முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

A nice man to know

Back to the roots: N. Chandrasekaran (in blue shirt) in front of his ancestral house at Mohanur village in Namakkal, Tamil Nadu N. Chandrasekaran’s journey to the biggest corporate job in India started from a small village in Tamil Nadu Chandra has an extraordinary capability to remember people, which helps him give a personal touch in his meetings as a corporate leader. This plays a great role in the way he manages clients. The heart of Mohanur is the agraharam in the middle of it. The tiny village on the banks of the Cauvery in Namakkal is as nondescript as any of them in western Tamil Nadu. But Mohanur now has a new landmark—vakeel veedu, or lawyer’s house. On January 12, a humble boy who lived in this house was catapulted to the most powerful corporate job in India, the chair of Tata Sons. The typical Tamil Brahmin house with a long thinnai (raised platform in front of the wall) on either side of the front door and a thatch-and-tile roof,...

ச்சீ

ச்சீ 1 காமம்தான் உன்னை அழைத்து வந்தது காமம்தான் உன்னை என்னிடமிருந்து பிரித்தது காரணங்களால் செய்த மனிதர்கள் காரணங்கள் கேட்கிறார்கள் காரணங்கள் சொல்லிவிட்டால் சமாதானம் அடைவார்களோ என்னவோ அவன் உனக்கென்ன குறைவைத்தான்? இவனுடன் ஏன்? நல்ல காரணமாக திருப்தியில்லாத காமப்பதில் வேண்டுகிறார்கள் புணரும் ஆசைக்கும் ஒரு நல்ல காரணம் வேண்டுமென்பதுதான் எத்தனை அபத்தம் எத்தனை பொய்ப்புனிதம் வெறுமனே தோன்றியது புணர்ந்தேன் என்றால் நம்பவா போகிறார்கள்? உண்மையில் வெறுமனே தோன்றியது புணர்ந்தேன்! புணர்ந்த உனக்காவது புரிகிறதா? ……………… ச்சீ 2 பனிரண்டாவது வருட தாம்பத்யப்புணர்ச்சிவிதி நைட்டியில் இருக்காதே புடவையில் இரு மறக்காது ப்ரா போட்டுக்கொள் பூச்சூடு கத்தாதே ஆயாசமாக இருக்கிறது இதற்குப்புணராமலே இருக்கலாம் இதென்ன பண்பாட்டுப்புணர்ச்சி! ரவிக்கை ஊக்குகள் சிக்கினால் பாவாடை நாடா முடிச்சு விழுந்தால் பொறுமை கொள்ளாத மூர்க்கங்கள் பண்பாட்டில் வருகிறதோ என்னவோ கடித்தலும் நகப்பதித்தலும் ஆழச்செலுத்துதலும் உன் பலமென்றால் உச்சத்தில் நான் பிய்த்துப்போடும் தலையணைக்கு பதில் நீ கிடைத்துப்பார் என் பண்பாட்டுக...

நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ்

1978 ம் ஆண்டு. வீட்டில் ஓய்வாக இருந்த ரிச்சர்டு வில்லியம்ஸ், சுவாரஸ்யமே இல்லாமல்தான், அந்த டென்னிஸ் ஆட்டத்தைப் பார்க்க ஆரம்பித்தார். பிரெஞ்சு ஓப்பன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் அது. ருமேனியாவைச் சேர்ந்த வெர்ஜினியா ருஸிச் பட்டம் வென்றார். அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை 40 ஆயிரம் டாலர். தூக்கிவாரிப்போட்டது ரிச்சர்டுக்கு. 'என்னது... டென்னிஸில் ஒரு பட்டம் வென்றால், இவ்வளவு பணமா?! நானும் என் மனைவியும் சேர்ந்து வருடம் முழுக்க ஓடியோடி, முட்டி தேய உழைத்தாலும், இதைச் சம்பாதிக்க முடியாதே! மறுநாள் செய்தித்தாள்களிலும் பார்த்து 'பரிசுத்தொகையை’ உறுதிசெய்துகொண்ட ரிச்சர்டு, தன் மனைவி ஆரசினிடம் வந்தார். அழுத்தமாகச் சொன்னார். 'இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை டென்னிஸ் உலக சூப்பர் ஸ்டார் ஆக்க வேண்டும்!’  இவை ஏதோ ஒரு வேகத்தில் சொன்ன வார்த்தைகள் அல்ல. ரிச்சர்டு, அந்தக் கணத்தில் இருந்து தன் வார்த்தைகளை நிஜமாக்குவதற்காக வாழ்வைப் புதிதாக ஆரம்பித்தார். இரு மகள்களைப் பெற்று, டென்னிஸ் 'பால்’ ஊட்டி, சீராட்டி வளர்த்து, டென்னிஸ் உலக சூப்பர் ஸ்டார்களாகவும் ஆக்க...

எப்படி நுழைந்தது அந்நிய மாடு?

நாட்டு மாடு, வெளிநாட்டு மாடு பற்றிய சர்ச்சை பெரிதாக நடந்துகொண்டிருக்கும் நிலையில். வெளிநாட்டு மாடுகள் இந்தியாவுக்குள் எந்தக் காலத்தில், எந்தப் பின்னணியில், ஏன் கொண்டு வரப்பட்டன என்ற கேள்வி எழுவது சகஜம். இதற்கான பதிலைத் தருகிறது, சமீபத்தில் வெளியான ‘பால் அரசியல் – தாய்ப்பால்/புட்டிப்பால்/மாட்டுப்பால் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்‘ என்ற நூல். சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்தப் புத்தகத்தை எதிர் வெளியிட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி: இந்திய வேளாண் உற்பத்தியைப் பெருக்க அன்றைய நவீன அறிவியலாளர்களால் கொண்டுவரப்பட்ட பசுமைப்புரட்சி பெரும் பண்ணையாளர்களுக்கே வாய்ப்பாக அமைந்தது, குறுஉழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றிக் கூலிகளாக்கி இருந்தது. இவர்களுக்கு உதவும் பொருட்டு இன்னொரு புரட்சி செய்ய அவர்கள் விரும்பினர். அதுதான் ‘வெண்மை புரட்சி’ எனும் பால் உற்பத்திப் பெருக்கம். இதற்கு மரபு சார்ந்த முறையை நாடாமல், மேற்கத்திய முறையில் பால்பண்ணைகள் அமைக்க முற்பட்டபோதே, இவர்களுடைய கவலைக்கான காரணம் விளங்கிவிட்டது. இந்த இடத்தில் ஒரு செய்தியைக் கவனத்தி...

லாஞ்சரி(Lingerie)

சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட்  ஜெபராஜ்  ஒரு லாஞ்சரி ( lingerie )பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில் என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து , கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா ? என்றார் சித்ரா பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா ? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் Linge என்றால் ' துவைக்கக்கூடியது ' என்று பொருள். ”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது. 20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்...