முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு வைப்ரேட்டரின் கதை….



இன்னிக்கு தேதிக்கு உலகின் நம்பர் ஒன் செக்ஸ் டாய் – வைப்ரேட்டர். உலக பெண்களின் ஏக்கத்தை தீர்ப்பதில் முக்கியமான பங்கு இதற்கு இருக்குங்கறது யாராலும் மறுக்க முடியாத மேட்டர். ஃபேக் ஆர்கஸம் (Fake Orgasm) பற்றி எழுத முயற்சித்து, அதற்கான தேடலில் கிடைத்தது இந்த கதை…! சுமார் 700 ஆண்டுகளுக்கு முன், 13’ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை.
அரசியல் காரணங்களுக்காக பல திருமணங்கள் செய்து கொண்ட மன்னர்கள், பெண்களை அந்தபுரத்தில் அடைத்து ‘மட்டும்’ வைத்திருந்தனர். உணவு உடுப்பு என ராஜ வாழ்க்கை கிடைக்கும். ஆனால் அடிப்படை செக்ஸ் தேவைகள் பூர்த்தி அடையாது. அரசியலிலோ அல்லது கல்வி சாலையிலோ பெண்களுக்கு இடமே இல்லாத நேரம் அது. விதவைகள், திருமணம் தள்ளிப் போன முதிர் கன்னிகள், இளம் பெண்கள், கணவனால் திருப்தி செய்ய முடியாத பெண்கள் என தங்களோட செக்ஸ் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாத பெண்களிடம் சில வினோத அறிகுறிகள் தென்பட்டன..!
மன பதட்டம், தூக்கமின்மை, அடிவயிற்றில் கனம், செக்ஸ் கனவுகள், எரிச்சல், கோபம் இவற்றுடன் கால்களுக்கு நடுவில் அதிக ஈரப்பதம் என அந்த அறிகுறிகள் தென்பட்டாலே மருத்துவர்கள் அதை ஹிஸ்டீரியா என்ற ஒரு வகையான மன நோய் என்று கருதினார்கள். (ஹிஸ்டர் என்றால் கிரேக்கத்தில் கர்ப்பப்பை என்று பொருள். கர்பப்பையால் வரும் மன நோய் ஹிஸ்டீரியா ஆனது). மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்ரேட்’ஸ் கார்ப்ஸ் என்ற புத்தகத்தில் இத்தகைய அறிகுறி தென்பட்டால் அதற்கு பெண்ணின் யோனியில் கை வைத்து மசாஜ் செய்யுமாறு சில மருத்துவ குறிப்புகள் இருந்தது. அப்படி செய்யும் பட்சத்தில் அவர்களின் ஹிஸ்டீரியா தற்காலிக நிவாரணம் பெறும் என்பது குறிப்பு. அப்போதைய மருத்துவர்கள் அதை செய்து பார்த்து ஓரளவு வெற்றி பெற்றிருந்தார்கள்.


