முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாதிப்பாரா சசிகலா?



ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான எதிர்வினையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார் சசிகலா
காட்சி 1:
ராயப்பேட்டை
அதிமுக தலைமையகத்துக்கு சுமார் பதினைந்து பேருடன் வந்து நிற்கிறார் அந்தத் தொண்டர். உள்ளே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார் சசிகலா. வந்த தொண்டருக்கு ஏனோ உள்ளே செல்ல மனமில்லை. தயங்கி நிற்கிறார். அருகில் இருப்பவர்களிடம் “ண்ணா.. தீபா மேடம் வூடு எங்காக்குது?” என்று கேட்கிறார். பதில் வந்ததும், அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். சற்று நேரத்தில் அந்தக் கூட்டம் அங்கிருந்து தியாகராய நகரில் உள்ள தீபா வீடு நோக்கிக் கிளம்புகிறது.
காட்சி 2:
அண்ணா சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது தொங்கும் பிரம்மாண்டமான பேனர் அது. ஜெயலலிதா படமும் உள்ள அந்த பேனரில், ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்ந்து ஏதோ எழுதியபடி இருக்கிறார் சசிகலா. சாலையின் எந்த மூலையில் இருப்பவர்களுக்கும் கண்ணில் படும்படி வைக்கப்பட்டிருக்கிறது அந்த பேனர். அது பார்வையில் பட்டதும் சட்டென்று நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர் இரண்டு ஆண்கள். கிராமத்தவர்கள் போன்ற தோற்றம். “என்னாத்துக்குங்க இத்தாம் பெரிய பேனரை அவ்ளோ ஒயரத்துல வச்சிருக்காங்க?” என்று ஒருவர் கேட்கிறார். “அதான் சுவத்துல ஒட்டுற போஸ்டர்லல்லாம் சசிகலா மூஞ்சை மட்டும் கிழிச்சு வச்சுடுறாங்களே… எல்லாம் ஒரு சேஃப்டிக்குத்தான்” என்கிறார் மற்றவர். அர்த்தபுஷ்டியுடன் சிரித்தபடி நகர்கிறார்கள் இருவரும்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்த சசிகலா, கட்சிக்குள்ளும் வெளி யிலும் ஆதரவும், எதிர்ப்பும் கலந்த கலவை யான எதிர்வினையைச் சந்தித்துக்கொண்டி ருக்கிறார். அடிமட்டத்தில் ஆதரவு மிக மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். கட்சியின் அடிமட்டத் தொண்டர்களைப் பொறுத்தவரை, இத்தனை நாட்கள் ஜெயலலிதாவிடம் காட்டிய மனப்பூர்வமான விசுவாசத்தைத் திடீரென்று இன்னொருவருக்கு மாற்றுவது என்பது பெரும் மனச்சிக்கலைத் தரக்கூடியது. குறிப்பாகப் பெண் தொண்டர்கள். ஜெயலலிதாவின் மறைவு தந்த சோகம் அகலாத நிலையில், அரசியல் காரணங்களை முன்வைத்து மின்னல் வேகத்தில் நிகழும் மாற்றங்கள் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.
கூனிக் குறுகித் தன்னை வணங்கு பவர்களிடம் உண்மையில் இருப்பது பணிவு அல்ல என்பதை, ஜெயலலிதாவின் அருகில் இருந்தபோதே கவனித்துவந்தவர்தான் சசிகலா. எனவே, முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் தன் முன்னே பவ்யமாக நிற்பதை நம்பப்போவதில்லை. ஆனால், ஜெயலலிதாவின் பிம்பக் கட்டமைப்புக்குப் பெரிதும் உதவிய அந்த வழக்கத்தைத் தொடர்வதன் மூலம், பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கியிருக்கும் தனது அரசியல் வாழ்க்கையில் உயர்வைக் காணலாம் என்றே நம்புகிறார் போலும். மேலும், ஜெயலலிதாவின் தோற்றத்தைப் பிரதியெடுப் பதுபோன்ற நடை, உடை, பாவனைகள், ஒப்பனைகள் வேறு. உண்மையில், பாரம்பரியமான அதிமுக ஆதரவாளர்களும் பொதுமக்களும் சசிகலாவை எரிச்சலுடன் பார்க்கவே இது வழிவகுக்கிறது.
