முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரியல் எஸ்ட்டேட் என்னும் கொலைகாரர்கள்..


இக் கொடுமை தொடரும்

முகலிவாக்கம் மீட்புப் பணி
கோடைக்காலம் முடிந்து வரும் முதல் மழை எப்போதும் மகிழ்ச்சியினை அளிக்கும். வெயிலின் கொடுமையை இரண்டு மூன்று மாதங்களுக்கு அனுபவித்து வந்தவர்கள், அந்த முதல் மழையில் தாங்களாகவே நனைந்து குதூகலிப்பார்கள்.
ஆனால், இந்த ஆண்டு வந்த முதல் மழை பெருந்துயரை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடத்தில் மஞ்சள் நிற ஹெல்மெட் அணிந்து வட இந்தியர் பலர் பணியாற்றி வருவதை பார்த்திருப்போம். மாலை வேலைகளில் அவர்களின் பேருந்துகளுக்காக அவர்கள் காத்திருப்பதையும் பார்த்திருப்போம்.
வட மற்றும் கிழக்கு இந்தியாவில் இருக்கும் கடுமையான வறுமை அவர்களை தமிழகம் போன்ற மாநிலங்களை நோக்கித் தள்ளுகிறது. கட்டுமானப் பணிகளுக்கு தமிழகத்தில் போதுமான கூலியாட்கள் கிடைக்காத காரணத்தாலும், மாநிலம் மாறி வந்துள்ளோரை கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போல பயன்படுத்தலாம் என்ற காரணத்தாலும் பெரும்பாலான கட்டிட ஒப்பந்தக்காரர்கள் அவ்வப்பாவி மக்களை இடைத்தரகர்கள் மூலம் பெருமளவில் தருவிக்கின்றனர். அவர்களும் பெட்டி படுக்கையோடு வந்து கட்டுமானம் நடக்கும் இடத்திலேயே தகர ஷெட்டுகளில் தங்கி பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கென்று எவ்விதமான உரிமைகளும் கிடையாது. இவர்களை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்திற்கு அவர்கள்தான் பலியாகின்றனர். தொடர்ந்து கட்டிட விபத்துக்களில் அவர்கள் உயிரை இழக்கிறார்கள் அல்லது படுகாயமடைகிறார்கள். ஆனால் அவர்களுக்காகக் குரல்கொடுக்க மிகச் சில ஆர்வலர் அமைப்புக்களே.
அவ்வாறு வட, கிழக்கு இந்தியா, ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 61 பேர் இப்போது உயிரிழந்திருக்கின்றனர்.  முகலிவாக்கம் ப்ரைம் சிருஷ்டி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரை இழந்தவர்களுக்கு 7 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ள ஜெயலலிதா, இந்த விபத்து குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளார்.
11144PJune---29---B-Th
விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடும் முதல்வர்
இந்த விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தாலும், ஆணையம் அமைப்பதற்கு முன்னதாகவே சம்பவ இடத்தை பார்வையிட்ட ஜெயலலிதா, சிஎம்டிஏ தரப்பில் தவறு ஏதும் நடக்கவில்லை என்று நற்சான்றிதழ் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சிஎம்டிஏ தரப்பில் தவறு நடக்கவில்லை என்று முதலமைச்சரே குறிப்பிட்ட பிறகு, விசாரணை ஆணையம் எப்படி அதிகாரிகளை குற்றம் சொல்லும் ?
சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் கட்டுக்கடங்காமல் வளர்வற்கு முன்பிருந்தே அரசியல் மற்றும் அதிகாரிகளின் கூட்டணியோடு, விதிகளை காற்றில் பறக்க விடுவது நடந்து வந்திருக்கிறது. 1988ஆம் ஆண்டு, எம்ஜிஆர் மறைவிற்குப் பின் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலிலிருந்த கட்டத்தில், தமிழக அரசு ஒரே நாளில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட 73 கட்டிடங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கி உத்திரவிட்டது  அந்த விதிவிலக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே  தமிழக அரசு நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சி சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருகிறது. அதன்படி விதிகளை மீறிக் கட்டிய கட்டிடங்களின் உரிமையாளர்கள் 20 ஆயிரம் அபராதத் தொகையாக செலுத்தி, தங்கள் கட்டிடங்களை முறைப்படிக் கட்டப்பட்டதாக பதிவுசெய்துகொண்டுவிடலாம் (regularization).
