாடில்லை
இப்போது போல அன்றைக்கு செல்போன் வசதிகள் இல்லை .மும்பைக்கு டிராங்கால் போட்டு பார்த்தால் எதிர்முனையிலிருந்து பதிலே இல்லை.என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை,நேரம் ஓட,ஓட திகிலாகி நின்றார் கலாநிதி. அடடா. ஏமாந்துபோய்ட்டோமா ! டிவி ஆட்கள்னு,வேற யாரோ நம்மை ஏமாத்திட்டாங்களா? இப்படி தாறுமாறாக யோசித்து அவர் குழம்பிக்கொண்டிருந்தார்.

காத்திருந்த பத்திரிக்கையாளர்கள் கலைவதற்கு ஆயத்தமாயினர்.கலாநிதியின் மொத்த டீமும் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தது.
சரியான இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியது சன்டீவியின் தமிழ்மாலை

.சன் டிவி ஆரம்பமானது அப்படித்தான் அதன் பிறகு நடந்தது  எல்லாம் வரலாறு.


நான் பெர்சனலாக ஒரு திமுக காரன் தான் அதுல மாற்றம் இல்லை. ஆனால் சன்டிவி எப்போதும் திமுக மீடியா அல்ல.அதில் குழப்பமே கிடையாது( ஆனந்த விகடன் 1999 பேட்டியில்)



உங்களோட இன்ஸ்பிரேசன் யார்?
எங்க தாத்தவும் (கலைஞர்).அப்பா முரசொலிமாறனும் தான்!
தாத்தா ஒரு அற்புதமான போராளி.அவர் எப்போதும் தன் முயற்சிகளை கைவிட மாட்டார்.எத்தனையோ தோல்விகள் வந்தாலும் தாண்டி போயிட்டே இருப்பார்.ஓர் அரசியல்வாதிங்கறதை மறந்துட்டு ஒரு மனிதரா மட்டும் அவரை பாருங்க;இந்த வயசுல அவர் உழைக்கிற வேகத்தை,இன்னும் கற்றுக்கொள்கிற ஆர்வத்தை...அந்த துடிப்பு எனக்குப் பெரிய தூண்டுகோல்!

பின்னாளில்"கட்சி ஆபிஸை என் பேரன்  புகழ்( கலாநிதிமாறனின் செல்ல பெயர்) கம்ப்யூட்டர் கம்பெனி ஆபிஸ் போல மாற்றி இருக்கான் பாருங்கள்" என்று தாத்தா கருணாநிதியே வியந்து  அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்குழுவில்  பாராட்டி பேசினார் .



அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறா இருந்தாக்கூட கமா,புல்ஸ்டாப் வரைக்கும் கரெக்டா இருக்கணும்.எந்த வேலையா இருந்தாலும் அதுல ஓர் ஒழுங்கு  இருக்கணும்,கச்சிதம் வேணும் எதிர்பார்ப்பார்.அந்த கண்டிப்பு எனக்கு இப்போ உதவுது!"


இளைஞர்களுக்கு கலாநிதிமாறன் விஜய் டிவி பேட்டியில் சொன்னது





1 மனதை திறந்து வையுங்கள். பெரிதாக சிந்தியுங்கள்.குறுகிய வட்டத்துக்குள் எதையும் செய்ய வேண்டும் என எண்ணாதீர்கள்
2. அடுத்தவரிடம் வேலை செய்வதைத் தாண்டி நம்மால் 10 பேருக்கு வேலை கொடுக்க முடியுமா என்று சிந்தியுங்கள்.
3. எல்லோரும் செய்கிற வேலையை நீங்களும் செய்யாதீர்கள்.அவர் பண்ணினார் வெற்றி அடைந்து விட்டது.அதனால் நாமும் அதையே செய்வோம் என்று முடிவெடுக்காதீர்கள்.உங்களுக்குப் பிடித்த புதிய விசயங்களை கண்டெடுங்கள்.மற்றவர்களிடம் இருந்து தனித்துவம் மிக்கவராக வெளிப்படுங்கள்.
4 கடின உழைப்பு அதுதான் அடிப்படை


கலாநிதிமாறன் சன்டிவி நிர்வாக இயக்குநர்.1999 வருடத்தின் இளம் தொழில் சாதனையாளர்"என்ற சர்வதேச விருதைப் பெற்றவர்.ஒரு இந்தியர் இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறை.

"40 வயதுக்குட்பட்டவராக இருக்கணும் குடும்பத் தொழில் என்று இல்லாமல் புதிய முயற்சியாக இருக்க வேண்டும் இந்த விருதுக்கு இந்தியாவிலிருந்து போட்டியிட்ட 40 தொழில் அதிபர்களில் கலாநிதி வென்றார்.

