முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடப்பவை யாவும் நன்மைக்கே


article-2120782-12583E28000005DC-831_634x443
அதிமுக கட்சி ஒரு லும்பன்களின் கட்சி என்பதை  பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.     மொழி, இனம், பார்ப்பன எதிர்ப்பு என்ற கொள்கைகளால் உருவான கட்சி திமுக.  ஆனால் வெறும் நடிகரின் முகத்தைப் பார்த்து உருவான கட்சி அதிமுக.  நடிகரால் உருவான ஒரு கட்சியை பின்னாளில் ஒரு நடிகை கைப்பற்றி, அந்த நடிகையின் காலில் விழுந்து கிடந்தவர்களே இன்றைய அதிமுக உறுப்பினர்கள்.     அந்தக் கட்சியில் லும்பன்கள் இல்லாமல் வேறு யார் இருப்பார்கள் ?
அந்தக் கூற்றை உண்மையாக்கும் சம்பவங்களைத்தான் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்கிறார்.  பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சசிகலா அதிமுகவின் பொதுச் செயலளாராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை எடுத்துக் கொண்டு பன்னீர் செல்வமே சசிகலாவை சந்திக்க போயஸ் தோட்டம் செல்கிறார்.   போயஸ் தோட்டம் சென்றதும், சசிகலாவின் காலில் விழுகிறார்.    அவரைத் தொடர்ந்து இதர அமைச்சர்களும் விழுகின்றனர்.
இந்தக் காட்சிக்கு பிறகு, சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கூக்குரல் அதிமுக அடிமைகளால் உரக்க எழுப்பப் படுகிறது.  ஒரு சில அடிமை அமைச்சர்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மொட்டை போட்டுக் கொண்டு, சின்னம்மா தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். ராஜினாமா செய்த ஒரு சில தினங்களில் ஜெயலலிதா சமாதிக்கு சென்று   தியானம் செய்கிறார். புத்தருக்கு கிடைத்த ஞானத்தைப் போல,   தியானம் செய்ததும் அவருக்கு கிடைத்த புதிய ஞானத்தின் அடிப்படையில், சசிகலாவுக்கு எதிராக குரல் எழுப்புகிறார்.  ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் என்கிறார்.   ஒரு குடும்பத்தின் கையில் கட்சியும் ஆட்சியும் செல்லக்கூடாது என்கிறார். சசிகலா அம்மாவால் வெளியேற்றப்பட்டவர் என்கிறார்.
வெகுண்டெழுந்த சசிகலா, பன்னீர்செல்வத்துக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் ரகசிய கூட்டு என்கிறார்.  “சட்டப் பேரவையில் இருவரும் பார்த்துக் கொண்டனர், சிரித்துக் கொண்டனர்” என்கிறார்.   இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே பலப்பரீட்சை நடக்கிறது.  மன்னார்குடி மாபியா அணிக்கு சொந்தமான எம்எல்ஏக்கள் கூவத்தூரில் ஒரு ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.   அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம் பக்கம் தாவி விடாமல் இருக்க அனைத்து எம்எல்ஏக்களும் வெகுவாக கவனிக்கப்படுகின்றனர்.
sasikala-addresses-media_8ebe9e38-ee78-11e6-b62a-376882c41036
ஒரு வாரத்துக்கு இந்த கூத்து நடக்கிறது.   உச்சநீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை ஆளுனர் அனைவரையும் காக்க வைக்கிறார்.    தீர்ப்பு சசிகலாவை குற்றாளி என்று அறிவிக்கிறது.     சிறை செல்வதற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியை சட்டப்பேரவை தலைவர் அடுத்த முதல்வர் என்று முன்மொழிகிறார்.  கூவத்தூரில் எம்எல்ஏக்கள் கவனிக்கப்பட்டதற்கு பெரும் தொகையை செலவழிக்கிறார் எடப்பாடி.    முதல்வராகவும் ஆக்கப்படுகிறார் எடப்பாடி.
