முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி


இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின.
2g-tape

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில், "கலைஞர் டி.வி. முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் தமிழக உளவுத் துறை முன்னாள் ஏ.டி.ஜி.பி ஜாபர் சேட்டும் 2011 பிப்ரவரி 13-ந் தேதி டெலிபோனில் பேசியதன் பதிவு, தி.மு.க ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும் ஜாபர் சேட்டும் 2010 நவம்பர் 23ந் தேதி பேசியதன் பதிவு, அவர்கள் இருவரும் 2011 பிப்ரவரி 16ந் தேதி பேசிய மற்றொரு பதிவு, கலைஞரின் செயலாளர் சண்முக நாதனும் ஜாபர்சேட்டும் 2010 டிசம்பர் 31ந் தேதி பேசிய பதிவு ஆகிய நான்கு டேப்கள்தான் அதில் இருந்தன.

இவை முதன்முறையாக வெளியிடப்படும் தொலை பேசி உரையாடல்கள் என்ற பிரசாந்த் பூஷண், 2008-ல் ஆ.ராசா தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் நிறுவனத்துக்கு 2ஜி அனுமதி பெற்றுத் தந்ததில் ஆதாயம் அடைந்ததற்கான ஆதாரம் உள்ளது. கடன்வாங்கியதாக சரத்குமார் ரெட்டியால் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இது ஜாபர்சேட் மற்றும் சரத்குமாருக்கு இடையே நடந்த உரையாடல் பதிவில் தெரியவருகிறது.

நம்பகமான இடத்தில் இருந்து இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்றத் தில் ஒப்படைக்க உள்ளோம். இந்தப் பதிவுகள் அனைத்தும் ஜாபர் சேட்டின் செல்போனில் பதிவு செய்ததாக இருக்க லாம். இதன் மீது தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும். இந்த ஆதாரங்களை சி.பி.ஐ. அல்லது லோக்பால் போன்ற பொது அமைப்புகளும் விசாரிக்கலாம்' என்றார் அதிரடியாக. கலைஞர் டி.விக்கு வந்த 200 கோடி ரூபாய் பணம் தொடர்பான பேச்சுகள்தான் அவை.

"ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஹாட் நியூஸ் என்றபோதும், தமிழகத்தில் அதன் அலை பெரிதாக இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நிலைப்பதற்கு ஆதர வாக இருந்தவர் கலைஞர். அவருடைய மகள் கனி மொழியின் பேச்சு டேப் செய்யப்பட்டிருக்கிறது. கலைஞ ரின் செயலாளர் சண்முகநாதன் பேச்சு டேப் செய்யப் பட்டிருக்கிறது. அவரது பெயரிலான டி.வி.நிறுவனத்தின் நிர்வாகியுடன் பேசியதும் டேப் ஆகியுள்ளது. இத்தனை யும் மாநில உளவுத்துறையின் உயரதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டின் போனிலிருந்து டேப் செய்யப்பட்டிருக்க லாம்' என்று சொல்கிறார் பிரசாந்த் பூஷண்.

தமிழக உளவுத்துறைதான் மற்றவர்களின் பேச்சுகளை ஒட்டுக்கேட்பது வழக்கம். ஆனால், அதன் அதிகாரியாக இருந்தவரின் பேச்சே ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குமே பேரதிர்ச்சியைக் கொடுத் தது. அதிகாரிகளிடையே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது சிலநேரங்களில் அவர்களே தங்கள் செல்ஃபோனில் பதிவு செய்வதுண்டு. அப்படி டேப் செய்தார்களா? அல்லது மத்திய உளவுத்துறையான ஐ.பி. டேப் செய்ததா? சி.பி.ஐ. டேப் செய்ததா என அதிகாரிகள் மட்டத்தில் கேள்விகளுக்குப் பஞ்சமில்லை.

இந்தக் கேள்விகளை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் முன்வைத்தோம். நீண்ட தயக்கத்திற்குப் பிறகு பேசத் தொடங்கி, பல விவரங்களைத் தந்தனர்.

