முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் மாணவன் காதலிக்கிறானாம்!


“என்ன இன்னைக்கும் அவன் வரலையா? என்ன ஆச்சு அவனுக்கு?”
மாணவர்களும் மாணவிகளும் இணைந்து பயிலும் வகுப்பறை அது. மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். விழிகளில் சட்சட்டென மாறும் சமிக்ஞை பரிமாற்றங்கள். மாணவிகளில் சிலர் ரேவதி எனும் அந்த மாணவியையே உற்றுப் பார்க்கின்றனர். இவை அனைத்தும் இமைக்கும் நொடியில் நடந்து முடிகின்றன.
வகுப்பு முடிந்து தனியறையில் அமர்ந்திருக்கிறேன். பாலு வருகிறான், கிருஷ்ணனை துணைக்கு அழைத்துக்கொண்டு!
“மே ஐ கம் இன் மேடம்.?”
“ப்ளீஸ் கம்...”
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க , பாலு ஆரம்பித்தான். “பிரசாத்துக்கு லவ் ஃபெய்லியர் மேடம்...”
அதுவரை மும்முரமாக எழுதிக்கொண்டே காது கொடுத்துக்கொண்டிருந்தவள், நிமிர்ந்தேன்.
“என்ன சொன்ன?”
“அவனுக்கு லவ் ஃபெய்லியர் மேடம்”
“இந்த வயசுல லவ்வே அதிகம்.. இதுல ஃபெயிலியர் வேறயா? என்ன விஷயம்? முழுசா சொல்லு!”
கடகடவென நம்பமுடியாத பல தகவல்களை ஒப்புவித்தான்.
ஏழாம் வகுப்பு முதல் ஒன்றாய் படித்துவரும் ரேவதியை அவன் காதலிக்கிறானாம்! இதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவள் பத்தாம் வகுப்பு வந்த பிறகு அவனை கண்டுக் கொள்வதே இல்லையாம். அதில் மனம் நொந்து இவன் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லையாம்!
முழுவதையும் கேட்ட பிறகு கூறினேன்,”நீங்க ரெண்டு பேரும் அவன் வீட்டுக்கு போய் மேம் ஸ்கூலுக்கு வரச்சொன்னாங்கன்னு சொல்லி அவனை அழைச்சிட்டு வரணும். புரியுதா?”
“ஓகே மேம் !”
மறுநாள் வந்தவனை பார்த்து அதிர்ந்து போனேன்!
டைபாய்டு நோயால் பல நாள் படுக்கையில் விழுந்து எழுந்ததை போன்ற தோற்றத்தில் கண்களின் கீழே கருவளையத்துடன், பரட்டை தலையுடன் உடல் மெலிந்து கன்னங்கள் ஒட்டி காதல் தோல்வியில் கசந்து நிற்கும் ஒரு இருபத்தைந்து வயது இளைஞனை நினைவூட்டினான் அந்த பதினைந்து வயது சிறுவன்.
அவனையே சில நொடிகள் உற்றுப் பார்த்தேன். எட்டாம் வகுப்பு மாணவனாய் என்னிடம் படித்தபோதிருந்த அவன் தோற்றத்தை நினைத்துப் பார்த்தேன்; ஒரு கன்றுக்குட்டியின் துடிப்புடன் அத்தனை உற்சாகத்துடன் அலைஅலையான கேசத்துடனும் கண்களில் தொக்கி நிற்கும் குறும்புடனும் சிரித்த முகத்துடனும் வளைய வருவான். படிப்பில் சுமார்தான் என்றாலும் குறைந்த பட்சம் தேர்ச்சியாவது பெற்று விடுவான்.
“என்னடா கண்ணா, பாலு என்னென்னவோ சொல்றான்...” என்றேன். பதில் இல்லை!
அருகில் நின்றவன் சொன்னான், “ரொம்ப கவலைப்படறான் மேம்... ஒழுங்கா சாப்பிடறது இல்லை... தூங்கறது கூட இல்லை...”
“உன்னை பாக்கறதுக்கே கஷ்டமா இருக்கேடா... ஏன் இப்படி?” என்றது தான் தாமதம், விம்ம ஆரம்பித்தான் .
“அவளை மறக்க முடியலையே மேம்”
“மறக்க முடியலையே” - இந்த வார்த்தைகள் எனக்கு வேறொரு சம்பவத்தை நினைவூட்டின.
