முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலை வாழையிலை ஓரத்தில்!




                          
-

      
சமீப காலமாக தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அபாயகரமான போக்கைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களின் மீது எரிந்து விழுந்து பாயும் அரசியல் வாதிகளின் காணச் சகிக்காத சித்திரங்கள் அவை. பத்திரிகையாளர்களின் பணியல்லவா இதுவென்கிற குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாத எகிறிக் குதித்தல்கள் அவை.
இன்னும் சில படிகள் மேலே போய் தங்களை விமர்சிக்கும் பத்திரிகையாளரைப் பணியிலிருந்து தூக்க முயற்சிக்கும் போக்கும் சமீபகாலமாக தலைதூக்கியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்புகூட முக்கியமான பத்திரிகைகளில் பணிபுரிந்த மூத்த ஊடகவியலாளர்கள் சிலரை குறிப்பிட்ட கட்சியொன்று, அவர்களது அலுவலக உரிமையாளர்களிடம் முறையிட்டு பணியிலிருந்து அப்புறப்படுத்தியதாகச் செய்திகள்கூட வந்தன.
இப்படியான மிகையான அச்சம் சூழ்கிற பின்னணியில் இருந்தே கலைஞருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் இருந்த சுகப் போக்கை அசை போட வேண்டியிருக்கிறது.
குறைவான ஆண்டுகள் கொண்ட என்னுடைய பத்திரிகையுலக அனுபவத்தில் முதன் முதலாக அவரைச் சந்தித்த நாளில் கிடைத்த அனுபவம் மேலெழுந்து வருகிறது.
முதல்வராக இருந்த அவரைச் சந்திப்பது குறித்த பயத்தில் உதடுகள்கூட ஆடிக் கொண்டிருந்தன எனக்கு. எதிரே அமர்ந்த அவர் கூர்ந்து பார்த்துவிட்டு, “ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கக்கூடாதது பயமும் தயக்கமும்” என்றார் சகஜப்படுத்தும் தொனியில். அவர் சொன்னதாலோ என்னவோ, பயமும் தயக்கமும் இல்லாமல் பல தடவை அவரிடம் கேட்கக்கூடாத கேள்விகளையெல்லாம் கேட்டிருக்கிறேன்.
ஒருதடவை அவரோடு முரண்பட்டிருந்த தலைவர் ஒருத்தர் அவரை தொலைக்காட்சிப் பேட்டிகளில் தரக்குறைவாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார். இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பான அந்தப் பேட்டியைப் பார்த்துவிட்டு கலைஞர் பதினோரு மணி அளவில் அந்தத் தலைவரைத் தொலைபேசியில் பிடித்து சமாதானப்படுத்தினார் என அதிகாரப்பூர்வமல்லாத தகவல் ஒன்று அப்போது பத்திரிகையாளர் மட்டத்தில் உலவிக் கொண்டிருந்தது.
மூத்த பத்திரிகையாளர் என்றால், உறுதிப்படுத்தாத தகவலைக் கொண்ட அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவே மாட்டார்கள். துணிந்து கேட்டு விட்டேன். “அந்தத் தலைவரை நீங்கள் கெஞ்சி சமாதானப்படுத்த முயன்றதாக சொல்கிறார்களே” என்றதும் முகம் சிவந்து விட்டது அவருக்கு.
“என் வீட்டு நாய்கூட அவன் வீட்டு வாசல்ல நிக்காது” என்று சொல்லி விட்டு, பேட்டியை முடித்துக் கொள்ளும் தோரணையில் முகத்தைப் பார்த்து விட்டு அமைதியாக இருந்தார்.
உடன் இருந்த அவரது உதவியாளர் சூடாகி, “எதைக் கேக்கணும்னு ஒரு வரைமுறை இல்லையா” என்றார். பயத்திலும் சங்கடத்திலும் தலையைக் குனிந்து கொண்டேன். சில நிமிடங்கள் கழித்து ஒரு புன்முறுவலை உதிர்த்து விட்டு, மேலே கேள் என்பதைப் போல சைகை காட்டினார். சகஜமாக அதற்கப்புறம் தொடர்ந்தது உரையாடல். இது ஒரு உதாரணம்தான். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை சங்கடப்படுத்தும் படியாக நிறைய காரியங்களைச் செய்திருக்கிறேன்.
அதிகமும் ’ஆப் தி ரெகார்ட்’ ஆன கேள்விகளை அவர் முன் வைத்திருக்கிறேன்.