நடுவில் க்றிஸ்துவ சர்சுகள் வளர்ந்த போது பாலின உறுப்பை தொடுவதே பாவம் என்ற கருத்து வலுப்பெற்றது. 16 முதல் 18ம் நூற்றாண்டு வரையில் பெண்களுக்கென்று தனியாக செக்ஸ் எண்ணம் கிடையாது, அவர்கள் ஆணின் செக்ஸ் தேவையை தீர்ப்பதற்கு மட்டுமே உள்ளனர் என்று மருத்துவ உலகம் நம்பியது. (மருத்துவர்கள் அனைவரும் ஆண்கள்) பெண்களுக்கான அரசியல் மற்றும் கல்வி சுத்தமாக மறுக்கப்பட்டதால் அவர்களின் தேவையை ஆண்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. சுய இன்பம் செய்வது இறைவனுக்கு எதிரான செயல் என்று கருதப்பட்டதால் அதை செய்யும் பெண்கள் குற்ற உணர்வினால் பாதிக்கப்பட்டிருந்தனர். செய்வதற்கு மனதளவில் அஞ்சினர். இந்த கால கட்டத்தில் இங்கிலாந்தின் 60%திற்கு மேற்பட்ட பெண்கள் ஹிஸ்டீரியாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்கள், ஹிஸ்டீரியா வந்த பெண்களுக்கு மருத்துவ ரீதியாக யோனி மசாஜ் தெரபியை செய்ய துவங்கினர். தானே சுய இன்பம் செய்தால் குற்றம். கணவனோ அல்லது பிறரோ திருப்தி அளிக்க முடியவில்லை. ஆனால் ஒரு மருத்துவர் ட்ரீட்மென்ட் என்ற பெயரில் செய்து விடும் சுய இன்ப மசாஜிற்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டனர். (இதை சுய இன்பம் என்றோ செக்ஸ் தீர்வு என்றோ மருத்துவர்களும் கருதவில்லை, அந்த பெண்களும் அப்படி நினைக்க வில்லை என்பது முக்கியமாக குறிப்பிட வேண்டிய விசயம். அது ஹிஸ்டீரியாவிற்கான ஒரு சிகிச்சையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஏன் என்றால் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு கிடையாது என்றே மருத்துவ உலகம் தீவிரமாக நம்பியது. அதனாலேயே இந்த மசாஜ் மூலமாக பெண்களுக்கு கிடைத்த உச்சகட்டத்தை orgasm என்று குறிப்பிடாமல் Paroxysm என்று குறிப்பிட்டது மருத்துவம்.)
மிக ஃபேமஸான இந்த மருத்துவ முறை பல மருத்துவர்களை பெரும் பணக்காரர்களாக்கியது. ஆனால் மருத்துவர்களுக்கு வேறு ஒரு சிரமம் ஏற்பட்டது. ஒவ்வொரு பெண்ணிற்கும் 20 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை மசாஜ் செய்ததில் மருத்துவர்களின் கை பெண்டு நிமிர்ந்தது. சிலருக்கு 'வயலன்ட் மசாஜ்' வேறு செய்ய வேண்டி வந்தது. இதனால் மருத்துவர்களுக்கு கை ஒடிந்தது என்கிறார் ஒரு வரலாற்று ஆய்வாளர்.
18’ம் நூற்றாண்டின் மத்தியில் (1858) இந்த யோனி மசாஜ் செய்து செம்ம வெறுப்பானதாலோ என்னவோ Baker – Brown என்ற மருத்துவர்கள் மசாஜ் செய்வதால் பெண்கள் தற்காலிக நிவாரணம் பெறுகிறார்களே தவிர நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை, அதனால் நிரந்தர தீர்வுக்கு பெண்களின் க்ளிட்டோரியஸை வெட்டி எடுத்து விட வேண்டும் என்று விபரீத முடிவு செய்தார்கள். இவர்களின் கருத்துப்படி பெண்களின் கர்பப்பை, பெண்களின் உடம்பிற்குள் ஊர்ந்து கொண்டே இருப்பதாகவும் அது தான் ஹிஸ்டீரியாவிற்கு காரணம் என்றும் அதனால் ஒரு சர்ஜரி செய்து க்ளிட்டோரியஸ் மற்றும் கர்ப்பப்பையை வெட்டி எடுத்து விட வேண்டும் என்று கண்டுபிடித்தார்கள்????? இதை தன் சொந்த சகோதரிக்கே செய்தும் காட்டினார்கள். குற்ற உணர்ச்சிக்கு ஆளான பல பெண்கள் தங்கள் செக்ஸ் தேவையை கட்டுப்படுத்த இந்த சிகிச்சையை இவர்களிடம் ATM கியூ போல வரிசையில் நின்று செய்து கொண்டார்கள். 1866’ல் இருந்து 1947 வரை இத்தகைய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் அதிகாரபூர்வமாக செய்து வந்தார்கள். இன்றும் சில பழங்குடி, ஆப்பிரிக்க முஸ்லிம் மத்தியில் இந்த பழக்கம் இருக்கிறது.
ஆபரேஷன் செய்து கொண்ட பெண்கள் அதன் பின்னரும் அதே வகையான அறிகுறிகளை சொன்னதால் மருத்துவ உலகம் மேலும் குழம்பியது. இன்னொரு புறம் 'ஆபரேஷனுக்கு பயந்த பெண்கள்' கியூ, மசாஜ் செய்து கொள்ள நின்றது. ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் எல்லாம் வைத்து பூ போல மசாஜ் செய்தும் மருத்துவர்களின் கை வலி தாங்க முடியாததாக இருந்தது. அதே நேரத்தில் தான் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

1880'ல் மருத்துவர்களின் கை வலி குறைவதற்கு மின்சாரத்தால் இயங்கும், அதிர்வு கொடுக்கும் மசாஜரை யாரோ ஒருவர் செய்து கொடுக்க அதை பயன்படுத்திய மருத்துவர் Dr. Joseph granville வேறு ஆங்கிளில் சிந்திக்க, யோனி மசாஜ் செய்யும் வைப்ரேட்டர் உதித்தது. ஆரம்பத்தில் மருத்துவமனைகளில் ட்ரீட்மென்ட்டிற்க்காக மட்டும் பயன்பட்ட வைப்ரேட்டர் (கிட்டதட்ட ஒரு உலக்கை அளவுக்கு பெரிதாகவும் இரண்டு பேர் சேர்ந்து இயக்கும் வகையிலும் இருந்தது) காலத்தின் தேவையை பூர்த்தி செய்ய கைக்கு அடக்கமாக பேட்டரியால் இயக்கும் வகையில் மாறுதல் பெற்றது.
ஒரு வழியாக மருத்துவ உலகம் கொஞ்சம் கொஞ்சமாக பெண்களின் செக்ஸ் தேவையை உணர துவங்கியது. மிக பெரிய செமினாரில் ஆண்கள் ஒன்று கூடி, பெண்களின் க்ளிடோரியஸ் ஏன் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கிறது ? ஏன் யோனியின் உள்ளே இல்லை ? என்று ஆராய்ச்சி செய்து சுய இன்பம் இயற்கையானது என்று முடிவு செய்தார்கள். 1902’ல் வைப்ரேட்டர்களின் பொற்காலம் துவங்கியது. பெண்களுக்கான பிரத்தியேக மசாஜர் என்று பெண்களின் பத்திரிக்கைகளில் விளம்பரம் வந்தது. (கமென்டுகளில் அப்போது வந்த விளம்பரங்களை குடுத்திருக்கிறேன்). பல பெண்கள் அவற்றை வாங்கி குவித்தனர். இன்னும் ஒரு படி மேலே போய் ஹிஸ்டீரியா முதல் கிட்னி பிரச்சனைகள் வரை அனைத்தையும் இது சரி செய்யும் என்று விளம்பரம் செய்தார்கள். இதை ஒரு மருத்துவ குணமுள்ள கருவியாக அனைவரும் நினைத்தனர். அதற்கு ஆப்பு வைக்க 1920’ல் வந்தது “போர்ன் சினிமா”
போர்ன் சினிமாக்கள் வைப்ரேட்டரை sexual pleasure’க்கான கருவி என்ற வெளிக்காட்ட அதன் பின் அதை வாங்குவது பலருக்கு அசிங்கமாக பட்டது. விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. 1970’ல் வைப்ரேட்டர் விற்பனை சரிந்தது. மின்சாரத்தால் ஒழிந்த செக்ஸ் தேவை மின்சாரத்தாலேயே ஆப்படிக்கப்பட்டது. ஆனால் அதே கால கட்டத்தில் ஓங்கி எழுந்த பெண்ணிய கருத்துக்கள். பெண்ணிய விழிப்புணர்வுகள் ஆகியவை வைப்ரேட்டரை பெண்ணின் தேவை சார்ந்த ஒரு பொருளாக்கி அதை உரிமை ஆக்கியது. 1952’ல் அமெர்க்கன் சைகியாட்ரிக் சங்கம் ஹிஸ்டீரியாவை நோய்கள் பட்டியலில் இருந்து நீக்கி தள்ளுபடி செய்தது.
இன்று, வைப்ரேட்டர் பெண்களை செக்ஸ் அடிமை ஆக்குகிறது, ஆணுக்கான செக்ஸ் முக்கியத்துவம் குறைக்கிறது, கவனச்சிதறல் ஏற்படுவதால் இளம் வயது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பல எதிர் கருத்துக்களுக்கு மத்தியில் அமெரிக்காவில் 1/3 பெண்கள் வைப்ரேட்டர் பயன்படுத்திகிறார்கள்.
சொல்ல மறந்துட்டேன், இந்தியாவில் வைப்ரேட்டர் தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய பெண்கள் இன்றும் ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
disci: வைப்ரேட்டரின் வரலாற்றை திரைப்படமாக பார்க்க.: Hysteria மற்றும் The Road to Wellville ஆகிய திரைப்படங்களை பார்க்கலாம்

கருத்துகள்

கருத்துரையிடுக

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...