முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி


இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின.
2g-tape

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில், "கலைஞர் டி.வி. முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் தமிழக உளவுத் துறை முன்னாள் ஏ.டி.ஜி.பி ஜாபர் சேட்டும் 2011 பிப்ரவரி 13-ந் தேதி டெலிபோனில் பேசியதன் பதிவு, தி.மு.க ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும் ஜாபர் சேட்டும் 2010 நவம்பர் 23ந் தேதி பேசியதன் பதிவு, அவர்கள் இருவரும் 2011 பிப்ரவரி 16ந் தேதி பேசிய மற்றொரு பதிவு, கலைஞரின் செயலாளர் சண்முக நாதனும் ஜாபர்சேட்டும் 2010 டிசம்பர் 31ந் தேதி பேசிய பதிவு ஆகிய நான்கு டேப்கள்தான் அதில் இருந்தன.

இவை முதன்முறையாக வெளியிடப்படும் தொலை பேசி உரையாடல்கள் என்ற பிரசாந்த் பூஷண், 2008-ல் ஆ.ராசா தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் நிறுவனத்துக்கு 2ஜி அனுமதி பெற்றுத் தந்ததில் ஆதாயம் அடைந்ததற்கான ஆதாரம் உள்ளது. கடன்வாங்கியதாக சரத்குமார் ரெட்டியால் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இது ஜாபர்சேட் மற்றும் சரத்குமாருக்கு இடையே நடந்த உரையாடல் பதிவில் தெரியவருகிறது.

நம்பகமான இடத்தில் இருந்து இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்றத் தில் ஒப்படைக்க உள்ளோம். இந்தப் பதிவுகள் அனைத்தும் ஜாபர் சேட்டின் செல்போனில் பதிவு செய்ததாக இருக்க லாம். இதன் மீது தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும். இந்த ஆதாரங்களை சி.பி.ஐ. அல்லது லோக்பால் போன்ற பொது அமைப்புகளும் விசாரிக்கலாம்' என்றார் அதிரடியாக. கலைஞர் டி.விக்கு வந்த 200 கோடி ரூபாய் பணம் தொடர்பான பேச்சுகள்தான் அவை.

"ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஹாட் நியூஸ் என்றபோதும், தமிழகத்தில் அதன் அலை பெரிதாக இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நிலைப்பதற்கு ஆதர வாக இருந்தவர் கலைஞர். அவருடைய மகள் கனி மொழியின் பேச்சு டேப் செய்யப்பட்டிருக்கிறது. கலைஞ ரின் செயலாளர் சண்முகநாதன் பேச்சு டேப் செய்யப் பட்டிருக்கிறது. அவரது பெயரிலான டி.வி.நிறுவனத்தின் நிர்வாகியுடன் பேசியதும் டேப் ஆகியுள்ளது. இத்தனை யும் மாநில உளவுத்துறையின் உயரதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டின் போனிலிருந்து டேப் செய்யப்பட்டிருக்க லாம்' என்று சொல்கிறார் பிரசாந்த் பூஷண்.

தமிழக உளவுத்துறைதான் மற்றவர்களின் பேச்சுகளை ஒட்டுக்கேட்பது வழக்கம். ஆனால், அதன் அதிகாரியாக இருந்தவரின் பேச்சே ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குமே பேரதிர்ச்சியைக் கொடுத் தது. அதிகாரிகளிடையே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது சிலநேரங்களில் அவர்களே தங்கள் செல்ஃபோனில் பதிவு செய்வதுண்டு. அப்படி டேப் செய்தார்களா? அல்லது மத்திய உளவுத்துறையான ஐ.பி. டேப் செய்ததா? சி.பி.ஐ. டேப் செய்ததா என அதிகாரிகள் மட்டத்தில் கேள்விகளுக்குப் பஞ்சமில்லை.

இந்தக் கேள்விகளை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் முன்வைத்தோம். நீண்ட தயக்கத்திற்குப் பிறகு பேசத் தொடங்கி, பல விவரங்களைத் தந்தனர்.

