முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலை வாழையிலை ஓரத்தில்!




                          
-

      
சமீப காலமாக தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அபாயகரமான போக்கைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களின் மீது எரிந்து விழுந்து பாயும் அரசியல் வாதிகளின் காணச் சகிக்காத சித்திரங்கள் அவை. பத்திரிகையாளர்களின் பணியல்லவா இதுவென்கிற குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாத எகிறிக் குதித்தல்கள் அவை.
இன்னும் சில படிகள் மேலே போய் தங்களை விமர்சிக்கும் பத்திரிகையாளரைப் பணியிலிருந்து தூக்க முயற்சிக்கும் போக்கும் சமீபகாலமாக தலைதூக்கியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்புகூட முக்கியமான பத்திரிகைகளில் பணிபுரிந்த மூத்த ஊடகவியலாளர்கள் சிலரை குறிப்பிட்ட கட்சியொன்று, அவர்களது அலுவலக உரிமையாளர்களிடம் முறையிட்டு பணியிலிருந்து அப்புறப்படுத்தியதாகச் செய்திகள்கூட வந்தன.
இப்படியான மிகையான அச்சம் சூழ்கிற பின்னணியில் இருந்தே கலைஞருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் இருந்த சுகப் போக்கை அசை போட வேண்டியிருக்கிறது.
குறைவான ஆண்டுகள் கொண்ட என்னுடைய பத்திரிகையுலக அனுபவத்தில் முதன் முதலாக அவரைச் சந்தித்த நாளில் கிடைத்த அனுபவம் மேலெழுந்து வருகிறது.
முதல்வராக இருந்த அவரைச் சந்திப்பது குறித்த பயத்தில் உதடுகள்கூட ஆடிக் கொண்டிருந்தன எனக்கு. எதிரே அமர்ந்த அவர் கூர்ந்து பார்த்துவிட்டு, “ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கக்கூடாதது பயமும் தயக்கமும்” என்றார் சகஜப்படுத்தும் தொனியில். அவர் சொன்னதாலோ என்னவோ, பயமும் தயக்கமும் இல்லாமல் பல தடவை அவரிடம் கேட்கக்கூடாத கேள்விகளையெல்லாம் கேட்டிருக்கிறேன்.
ஒருதடவை அவரோடு முரண்பட்டிருந்த தலைவர் ஒருத்தர் அவரை தொலைக்காட்சிப் பேட்டிகளில் தரக்குறைவாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார். இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பான அந்தப் பேட்டியைப் பார்த்துவிட்டு கலைஞர் பதினோரு மணி அளவில் அந்தத் தலைவரைத் தொலைபேசியில் பிடித்து சமாதானப்படுத்தினார் என அதிகாரப்பூர்வமல்லாத தகவல் ஒன்று அப்போது பத்திரிகையாளர் மட்டத்தில் உலவிக் கொண்டிருந்தது.
மூத்த பத்திரிகையாளர் என்றால், உறுதிப்படுத்தாத தகவலைக் கொண்ட அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவே மாட்டார்கள். துணிந்து கேட்டு விட்டேன். “அந்தத் தலைவரை நீங்கள் கெஞ்சி சமாதானப்படுத்த முயன்றதாக சொல்கிறார்களே” என்றதும் முகம் சிவந்து விட்டது அவருக்கு.
“என் வீட்டு நாய்கூட அவன் வீட்டு வாசல்ல நிக்காது” என்று சொல்லி விட்டு, பேட்டியை முடித்துக் கொள்ளும் தோரணையில் முகத்தைப் பார்த்து விட்டு அமைதியாக இருந்தார்.
உடன் இருந்த அவரது உதவியாளர் சூடாகி, “எதைக் கேக்கணும்னு ஒரு வரைமுறை இல்லையா” என்றார். பயத்திலும் சங்கடத்திலும் தலையைக் குனிந்து கொண்டேன். சில நிமிடங்கள் கழித்து ஒரு புன்முறுவலை உதிர்த்து விட்டு, மேலே கேள் என்பதைப் போல சைகை காட்டினார். சகஜமாக அதற்கப்புறம் தொடர்ந்தது உரையாடல். இது ஒரு உதாரணம்தான். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை சங்கடப்படுத்தும் படியாக நிறைய காரியங்களைச் செய்திருக்கிறேன்.
அதிகமும் ’ஆப் தி ரெகார்ட்’ ஆன கேள்விகளை அவர் முன் வைத்திருக்கிறேன்.