அதிமுகவில் அடுத்த முன்னேற்றமாக, சசிகலாவின் உத்தரவுப்படி, டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக பதவியேற்கிறார்.   அவர் துணைப் பொதுச் செயலாளராக பதவியேற்றதும், அடிமைகள் அனைவரும் டிடிவியைச் சுற்றி வலம் வருகின்றனர்.    ஆர்.கே நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.   இதனிடையே கட்சியின் இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியும் சசிகலா அணியும் கடுமையாக போராடுகின்றன.    தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்குகிறது.  பன்னீர்செல்வத்துக்கு இரட்டை தெருவிளக்கும், சசிகலா அணிக்கு தொப்பியும் வழங்கப்படுகிறது.
டிடிவி தினகரன் சசிகலா பிரிவின் ஆர்கே நகர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.    அமைச்சர்கள், முதலமைச்சர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஆர்கே நகரிலேயே தவமிருக்கின்றனர்.    ஒருவர் தவறாமல் அனைவரும் தொப்பி அணிந்து வலம் வருகின்றனர்.     பணம் தாறுமாறாக ஆறாக ஓடுகிறது.  எப்படியாவது டிடிவி தினகரனை ஜெயிக்க வைத்து விட வேண்டும் என்பதில் அடிமைகள் அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர்.
201703241212534996_CM-campaigns-with-hat-says-Dinakaran-will-fill-Jayas-void_SECVPF
மறுபுறம் அம்மாவின் சிகிச்சையில் மர்மம், விசாரணை கமிஷன் அமைக்கும் வரையில் தர்மயுத்தம் தொடரும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, அவர்கள் தரப்பு வேட்பாளர் மதுசூதனுக்காக ஓபிஎஸ் பிரச்சாரம் செய்து வந்தார்.   ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது நிலவி வந்த மர்மங்கள் அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே  பன்னீர்செல்வம்,   முதலமைச்சர் பதவி கிடைத்து, சசிகலா தொந்தரவு தரும் வரை அமைதியாக இருந்த அதே பன்னீர்செல்வம்தான் வெட்கமே இல்லாமல், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று இன்று வரை பேசி வருகிறார்.
அதன் பின் வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர்.     சோதனையில் ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு அமைச்சர்கள் மூலமாக 89 கோடி ரூபாய் விநியோகிக்கப் பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.    அமைச்சரின் உதவியாளர்கள் இருவர் வீட்டிலிருந்து 5.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.    இந்த சோதனைகளைத் தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு திடீர் ஆதரவு கொடுத்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோர் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன.  சோதனைகள், வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் விநியோகம் செய்ததை உறுதி செய்தது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் இடைத்தேர்தலை பண விநியோகத்தை காரணம் காட்டி ரத்து செய்தது. இந்த சூழலில்தான் டெல்லி காவல்தறை சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கைது செய்கிறது.   டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக சுகேஷ் சந்திரசேகர் மூலம் 50 கோடி ரூபாயை கொடுக்க முனைந்தார்.  அதன் முதற் கட்டமாக சுகேஷ் சந்திரசேகரிடம் 1.30 கோடியை கொடுத்திருந்தார்.  அதன் பேரில் டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து அதிமுக டிடிவி அணியில் சலசலப்புகள் தென்படத் தொடங்கின. ஓபிஎஸ், இணைப்புக்கு தயார் என்று வெடியைக் கொளுத்திப் போட்டார். அன்று இரவு அனைத்து அமைச்சர்களும் கூடினர்.    இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.  வெளியே வந்து, இரட்டை இலையை மீட்பது குறித்து பேசினோம் என்றனர்.