அப்படியான கேள்விகளை வைத்து விட்டு, ’ஆப் தி ரெகார்டாக சொல்ல முடியுமா’ என்று கேட்பேன். சிரித்துக் கொண்டே அவர், “பத்திரிகையாளனுக்கு எல்லாமே ஆன் தி ரெகார்ட்தான்” என்பார். இப்போதுகூட இதையெல்லாம் இப்படி வெளிப்படையாக எழுதுவதை அவர் முன்னுணர்ந்தவர் இல்லையா? இந்தியாடுடே பத்திரிகை சார்பாக கலைஞர் சிறப்பிதழ் கொண்டு வரப்பட்டது. எங்களது தமிழ் பதிப்பு ஆசிரியர் ஆனந்த் நடராஜனின் மேற்பார்வையில் அந்த இதழைத் தொகுக்கும் பொறுப்பு என் வசம் இருந்தது.
அப்போது பத்திரிகையாளர் ஞாநி கலைஞரைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த நேரம். கலைஞரது அலுவலகத்தில் இருந்து யாரெல்லாம் கட்டுரை எழுதுகிறார்கள் என்று பட்டியல் கேட்டார்கள். அதில் சிலரது பெயரை வேண்டாமென்று அப்புறப்படுத்தி இருந்தார்கள். அத்தனையும் அவருக்குச் சாமரம் வீசும் அவர் கட்சி அடிப்பொடிகள். பட்டியலைக் கூர்ந்து பார்த்த போது ஞாநி பெயர் விடுபடவில்லை.
ஆனாலும் அவர்கள் நினைத்ததை விட மோசமான அனுபவமே கலைஞர் தரப்பிற்குக் கிடைத்தது. ’கலைஞர் ஏன் அரசியலை விட்டு விலக வேண்டும்’ என்கிற தலைப்பில் மூன்று பக்க கட்டுரையை எழுதியிருந்தார் ஞாநி. கடைசி மூன்று பக்க கட்டுரை அது. படித்து விட்டு கலைஞர் வருத்தத்தோடு சொன்னதை பிற்பாடு சொன்னார்கள். “தலைவாழை விருந்து வைத்து விட்டு கொஞ்சம் அதைப் பிட்டு வைத்து விட்டார்கள்” என்று அவர் சொன்னதாகச் செய்தி வந்த போது உண்மையில் சங்கடப்பட்டேன்.
இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் சொல்லத் தோன்றுகிறது.
அந்தச் சிறப்பிதழுக்காக மிகப் பெரிய எழுத்தாளர் ஒருத்தரிடம் கட்டுரை கேட்ட போது, அசிங்கமான ஒரு வார்த்தையை உதிர்த்து விட்டு எழுதித் தர மறுத்துவிட்டார். அந்த எழுத்தாளர் அப்படித்தான் செய்வார் என கலைஞருக்கும் தெரியும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனாலும் அந்த எழுத்தாளரின் இறுதிக் காலத்தில் அவரை வைத்து விழா எடுத்து கௌரவப்படுத்திய போது அந்தச் சம்பவத்தை நினைத்துக் கொண்டேன்.
பொதுவாகவே கலைஞர் தன்னை ஆதரிப்பவர்களை விட எதிர்ப்பவர்களையே வலையில் விழ வைக்க வாழ்நாள் முழுவதும் முயற்சித்துக் கொண்டே இருந்தார் என்று தோன்றுகிறது. அதை ஒரு வியூகமாகவே வைத்திருந்தார் என்றுகூட துணிந்து சொல்லலாம். எதிர்த்த வாய்களில் இருந்து தாம்பூல மணத்தைப் பார்த்து விட வேண்டுமென்பதில் அலாதிப் பிரியம் போல அவருக்கு.
மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே அவர் பத்திரிகையாளர்களிடம் எரிந்து விழுந்திருக்கிறார். ஒரு தொலைக்காட்சி விரட்டி விரட்டி அவரை எரிச்சல்படுத்த முயன்ற போது, “சேர்ந்து தீக்குளிக்கலாம் வர்றீயா” என்று கேட்டார். அதைக்கூட திரும்பத் திரும்ப எடுத்துப் போட்டார்கள்.
இப்படியாகப்பட்டவரின் பிள்ளைகள் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்திய போது, உண்மையில் உள்ளார்ந்த துயரத்தை அடைந்திருப்பார் என்றுதான் இப்போது சொல்லத் தோன்றுகிறது. ஒரு ஆட்சியாளராக இல்லாவிட்டாலும் ஒரு பத்திரிகையாளராக கையறு நிலையில்தான் இருந்திருப்பார். அவரது நினைவு தப்புவதற்கு முன்பு பேட்டியெடுக்க வாய்ப்புக் கிடைத்திருந்தால், நிச்சயம் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பேன்.