முதலில் பொதுச் செயலாளர் பதவி, பின்னர் முதல்வர் பதவி என்று இலக்கு வைத்து முன்னேறினாலும், மற்றவர்களின் வற்புறுத்தலின்பேரில் இவற்றையெல்லாம் செய்ய நேர்வதுபோல் காட்டிக்கொள்கிறார். பொதுச் செயலாளர் பதவியைக்கூட ‘டோர் டெலிவரி’ போல் போயஸ் இல்லத்துக்கே வரவழைத்துக் கொண்டதைத் தனது சாமர்த் தியமாக அவர் நினைத்துக்கொள்ளலாம். மக்கள் அப்படி நினைக்கவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அதிகரித்துவரும் ஆதரவு பற்றியும் அவருக்குக் கவலை இல்லாமல் இருக்காது. தொண்டர்களிடம் ஆதரவை இழந்துவிட்டால், அப்புறம் என்ன செய்தாலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது என்பதையும் அவர் அறிந்திருப்பார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே சசிகலாவின் உறவினர்கள் செலுத்திய ஆதிக்கம் விமர்சிக்கப்பட்டது. இன்றைக்கு, சசிகலாவே அதிகார மையத்தின் ஆதாரமாகிவிட்ட நிலையில், ஆட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல தளங்களில் ஏற்படவிருக்கும் அழுத்தம் பற்றியும் மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். இவற்றுக்கிடையே முதல்வர் பதவியிலும் அமரத் தருணம் பார்த்துவருகிறார் சசிகலா. மறுபுறம், மத்திய அரசு தரும் நெருக்குதல். ஆளுநர் மூலம் நடந்துவரும் நகர்வுகள் இன்றைக்குத் தமிழகத்தில் ரகசியம் அல்ல. தமிழகத் தலைவர்களின் அறிக்கைகள் மூலமும், நிர்வாகரீதியான நடவடிக்கைகள் மூலமும் தமிழக அரசியலில் மறைமுகமான தலையீட்டைச் செய்துவருகிறது பாஜக. ஜெயலலிதாவால் கடுமையாக எதிர்க்கப் பட்ட பல விஷயங்களில் பாஜக அரசோடு உடன்பட்டுவிட்டது இன்றைய அதிமுக.
இவற்றுக்கு இடையில், அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்ற அன்று சசிகலா ஆற்றிய உரைதான், அதுவரை அவர் மீது இருந்த பிம்பத்தைச் சற்று மாற்றியமைத்ததுடன், ‘பிரச்சாரத்தில் பேசும் அளவுக்காவது தகுதியுடன் இருக்கிறார்’ என்று சமூக வலைதளங்களில் பேசவைத்தது. அதற்காக, அரசியல் அறிவுடன் இயங்கத் தகுதியுடையவர் என்று சசிகலாவைச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில், இதுவரை அவர் மேற்கொண்டதாகச் சொல்லப்படும் அரசியல் நடவடிக்கைகள் யாவும் திரைமறைவிலானவை. பெருமளவில் தன் ஆதரவாளர்களுக்கும் குடும்பத் தினருக்குமான பேரங்கள் என்னதான் பிறர் உதவியுடன் தகவல்களையும், அறிக்கை களையும், உரைகளையும் தயார் செய்து கொள்ள முடியும் என்றாலும், ஒரு அரசியல் தலைவர் சுயமாகச் சிந்திக்கக் கூடியவராக, முக்கியப் பிரச்சினைகளின் போது தொலைநோக்குடன் முடிவெடுக்கக்கூடிய வராக இருக்க வேண்டும். சசிகலா முதல்வராகி விடுவார் என்று ஊகங்கள் வெளியாகும் போதெல்லாம், மக்களிடம் பதற்றம் ஏற் படுவதற்கான முக்கியக் காரணம் இதுதான். ஒரு கட்சியின் தலைமைப் பதவியில் அமர்வதற்கும், ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஜெயலலிதா எந்தச் சந்தர்ப்பத்திலும் தடுமாறியதில்லை. ஆனால், சமீபத்தில் ‘இந்தியா டுடே’ சார்பில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், அப்பத்திரிகையின் தமிழ்ப் பதிப்பு வருவதை வரவேற்றுப் பேசினார் சசிகலா. தமிழ் உட்பட அப்பத்திரிகையின் பிராந்திய மொழிப் பதிப்புகள் எப்போதோ நின்றுவிட்ட நிலையில், இவ்வாறு பேசியிருப்பது சசிகலாவின் பலவீனங்களைப் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.