இதே போல மறு நாள் கூடினர்.   டிடிவி தினகரன் குடும்பத்தை விலக்கி வைப்போம் என்று அறிவித்தனர். கட்சியையும் ஆட்சியையும் நடத்த குழு அமைப்போம் என்றனர்.  இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் இணையுமா ?  டிடிவி என்ன செய்வார் என்று பரபரப்பு எழுந்தது.   செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், பெரிய மனிதன் போல பேசினார்.  மிக லாவகமாக செய்தியாளர்களை கையாண்டார்.    “முன்பே சொல்லியிருந்தால் நானாகவே விலகியிருப்பேனே.   நான் நேற்றே கட்சியை விட்டு விலகி விட்டேன்.  அவர்கள் ஏதோ பயத்தில் இருக்கின்றார்கள்.   நான்கு நாட்கள் முன்னதாக என்னோடு நன்றாக பேசிக் கொண்டிருந்தவர்கள், இப்போது திடீரென்று ஏன் விலகுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை” என்றார்.
சில நிமிடங்களில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வத்தின் பாடிலேங்குவேஜே மாறியிருந்தது.    எங்கள் தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி.  இனி படிப்படியாக பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்.
அதிமுக என்ற லும்பன்களின் கட்சி, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடந்து கொண்ட விதம், அது லும்பன்களின் கட்சிதான் என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
இந்த அரசியல் மாற்றங்களின் பின்னணியில் மோடி இருக்கிறாரா என்ற சந்தேகமே எழ வேண்டாம்.    உத்தரப் பிரதேச வெற்றிக்குப் பின்னால் எப்படியாவது கொல்லைப் புற வழியாகவாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும், அதிமுக என்ற கட்சியை அழித்து, நசுக்கி அதனை தன் கைப்பாவையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான அத்தனை சித்து வேலைகளையும் மோடி நடத்திக் கொண்டிருக்கிறார்.
டிசம்பர் மாதம் 170 கோடி பணம் மற்றும் 127 கிலோ தங்கம் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்டு, அது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டது முதலே, பன்னீர் செல்வம், மோடியின் வளையத்துக்குள் வந்து விட்டார்.    சேகர் ரெட்டியை தொடர்ந்து மிரட்டலில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, சிபிஐ தொடர்ந்த வழக்குகளில் அவர் ஜாமீன் பெறும் வரை காத்திருந்து, அதன் பின்னர், மார்ச் 21ல் அவர் மீண்டும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.    சேகர் ரெட்டியின் பணப் பரிவர்த்தனைகள் அத்தனையும் மத்திய அமைப்புகளின் வசம் வந்து விட்டன.    ஒரு சாதாரண நபராக இருந்த சேகர் ரெட்டி, தமிழக அரசின் முக்கிய பிரமுகர்கள் அனைவருக்குமான பணப் பரிவர்த்தனைகளை நடத்திக் கொடுக்கும் அளவுக்கு எப்படி வளர்ந்தார் என்ற கேள்விக்கான ஒரே வார்த்தை பதில் “மணல்”.  மணல் மூலம் சேகர் ரெட்டி இத்தனை பெரிய உயரத்துக்கு வளர்ந்திருக்கிறார் என்றால், 2011 முதல் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதில் எந்த அளவுக்கு பங்கு இருக்கும் ?    மன்னார்குடி மாபியா கூட்டத்தைப் போலவே, பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அவரது மருமகன் காசி மற்றும் அவரது தம்பி ஓ.ராஜா ஆகியோர் இன்று பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதிகள் என்ற விபரம் மோடிக்கும் மத்திய அரசு அமைப்புகளுக்கும் தெரியாதா என்ன ?
p08a
சிறையில் உள்ள சேகர் ரெட்டியிடம், ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, பன்னீர்செல்வத்தின் மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்ய வைக்க உத்தரவிட எவ்வளவு நேரம் பிடிக்கும் ?  இவையெல்லாம் பன்னீர்செல்வத்துக்கு நன்றாகவே தெரியும்.   இதன் காரணமாகத்தான் பிஜேபியின் ஏஜென்டாகவே பன்னீர்செல்வம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். பிஜேபியின் சொல்படி ஆடிக் கொண்டிருக்கிறார்.