அந்த சட்டத் திருத்தமும் உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கப்படுகிறது. பொதுநலனைக் கருத்தில் கொண்டு முறைப்படுத்தலை ஒரே ஒரு முறைமட்டும் அனுமதிப்பதாக ஆகஸ்ட் 18, 2000த்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதே நேரம் தனது கடும் அதிருப்தியினையும் வெளிப்படுத்தியது:
Mere reading of this reveals administrative failure, regulatory inefficiency and laxity on the part of the authorities concerned being conceded which has led to the result, that half of the city buildings are unauthorised, violating the town planning legislation and with staring eyes the Government feels helpless to let it pass; as the period of limitation has gone, so no action could be taken. This mess is the creation out of the inefficiency, callousness and the failure of the statutory functionaries to perform their obligation under the Act. Because of the largeness of the illegalities it has placed the Government in a situation of helplessness as knowing the illegalities, which are writ large, no administrative action of demolition of such a large number of cases is feasible.
மேலோட்டமாக இதைப் படிக்கையிலேயே, நிர்வாகச் சீர்கேடு, முறைப்படுத்துவதில் பொறுப்பற்ற தன்மை, அதிகாரிகளின் கவனக்குறைவு ஆகிய அனைத்தும் சேர்ந்து, நகரில் பாதிக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதும், அரசு கையாலாகாத்தனமாக அதை வேடிக்கை பார்ப்பதும், அதற்கு உரிய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டும் அது காலாவதியாகியுள்ளதும் தெரியவருகிறது. இந்த நிலை, கையாலாகாத அதிகாரிகள், அலட்சியப் போக்கு, மற்றும் அரசு நிர்வாகத்தின் செயலற்றதனத்தால் உருவாகியுள்ளது. இத்தகைய அணுகுமுறையின் காரணமாகவே விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள இத்தனை கட்டிடங்களையும் இடிக்க இயலாமல், அரசு செயலற்று இருக்கிறது.
மேலும் அது குறிப்பிட்டது: We may shortly refer to the possible consequences of the grant of such exemption under Section 113-A by collecting regularisation fees. Regularisation in many cases, for the violation of front setback, will not make it easily feasible for the corporation to widen the abutting road in future and bring the incumbent closer to the danger of the road. The waiver of requirements of side setback will deprive adjacent buildings and their occupants of light and air and also make it impossible for a fire engine to be used to fight a fire in a high-rise building. The violation of floor space index will result in undue strain on the civil amenities such as water, electricity, sewage collection and disposal.
விதிகளை மீறியதற்கு அபராதம் பெற்றுக் கொண்டு, விதிவிலக்கு அளிப்பதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் பார்ப்போம். இப்படி விதிவிலக்கு அளிப்பதால், மாநகராட்சியால் கட்டிடங்களை ஒட்டி அமைந்துள்ள சாலைகளை விரிவுபடுத்த முடியாமல், கட்டிடங்கள் சாலையையே ஆக்கிரமிக்கும் அளவு அருகாமையில் வரக்கூடிய ஆபத்து நேரலாம். மேலும் கட்டிடங்களுக்கு காற்று போகாமலும், வெளிச்சம் கிடைக்காமலும், தீ விபத்து நேர்ந்தால், தீயணைப்பு வாகனம் கூட உள்ளே செல்ல முடியாத நிலையையும் ஏற்படுத்தும். நிலத்துக்கும் கட்டிடத்துக்கும் இடையே உள்ள விகிதாச்சார அளவு சரியான முறையில் இல்லாவிட்டால், மின்சாரம், தண்ணீர், கழிவுநீர் அகற்றல் போன்ற சேவைகளை வழங்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.