""2ஜி விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், 2010ஆம் ஆண்டு நவம்பர்  14-ஆம் நாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா ராஜினாமா செய்தார். அதன்பிறகு நடந்த பேச்சுவிவரங் கள்தான் டேப் செய்யப்பட்டுள்ளன. 2011 பிப்ரவரி 2ந் தேதி ஆ.ராசா சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். 2011 ஏப்ரல் 2ந் தேதி சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்த அடிப்படையில், போன் பேச்சுக்கள் டேப் செய்யப்பட்ட  விதத்தை ஆராய்ந்தபோது, சி.பி.ஐயின் தென்மண்டல அதிகாரிகள்தான் சென்னை ராஜாஜி பவன் அலுவலகத்தை மையமாகக்கொண்டு இந்த ஒட்டுக்கேட்பு பணியைச் செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்துள்ளது.

சி.பி.ஐ.யின் ஸ்பெஷல் டிவிஷனைச் சேர்ந்த அதிகாரிகள்தான் இந்த டேப் பணியைக் கையாண்டுள்ளனர். அப்போது சி.பி.ஐயின் தென்மண்டல ஜாயிண்ட் டைரக்டராக இருந்தவர் அசோக்குமார். மத்திய அரசின் சி.பி.ஐயிலிருந்து தமிழக அரசின் பணிக்கு மாற்றம் பெற்ற அசோக்குமார், தமிழக உளவுத்துறை டி.ஜி.பியாக தற்போது இருக்கிறார். அப்போது சி.பி.ஐ.யின் லஞ்ச கண்காணிப்பு பிரிவில் எஸ்.பி.யாக இருந்த முருகன், தற்போது ஜெ. ஆட்சியில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக இருக்கிறார். டேப் செய்ததில் பங்கெடுத்த மற்றொருவர் சி.பி.ஐ. ஸ்பெஷல் டிவிஷனில் எஸ்.பி.யாக இருந்த ராஜு. இவர் தற்போது ரிட்டையர்டாகிவிட்டார்.

லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தி இந்த ஒட்டுக்கேட்பு பதிவுகளை செய்திருக்கிறது சி.பி.ஐ. டீம். இதற்காக முருகன் உள்ளிட்டோரை அமெரிக்காவுக்கு அனுப்பிய அசோக்குமார் அங்கு சில மாதங்கள் பயிற்சி எடுக்கச் செய்திருக்கிறார் என்கிறது சி.பி.ஐ வட்டாரத் தகவல். அந்தப் பயிற்சியில் கிடைத்த அனுபவத்துடன் புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு டேப் செய்துள்ளனர்.

டேப் ஒட்டுக்கேட்பு பதிவு


https://app.box.com/s/a7tcldhe9swppdoko8xr


பலரது போன்களையும் ஒட்டு கேட்கும் மாநில உளவுத்துறையினருக்குத் தங்களது போன் கள் ஒட்டுக்கேட்பது பற்றி விவரம் தெரியாதா? அதைக் கண்டுபிடிக்கும் சாஃப்ட்வேரும் இன்னபிற கருவிகளும் தமிழக போலீசிடம் இல்லையா? என்றெல்லாம் அதிகாரிகள் மட்டத்திலேயே கேள்விகள் எழுகின்றன. தமிழக உளவுப் போலீசால் ஒருவரது போனை ஒட்டுக்கேட்கவும் முடியும். தங்களது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறதா இல்லையா என்பதைத் தகுந்த சாஃப்ட்வேர் மூலம் தெரிந்துகொள்ளவும் முடியும். இந்நிலை யில், தமிழக உளவுத்துறை அதிகாரியின் போன் உரையாடல்கள் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், தங்களுடைய போன் ஒட்டுக்கேட்கப் படவில்லை என உறுதி செய்துகொள்ள  உளவுத்துறை பயன்படுத்திய சாஃப்ட் வேரும் இன்னபிற கருவிகளும் செயலிழந்துவிட்டனவா எனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது. 