அப்படியான கேள்விகளை வைத்து விட்டு, ’ஆப் தி ரெகார்டாக சொல்ல முடியுமா’ என்று கேட்பேன். சிரித்துக் கொண்டே அவர், “பத்திரிகையாளனுக்கு எல்லாமே ஆன் தி ரெகார்ட்தான்” என்பார். இப்போதுகூட இதையெல்லாம் இப்படி வெளிப்படையாக எழுதுவதை அவர் முன்னுணர்ந்தவர் இல்லையா? இந்தியாடுடே பத்திரிகை சார்பாக கலைஞர் சிறப்பிதழ் கொண்டு வரப்பட்டது. எங்களது தமிழ் பதிப்பு ஆசிரியர் ஆனந்த் நடராஜனின் மேற்பார்வையில் அந்த இதழைத் தொகுக்கும் பொறுப்பு என் வசம் இருந்தது.
அப்போது பத்திரிகையாளர் ஞாநி கலைஞரைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த நேரம். கலைஞரது அலுவலகத்தில் இருந்து யாரெல்லாம் கட்டுரை எழுதுகிறார்கள் என்று பட்டியல் கேட்டார்கள். அதில் சிலரது பெயரை வேண்டாமென்று அப்புறப்படுத்தி இருந்தார்கள். அத்தனையும் அவருக்குச் சாமரம் வீசும் அவர் கட்சி அடிப்பொடிகள். பட்டியலைக் கூர்ந்து பார்த்த போது ஞாநி பெயர் விடுபடவில்லை.
ஆனாலும் அவர்கள் நினைத்ததை விட மோசமான அனுபவமே கலைஞர் தரப்பிற்குக் கிடைத்தது. ’கலைஞர் ஏன் அரசியலை விட்டு விலக வேண்டும்’ என்கிற தலைப்பில் மூன்று பக்க கட்டுரையை எழுதியிருந்தார் ஞாநி. கடைசி மூன்று பக்க கட்டுரை அது. படித்து விட்டு கலைஞர் வருத்தத்தோடு சொன்னதை பிற்பாடு சொன்னார்கள். “தலைவாழை விருந்து வைத்து விட்டு கொஞ்சம் அதைப் பிட்டு வைத்து விட்டார்கள்” என்று அவர் சொன்னதாகச் செய்தி வந்த போது உண்மையில் சங்கடப்பட்டேன்.
இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் சொல்லத் தோன்றுகிறது.
அந்தச் சிறப்பிதழுக்காக மிகப் பெரிய எழுத்தாளர் ஒருத்தரிடம் கட்டுரை கேட்ட போது, அசிங்கமான ஒரு வார்த்தையை உதிர்த்து விட்டு எழுதித் தர மறுத்துவிட்டார். அந்த எழுத்தாளர் அப்படித்தான் செய்வார் என கலைஞருக்கும் தெரியும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனாலும் அந்த எழுத்தாளரின் இறுதிக் காலத்தில் அவரை வைத்து விழா எடுத்து கௌரவப்படுத்திய போது அந்தச் சம்பவத்தை நினைத்துக் கொண்டேன்.
பொதுவாகவே கலைஞர் தன்னை ஆதரிப்பவர்களை விட எதிர்ப்பவர்களையே வலையில் விழ வைக்க வாழ்நாள் முழுவதும் முயற்சித்துக் கொண்டே இருந்தார் என்று தோன்றுகிறது. அதை ஒரு வியூகமாகவே வைத்திருந்தார் என்றுகூட துணிந்து சொல்லலாம். எதிர்த்த வாய்களில் இருந்து தாம்பூல மணத்தைப் பார்த்து விட வேண்டுமென்பதில் அலாதிப் பிரியம் போல அவருக்கு.
மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே அவர் பத்திரிகையாளர்களிடம் எரிந்து விழுந்திருக்கிறார். ஒரு தொலைக்காட்சி விரட்டி விரட்டி அவரை எரிச்சல்படுத்த முயன்ற போது, “சேர்ந்து தீக்குளிக்கலாம் வர்றீயா” என்று கேட்டார். அதைக்கூட திரும்பத் திரும்ப எடுத்துப் போட்டார்கள்.
இப்படியாகப்பட்டவரின் பிள்ளைகள் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்திய போது, உண்மையில் உள்ளார்ந்த துயரத்தை அடைந்திருப்பார் என்றுதான் இப்போது சொல்லத் தோன்றுகிறது. ஒரு ஆட்சியாளராக இல்லாவிட்டாலும் ஒரு பத்திரிகையாளராக கையறு நிலையில்தான் இருந்திருப்பார். அவரது நினைவு தப்புவதற்கு முன்பு பேட்டியெடுக்க வாய்ப்புக் கிடைத்திருந்தால், நிச்சயம் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பேன்.