The waiver of requirements regarding fire staircase and other fire prevention and fire-fighting measures would seriously endanger the occupants resulting in the building becoming a veritable death trap. The waiver of car parking and abutting road width requirements would inevitably lead to congestion on public roads causing severe inconvenience to the public at large. Such grant of exemption and the regularisation is likely to spell ruin for any city as it affects the lives, health, safety and convenience of all its citizens.
இவ்வாறு விதிகள் புறக்கணிக்கப்படுவதன் விளைவாக, தீ விபத்து ஏற்படுகையில் அவசர வெளியேற்ற படிக்கட்டுகள் மற்றும் தீ தடுப்பு ஏற்பாடுகள் ஆகியவை முறையாக உருவாக்கப்படாமல்,  கட்டிடமே ஒரு எலிப்பொறியாக மாறிவிடும்.  வாகன நிறுத்தத்துக்கு போதுமான இடம் ஒதுக்காவிட்டால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில், அருகாமையில் உள்ள சாலைகளில் கடும் நெருக்கடி ஏற்படும்.  இது போன்ற விதிவிலக்குகள், எந்த நகரமாக இருந்தாலும், அந்நகரத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, வசதி போன்றவற்றை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும்.
01
உச்ச நீதிமன்றம்
Unless checked at the nascent stage is made, for which it is for the State to consider what administrative scheme is to be evolved, it may be difficult to control this progressive illegality. If such illegalities stay for long, waves of political, humanitarian, regional and other sympathies develop. Then to break it may become difficult. Thus this inflow has to be checked at the very root. The State must act effectively not to permit such situation to develop in the wider interest of the public at large.
இதுபோன்ற விதிமீறல்களை தொடக்கத்திலேயே தடுக்காவிட்டால், இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்காவிட்டால், இந்த சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்கவே இயலாமல் போய் விடும். அரசியல், மனிதாபிமானம், பிராந்தியம் என்று பல்வேறு அம்சங்கள் தடுப்பு நடவடிக்கைக்குக் குறுக்கே நிற்கும். ஆகையால் இந்த விதிமீறல்களை வேரோடு களைய வேண்டும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு இது போன்ற சூழல் எழாமல் தடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் இவ்வளவு கடுமையாக இடித்துரைத்தும், அத்தீர்ப்புக்குப் பின்னரும் விதி முறைகளை மீறிய கட்டிடங்களை இடிப்பதற்கோ, விதிமீறல்களை தடுப்பதற்கோ எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என்றும், மீண்டும் மீண்டும் விதி மீறிய கட்டிடங்கள் தொடர்ந்து முறைப்படுத்தப்படுகின்றன என்று புகார் கூறி, மீண்டும் ஒரு பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
அவ்வாறு முறைப்படுத்த வகை செய்த தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி சந்துரு அடங்கிய அமர்வு, இவ்வாறு தீர்ப்பில் கூறியது:
The affidavits filed by the authorities, documents and other materials brought on record disclose a very sorry and sordid state of affairs prevailing in the matter of illegal and unauthorised constructions in the City of Chennai. It is seen that the builders have violated with impunity the sanctioned building plans, and the Rules relating to FSI, fire safety and parking facilities to the prejudice of the planned development of the city and at the peril of the occupants of the premises constructed or of the inhabitants of the city at large.