நுழைந்தார் அதிர்ந்தது



2005 தமிழ் ஊடக உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் கலாநிதி,திரும்பி பக்கமெல்லாம் அதுதான் பேச்சாக இருந்தது.


தமிழகத்தில் 3 ஆம் இடத்திலிருந்த தினகரன் நாளிதழை 350 கோடிக்குமேல் கொடுத்து கைப்பற்றினார் கலாநிதி.அதன் டீலீங்கை யாரும் அறியாத ஒரு பனிப்பிரதேசத்தில் முடித்தார் .இத்தனைக்கும் அப்போது முதலிடத்தில் இருந்த தினத்தந்தியின் உறவினர் கே பி கந்தசாமியின் பத்திரிக்கைதான் தினகரன்.ஏற்கனவே குங்திகுமத்தை "பெஸ்ட் கண்ணா பெஸ்ட்"என்று விளம்பர படுத்தின ஆனா டெக்னிக்குடன் தினகரன் விற்பனையை அதிகரிக்க‌ புது உத்தியை கையாண்டார்  கலாநிதி 20 பக்க வண்ண இதழாக தினகரனுடன்  கூடவே இலவச பொருட்களை வாரி இறைத்தார்.6 மாதங்களில் 10 இலட்சம் பிரதிகளுடன் தினகரன் தமிழின் நம்பர் ஓன் நாளிதழானது.தினந்தந்தியும் தினமலரும் ஆட்டம் கண்டன....அது போல தமிழில் தமிழ் முரசை 20 பக்க டேபாப்ளைடு வடிவமைப்புடன்அளித்து 1 ரூபாய் இதழுடன் 5 ரூபாய் பேனாவை பரிசாக அளித்தார் மலையாளிபோல பேப்பர் படிக்க தனி தொகை ஒதுக்காமல் டீக்கடை சலூனில் ஓசியாக படிக்கும் பாமர மக்கள்கூட வாங்கி படித்தனர்.இவ்வாறு அச்சு ஊடகங்களில் முதலிடம் பெற்றார் கலாநிதிமாறன்



 கலாநிதியின் மறுபக்கம்

தமக்கு நெருக்கமான ஏழு எட்டு பேர் அதாவது ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாளர்க்கு மட்டுமே சம்பளத்தையும்  வசதிகளை வாரி இறைப்பார் அவர்கள் 5 ஆயிரத்துக்கும் 10 ஆயிரத்துக்கும் ஆட்களை எடுத்து வேலை வாங்க வேண்டும்..இதை யாரிடமிடம் கேட்டாலும் சொல்வார்கள்..அவருக்கு வேண்டியது  நெம்பர் ஓன் இடம்.சம்பள உயர்வு கேட்டால் புதிய ஊழியர்களை  எடுப்பார். அப்போதுதான் புதுப்புது சிந்தனைகள் உள்ளே வரும் என்பது கலாநிதியுன் சித்தாந்தம் .நண்பர்களுக்கு வெற்றியில் பங்குகொடுத்தவர்  ஊழியர்களை பலம் என்று ஒரு போதும் சொன்னதில்லை, 1990 களில் பூமாலையில் துவங்கிய கலாநிதிமாறனின் ஆரம்பம்,திமுகவின் பின்புல உதவி இல்லாமல் சன்டிவியை உருவாக்கி இருக்க முடியாது சேனல் துவங்க டெபாசிட் செய்ய திமுக கணக்கு வைத்திருக்கும் இந்தியன் வங்கியிருந்து 80 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது ,திமுகவை பின்னணி சக்தியாகக் கொண்ட ஆரம்ப வளர்ச்சியை சந்தித்தது சன்டிவி.ஒரு கட்டத்தில் சுயமாக நிற்கும் பிசினஸ் சாம்ராஜ்ஜியமாக உயர்ந்தாலும் அதற்கான அஸ்திவரமாக இருந்த கேபிள் தொழில் ஏகாதிபத்தை எட்ட திமுகவின் பின்புலம் உதவியது.இந்தியாவின் அதிக லாபம் கொண்ட டிவி நிறுவனமாக சன்டிவி உயர்ந்ததன் ரகசியம் எஸ்.சி.விதான் போட்டி சேனல்களை வளர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகித்த ,தனது சேனல்களை மக்களிடம் சென்றடைய உதவிய எஸ் சிவின் ஆதிக்கம் அரசு கேபிளால் ஜெ யால் கொஞ்சமாவது  அடி வாங்கியது எனலாம்.எனினும் சுமங்கலி கேபிள் விசன் மூலம் தமிழக கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்திகிறார்  கலாநிதி. 2012 அவரது மறு ஏற்றத்தின் முக்கியமான அடையாளமாக ஹைதராபாத் அணியை வாங்கி ஐபிஎல்லில் கால் பதித்தார் .நெருக்கடிகளை மீறி  புதிய தொழிலில் நுழைவதில் பயந்தோ  தயங்கிதோ இல்லை ஹைதராபாத் அணியை 85.05 கோடிகள் கொடுத்து வாங்கி ஐபிஎல்லில் நுழைந்தார்
.ஏர்செல் மார்சிஸ் ,சிபிஐ தொடந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது ஆனால் கடைசி தீர்ப்பில் போதிய ஆதாரம் இல்லை என காரணம் காட்டி மாறன் சகோதரர்களை விடுதலை செய்தது மாறன்களின் செல்வாக்கு மீண்டு வருவதை காட்டுகிறது.
தமிழில் முதல் நியூஸ் சேனல் சன் நியூஸ் தான் ,ஆனால் புதியதலைமுறை,பாலிமர் சேனல்களின் வருகையால் ஆதிக்கம் வீழ்ந்தாலும் பணத்தைக் கொட்டும் பொழுதுபோக்கு சேனல்களில் மக்களின் நம்பர் 1 ஆக திகழ்கிறது. இவர் மனைவி காவிரி கலாநிதிமாறன் தான் நாட்டில் அதிக சம்பளம் பெறும் எக்சியூடிவ் எம்.டி( 65 கோடி ரூபாய்)