""2ஜி விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், 2010ஆம் ஆண்டு நவம்பர்  14-ஆம் நாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா ராஜினாமா செய்தார். அதன்பிறகு நடந்த பேச்சுவிவரங் கள்தான் டேப் செய்யப்பட்டுள்ளன. 2011 பிப்ரவரி 2ந் தேதி ஆ.ராசா சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். 2011 ஏப்ரல் 2ந் தேதி சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்த அடிப்படையில், போன் பேச்சுக்கள் டேப் செய்யப்பட்ட  விதத்தை ஆராய்ந்தபோது, சி.பி.ஐயின் தென்மண்டல அதிகாரிகள்தான் சென்னை ராஜாஜி பவன் அலுவலகத்தை மையமாகக்கொண்டு இந்த ஒட்டுக்கேட்பு பணியைச் செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்துள்ளது.

சி.பி.ஐ.யின் ஸ்பெஷல் டிவிஷனைச் சேர்ந்த அதிகாரிகள்தான் இந்த டேப் பணியைக் கையாண்டுள்ளனர். அப்போது சி.பி.ஐயின் தென்மண்டல ஜாயிண்ட் டைரக்டராக இருந்தவர் அசோக்குமார். மத்திய அரசின் சி.பி.ஐயிலிருந்து தமிழக அரசின் பணிக்கு மாற்றம் பெற்ற அசோக்குமார், தமிழக உளவுத்துறை டி.ஜி.பியாக தற்போது இருக்கிறார். அப்போது சி.பி.ஐ.யின் லஞ்ச கண்காணிப்பு பிரிவில் எஸ்.பி.யாக இருந்த முருகன், தற்போது ஜெ. ஆட்சியில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக இருக்கிறார். டேப் செய்ததில் பங்கெடுத்த மற்றொருவர் சி.பி.ஐ. ஸ்பெஷல் டிவிஷனில் எஸ்.பி.யாக இருந்த ராஜு. இவர் தற்போது ரிட்டையர்டாகிவிட்டார்.

லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தி இந்த ஒட்டுக்கேட்பு பதிவுகளை செய்திருக்கிறது சி.பி.ஐ. டீம். இதற்காக முருகன் உள்ளிட்டோரை அமெரிக்காவுக்கு அனுப்பிய அசோக்குமார் அங்கு சில மாதங்கள் பயிற்சி எடுக்கச் செய்திருக்கிறார் என்கிறது சி.பி.ஐ வட்டாரத் தகவல். அந்தப் பயிற்சியில் கிடைத்த அனுபவத்துடன் புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு டேப் செய்துள்ளனர்.

டேப் ஒட்டுக்கேட்பு பதிவு


https://app.box.com/s/a7tcldhe9swppdoko8xr


பலரது போன்களையும் ஒட்டு கேட்கும் மாநில உளவுத்துறையினருக்குத் தங்களது போன் கள் ஒட்டுக்கேட்பது பற்றி விவரம் தெரியாதா? அதைக் கண்டுபிடிக்கும் சாஃப்ட்வேரும் இன்னபிற கருவிகளும் தமிழக போலீசிடம் இல்லையா? என்றெல்லாம் அதிகாரிகள் மட்டத்திலேயே கேள்விகள் எழுகின்றன. தமிழக உளவுப் போலீசால் ஒருவரது போனை ஒட்டுக்கேட்கவும் முடியும். தங்களது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறதா இல்லையா என்பதைத் தகுந்த சாஃப்ட்வேர் மூலம் தெரிந்துகொள்ளவும் முடியும். இந்நிலை யில், தமிழக உளவுத்துறை அதிகாரியின் போன் உரையாடல்கள் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், தங்களுடைய போன் ஒட்டுக்கேட்கப் படவில்லை என உறுதி செய்துகொள்ள  உளவுத்துறை பயன்படுத்திய சாஃப்ட் வேரும் இன்னபிற கருவிகளும் செயலிழந்துவிட்டனவா எனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது. 