அரசு அதிகாரிகள் தாக்கல் செய்த மனுக்கள் மற்றும் ஆவணங்களைப் பார்வையிடுகையில், சட்டவிரோதமான கட்டுமானங்களால் சென்னை மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பது தெரிய வருகிறது. கட்டிடம் கட்டுபவர்கள், நிலம் மற்றும் கட்டிடத்துக்கான அளவு, தீ விபத்து தொடர்பான பாதுகாப்பு, வாகன நிறுத்த வசதி என ஒவ்வொரு விதியும் சகட்டுமேனிக்கு மீறப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இக்கட்டிங்களில் குடியிருப்பவர்களும், இதர மக்களும் பெரும் ஆபத்தில் இருக்கிறார்கள்.
Such wayward growth in illegal constructions has posed a serious threat to ecology and environment and affected water supply, sewerage and traffic movement facilities in the city. The violations of regulatory rules on such massive scale can result in development plan becoming merely a scrap of paper. On the one hand, various laws are enacted, master plans are prepared by expert planners, provision is made in the regulations also to tackle the problem of unauthorized constructions and misusers, and on the other hand, such illegal activities go on unabated openly under the gaze of everyone, without having respect for the law and other citizens.
25FL_AJIT_PRAKASH__1321719m
முன்னாள் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி,ஷா
542686_316040475184450_1197062580_n
முன்னாள் நீதிபதி சந்துரு
இது போன்ற சட்டவிரோதமான கட்டிடங்கள், சுற்றுச்சூழல், குடிநீர் வழங்கல், கழிவு நீர் அகற்றல் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு பெரும் கேடாக அமைந்துள்ளது. இது போன்ற மோசமான விதி மீறல்கள், விதிகள் மற்றும் திட்டங்களை குப்பைக் காகிதங்களாக்கி உள்து. ஒரு புறம் பல்வேறு திட்டங்கள் இயற்றப்படுகின்றன, பல நிபுணர்கள் திட்டம் தீட்டுகிறார்கள் ஆனால் மறுபுறம் இப்படி விதி மீறலில் ஈடுபடுபவர்களை காப்பாற்றுவதற்கும் வழிவகை செய்கிறார்கள். மேலும் இந்த விதிமீறல்கள் அனைவரின் கண்கள் முன்பாக சட்டத்தை துச்சமாக மதித்து அப்பட்டமாக நடைபெறுகின்றன.
இந்தத் தீர்ப்பை அளித்த உயர்நீதிமன்றம் 28.02.1999 வரை விதி மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மட்டும் முறைப்படுத்தலாம் என்று உத்தரவிட்டது. இதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும், திமுக மற்றும் அதிமுக அரசுகள் இந்தக் காலக்கெடுவை விரிவுப்படுத்திக் கொண்டே செல்கின்றன. இறுதியாக 30 அக்டோபர் 2012 அன்று ஜெயலலிதா அரசு வெளியிட்ட அரசாணையின்படி 1 ஜுலை 2007 வரை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முறைப்படுத்திக்கொள்ளமுடியும்.
திமுக அரசும் சரி, அஇஅதிமுக அரசும் சரி. சட்டவிரோதமாக கட்டிடம் கட்டும் ரியல் எஸ்டேட் மாஃபியாவைத்தான் தங்கள் தேர்தல் செலவுகளுக்காகவும், கட்சி நிதிக்காகவும் நம்பியிருக்கின்றன. நகரில் எந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டாலும், லோக்கல் கவுன்சிலர் முதல், பஞ்சாயத்து கிளர்க்கு முதல், சிஎம்டிஏ தலைவர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வரை பலருக்கும் கப்பம் அளிக்காமல் கட்டிடம் கட்ட முடியாது என்ற நிலையே கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
