முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புக் கட்டுரை: ஸ்கார்ப்பியோ வாங்கிக் கொடுப்பாரா கமல்?

- சரவணன் சந்திரன்

சிறப்புக் கட்டுரை: ஸ்கார்ப்பியோ வாங்கிக் கொடுப்பாரா கமல்? - சரவணன் சந்திரன்
அவர் இளம் வயதிலேயே ஓய்வுபெற்ற சினிமா நடிகர். அரசியல் ஆசை உண்டு அவருக்கு. நல்ல நண்பரான அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, “அங்க இங்க அலைஞ்சு பாத்துட்டோம். பேசாமல் கமல் சாரோடு போய் செட்டிலாகிவிடலாம் என்று நினைக்கிறேன்” என்றார். அதே நடிகர் கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதிக்கு வேறொரு கட்சிக்காக வேலை பார்த்தார். அப்போது நடந்த விஷயங்களை ஏற்கெனவே நிறையச் சொல்லியிருக்கிறார்.
தேர்தல் பணிமனை திறந்த அன்று மட்டும் 22 லெட்டர் பேட் அமைப்புகள் வந்து நின்றிருக்கின்றன. படித்தவர்கள் நிறைந்த அமைப்புகளும் அவற்றில் அடக்கம். அத்தனை பேரும் தங்களிடம் ஆயிரம் ஓட்டுக்கள் இருக்கின்றன / இரண்டாயிரம் ஓட்டுக்கள் இருக்கின்றன என்று சொல்லிப் பணம் கேட்டிருக்கிறார்கள். சாயாந்திரம் வரை காத்திருந்து விடாப்பிடியாக பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றனராம். “உங்கள் கமல் சார் வந்தால் தந்துவிடுவாரா இப்படி?” என்று கேட்டேன். சந்தேகம்தான் என்று சொல்லி உதட்டைப் பிதுக்கினார் அவர்.
கள யதார்த்தம்
எல்லாவற்றையும் மாற்றப் போகிறேன் என்று சொல்லி வருபவரை நோக்கி இப்படி முட்டுக்கட்டை போடுவது சரியா என்று கேட்டால், சரியில்லை என்பதுதான் என்னுடைய பதிலும். ஆனால், கள யதார்த்தத்தை வேறு எப்படிச் சொல்லிப் புரியவைக்க முடியும்? பொதுவாகவே இங்கு ஏற்கெனவே இருக்கிற கட்சிகள், தேர்தல் அரசியல் செயல்பாடுகள் என்பதைத் தாண்டி மிகப் பெரிய பொருளாதாரத்தை நிர்வகிக்கிற மையங்களாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்சி சார்ந்தும் மறைமுகமாகத் தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. நேற்றுவரை கால்நடையாகப் போய்க்கொண்டிருந்த ஒருத்தர் திடீரென ஸ்கார்பியோவில் போவது எப்படிச் சாத்தியமாகிறது? இந்தப் பொருளாதார சங்கிலியில் இதுவரை மக்கள் விடுபட்டிருந்தனர். ஆனால், இப்போது இந்தப் பொருளாதாரத்தில் தங்களுக்கான பங்கை மக்கள் கேட்டுப் பெற ஆரம்பித்து விட்டனர். சில இடங்களில் அடித்துப் பிடுங்கவும் தயாராகிவிட்டனர்.
உதாரணத்துக்கு அரவக்குறிச்சி தொகுதி தேர்தலையே எடுத்துக்கொள்வோம். முதலில் இவர் ஐநூறு கொடுத்தார். வாங்கிக் கொண்டார்கள். அதற்குப் போட்டியாக அவர் எழுநூற்றைம்பது கொடுத்தார். அதையும் வாங்கிக்கொண்டார்கள். இப்படியே இந்த ஏலம் ஏறிக்கொண்டு போய் எங்கே நின்றது தெரியுமா? எங்கள் வீட்டில் பன்னிரண்டு ஓட்டுக்கள் இருக்கின்றன என்று சொல்லி ஒரு குடும்பம் ஏசி மிஷினை பேரம் பேசி வாங்கிக்கொண்டது. அரசியல்வாதிகளுக்காவது பணம் தருவது சம்பந்தமான அச்சங்கள், எரிச்சல்கள், குமைச்சல்கள் இருக்கின்றன. ஆனால், வாங்குவது குறித்த எந்தவித சங்கடமும் மக்களுக்கு இல்லை. இனி, குறைந்தது பத்து கோடி ரூபாய் இல்லாமல் ஒரு தொகுதியில் வேட்பாளராக நிற்கவே முடியாது என்பதுதான் நிலைமை.
கமல் முன்வைக்கும் அரசியல் எது?