மிக முக்கியமாக, தமிழகத்தின் முக்கிய எதிர்க் கட்சியான திமுகவின் தலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை சசிகலா எப்படி எதிர்கொள்வார் என்பது இன்னொரு சவால். விவசாயிகள் தற்கொலைப் பிரச்சினை, ஜல்லிக்கட்டு வரை அறிக்கை, பதில் அறிக்கை என்று முன்பை விடத் தீவிரமாக இயங்குகிறார் ஸ்டாலின். ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் பற்றி முதல்வரிடம் ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும் எனும் அளவுக்கு அவர் செல்கிறார். இன்னொரு பக்கம், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் எனும் தகவல்கள் சசிகலா தரப்பைச் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. விரைவில் முதல்வர் பதவியில் அவர் அமர முயல்வதற்கான காரணமாகவும், அமரத் தயங்குவதற்கான காரணமாகவும் இந்தத் தீர்ப்புதான் சொல்லப் படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவு ஏற்படுத்தி யிருக்கும் வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு, திமுக பலம் பெற்றுவிடக் கூடாது என்று ஒரு தரப்பும், பாஜக கால் பதித்துவிடக் கூடாது என்று ஒரு தரப்பும், இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி மிச்சமிருக்கும் நிலையில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்று அதிமுகவினரும் எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் சசிகலாவின் எழுச்சியைப் பார்க்க முடிகிறது. இது நிலைக்குமா என்பதைக் காலம் அல்ல, மக்கள்தான் முடிவுசெய்வார்கள்!

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.  அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே ஒ வ்வொரு பத்திரிகையும் சில விஷயங்களைப் பெருமிதமாய்ச் சொல்வார்கள். தாங்கள் தான் முதன்முதலில் போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தோம், வீட்டு வசதி வாரிய  முறைகேட்டினை அம்பலப்படுத்தினோம், இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாய்ச் செய்து வருகிறோம் என்று, அவர்களுக்கு அதில் உரிமை இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உரிமை கோருவார்கள்,அதில் பெருமிதமும் சாதித்து விட்ட திருப்தியும் வெளிப்படும். ஆனால் இந்த 'இந்தியா டுடே'காரர்களுக்கோ வேறு விதமான உரிமை கோரல். பாலியல் இச்சைகளின் ஆய்வுகள் தொடர்பான நீண்டகால உரிமை கோரல் தான். தாங்கள் தான்  11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தேசத்தின் தலையணை பேச்சுகளை படம் பிடித்துக் காட்டி வருகிறோம் எங்க‌ளை விட யாருக்கு இதில் தகுதியும் அனுபவமும்  இருக்கிற‌து என . உங்களுக்கு இது வக்கிரமாகவும் கழிசடையின் பிறப்பிடமாகவும் தெரியலாம்,ஆனால் அவர்களுக்கோ அது பெருமிதம். ஆனால் அவர்களுக்கே இந்த வழக்கமான பள்ளிய‌றை, கழிப்பறை பாலியல் தொடர்பு ஆய்வுகள்,இட்டுக்கட்டல்கள் அதைத்தொடர்ந்த  பூச்சுகள் அலுத்து விட்டதா என்று தெரியவில்லை.புதிய...