இதே வலியுடன் கேட்ட அது ஒரு பெண்ணின் குரல்! முதுகலை பட்டம் பயில வந்தவள் படித்த பாடம் - காதல்.
சிலநாட்களாக ஏதோ ஊடலில் காதலனின் பாராமுகத்தால் தவித்து போனவள் கூறிய வார்த்தைகள் அவை.
“மறக்க முடியலையே மேம்! நொடிக்கு நொடி அவன் முகமே கண்முன்னாடி இருக்கு. அவன் பேசின வார்த்தைகளையே விடாம மனசு அசைபோடுது. பைத்தியம் பிடிச்சா மாதிரி என் வேலைகள் எல்லாத்தையும் மறந்து அவன் முகமே மனசு பூரா நிறைஞ்சிருக்கு..! ப்ளீஸ் மேம்... என்னோட வாங்க, அவன் நம்பர் சொல்றேன். எனக்காக கொஞ்சம் அவனோட பேசி கொடுக்கறீங்களா? எடுத்தவுடனே என் குரல் கேட்டாலே அவன் போனை வெச்சிடறான். எனக்கு அவனோட பேசணும் ப்ளீஸ்!”
சுய கௌரவத்தை விட்டு கெஞ்சிக் கொண்டிருந்தவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவனுக்கு போன் செய்து அவள் பேச சற்று அவகாசம் கொடுக்கவேண்டும் என்று கூறி விட்டு அவள் கரங்களில் போனை கொடுத்தேன். காதலின் தவிப்பை, அது தரும் வேதனையை அன்று தான் அருகிலிருந்து பார்த்தேன்.
கண்களில் வழியும் கண்ணீரோடு அவனுடன் அன்று உரையாடிக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணின் தவிப்புக்கும் இதோ எதிரில் நிற்கும் பதின்பருவ மாணவனின் தவிப்புக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை.
காதலுணர்வு மனிதன் பிறந்தது முதலே இருக்கின்றது என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள். ஒரு குழந்தையின் முதல் காதல் அதன் தாய் மீது என்பது அவர்களின் கூற்று. பிறகு சமுதாயத்தில் விடப்பட்ட குழந்தை, உடன் பயிலும் மாணவர் பால் ஈர்க்கப்படுகிறான். அதன் பிறகே கவனம் எதிர்பாலினரின் மீது திரும்புகிறது என்று மனித மனங்களின் உணர்வு பரிணாம வளர்ச்சியை கணக்கிடுகின்றனர்.
வளர்ந்து பண்பட்ட நிலையில் இருப்பவர்களாலேயே இத்தவிப்பை ஒதுக்க இயலவில்லை எனும் போது, மனித வாழ்வின் மிகச் சிக்கலான பருவத்தில் அடியெடுத்து வைக்கும் இவனைப் போன்ற சிறுவர்கள் சிந்தை தடுமாறி போவதை எப்படி தவறென்பது? ஆனாலும் அதை சரியென்பதும் தவறே அல்லவா?
பரிதாபத்திற்குரிய தோற்றத்துடன் நின்றிருந்தவனை பார்த்தேன்.
“கண்ணா... பிள்ளை படிக்கறதுக்காக ஸ்கூலுக்கு போயிருக்கான்னு நம்பி உங்கப்பா அம்மா எங்கயோ உனக்காக உழைச்சுகிட்டு இருக்காங்க. இப்படி நீ என் முன்னாடி நின்னுகிட்டிருக்கறதைப் பாத்தா அவங்க எவ்ளோ வேதனைப் படுவாங்க. கொஞ்சம் யோசிச்சுப் பாரு. என் மகன் என் முன்னே இந்த நிலையில் நின்னா, அவனுக்கு என்ன சொல்வேனோ அதையே உனக்கும் சொல்றேன்.