அப்படி துணிந்து எதை வேண்டுமானாலும் கேட்பதற்கான வெளியை அவர் உருவாக்கி வைத்திருந்தார் என்பது முக்கியமானது. அவரால் பத்திரிகை பணியிலிருந்து வேட்டையாடப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பதை என்னுடைய குறைந்த ஆண்டுகள் அடங்கிய பத்திரிகை உலக அனுபவத்தில் சொல்லி விட முடியாது. மூத்த பத்திரிகையாளர்கள்தான் இதுபற்றியெல்லாம் சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய தனிப்பட்ட
அனுபவத்தில் அதிகமும் அவரை விமர்சித்தே எழுதியிருக்கிறேன். கலைஞர் சிறப்பிதழில்கூட ’மாலைகளும் வசைகளும்’ என்ற தலைப்பில்தான் நான்கு பக்க கட்டுரை எழுதியிருந்தேன். அவரிடமிருந்து அன்பு மிரட்டலோ அதிருப்தியோ என்னை வந்து அடைந்ததில்லை. அலுவலகத்தின் உயரதிகாரிகளிடமும் என் குறித்த புகார்கள் அறிவாலயத்தில் இருந்து வாசிக்கப்பட்டதும் இல்லை.
உண்மையில் அவர் தொடர்ந்து உரையாடுகிறவராகவே இருந்தார். முழுநீள பேட்டி எடுத்தால்தான் பேசுவேன் என பல தலைவர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு கட்டுரைக்குத் தேவையான இரண்டு வரிகள் மட்டுமே வரும் கருத்திற்காகக்கூட அவரைத் தொலைபேசியில் பிடிக்க முடியும். பத்திரிகயாளனின் அடிப்படை குணமென்பது எது குறித்தும் உரையாடுவது. அந்தத் துறையின் முன்னோடியாக அந்தப் பொறுப்பை உணர்ந்திருந்தார் அவர். அவரைப் பின் தொடகிறவர்களுக்கும் கடத்தினார் அவர். அவருடைய அரசியல் வாரிசு அதைக் கற்றுக் கொள்ளாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.
தன்னுடைய அரசியல் எதிரிகள் குறித்த செய்திகளின் உண்மைத் தன்மையைக்கூட விசாரிக்கிறவராக இருந்தார். சிவகாசி ஜெயலட்சுமி என்கிற பெண் முன்னாள் முதலமைச்சர் ஒருத்தருக்கு பெட்டியில் வைத்துப் பணம் கொடுத்தேன் என்று சொன்ன பேட்டி வெளியான போதுகூட, அதில் உண்மை இருக்கிறதா என்று விசாரித்துத் தெரிந்து கொண்டவர் அவர். பா.ம.க- திமுக இடையிலான ஒரு பிளவு எங்களுடைய பேட்டியின் விளைவாக ஏற்பட்டது. அவருடன் இருந்தவர்களெல்லாம் எகிறிக் குதித்தார்கள். ஆனால் அதில் உண்மை இருக்கிறதா என்று கேட்டவர் கலைஞர்தான்.
போற்றியோ தூற்றியோ எதை எழுதினாலும் சம்பந்தப்பட்டவர் படிப்பார்களா என்கிற கவலை எப்போதும் ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கும். ஆனால் கலைஞர் விவகாரத்தைப் பொறுத்தவரை எப்போதும் தன் குறித்தவற்றைத் தவறாமல் படித்து விடுவார். எழுதும் போதே நம்முடைய முதுகை அவருடைய கண் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல ஒரு பிரமை இருந்து கொண்டே இருக்கும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகூட பல நேரங்களில் தன்னை நோக்கி எழும் பல கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் கடப்பார். அமைதியாக விட்டால் கிணற்றில் போட்ட கல் மாதிரி சம்பவம் ஆகி விடும் என்பது சின்னப் பையன்களான எங்களுக்கே தெரியும். ஆனாலும் ”பெரிசு எல்லாத்துக்கும் எதுக்கு விழுந்து விழுந்து வாயை சும்மா வைக்காம பதில் சொல்லுது” என செல்லமாகச் சின்ன வயதில் கூடிப் பேசிக் கொள்வோம்.
”இன்றைய செய்தி நாளைய வரலாறு” என அவர் சின்ன வயதில் எழுதியதைக் கடைசி வரை கட்டிக் காப்பாற்றினார். சிறு விஷயங்களுக்கூட அதனால்தான் எதிர்வினை ஆற்றினார். அதனால்தான் அவர் வரலாறாகவும் காலத்தில் நிற்கிறார். அவர் சொத்தாய் பலருக்கு பல விஷயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் ஒருதடவை சொன்னதைத்தான் அவர் எனக்குக் கொடுத்த சொத்தாக இன்றளவும் நினைத்துச் செயல்படுத்த முனைந்து கொண்டிருக்கிறேன். “சூரியன் எழுந்திருக்கறதுக்கு முன்னாடியே நாம எழுந்திருச்சிரணும். அப்பதான் அதைக் காட்டிலும் வேகமாக ஓட முடியும்” என்று சொல்லி விட்டு அர்த்தம் பொதிந்த சிரிப்பொன்றை உதிர்க்கும் போது அவரது முகம் சூரிய காந்தியைப் போல மஞ்சளாய் விரிந்து ஒளிர்ந்தது.
சரவணன் சந்திரன்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....