முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் மாணவன் காதலிக்கிறானாம்!


“என்ன இன்னைக்கும் அவன் வரலையா? என்ன ஆச்சு அவனுக்கு?”
மாணவர்களும் மாணவிகளும் இணைந்து பயிலும் வகுப்பறை அது. மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். விழிகளில் சட்சட்டென மாறும் சமிக்ஞை பரிமாற்றங்கள். மாணவிகளில் சிலர் ரேவதி எனும் அந்த மாணவியையே உற்றுப் பார்க்கின்றனர். இவை அனைத்தும் இமைக்கும் நொடியில் நடந்து முடிகின்றன.
வகுப்பு முடிந்து தனியறையில் அமர்ந்திருக்கிறேன். பாலு வருகிறான், கிருஷ்ணனை துணைக்கு அழைத்துக்கொண்டு!
“மே ஐ கம் இன் மேடம்.?”
“ப்ளீஸ் கம்...”
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க , பாலு ஆரம்பித்தான். “பிரசாத்துக்கு லவ் ஃபெய்லியர் மேடம்...”
அதுவரை மும்முரமாக எழுதிக்கொண்டே காது கொடுத்துக்கொண்டிருந்தவள், நிமிர்ந்தேன்.
“என்ன சொன்ன?”
“அவனுக்கு லவ் ஃபெய்லியர் மேடம்”
“இந்த வயசுல லவ்வே அதிகம்.. இதுல ஃபெயிலியர் வேறயா? என்ன விஷயம்? முழுசா சொல்லு!”
கடகடவென நம்பமுடியாத பல தகவல்களை ஒப்புவித்தான்.
ஏழாம் வகுப்பு முதல் ஒன்றாய் படித்துவரும் ரேவதியை அவன் காதலிக்கிறானாம்! இதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவள் பத்தாம் வகுப்பு வந்த பிறகு அவனை கண்டுக் கொள்வதே இல்லையாம். அதில் மனம் நொந்து இவன் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லையாம்!
முழுவதையும் கேட்ட பிறகு கூறினேன்,”நீங்க ரெண்டு பேரும் அவன் வீட்டுக்கு போய் மேம் ஸ்கூலுக்கு வரச்சொன்னாங்கன்னு சொல்லி அவனை அழைச்சிட்டு வரணும். புரியுதா?”
“ஓகே மேம் !”
மறுநாள் வந்தவனை பார்த்து அதிர்ந்து போனேன்!
டைபாய்டு நோயால் பல நாள் படுக்கையில் விழுந்து எழுந்ததை போன்ற தோற்றத்தில் கண்களின் கீழே கருவளையத்துடன், பரட்டை தலையுடன் உடல் மெலிந்து கன்னங்கள் ஒட்டி காதல் தோல்வியில் கசந்து நிற்கும் ஒரு இருபத்தைந்து வயது இளைஞனை நினைவூட்டினான் அந்த பதினைந்து வயது சிறுவன்.
அவனையே சில நொடிகள் உற்றுப் பார்த்தேன். எட்டாம் வகுப்பு மாணவனாய் என்னிடம் படித்தபோதிருந்த அவன் தோற்றத்தை நினைத்துப் பார்த்தேன்; ஒரு கன்றுக்குட்டியின் துடிப்புடன் அத்தனை உற்சாகத்துடன் அலைஅலையான கேசத்துடனும் கண்களில் தொக்கி நிற்கும் குறும்புடனும் சிரித்த முகத்துடனும் வளைய வருவான். படிப்பில் சுமார்தான் என்றாலும் குறைந்த பட்சம் தேர்ச்சியாவது பெற்று விடுவான்.
“என்னடா கண்ணா, பாலு என்னென்னவோ சொல்றான்...” என்றேன். பதில் இல்லை!
அருகில் நின்றவன் சொன்னான், “ரொம்ப கவலைப்படறான் மேம்... ஒழுங்கா சாப்பிடறது இல்லை... தூங்கறது கூட இல்லை...”
“உன்னை பாக்கறதுக்கே கஷ்டமா இருக்கேடா... ஏன் இப்படி?” என்றது தான் தாமதம், விம்ம ஆரம்பித்தான் .
“அவளை மறக்க முடியலையே மேம்”