இந்த நிலைமையை எப்படி எதிர்நோக்கப் போகிறார் கமல் என்று அந்த நண்பரிடம் கேட்டேன். “மாற்றத்தைக் கொண்டுவருவது என்று சொல்வது இதற்கும் சேர்த்துத்தான்” என்றார் அவர். “இந்த மாற்றத்தை உடனடியாகக் கொண்டுவந்துவிட முடியுமா?” என்று கேட்டேன். “நிச்சயம் முடியாது. ஆண்டுக்கணக்கில் ஆகும்” என்றார்.
இந்த இடத்தில்தான் கமலின் மனநிலை செயல்படும் விதத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. சமீபத்திய அவரது பேச்சுக்கள் எல்லாமே உன்னைப் போல ஒருவன் படத்தின் கதாபாத்திரம் பேசுவது போலவே இருக்கின்றன. பிக் பாஸ் மேடையில் நின்றுகொண்டு உள்ளே இருப்பவர்களை நோக்கி அவர் பேசும் தொனியிலேயே அரசியல் களத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்படிப் பேசுவது அவரது இயல்பு என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவரை நம்பி வருபவர்களுக்கு என்ன விதமான அரசியல் புரிதலை அவர் கற்பிக்க விரும்புகிறார்?
நான் காவியல்ல, கம்யூனிஸ்ட் என்கிறார். இன்னொரு நாள் நான் கறுப்புச் சட்டை போட்டவன் என்கிறார். எல்லாவற்றையும் நல்ல விதமாகவே எடுத்துக்கொள்ளலாம். ரஜினி வந்தால் அவரோடு இணைந்து செயல்படத் தயார் என்கிறார். இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை. இருவரும் நேரெதிர் துருவங்கள். ஒருதடவை மலேசியக் கலை விழாவில் தன்னுடைய இமயமலைப் பயணம் குறித்து மேடையில் சிலாகித்துப் பேசினார் ரஜினி. அருகில் மைக் பிடித்து நின்றுகொண்டிருந்த கமல், உங்களுக்கு எப்படியோ எனக்கு டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி இருக்கிறது என்று மென்மையாய் கிண்டலடித்தார். இப்போதைய அரசியல் சர்ச்சைகள் தொடங்கிக்கொண்டிருந்த காலகட்டத்திலும் தன்மானம் இருப்பதால் வந்திருக்கிறேன் என்று நேரடியாகவே குத்திக் காட்டினார். கமல் இதுவரை பேசி வந்த அரசியலுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு தடவை விஜயகாந்த்திடம், ‘ரஜினியிடம் அரசியல் ஆலோசனை பெறுவீர்களா?’ என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அதற்குக் கூர்மையாக எதிர்வினையாற்றினார். “நான் எம்.ஜி.ஆரிடம் அரசியல் பயின்றவன். கலைஞரிடம் பயின்றவன். ரஜினியிடம் ஏன் ஆலோசனை கேட்க வேண்டும்?” என்றார். நான் அவரோடு இருந்தவன், இவரோடு இருந்தவன் என்றெல்லாம் அடிக்கடி பேசும் கமலுக்கு, விஜயகாந்த்துக்கு இருக்கிற அரசியல் புரிதல் ஏன் வரவில்லை? துப்புரவுப் பணியாளர்களின் துயரத்தைப் பேசுபவராகத் தன்னை இதுவரை அடையாளப்படுத்திக்கொண்டிருந்த கமல், ‘தூய்மை இந்தியா’ பற்றி இப்போது பேசிக்கொண்டிருப்பதிலேயே அவருடைய புரிதல் எப்படிப்பட்டதென்று தெரியவில்லையா? பொத்தாம் பொதுவான ஒரு அரசியல் புரிதலை வைத்துக்கொண்டு தன்னுடைய புகழ் தன்னைக் கரை சேர்த்துவிடும் என நம்புகிறார் என்று தோன்றுகிறது.
கமலைச் சூழந்திருக்கும் மாயை
உடனடியாக நாளைக் காலையிலேயே நான் ஆட்சியைப் பிடித்துவிடுவேன் என்கிற மாயைப் பேச்சுகளில் இருந்து அவர் விடுபட வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சி வழியாக அவர் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைப்பற்றிவிடுவதைப் போல பாவனைகள் செய்கிறார். இந்தத் துறை சார்ந்தவனாக ஓர் உண்மையைச் சொல்லவா? மிஞ்சிப்போனால் அந்த நிகழ்ச்சி பத்து டிவிஆர் (டி.ஆர்.பி கணக்கீடு) வாங்கலாம். ரஜினி நடித்த முத்து படத்தை இதுவரை ஆயிரம் தடவைக்கு மேலே தொலைக்காட்சியில் போட்டிருப்பார்கள். அது வெகு சாதாரணமாக இருபது டிவிஆர் வாங்கும். மிகச் சிறிய கூட்டத்தை நோக்கித்தான் கமல் சமத்காரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு விளங்கவே விளங்காது. விளங்குகிற இடத்திலும் அவர் தன்னை வைத்துக்கொள்ளவில்லை. பொதுவாகவே உச்சத்தை நோக்கிப் போகிறவர்களின் பிரச்னை அது.