கவுன்சிலர் தொடங்கி முதல் அமைச்சர் வரை கப்பம் கட்டும் காண்ட்ராக்டர், தன் சொந்தக் காசிலா லஞ்சப் பணத்தைத் தருவார் ? அந்த பணத்தை வீடு வாங்குபவர்களின் தலையில்தான் கட்டுவார். எப்படியாவது சொந்தமாக ஒரு ஃப்ளாட் வாங்கி விட வேண்டும் என்ற கனவில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் அடித்துப் பிடித்துக் கொண்டு, வீட்டுக் கடன் வாங்கி ஃப்ளாட்டுகளை வாங்குகின்றனர். லஞ்சப் பணத்தையெல்லாம் மொத்தமாக கணக்கிட்டால், ஒரு ஃப்ளாட் 2 கோடி ரூபாய் ஆகும் என்றால், . இரண்டு கோடிக்கு வாங்க மக்கள் தயங்குவார்கள் என்ற நிலையில், ஃப்ளாட்டின் விலையைக் குறைத்து, அதை ஈடு செய்ய தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி கட்டுமானம் செய்கிறார்கள்.
2008112057650101
தீ விபத்துக்குள்ளான சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடத்தில் மேலும் சில தளங்கள் இடிக்கப்படும் காட்சி
செப்டம்பர் 2008ம் ஆண்டு தி.நகர் ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து ஏற்பட்டு சில ஊழியர்கள் மரணமடைந்தனர். அவர்கள் மரணமடைந்ததற்கு காரணம், தீ விபத்துக்கான படிக்கட்டுகளோ, அவசர வாயில்களோ இல்லாமல் இருந்ததே காரணம் என்று கண்டறியப்பட்டது. இது போல விதிகளை மீறிக் கட்டிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று ட்ராபிக் ராமசாமி பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
இந்த வழக்கு சாவகாசமாக விசாரணைக்கு வந்து, நவம்பர் 2011ல், விதிகளை மீறி ரங்கநாதன் தெருவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ அதிகாரிகள் சீல் வைத்தனர். தீபாவளி வருகிறது. வியாபாரம் கெட்டு விட்டது. அதனால் சீல்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இக்பால் சீல்களை அகற்ற மறுத்து  தீர்ப்பளித்தார்.
இதையடுத்து உச்சநீதிமன்றம் சென்றனர் கடை முதலாளிகள். அவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடியது, தற்போதைய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றம், தீபாவளிக்காக கடைகளை திறந்து கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டு, சிஎம்டிஏ அதிகாரிகள் மேற்கொண்டு இது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.
தற்போது விதிகளை மீறிய கட்டிடங்கள் ரங்கநாதன் தெருவில் செயல்படுகிறதா இல்லையா என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
ஆக முன்னுக்குப் பின் முரணாக ஒரு தரப்பினரை திருப்திப் படுத்தும் வகையில் நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கும்போது மக்கள் நலன் என்னாவது?
இன்னொன்றையும் நாம் இங்கே கவனிக்கவேண்டும். மற்ற பல விஷயங்களில் விசாரணைக் கமிஷன் என்பது ஒரு கண் துடைப்பு நாடகமாக இருந்து வருவதை நாடே அறியும். தற்போது நிகழ்ந்திருக்கும் கோர விபத்து விசாரணை விஷயத்திலும் அதே கதைதான். விசாரணை ஆணையத் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியாம்.
Justice Regupathi
முன்னாள் நீதிபதி இரகுபதி
அவரோ ஏற்கனவே புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த ஊழல்களை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் இருக்கிறார்.  ரகுபதி என்ற பெட்ரோமாக்ஸ் லைட்டே வேண்டும் என்று ஜெயலலிதா ஏன் அடம் பிடிக்கிறார் என்றால் அவர் ஏற்கெனவே 2 ஜி புகழ் ஆ. இராசா தன்னை மிரட்டுகிறார் என பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர். அப்படிப்பட்ட பெருமகனாருக்கு ஓய்வுபெற்ற பின் மேலும் தன்னை தன்னை வளப்படுத்திக்கொள்ள வாய்பேற்படுத்திக்கொடுக்காவிட்டால் அது என்ன வெங்காய புரட்சி?
இப்போது காவுகொடுக்கப்பட்ட 61 உயிர்களும் இன்னும் சில காலத்தில் மறக்கப்படும். தலைவி அமைத்துள்ள விசாரணை ஆணையத்தின் நீதிபதி ரகுபதி சாவகாசமாக ஒரு அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கழித்து தருவார் (அவர் சம்பளம் வாங்க வேண்டாமா ?) பிறகு மீண்டும் இது போல ஒரு விபத்து ஏற்படும்போது நாமும் வேகமாக விவாதிப்போம்.  அது வரையும் அதன் பின்னரும் இக்கொடுமைகள் தொடரும்