“மறக்க முடியலையே” - இந்த வார்த்தைகள் எனக்கு வேறொரு சம்பவத்தை நினைவூட்டின.
இதே வலியுடன் கேட்ட அது ஒரு பெண்ணின் குரல்! முதுகலை பட்டம் பயில வந்தவள் படித்த பாடம் - காதல்.
சிலநாட்களாக ஏதோ ஊடலில் காதலனின் பாராமுகத்தால் தவித்து போனவள் கூறிய வார்த்தைகள் அவை.
“மறக்க முடியலையே மேம்! நொடிக்கு நொடி அவன் முகமே கண்முன்னாடி இருக்கு. அவன் பேசின வார்த்தைகளையே விடாம மனசு அசைபோடுது. பைத்தியம் பிடிச்சா மாதிரி என் வேலைகள் எல்லாத்தையும் மறந்து அவன் முகமே மனசு பூரா நிறைஞ்சிருக்கு..! ப்ளீஸ் மேம்... என்னோட வாங்க, அவன் நம்பர் சொல்றேன். எனக்காக கொஞ்சம் அவனோட பேசி கொடுக்கறீங்களா? எடுத்தவுடனே என் குரல் கேட்டாலே அவன் போனை வெச்சிடறான். எனக்கு அவனோட பேசணும் ப்ளீஸ்!”
சுய கௌரவத்தை விட்டு கெஞ்சிக் கொண்டிருந்தவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவனுக்கு போன் செய்து அவள் பேச சற்று அவகாசம் கொடுக்கவேண்டும் என்று கூறி விட்டு அவள் கரங்களில் போனை கொடுத்தேன். காதலின் தவிப்பை, அது தரும் வேதனையை அன்று தான் அருகிலிருந்து பார்த்தேன்.
கண்களில் வழியும் கண்ணீரோடு அவனுடன் அன்று உரையாடிக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணின் தவிப்புக்கும் இதோ எதிரில் நிற்கும் பதின்பருவ மாணவனின் தவிப்புக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை.
காதலுணர்வு மனிதன் பிறந்தது முதலே இருக்கின்றது என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள். ஒரு குழந்தையின் முதல் காதல் அதன் தாய் மீது என்பது அவர்களின் கூற்று. பிறகு சமுதாயத்தில் விடப்பட்ட குழந்தை, உடன் பயிலும் மாணவர் பால் ஈர்க்கப்படுகிறான். அதன் பிறகே கவனம் எதிர்பாலினரின் மீது திரும்புகிறது என்று மனித மனங்களின் உணர்வு பரிணாம வளர்ச்சியை கணக்கிடுகின்றனர்.
வளர்ந்து பண்பட்ட நிலையில் இருப்பவர்களாலேயே இத்தவிப்பை ஒதுக்க இயலவில்லை எனும் போது, மனித வாழ்வின் மிகச் சிக்கலான பருவத்தில் அடியெடுத்து வைக்கும் இவனைப் போன்ற சிறுவர்கள் சிந்தை தடுமாறி போவதை எப்படி தவறென்பது? ஆனாலும் அதை சரியென்பதும் தவறே அல்லவா?
பரிதாபத்திற்குரிய தோற்றத்துடன் நின்றிருந்தவனை பார்த்தேன்.
“கண்ணா... பிள்ளை படிக்கறதுக்காக ஸ்கூலுக்கு போயிருக்கான்னு நம்பி உங்கப்பா அம்மா எங்கயோ உனக்காக உழைச்சுகிட்டு இருக்காங்க. இப்படி நீ என் முன்னாடி நின்னுகிட்டிருக்கறதைப் பாத்தா அவங்க எவ்ளோ வேதனைப் படுவாங்க. கொஞ்சம் யோசிச்சுப் பாரு. என் மகன் என் முன்னே இந்த நிலையில் நின்னா, அவனுக்கு என்ன சொல்வேனோ அதையே உனக்கும் சொல்றேன்.