இதுபற்றி நம்மிடம் விவரித்த சில உயரதிகாரிகள், ""ஒட்டுக் கேட்பது தொடர்பாகவும் ஒட்டுக் கேட்கப்படுகிறதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காகவும் மாநில அரசின் உளவுத்துறை சிலவகை சாஃப்ட்வேர்களையும் அது சார்ந்த கருவிகளையும் மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு தனது உள்துறை மூலம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேல் நிலையிலுள்ள நவீன கருவிகளை மாநில அரசு வாங்க முடியாது. மத்திய அரசிற்குத் தெரியாமல் வாங்கிப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் சர்வர் எளிதாகக் காட்டிக் கொடுத்து விடும். இதுதான், மாநில உளவுத்துறையின் நிலை. கட்டுப்பாடு தன் கையில் இருக்கவேண்டும் என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. சி.பி.ஐ அதிகாரிகள் டீம் அமெரிக்காவுக்கு சென்று பயிற்சி எடுத்துத் திரும்பியபிறகு, இஸ்ரேல் நாட்டிலிருந்து நவீன ஒட்டுக்கேட்பு கருவிகளை மத்திய அரசு வாங்கிப் பயன்படுத்தியது.

இந்தக் கருவிகள், மாநில அரசுகள் தம் வசம் வைத்துள்ள கருவிகளைவிட மேம்பட்டவை. ஒரு போன் ஒட்டுக்கேட்கப்படுகிறதா இல்லையா என்பதைக் கண்டறிய மாநில உளவுத்துறை பயன்படுத்தும் சாஃப்ட்வேரை ஏமாற்றிவிட்டு, அந்த போன்களை ஒட்டுக்கேட்கும் தன்மை வாய்ந்தவை. இதைத்தான் சி.பி.ஐ பயன்படுத்தியுள்ளது. அதனால்தான், தமிழக உளவுத்துறையினர் தங்களது போன் ஒட்டுக்கேட்கப்படவில்லை என்ற நம்பிக்கை யிலும் தைரியத்திலும் பேசியுள்ளனர். அனுமதி பெற்று டேப் செய்யப்படும் பேச்சுகளைத்தான் வழக்குகளுக்குப் பயன்படுத்த முடியும். அதனால், சி.பி.ஐ. இதுகுறித்து மத்திய உள்துறையிடம் உரிய அனுமதி பெற்றே இந்த போன் பேச்சுகளைப் பதிவு செய்துள்ளது'' என்கிறார்கள் விரிவாகவே.
இதுபற்றி நாம் மேலும் விசாரித்தபோது, மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. ஜாபர்சேட்டின் போன் பேச்சுக்களைப் பதிவு செய்ய வேண்டும் என 2010 அக்டோபர் 8-ந்தேதியன்று சி.பி.ஐ. தரப்பு மத்திய அரசில் இதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ அவர்களிடம் உரிய அனுமதி பெற்றுள்ளது. 

இத்தகைய அனுமதிகள் குறிப்பிட்ட சில காலம் வரை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  ஆ.ராசா கைது செய்யப்பட்ட பிறகு, அவருடன் தொடர்புபடுத்தப்பட்ட க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தின் சாதிக்பாட்சா 2011 மார்ச் 16 அன்று தற்கொலை  செய்து கொண்டார். அப்போது இந்த மரணம் சர்ச்சையாக்கப்படவே, 2011 மார்ச் 28-ல் இந்த மரணம் தொடர்பான விசாரணைக் காக ஜாபர்சேட்டின் போன் டேப் செய்யப்பட வேண்டும் என மீண்டும் அனுமதி பெற்றிருக்கிறது சி.பி.ஐ. தரப்பு.