இதுபற்றி நம்மிடம் விவரித்த சில உயரதிகாரிகள், ""ஒட்டுக் கேட்பது தொடர்பாகவும் ஒட்டுக் கேட்கப்படுகிறதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காகவும் மாநில அரசின் உளவுத்துறை சிலவகை சாஃப்ட்வேர்களையும் அது சார்ந்த கருவிகளையும் மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு தனது உள்துறை மூலம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேல் நிலையிலுள்ள நவீன கருவிகளை மாநில அரசு வாங்க முடியாது. மத்திய அரசிற்குத் தெரியாமல் வாங்கிப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் சர்வர் எளிதாகக் காட்டிக் கொடுத்து விடும். இதுதான், மாநில உளவுத்துறையின் நிலை. கட்டுப்பாடு தன் கையில் இருக்கவேண்டும் என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. சி.பி.ஐ அதிகாரிகள் டீம் அமெரிக்காவுக்கு சென்று பயிற்சி எடுத்துத் திரும்பியபிறகு, இஸ்ரேல் நாட்டிலிருந்து நவீன ஒட்டுக்கேட்பு கருவிகளை மத்திய அரசு வாங்கிப் பயன்படுத்தியது.

இந்தக் கருவிகள், மாநில அரசுகள் தம் வசம் வைத்துள்ள கருவிகளைவிட மேம்பட்டவை. ஒரு போன் ஒட்டுக்கேட்கப்படுகிறதா இல்லையா என்பதைக் கண்டறிய மாநில உளவுத்துறை பயன்படுத்தும் சாஃப்ட்வேரை ஏமாற்றிவிட்டு, அந்த போன்களை ஒட்டுக்கேட்கும் தன்மை வாய்ந்தவை. இதைத்தான் சி.பி.ஐ பயன்படுத்தியுள்ளது. அதனால்தான், தமிழக உளவுத்துறையினர் தங்களது போன் ஒட்டுக்கேட்கப்படவில்லை என்ற நம்பிக்கை யிலும் தைரியத்திலும் பேசியுள்ளனர். அனுமதி பெற்று டேப் செய்யப்படும் பேச்சுகளைத்தான் வழக்குகளுக்குப் பயன்படுத்த முடியும். அதனால், சி.பி.ஐ. இதுகுறித்து மத்திய உள்துறையிடம் உரிய அனுமதி பெற்றே இந்த போன் பேச்சுகளைப் பதிவு செய்துள்ளது'' என்கிறார்கள் விரிவாகவே.
இதுபற்றி நாம் மேலும் விசாரித்தபோது, மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. ஜாபர்சேட்டின் போன் பேச்சுக்களைப் பதிவு செய்ய வேண்டும் என 2010 அக்டோபர் 8-ந்தேதியன்று சி.பி.ஐ. தரப்பு மத்திய அரசில் இதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ அவர்களிடம் உரிய அனுமதி பெற்றுள்ளது. 

இத்தகைய அனுமதிகள் குறிப்பிட்ட சில காலம் வரை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  ஆ.ராசா கைது செய்யப்பட்ட பிறகு, அவருடன் தொடர்புபடுத்தப்பட்ட க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தின் சாதிக்பாட்சா 2011 மார்ச் 16 அன்று தற்கொலை  செய்து கொண்டார். அப்போது இந்த மரணம் சர்ச்சையாக்கப்படவே, 2011 மார்ச் 28-ல் இந்த மரணம் தொடர்பான விசாரணைக் காக ஜாபர்சேட்டின் போன் டேப் செய்யப்பட வேண்டும் என மீண்டும் அனுமதி பெற்றிருக்கிறது சி.பி.ஐ. தரப்பு.