அப்படி துணிந்து எதை வேண்டுமானாலும் கேட்பதற்கான வெளியை அவர் உருவாக்கி வைத்திருந்தார் என்பது முக்கியமானது. அவரால் பத்திரிகை பணியிலிருந்து வேட்டையாடப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பதை என்னுடைய குறைந்த ஆண்டுகள் அடங்கிய பத்திரிகை உலக அனுபவத்தில் சொல்லி விட முடியாது. மூத்த பத்திரிகையாளர்கள்தான் இதுபற்றியெல்லாம் சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய தனிப்பட்ட
அனுபவத்தில் அதிகமும் அவரை விமர்சித்தே எழுதியிருக்கிறேன். கலைஞர் சிறப்பிதழில்கூட ’மாலைகளும் வசைகளும்’ என்ற தலைப்பில்தான் நான்கு பக்க கட்டுரை எழுதியிருந்தேன். அவரிடமிருந்து அன்பு மிரட்டலோ அதிருப்தியோ என்னை வந்து அடைந்ததில்லை. அலுவலகத்தின் உயரதிகாரிகளிடமும் என் குறித்த புகார்கள் அறிவாலயத்தில் இருந்து வாசிக்கப்பட்டதும் இல்லை.
உண்மையில் அவர் தொடர்ந்து உரையாடுகிறவராகவே இருந்தார். முழுநீள பேட்டி எடுத்தால்தான் பேசுவேன் என பல தலைவர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு கட்டுரைக்குத் தேவையான இரண்டு வரிகள் மட்டுமே வரும் கருத்திற்காகக்கூட அவரைத் தொலைபேசியில் பிடிக்க முடியும். பத்திரிகயாளனின் அடிப்படை குணமென்பது எது குறித்தும் உரையாடுவது. அந்தத் துறையின் முன்னோடியாக அந்தப் பொறுப்பை உணர்ந்திருந்தார் அவர். அவரைப் பின் தொடகிறவர்களுக்கும் கடத்தினார் அவர். அவருடைய அரசியல் வாரிசு அதைக் கற்றுக் கொள்ளாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.
தன்னுடைய அரசியல் எதிரிகள் குறித்த செய்திகளின் உண்மைத் தன்மையைக்கூட விசாரிக்கிறவராக இருந்தார். சிவகாசி ஜெயலட்சுமி என்கிற பெண் முன்னாள் முதலமைச்சர் ஒருத்தருக்கு பெட்டியில் வைத்துப் பணம் கொடுத்தேன் என்று சொன்ன பேட்டி வெளியான போதுகூட, அதில் உண்மை இருக்கிறதா என்று விசாரித்துத் தெரிந்து கொண்டவர் அவர். பா.ம.க- திமுக இடையிலான ஒரு பிளவு எங்களுடைய பேட்டியின் விளைவாக ஏற்பட்டது. அவருடன் இருந்தவர்களெல்லாம் எகிறிக் குதித்தார்கள். ஆனால் அதில் உண்மை இருக்கிறதா என்று கேட்டவர் கலைஞர்தான்.
போற்றியோ தூற்றியோ எதை எழுதினாலும் சம்பந்தப்பட்டவர் படிப்பார்களா என்கிற கவலை எப்போதும் ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கும். ஆனால் கலைஞர் விவகாரத்தைப் பொறுத்தவரை எப்போதும் தன் குறித்தவற்றைத் தவறாமல் படித்து விடுவார். எழுதும் போதே நம்முடைய முதுகை அவருடைய கண் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல ஒரு பிரமை இருந்து கொண்டே இருக்கும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகூட பல நேரங்களில் தன்னை நோக்கி எழும் பல கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் கடப்பார். அமைதியாக விட்டால் கிணற்றில் போட்ட கல் மாதிரி சம்பவம் ஆகி விடும் என்பது சின்னப் பையன்களான எங்களுக்கே தெரியும். ஆனாலும் ”பெரிசு எல்லாத்துக்கும் எதுக்கு விழுந்து விழுந்து வாயை சும்மா வைக்காம பதில் சொல்லுது” என செல்லமாகச் சின்ன வயதில் கூடிப் பேசிக் கொள்வோம்.
”இன்றைய செய்தி நாளைய வரலாறு” என அவர் சின்ன வயதில் எழுதியதைக் கடைசி வரை கட்டிக் காப்பாற்றினார். சிறு விஷயங்களுக்கூட அதனால்தான் எதிர்வினை ஆற்றினார். அதனால்தான் அவர் வரலாறாகவும் காலத்தில் நிற்கிறார். அவர் சொத்தாய் பலருக்கு பல விஷயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் ஒருதடவை சொன்னதைத்தான் அவர் எனக்குக் கொடுத்த சொத்தாக இன்றளவும் நினைத்துச் செயல்படுத்த முனைந்து கொண்டிருக்கிறேன். “சூரியன் எழுந்திருக்கறதுக்கு முன்னாடியே நாம எழுந்திருச்சிரணும். அப்பதான் அதைக் காட்டிலும் வேகமாக ஓட முடியும்” என்று சொல்லி விட்டு அர்த்தம் பொதிந்த சிரிப்பொன்றை உதிர்க்கும் போது அவரது முகம் சூரிய காந்தியைப் போல மஞ்சளாய் விரிந்து ஒளிர்ந்தது.
சரவணன் சந்திரன்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...