சரி. பன்னீர்செல்வம்தான் அயோக்கியர்.  எதிர் அணியில் உள்ள மற்றவர்கள் எல்லாம் யாரென்றால், ஒவ்வொருவர் பின்னாலும் பல கோடி கள்ளப்பணம் இருக்கிறது.   இவர்கள் ஒவ்வொருவரும் வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில்தான் உள்ளனர்.  பொய் வழக்கு போட வேண்டிய அவசியத்தையே மோடிக்கு வைக்காதபடி, அதிமுகவின் அமைச்சர்கள் அத்தனை பேரும் பெரும் ஊழல் மூட்டையின் மீதுதான் அமர்ந்துள்ளார்கள். ஜெயலலிதா அமைச்சரவையில் யோக்கியனா இருப்பான் ?
இப்படி அதிகமுகவை ஒடுக்கி, மூலையில் அமரவைத்து, இரட்டை இலையை மீட்டுக் கொடுத்து, விரைவில் நடைபெறப் போகிற தேர்தலில் 100க்கும் குறையாத சீட்டுகளை அதிமுகவோடு கூட்டணியில் பெற்று, அதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் கால் வைக்கலாம் என்ற கனவிலேயே பிஜேபி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.   அதன் கனவை நிறைவேற்றும் பணியை அதிமுகவின் ஒவ்வொரு பிரமுகரும் கனகச்சிதமாக செய்து வருகிறார்கள்.
டிடிவி தினகரன் ஜென்டில்மேன் போல ஒதுங்கி விட்டாரே….  இனி மன்னார்குடி மாபியாவின் தலையீடு இல்லாமல் போய் விடுமா.  அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவார்களா ?
மன்னார்குடி மாபியாவின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் திருடர்கள்.    அவர்கள் பிறப்பு முதலே திருடுவதற்கு பழகியவர்கள்.   திருட்டுத்தனம் அவர்கள் உடன் பிறந்தது.   கொள்ளையடிக்காமல் அவர்களால் இருக்கவே முடியாது.
மன்னார்குடி குடும்பத்துக்குள் மோதல் முற்றி அவர்கள் ஒவ்வொருவரும் அடித்துக் கொண்டு அந்த மோதல் வீதிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.    ஒரு சாதாரண முக்கால் க்ரவுண்டு இடத்துக்கு அண்ணன் தம்பிகள் சண்டையிட்டுக் கொண்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு பல ஆண்டு காலமாக நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதை கேள்விப் பட்டிருப்பீர்கள்.    இப்படி சாதாரண ஒரு சொத்துக்காக பல நூறு வழக்குகள் இந்தியா முழுக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
ஒரே ஒரு சாதாரண பள்ளி மற்றும் அதன் கட்டிடத்துக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினையில்தான் எம்ஜிஆரின் உறவினர் விஜயன் கொலை செய்யப்பட்டார்.   எம்ஜிஆர் சொத்துக்கள், ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
ஆனால் ஜெயலலிதா பினாமி பெயர்களின் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்கள் பல ஆயிரம் கோடிகள்.    
80க்கும் மேற்பட்ட அந்த பினாமி நிறுவனங்கள் பெரும்பானவற்றில் இயக்குநர்களாக இருப்பவர்கள், சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதியின் கணவர் டாக்டர் சிவக்குமார் என்கிற கே.எஸ்.சிவக்குமார் மற்றும் இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் கலியபெருமாள்.     இந்த பினாமி நிறுவனத்தின் பெயர்களில் இந்தியா முழுக்க கோடிக்கணக்கான சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன.   இது தவிர இந்த பினாமி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம் குவிந்து கிடக்கிறது. இந்த சொத்துக்களுக்காக இந்த குடும்பத்துக்குள் விரைவில் நடக்க உள்ள குடுமிப்பிடி சண்டை வீதிக்கு வரத்தான் போகிறது.