இது மாதிரியான சிந்தனைகள் இந்த வயசுல எல்லோருக்கும் வரது சகஜம். உலகத்திலேயே தன் காதல்தான் புனிதமானது; தன் காதலி தான்/ காதலன்தான் அழகானவன்னு காதலிக்கும் ஒவ்வொருத்தரும் நினைச்சுப்பாங்க. அதுவும் இயல்பு தான்! இப்படி எல்லாம் இந்த வயசுல எண்ணம் வரலைன்னா தான் உடம்புல ஏதோ கோளாறுன்னு அர்த்தம். அதனால, நான் உன்னை எந்த குறையும் சொல்லப் போவதில்லை. அந்த பொண்ணு 450 மார்க்குக்கு குறையாம வாங்கக்கூடிய ரிசல்ட் வந்ததும், நல்ல ஸ்கூல்ல அட்மிஷன் கிடைத்துனா பிளஸ் ஒன் படிக்க போயிடுவா. உன் நிலைமையை நினைச்சுப் பாரு. நீ சுமாரா படிக்கறவன். பாஸ் மார்க் வாங்கவே தடுமாறிக்கிட்டு இருக்க. இனிமேலும் அவளையே நினைச்சுக்கிட்டு படிப்புல கவனம் இல்லாம இருந்தியானா அப்புறம் என்ன ஆகும்னு உனக்கே தெரியும். அவ உன்ன திரும்பியும் பார்க்க மாட்டா”
நல்லா புரிஞ்சிக்க. வாழ்க்கைல ஒவ்வொரு பருவத்திலயும் ஒவ்வொருத்தர் மேல ஈர்ப்பு வந்துட்டேதான் இருக்கும். ஆனா அதெல்லாம் நிலையானது இல்ல. நல்ல நிலைமைக்கு வந்த பிறகு சரியான வயசுல உனக்கான ஒருத்தியை தேர்ந்தெடுக்கறதுதான் புத்திசாலித்தனம். அதுக்கு இன்னும் குறைந்த பட்சம் 10 வருஷம் ஆகும். அதுக்குள்ளே உன் வாழ்க்கைல எத்தனையோ மாற்றங்கள் வரும். இப்ப உனக்கு வந்திருக்கறதுக்கு பேர் காதல் இல்லை. 3 வருஷமா தொடர்ந்து அவளை பார்த்துக்கிட்டே இருந்தததால வந்திருக்கிற இனக்கவர்ச்சி. இதையெல்லாம் காதல்னு நினைச்சு குழப்பிக்காதே. இறுதித் தேர்வுக்கு இன்னும் 3 மாசம்தான் இருக்கு. இப்ப ஆரம்பிச்சு, இனிமே ஒழுங்கா படிச்சாலும் சுலபமா பாஸ் பண்ணிடலாம். நான் சொல்றது புரியுதா?”
சுவரில் ஒரு பல்லியின் சத்தம். சொத்! சொத்!
“பார்த்தியா... பல்லி கூட சொல்லிடுச்சி. மேம் சொல்றது கரெக்ட்டு! வா போவோம்” என்று அவனை இழுத்துக்கொண்டு கிளம்பினான் பாலு!
மே 31. பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தது.
ஜூன் 1. இதழ்களில் புன்னகையுடனும் கரங்களில் இனிப்புடனும் வந்தாள் ரேவதி. ஸ்வீட் பாக்ஸ்-ஐ நீட்டினாள். கொஞ்சம் எடுத்து வாயில் வைத்தேன், தவிர்க்க இயலாமல் நினைவில் பிரசாத்! இரு பாடங்களில் தோல்வியைத் தழுவியிருந்த பிரசாத்!
அதற்கு பிறகு பிரசாத்தை நான் பார்க்கவேயில்லை.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, செப்-19ம் தேதி. தேர்வறையில் அமர்ந்திருக்கிறேன். வகுப்பறை வாசலில் நிழலாடியது. திரும்பிப் பார்த்தால் ஆச்சர்யப்படுத்தும் விதமாக பிரசாத் சகமாணவன் ஒருவனுடன். குறும்புத்தனம் முற்றிலும் தொலைந்துபோய்!
“ரிசுல்ட் வந்துடுச்சே” என்றேன். பாஸ் ஆகிட்டியா என்று கேட்க தயக்கம்.
“வந்துடுச்சு மேம். பாசாயிட்டேன்; ஐடெண்டிபிகேஷன் மார்க்ஸ் குறிச்சுட்டு வரச்சொன்னாங்க” என்றான்.
குறித்துத் கொடுத்துவிட்டு கேட்டேன்... “எப்படியிருக்கே கண்ணா?”
“எப்படி சந்தோஷமாயிருக்க முடியும் மேம்?”
ஒற்றை கேள்வியில் பல பதில்களை கொடுத்துவிட்டு போனாலும், என் மனதில் ஆறாத வடுவாய் பதிந்து விட்டான் பிரசாத்!
(மாணவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)
கட்டுரையாளர் - தொடர்புக்கு vijiraja1975@gmail.com


கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

அம்போவான கிம்போ

BY  JEEVANAND RAJENDRAN இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி. அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி. நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம். பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒர...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!'  - யாரோ ஒருவன். அ ந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து  ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.  ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இந்தப...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

இருட்டு அறையில் முரட்டு குத்து - ஐ சப்போர்ட் :-)

அராத்து இந்த படத்துக்கெல்லாம் எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் இந்த  படத்துக்கு எழும் எதிர்ப்பைப் பார்த்தவுடன் எழுத வேண்டிய கட்டாயம். முதலில் படம் :- மொக்கை படம். கொஞ்சம் கூட கவனமும் , மெனக்கெடலும் , ப்ரொஃபஷனலிஸமும் இல்லாத மட்டி படம். அடல்ட் காமடி : இதை எடுக்க மூளையும் ரசனையும் வேண்டும். கலா ரசிகனாக இருக்க வேண்டும். அடல்ட் காமடி என்ற பெயரில் இந்த படத்தில் இருப்பதெல்லாம் , கற்பனை வளம் இல்லாத அருவருப்பு காமடி.அதிலும் ஒரு ஓவியத்தை பார்த்து இருவர் நின்று கொண்டே சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகள் அருவருப்பின் உச்சம். அடல்ட் காமடியை விடுங்கள், படத்தில் காமடியே இல்லை. செக்ஸ் பற்றி , பொதுமக்கள் பேசிக்கொள்வதை , வெளிப்படையாக திரையில் வைத்ததால் ஆர்பரிக்கிறார்கள் , அவ்வளவே ! கவர்ச்சி : இதைப்போன்ற படங்களில் கவர்ச்சியாவது இருக்க வேண்டும். க்ளீவேஜ் , தொடையை காட்டினால் கவர்ச்சி என்பதெல்லாம் , பிரசாந்த் காலத்தோடு மலையேறி விட்டது. இந்த படத்தில் காயலான் கடை பார்ட்டி , டொக்கு ஒடிசல் வாங்கியதையெல்லாம் காட்டி கவர்ச்சி என்கிறார்கள், மண்ணாங்கட்டி ! அவனவனு...

ரிப்போர்ட்டரா இருக்கிறது குத்தமாய்யா ?

வேலை கிடைக்காம இருந்தப்பவும் சரி, வேலை கிடைச்சு சென்னையிலேயே செட்டிலான பிறகும் சரி... ஒவ்வொரு தடவை சொந்த ஊருக்குப் போகும்போதும், நமக்குனே காத்துட்டிருக்கிற  டிக்கெட்டுகளை சமாளிக்கணும்னா, கொஞ்சம் கஷ்டம்தான். இவங்களுக்கெல்லாம் 'நாம என்ன வேலை பார்க்கிறோம்’னு விளக்குறதுக்குள்ளேயே, நொந்துடுவோம். அதுவும் இந்த ரிப்போர்ட்டர் வேலையை விளக்குறது இருக்கே... ஊர்ல இறங்கி, பேக்கோட நடந்துபோனாலே, நாலு திசையில இருந்தும் நோக்கு வர்மம் மாதிரி நோக்குவாங்க. ''எங்கே இருக்கீங்க தம்பி?, ஆளையே பார்க்க முடியலை''னு ஆரம்பிப்பாங்க. 'இதென்னடா கொடுமையா இருக்கு? ஊர்ல உள்ளவங்க அப்படித்தானே கேட்பாங்க?’னு யோசிக்கிறீங்க. எக்ஸ்கியூஸ் மீ.... அந்தாளு இந்தக் கேள்வியை என்கிட்ட கேட்கிறது எட்டாவது முறை.   'எங்கே இருக்கீக தம்பி?’னு ஆரம்பிக்கிற ஆம்பளைங்களை விட, 'என்ன வேலை பார்க்கிற?’னு ஆரம்பிக்கிற பெண்கள் கொஞ்சம் டேஞ்சர். 'ரிப்போட்டர்னா? இந்தக் கணக்கு எடுக்கிற வேலையா?’ 'அது இல்லடி, ஊரு ஃபுல்லா சுத்துவாங்கள்ல அது...’ 'இல்லை.. டி.வி-யில மைக்கைப் பிடிச்சுக்கிட்டு நிப்பாங்கல்ல... அந...