அரசியல்வாதியாகி விட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வெளியிட்ட நான்கு பேச்சுகளும் சி.பி.ஐயால் டேப் செய்யப்பட்டது. 2010 நவம்பர், டிசம்பர், 2011 பிப்ரவரி ஆகிய காலகட்டங் களில்தான். இதன்பிறகே 2011 ஏப்ரலில் 2ஜி வழக்கு தொடர்பான முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பேச்சுகள் குறித்து குற்றப்பத்திரிகையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தப் பேச்சுகளிலிருந்து வலுவான ஆதாரங் கள் எதுவும் இல்லை என்பதால் குறிப்பிடப்பட வில்லையா? என்பது குறித்து அதிகாரிகள் வட்டா ரத்தில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

வெளியிடப்பட்ட 4 பேச்சுக்களுமே போன் டேப் செய்ய சி.பி.ஐ. பயன்படுத்தும் கருவியிலிருந்தே பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல மொத்தம் 18 பதிவுகள் பதிவிறக்கப் பட்டிருக்கின்றன. இந்த பதிவிறக்கங்கள் செல்ஃபோனிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது போல் ஸ்பெஷல் சாஃப்ட்வேர்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளன. அதில் சில பதிவுகளை சுப்ரமணியசாமி வெளியிட இருப்பதுடன், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இதைக் கொண்டு செல்ல இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டின் நேரடிப் பார்வையில் நடைபெறும் 2ஜி வழக்கு தொடர்பான ஆவணங்கள், மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் எப்படி வெளியாயின என்பதற்கும், ஏன் வெளியாயின என்பதற்கும் பல்வேறு அரசியல் காரணங்கள் டெல்லியிலும், சென்னையிலும் அலசப்படுகின்றன.

கூட்டணிக்கு மீண்டும் வர மறுக்கும் தி.மு.க.வை கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுபோல இப்போதும் கொண்டுவருவதற்காக, சி.பி.ஐ.யை காங்கிரஸ் தலைமை பயன்படுத்துகிறதா? போன் ஒட்டுக்கேட்பு நடந்த போது சி.பி.ஐ. டீமில் இருந்த முக்கிய அதிகாரிகள் தற்போது தமிழக அரசுப் பணியில் இருப்ப தால் மாநில ஆளுங்கட்சி யான அ.தி.மு.க வரும் எம்.பி. தேர்தலில் தி.மு.கவுக்கு எதி ரான பிரச்சார ஆயுதமாக இத னைக் கையிலெடுக் கும் நோக்கத்தில் இதன் பின்னணி  யில் செயல்பட் டுள்ளதா? சி.பி.ஐயில் உள்ள சில அதிகாரிகளே தங்களது சொந்த லாபங்களுக்காக இதனை வெளியிட உதவியிருக்கிறார் களா? என்பன உள்ளிட்ட கேள்விகள் வலம் வரும் நிலையில், தி.மு.க தலைமைக்கு இந்த டேப் விவகாரம் கடும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரும் கனிமொழியின் மனு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆ.ராசாவின் வாக்குமூலங்கள், அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்ட தயாளுஅம்மா மீதான விசாரணை பார்வை இனி மாறுமா என்ற கேள்வி, உளவுத்துறை முன்னாள் ஏ.டி.ஜி.பி ஜாபர்சேட் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்பட பல அம்சங்கள், தற்போது வெளியான ஒட்டுக்கேட்பு பேச்சுகளால் முக்கியத்துவம்  பெற்றுள்ளன. இவை குறித்து, சுப்ரீம் கோர்ட் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதால் இந்திய அரசியலின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது சுப்ரீம் கோர்ட்டை நோக்கித் திரும்பியுள்ளன. 


போலியானது...!

ஒட்டுக்கேட்பு தொடர்பான பின்னணி களைஅதிகாரிகள் தரப்பில் ஒரு மாதிரியாக விளக்கியுள்ள நிலையில், இந்த டேப் விவகாரமே முற்றிலும் பொய்யானது என நிருபர்களுக்கு பதிலளித்தார் கலைஞர். இது போலியானது என கலைஞர் டி.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எம்.பி.தேர்தலில் தி.மு.க.வின் பிழைப்பை கெடுக்க எதிரிகள் நடத்தும் சதி செயல் என துரைமுருகனும், இதனை பிரசாந்த் பூஷண் கோர்ட்டில் சமர்ப்பிக்காமல் ஊடகங்களிடம் கொண்டு சென்றது உள்நோக்கம் கொண்டது என்று டி.ஆர்.பாலுவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...