இதன் முன்னோட்டமாக கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்துள்ளது.  இது டிடிவி மகாதேவன் மரணத்துக்கு முன்னால்.  ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எதிரே உள்ள வீட்டை ஜெயலலிதா ஹரிசந்தானா எஸ்டேட்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கிப் போட்டுள்ளார்.  இந்த ஹரிசந்தானா எஸ்டேட்ஸ் நிறுவனம் ஐதராபாத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
karthikeyan director
சசிகலா சிறை செல்வதற்கு முன்னதாக, அந்த வீடு அவர் தம்பி மகன் ஜெயந்த் திவாகரனுக்கு சொந்தம் என்று கூறியுள்ளார்.  ஹரிசந்தானா எஸ்டேட்ஸ் எஸ்டேட்ஸின் இயக்குநர்களாக கேஎஸ்.சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் கலியபெருமாள் இருந்து வருகின்றனர்.    வேதா இல்லத்தின் எதிரே உள்ள அந்த வீடு பல ஆண்டுகளாகவே ஜெயலலிதாவின் உபயோகத்துக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.   பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினர் பலர் அங்குதான் தங்குவர்.    சசிகலா சிறை சென்ற பிறகு, அந்த வீட்டை கைப்பற்ற கேஎஸ்.சிவக்குமார் முயற்சி எடுத்துள்ளார்.    இந்த தகவல் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு தெரிய வருகிறது.
உடனடியாக வேதா நிலையம் விரைந்த திவாகரன், இந்த விஷயம் குறித்து சிவக்குமாரிடம் விளக்கம் கேட்டு, அவரை தாக்கியுள்ளார்.   பிறகு உடன் இருந்தவர்களால் சமாதானப்படுத்தப்பட்டுள்ளார்.   பஞ்சாயத்து, மன்னார்குடி மாபியாவின் மூத்த உறுப்பினரான சசிகலாவின் கணவர் நடராஜனிடம் செல்கிறது.   அவர் அனைத்து சொத்துக்களையும் உள்ளடக்கி ஒரு ட்ரஸ்ட் அமைக்கலாம்.  அந்த ட்ரஸ்டில், ரொக்கம் உள்ளிட்ட அத்தனை சொத்துக்களும் உள்ளடக்கப்படும்.   அந்த ட்ரஸ்டில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.   ஆனால் சொத்துக்களை ட்ரஸ்ட் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள டாக்டர் சிவக்குமாரும், கார்த்திகேயன் கலியபெருமாளும் இது போன்ற எந்த சமாதானத்துக்கும் தயாராக இல்லை என்பதுதான் கடைசித் தகவல்.
தற்போது அரசியல் அதிகாரமும் கைவிட்டுப் போயுள்ளதால், வரக்கூடிய கால கட்டங்களில் இந்த மோதல் முற்றுவதற்காக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மக்களிடமிருந்து கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்களுக்காக இந்த குடும்பம் அடித்துக் கொண்டு அழிந்தால் அது நமக்கு உள்ளபடியே மகிழ்ச்சி.
இத்தகைய அரசியல் சூழலில் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தமிழகமும் அதன் மக்களுமே.  ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே முடங்கிக் கிடந்த நிர்வாகம் இன்னும் எழவேயில்லை.  தற்போது முற்றியுள்ள அரசியல் நெருக்கடிகளால், பல அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்கு செல்வதையே நிறுத்தியுள்ளார்கள்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலம் தொடங்கி, தமிழகத்தின் நிர்வாகத்தை பல ஆண்டுகளாக சீரழித்து வந்துள்ள இந்த லும்பன் கட்சி அழிந்து நாசமாகப் போவது காலத்தின் கட்டாயம்.  இதனால் தமிழகத்துக்கு விளையப்போவது நன்மை மட்டுமே.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....