இது மாதிரியான சிந்தனைகள் இந்த வயசுல எல்லோருக்கும் வரது சகஜம். உலகத்திலேயே தன் காதல்தான் புனிதமானது; தன் காதலி தான்/ காதலன்தான் அழகானவன்னு காதலிக்கும் ஒவ்வொருத்தரும் நினைச்சுப்பாங்க. அதுவும் இயல்பு தான்! இப்படி எல்லாம் இந்த வயசுல எண்ணம் வரலைன்னா தான் உடம்புல ஏதோ கோளாறுன்னு அர்த்தம். அதனால, நான் உன்னை எந்த குறையும் சொல்லப் போவதில்லை. அந்த பொண்ணு 450 மார்க்குக்கு குறையாம வாங்கக்கூடிய ரிசல்ட் வந்ததும், நல்ல ஸ்கூல்ல அட்மிஷன் கிடைத்துனா பிளஸ் ஒன் படிக்க போயிடுவா. உன் நிலைமையை நினைச்சுப் பாரு. நீ சுமாரா படிக்கறவன். பாஸ் மார்க் வாங்கவே தடுமாறிக்கிட்டு இருக்க. இனிமேலும் அவளையே நினைச்சுக்கிட்டு படிப்புல கவனம் இல்லாம இருந்தியானா அப்புறம் என்ன ஆகும்னு உனக்கே தெரியும். அவ உன்ன திரும்பியும் பார்க்க மாட்டா”
நல்லா புரிஞ்சிக்க. வாழ்க்கைல ஒவ்வொரு பருவத்திலயும் ஒவ்வொருத்தர் மேல ஈர்ப்பு வந்துட்டேதான் இருக்கும். ஆனா அதெல்லாம் நிலையானது இல்ல. நல்ல நிலைமைக்கு வந்த பிறகு சரியான வயசுல உனக்கான ஒருத்தியை தேர்ந்தெடுக்கறதுதான் புத்திசாலித்தனம். அதுக்கு இன்னும் குறைந்த பட்சம் 10 வருஷம் ஆகும். அதுக்குள்ளே உன் வாழ்க்கைல எத்தனையோ மாற்றங்கள் வரும். இப்ப உனக்கு வந்திருக்கறதுக்கு பேர் காதல் இல்லை. 3 வருஷமா தொடர்ந்து அவளை பார்த்துக்கிட்டே இருந்தததால வந்திருக்கிற இனக்கவர்ச்சி. இதையெல்லாம் காதல்னு நினைச்சு குழப்பிக்காதே. இறுதித் தேர்வுக்கு இன்னும் 3 மாசம்தான் இருக்கு. இப்ப ஆரம்பிச்சு, இனிமே ஒழுங்கா படிச்சாலும் சுலபமா பாஸ் பண்ணிடலாம். நான் சொல்றது புரியுதா?”
சுவரில் ஒரு பல்லியின் சத்தம். சொத்! சொத்!
“பார்த்தியா... பல்லி கூட சொல்லிடுச்சி. மேம் சொல்றது கரெக்ட்டு! வா போவோம்” என்று அவனை இழுத்துக்கொண்டு கிளம்பினான் பாலு!
மே 31. பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தது.
ஜூன் 1. இதழ்களில் புன்னகையுடனும் கரங்களில் இனிப்புடனும் வந்தாள் ரேவதி. ஸ்வீட் பாக்ஸ்-ஐ நீட்டினாள். கொஞ்சம் எடுத்து வாயில் வைத்தேன், தவிர்க்க இயலாமல் நினைவில் பிரசாத்! இரு பாடங்களில் தோல்வியைத் தழுவியிருந்த பிரசாத்!
அதற்கு பிறகு பிரசாத்தை நான் பார்க்கவேயில்லை.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, செப்-19ம் தேதி. தேர்வறையில் அமர்ந்திருக்கிறேன். வகுப்பறை வாசலில் நிழலாடியது. திரும்பிப் பார்த்தால் ஆச்சர்யப்படுத்தும் விதமாக பிரசாத் சகமாணவன் ஒருவனுடன். குறும்புத்தனம் முற்றிலும் தொலைந்துபோய்!
“ரிசுல்ட் வந்துடுச்சே” என்றேன். பாஸ் ஆகிட்டியா என்று கேட்க தயக்கம்.
“வந்துடுச்சு மேம். பாசாயிட்டேன்; ஐடெண்டிபிகேஷன் மார்க்ஸ் குறிச்சுட்டு வரச்சொன்னாங்க” என்றான்.
குறித்துத் கொடுத்துவிட்டு கேட்டேன்... “எப்படியிருக்கே கண்ணா?”
“எப்படி சந்தோஷமாயிருக்க முடியும் மேம்?”
ஒற்றை கேள்வியில் பல பதில்களை கொடுத்துவிட்டு போனாலும், என் மனதில் ஆறாத வடுவாய் பதிந்து விட்டான் பிரசாத்!
(மாணவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)
கட்டுரையாளர் - தொடர்புக்கு vijiraja1975@gmail.com


கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...