முக்கியமான பிரச்னைகளின்போது யாருக்குமே புரியாத நான்கு வரி ட்வீட்களே போதும் என்று நினைப்பதே எவ்வளவு புரிதல் குறைபாடு என்பதை நினைத்துப்பாருங்கள். நான் படிக்காதவன் என்பதால் நீட் பற்றித் தெரியாது என்றார். கமல் பள்ளிக்கல்வி என்பதைத் தாண்டி அவர் எவ்வளவு படித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
கமல் ஒரு மாயையில் சிக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு தடவை இந்தியா டுடே சார்பில் கமலுக்குச் சிறப்பிதழ் கொண்டுவரப்பட்டது. அப்போது அதற்கு அவர் பேட்டியளிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணத்தை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். “ரஜினி சிறப்பிதழில் ரஜினி பேட்டி கொடுத்தாரா? அப்புறம் என்னிடம் மட்டும் ஏன் பேட்டி கேட்கிறீர்கள்?” என்றார். இன்னொரு தடவை அவருடைய ரசிகர் மன்றத் தலைவரை அழைத்து, “ஏன் ரஜினி பின்னாலேயே ஓடுகிறீர்கள்?” என்று கேட்டார். கடந்த முப்பது ஆண்டுகளாக ரஜினி அவரைத் துரத்துகிறார். இதுதான் அடியாழத்தில் அவருக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. திரையில் வசூல் சக்ரவர்த்தி என்கிற இடத்தை அவர் தட்டிப் பறித்துவிட்டார். அவரது அரசியல் பிரவேசத்துக்கு முன்பு இங்காவது முந்திக்கொள்ள நினைக்கிறார் கமல். இந்த டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டுக்குத் தமிழகத்தை அடகுவைக்க முடியாது.
கமலுக்கு அதிமுக அரசோடு தனிப்பட்ட பகை இருக்கிறது. மோடியைப் பகைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. அதிமுககாரர்களிடம் பேசுவதுபோல திமுகவினரிடம் பேச முடியாது. போட்டு வெளுக்கிற அளவுக்கு விவரமானவர்கள் அங்கே நிறைந்திருக்கிறார்கள். அவர்கள்மீது கைவைக்க பயம். சினிமா தாண்டி உண்மையிலேயே அவர் தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொள்ள விரும்புகிறார். அரசியலில் ஏன் இறங்கிப் பார்க்கக் கூடாது எனத் தோன்றத் தொடங்கிவிட்டது. அதைத் தவறென்று ஜனநாயகத்தில் சொல்லவே கூடாது.
ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் எல்லாமுமே குழந்தைத்தனமானவை எனத் துணிந்து சொல்லலாம். மேலிருந்து மேடையில் நின்றுகொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களைப் பார்த்துப் பேசும் தோரணையிலேயே அவர் தமிழக மக்களையும் அணுக நினைக்கிறார். அந்த வீட்டுக்குள் இருப்பவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தவிர, இவரது நடிப்பு, திரைத்துறைச் சாதனைகள், சினிமா அனுபவம் ஆகியவற்றால் அவர்களுக்கு இவர் மீது பிரமிப்பு இருப்பதும் இயல்புதான். ஆனால், அரசியல் என்பது வேறு களம். அங்குள்ளவர்களும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அல்ல. பிக் பாஸ் அரங்கில் அவருக்கு முன்னே அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கைதட்டும் கூட்டம் இருக்கிறது. ஆனால் அந்த வீட்டுக்கு வெளியே இருப்பவர்கள் அப்படி இல்லை.
வெளியே இருப்பது சிக்கலான கூட்டம். அந்தக் கூட்டத்தைப் பணத்தால் அடிக்க முடியும். அல்லது தரையில் இறங்கித் தோளில் கைபோட்டுத்தான் அணைக்க முடியும். தமிழக அரசியலில் இதுவரை வெற்றியே பெறாத ஓர் அம்சம் கண்ணுக்கு முன்னால் அடிவாங்கிப் படுத்துக் கிடக்கிறது. அதற்குப் பெயர் மேட்டிமைத்தனம். அரசியலில் இறங்குவதற்கு முன் அவர் தன் மன அரங்கில் இருக்கும் ‘பிக் பாஸ் மேடை’யை விட்டுக் கீழே இறங்க வேண்டும்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...