அரசியல்வாதியாகி விட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வெளியிட்ட நான்கு பேச்சுகளும் சி.பி.ஐயால் டேப் செய்யப்பட்டது. 2010 நவம்பர், டிசம்பர், 2011 பிப்ரவரி ஆகிய காலகட்டங் களில்தான். இதன்பிறகே 2011 ஏப்ரலில் 2ஜி வழக்கு தொடர்பான முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பேச்சுகள் குறித்து குற்றப்பத்திரிகையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தப் பேச்சுகளிலிருந்து வலுவான ஆதாரங் கள் எதுவும் இல்லை என்பதால் குறிப்பிடப்பட வில்லையா? என்பது குறித்து அதிகாரிகள் வட்டா ரத்தில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

வெளியிடப்பட்ட 4 பேச்சுக்களுமே போன் டேப் செய்ய சி.பி.ஐ. பயன்படுத்தும் கருவியிலிருந்தே பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல மொத்தம் 18 பதிவுகள் பதிவிறக்கப் பட்டிருக்கின்றன. இந்த பதிவிறக்கங்கள் செல்ஃபோனிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது போல் ஸ்பெஷல் சாஃப்ட்வேர்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளன. அதில் சில பதிவுகளை சுப்ரமணியசாமி வெளியிட இருப்பதுடன், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இதைக் கொண்டு செல்ல இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டின் நேரடிப் பார்வையில் நடைபெறும் 2ஜி வழக்கு தொடர்பான ஆவணங்கள், மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் எப்படி வெளியாயின என்பதற்கும், ஏன் வெளியாயின என்பதற்கும் பல்வேறு அரசியல் காரணங்கள் டெல்லியிலும், சென்னையிலும் அலசப்படுகின்றன.

கூட்டணிக்கு மீண்டும் வர மறுக்கும் தி.மு.க.வை கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுபோல இப்போதும் கொண்டுவருவதற்காக, சி.பி.ஐ.யை காங்கிரஸ் தலைமை பயன்படுத்துகிறதா? போன் ஒட்டுக்கேட்பு நடந்த போது சி.பி.ஐ. டீமில் இருந்த முக்கிய அதிகாரிகள் தற்போது தமிழக அரசுப் பணியில் இருப்ப தால் மாநில ஆளுங்கட்சி யான அ.தி.மு.க வரும் எம்.பி. தேர்தலில் தி.மு.கவுக்கு எதி ரான பிரச்சார ஆயுதமாக இத னைக் கையிலெடுக் கும் நோக்கத்தில் இதன் பின்னணி  யில் செயல்பட் டுள்ளதா? சி.பி.ஐயில் உள்ள சில அதிகாரிகளே தங்களது சொந்த லாபங்களுக்காக இதனை வெளியிட உதவியிருக்கிறார் களா? என்பன உள்ளிட்ட கேள்விகள் வலம் வரும் நிலையில், தி.மு.க தலைமைக்கு இந்த டேப் விவகாரம் கடும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரும் கனிமொழியின் மனு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆ.ராசாவின் வாக்குமூலங்கள், அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்ட தயாளுஅம்மா மீதான விசாரணை பார்வை இனி மாறுமா என்ற கேள்வி, உளவுத்துறை முன்னாள் ஏ.டி.ஜி.பி ஜாபர்சேட் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்பட பல அம்சங்கள், தற்போது வெளியான ஒட்டுக்கேட்பு பேச்சுகளால் முக்கியத்துவம்  பெற்றுள்ளன. இவை குறித்து, சுப்ரீம் கோர்ட் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதால் இந்திய அரசியலின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது சுப்ரீம் கோர்ட்டை நோக்கித் திரும்பியுள்ளன. 


போலியானது...!

ஒட்டுக்கேட்பு தொடர்பான பின்னணி களைஅதிகாரிகள் தரப்பில் ஒரு மாதிரியாக விளக்கியுள்ள நிலையில், இந்த டேப் விவகாரமே முற்றிலும் பொய்யானது என நிருபர்களுக்கு பதிலளித்தார் கலைஞர். இது போலியானது என கலைஞர் டி.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எம்.பி.தேர்தலில் தி.மு.க.வின் பிழைப்பை கெடுக்க எதிரிகள் நடத்தும் சதி செயல் என துரைமுருகனும், இதனை பிரசாந்த் பூஷண் கோர்ட்டில் சமர்ப்பிக்காமல் ஊடகங்களிடம் கொண்டு சென்றது உள்நோக்கம் கொண்டது என்று டி.ஆர்.பாலுவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....