 அமெரிக்காவின் நியூயார்க்  நகரில் போர்பஸ் என்ற வார இருமுறை செய்தி ஏடு 1917ல் துவங்க பட்டது. அது பொருளாதார வியாபார விவரங்களை வெளியிடும் பத்திரிக்கை. உலகில் முக்கிய நாடுகளை பற்றி ஆராய்ந்து ஒவ்வொரு பெரிய நிறுவனத்தின் ஆண்டு வருமானம் நிதிநிலைமை ஆகியவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து வெளியிடுகிறது.

1987 முதல் ஓவ்வொரு ஆண்டும் உலகின் பல நாடுகளில் உள்ள செல்வந்தர்களின் பட்டியலை  போர்பஸ்     வெளியிட்டு வருகிறது. அந்த பட்டியலில் ஒருவர் சேர்க்கப்படுவதற்கு அவருடைய நிர்வாகத்தில் உள்ள சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு  பில்லியன் அளவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். 1 பில்லியன் எனபது 100 கோடி ரூபாய் 2017ல்  அளவில் ரூபாய் மதிப்பு 64 என்றால் இந்திய மதிப்பிட்டில் 6400  கோடி ரூபாய் ஆகும்.


 25 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியர் யாரும் இடம்பெற வில்லை.1997ல் ஆரம்பித்து ஜி.டி பிர்லா குடும்பம் ஒன்று மட்டும் தொடர்ந்து பில்லியனர் பட்டியலில் இடம்பெற ஆரம்பித்தது. 2017ல் போர்ப்ஸ் பட்டியல்  வெளிவந்துள்ளது. அதில் சென்னையில் இருப்பவர் கலாநிதிமாறன் 4.5 பில்லியன்  ரூபாய் 28 800 கோடி


திமுக பிதாமகர் அறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னார். எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் துணிக்கோடியும்,தெருக்கோடியும்தான் "என்று.அண்ணா உருவாக்கிய கட்சியில் இன்றையே தலைமையே கூட உலகக்கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது என்றால் அந்த புகழ் கலாநிதிமாறனைத்தான் சாரும். மாறன் மீது  எல்லாவித விமர்சனங்களும்,ஊழல் புகார்கள் ,குற்றசாட்டுகள் இருந்தாலும் கூட ஒரு தமிழராக தென்னிந்திய காட்சி ஊடகத்தில் முடிசூடா மன்னர் கலாநிதிமாறன்.கூர்மையான அறிவு,தொழில்நுட்ப தெளிவு.போட்டியாளர்கள் வளரவிடக்கூடாது என்ற வெறி,அரசியல் அதிகாரம்,வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வேகம் அனைத்தும் சேர்ந்து குறுகிய காலத்தில் தென்னிந்தியாவில் மிகப்பெரிய மீடியா மன்னராக ஆகியுள்ளார் கலாநிதி அவருக்கு வானமே எல்லை..!



"சூரியன் எப்போதும் நம்பர் ஓன் தான்,மேகமூட்டம் வரலாம்.மழைபெய்யலாம்,புயல் அடிக்கலாம்ஆனாலும் சூரியன் தான் எப்போதும் நம்பர் ஓன்".
கலாநிதி மாறன் சொன்ன சூரியன்,'சன்டிவிஎன்பது சொல்லித் தெரியவில்லை!





 மகேஸ்வரன் பாண்டியராஜ்
கட்டுரையாளர், ஊடக ஆர்வலர்.
தொடர்புக்கு maheshwarag20@gmail.com

.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.. சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனு...