முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு பெண் எழுத்தாளரின் தமிழக அரசியல் அனுபவங்கள் ….

நீண்ட காலமாக தமிழில் படித்து வருபவர்கள்
எழுத்தாளர் வாஸந்தி அவர்களை நிச்சயம் அறிவார்கள்.
தமிழில் பல நாவல்களை எழுதி இருப்பவர் பின்னாட்களில்
இந்தியா டுடே செய்தி நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பு
வகித்தவர்….
vaasanthi-1
நீண்டகால வட இந்திய வாழ்க்கைக்கு பிறகு, இந்தியாடுடே
இதழின் தமிழ் பதிப்பாசிரியராக சென்னை
திரும்பிய அவர் அப்போது தனக்கு ஏற்பட்ட உடனடியான
அனுபவங்களை விவரிக்கிறார்….
———————————————
ஒரு செய்திப் பத்திரிகை ஆசிரியையாக நான் கால்
வைத்த போது, அச்சுப் பிழை திருத்துபவருக்குத் தெரிந்த
சில அடிப்படை விஷயங்கள்கூட, எனக்குத்
தெரிந்திருக்கவில்லை. எனது ஆங்கில அறிவில் அபார
நம்பிக்கை இருந்தும், galley’, ‘form wise’, ‘slug’, ‘caption’, format’ என்ற வார்த்தைகள் புரியாமல், இரண்டு நாட்கள்
தடுமாறினேன்.
காலை ஐந்து மணிக்கு எழுந்து, இரவு ஒன்பதரை, பத்துக்குப்
படுக்கப் போகும் வழக்கமுள்ள நான், இரவு ஒரு மணி,
இரண்டு மணிவரை அலுவலகத்தில், வாரத்தில் இரண்டு
நாட்களாவது பணிபுரியவேண்டியிருந்தது. ஓரிருமுறை
அலுவலகத்திலேயே தங்கி, மறுநாள் ஒன்பது மணிவரை
வேலை பார்க்கவும் நேர்ந்தது. தினமுமே வீட்டிற்குத் திரும்ப
இரவு எட்டு, எட்டரை ஆகிவிடும்.
தொழில்ரீதியில் நேரிடையான தாக்குதல்கள்,
வேலையில் சேர்ந்த உடனேயே ஏற்பட்டது. அந்த
காலகட்டத்தில், ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பு,
அதிகபட்சம் ஆங்கில இதழிலிருந்து
மொழிபெயர்க்கப்பட்டகட்டுரைகளைக் கொண்டதாகவே
இருந்தது.
அப்போதுதான் நான் கால் வைத்திருந்ததால், எனது அதிகார
எல்லைகளைப் பற்றி எனக்குக் குழப்பமாக இருந்தது.
தில்லி அலுவலகம் சொன்னபடி, மற்ற மொழி ஆசிரியர்கள்
நடந்து கொண்டார்கள். மாற்றுக்கருத்துச் சொல்லும் வழக்கம்
இருக்கவில்லை. ஆங்கிலத்தில் வரும் கட்டுரைகளை
மொழிபெயர்க்கும்போது (அவை ஆங்கிலப் பதிப்பில்
வெளியாகிவிடுவதால்) நிச்சயமாக வரிகளை மாற்றவோ,
திருத்தவோ உரிமை கிடையாது.

ஆங்கில இதழுக்கு, அப்போது சென்னைக் கிளையில்,
ப்ரகாஷ் சுவாமி நிருபராக இருந்தார்.
நான் போய்ச் சேர்ந்த இரு வாரத்தில்,
அவர், தி.மு.க. தலைவரின் இரு மனைவிகளும்
தனித்தனியாகக் கட்சி அரசியலில்,
தங்களின் அதிகாரத்தைச் செலுத்துவதாக ஒரு கட்டுரையை
ஆங்கில இதழுக்கு எழுதியிருந்தார்.
அந்தக் கட்டுரைக்கும் எனக்கும்
துளியும் சம்பந்தமில்லை. தமிழகத்து அரசியல் சம்பந்தப்பட்ட
கட்டுரை என்பதால், அதைத் தமிழ் இதழில் போடவேண்டிய
கட்டாயத்தில் இருந்தேன்.
அதைப் பக்கமாக்குவதற்குமுன் வந்திருந்த ‘ரீணீறீறீமீஹ்யில்’
படித்துப் பார்த்தபோது, ஒரு வரியை நீக்கிவிடலாம் என்று
முடிவு செய்தேன். கனிமொழியின் முதல் திருமணம்
விவாகரத்தான சமயம் அது. ஆனால், செய்தி வெளியில்
வந்திருக்கவில்லை.
கட்டுரையிலிருந்த, ‘விவாகரத்தான மகள் கனிமொழி’
என்ற சொற்கள் சம்பந்தப்பட்டவரை புண்படுத்தலாம்
என்று நினைத்து, அவற்றை நீக்கிவிட்டு ‘பக்கம்’ செய்ய
அனுப்பிவிட்டேன். அன்று ‘டெபுடி காப்பி எடிட்டர்’
இருந்தார். இறுதியாக பக்கத்தைக் கவனித்து அச்சுக்கு
அனுப்பும் வேலை அவருடையது.
மறுநாள், அச்சாகிவிட்ட பக்கங்கள் எனது பார்வைக்கு
வந்த போது திடுக்கிட்டேன். நான் நீக்கியிருந்த சொற்கள்
அச்சாகியிருந்தன. அன்று மாலை ‘டெபுடி காப்பி எடிட்டர்’
வந்தபோது, ‘‘நான் அடித்திருந்த சொற்கள் எப்படி வந்தன’’
என்று கேட்டேன். ‘‘பக்கம் ஆகி வந்த போது நான்கு
சொற்கள் தேவைப்பட்டன; அதனால் அவற்றைச் சேர்த்துக்
கொண்டேன்’’ என்றார்.
நான் ஏன் அவற்றை விலக்க நினைத்தேன் என்று அவரிடம்
சொல்லவில்லை. எப்படியும் ஆங்கில பதிப்பில் வந்த
விவரம்தானே என்றிருப்பார்.
ஆனால், கட்டுரை தமிழ்ப் பதிப்பில் வெளியானதும், ஒரு
பூகம்பம் வெடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
‘முரசொலி’ ஞாயிறு மலர் பல பக்கங்களை எனக்காக
ஒதுக்கியது. என்னை, நான் நினைக்கவே கூசும் அளவுக்கு,
பெண் ஆசிரியை, அரசியலுக்கே வராத தலைவரின் வீட்டுப்
பெண்களைப் பற்றி தரக்குறைவாக எழுதியதற்காக’
வசைபாடி தூற்றிற்று;
எனது ஒழுக்கத்தை, நேர்மையைக்
கேள்வி கேட்டது; எனது சாதியைக் குறிப்பிட்டது;
வாஸந்தி என்ற பெயரை ‘வாந்தி’ என்று எழுதிற்று.
‘குங்குமம்’ இதழில் வசை தொடர்ந்தது. கேள்வி_பதில்
பகுதியில், தானே ஒரு கேள்வியைப் போட்டு,
‘வாஸந்தியை ‘வா’ என்று சந்திக்கு இழுக்க எத்தனை நேரம்
ஆகும்?’ என்று, பதிலையும் போட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், கட்டுரை எழுதிய
ப்ரகாஷ் சுவாமி, எந்தக் கண்டனத்துக்கும் உள்ளாகவில்லை.
இந்த தாக்குதல் எனக்கு மிகப் பெரிய கலாசார அதிர்ச்சியை
ஏற்படுத்திற்று.
தமிழ் நாட்டில் ஒரு பெண்ணைத் தாக்கவேண்டுமானால்,
ஆண்களின் மிகச் சுலபமான ஆயுதம், அவளது ஒழுக்கத்தைக்
குறை கூறுவது என்று, பின் வரும் ஆண்டுகளில் புரிந்து
போனது. இது அந்த சமூகத்தின் பலவீனமே தவிர, எனது
குறையல்ல என்கிற தெளிவு எனக்கு இருந்ததால், அத்தகைய
அவதூறுப் பிரசுரங்களை கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிக்
கொண்டேன்.
ஆனால், ஆரம்பத்தில் அது ஏற்படுத்திய அதிர்விலிருந்து
மீள்வது, சுலபமாக இருக்கவில்லை. அடுத்த சில மாதங்களில்,
கலைஞர் கருணாநிதியைப் பேட்டி காண வேண்டி வந்தபோது,
நேரம் கொடுக்க அவர் சுலபத்தில் சம்மதிக்கவில்லை.

ஆனால் கடைசியில் ஒத்துக் கொண்டவர், என்னைக்
கண்டதும், ‘முரசொலி’யில் தன்னைக் கேட்காமலே
சின்னக்குத்தூசி அந்தக் கட்டுரையை எழுதிவிட்டதாகச்
சொன்னார். அவரது விளக்கம் எனக்கு சமாதானமாகவில்லை
என்றாலும், அவரது அணுகுமுறை இறுக்கத்தைத் தளர்த்திற்று

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...