30VJONGOLE2-MIGRAN_1974390f

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒரு பாழடைந்த கிராமம். அத்தகைய பகுதிகளிலிருந்துதான் பிழைப்பு தேடி சென்னை வந்து மக்கள் மோசமான சூழலில் வாழ்ந்து கொடுமையான முறையில் மரணத்தையும் சந்திக்கின்றனர்
ஆஹா என்னே மக்கள் ஆட்சியின் மாண்பு?
thanks to shankar...

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

The hunt for Amma’s assets

COVER STORY By Lakshmi Subramanian  |  Green, with a hint of red: Kodanad estate was recently in the news when a security guard there was murdered during a heist | Bhanu Prakash Chandra Jayalalithaa’s death triggered a battle for assets worth thousands of crores. While Sasikala and her family want to have it all, Jayalalithaa’s niece and nephew have staked their claim. Now, with the Kodanad murder adding mystery to the mix, THE WEEK visits some of the high-profile properties that are part of Jayalalithaa’s legacy Though it is famous as Jayalalithaa’s abode, she holds shares worth only Rs 3.13 crore in the Kodanad estate. “The value of the properties was so huge that the [Mannargudi] family members themselves could not ascertain it.” - A. Shankar, RTI activist Though it is famous as Jayalalithaa’s abode, she holds shares worth only Rs 3.13 crore in the Kodanad estate. “The value of the properties was so huge that the [Mannargudi] family members t...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest

கல்யாணம் முதல் காதல் வரை

பெண் பார்த்து நிச்சயம் செய்து கல்யாணம் முடிக்கும், அண்ட்  நகர வாசத்தின் வீச்சை வீட்டுக்குள் கொண்டுவராத  பெரும்பான்மைகளுக்கான பதிவு இது so மொக்கை கேள்விகளை தவிர்க்கவும். முதல்ல பெண்லாம் பார்த்துட்டு போயி, அப்பறம் மாப்பிள்ளை நகை வேண்டாம்ன்னு சொல்லி, பெத்தவங்க மட்டும் அவங்க கவுரவம் அதில் அடங்கி இருக்குன்னு குறிப்பிட்ட நகையை பேசி முடிச்சு நிச்சயதார்த்தம் வரைக்கும் இந்த பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஒரு வழியா கொண்டு வந்திடுவாங்க. இந்த சமயத்தில் நமக்கு இருந்த ஒரு டென்சன் கொஞ்சம் முடிவுக்கு வந்திருக்கும் அது என்னன்னா, நாம பயந்துட்டே இருப்போம், நம்மள எல்லாம் இந்த மாப்பிள்ளைக்கு பிடிக்குமா? ஒரு வேளை நம்மள ரிஜெக்ட் பண்ணிட்டா என்ன பண்றது, ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்ல இருந்து தகவல் சொல்லாம போன மாதிரி போய்டுவாங்களோ, இந்த மாதிரி சந்தேகங்களை தாண்டி தான் நிச்சயதார்த்தம் நடக்கும், அப்பவும் சந்தேகம் இருக்கும்…., இவருக்கு உண்மைலேயே நம்மள பிடிச்சுருக்கா இல்ல வேற வழி இல்லாம வந்திருக்காரா? இந்த மாதிரி (vice versa also), ACTUALLY எல்லாமே நல்லபடியாதான் நடக்கும் ஆனாலும் இந்த சந்தேகத்தை ஒன்னு...

அம்போவான கிம்போ

BY  JEEVANAND RAJENDRAN இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி. அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி. நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம். பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒர...