முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முழுமையான மனிதன்..? - சரவணன் சந்திரன்

கலைஞர் தன்னுடைய அரசியல் புற வாழ்வில், வெற்றிகள் பலவற்றைப் பார்த்துவிட்டார். அதில் அவர் தொடாத உச்சங்கள் இல்லை. ஆனால் அவருடைய கடைசிக் காலகட்டத்தில் அவருடைய அகவாழ்வும் துலங்கிட வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்.

  • Saravanan Chandran
    • Saravanan Chandran
    • ambiarchives Contributor
கலைஞரைப் பற்றி புதிதாக என்ன சொல்லி விட முடியும்..? லட்சம் பக்கங்களில் அவருடைய புற வாழ்வு குறித்த வெற்றிச் செய்திகள் குவிந்து கிடக்கின்றன. அள்ள முடியாத அளவிற்குப் பெருமைகளும் சிறுமைகளும் அதில் விரவிக் கிடக்கின்றன. துலாக் கோல்கள் கொண்டு அதில் எவை அதிகம் என எண்ணிப் பார்க்கிற நேரமில்லை இது. பொதுவாகவே முழுமையான மனிதன் என்பதற்கான அளவீடாக ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். ஒரு மனிதனின் வாழ்வை அகவாழ்வு - புறவாழ்வு என இரண்டாகப் பிரித்து, இரண்டிலும் வெற்றி பெற்றவர்களையே முழுமையான மனிதன் என்பார்கள்.
வரலாறு நெடுகிலும் எடுத்துப் பார்த்தால், புறவாழ்வில் வெற்றி கண்ட பல சாதனையாளர்கள் தங்களுடைய அகவாழ்வில் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர். அகவாழ்வில் மட்டும் வெற்றி கண்டவர்களை வரலாறு எப்போதும் கணக்கில் வைப்பதில்லை. குடும்ப அரசியல் என்கிற வாள் கலைஞரின் முதுகைச் சுற்றியே இத்தனை ஆண்டுகளும் சுற்றி வந்திருக்கிறது. ஒருவகையில் வேலியில் போன ஓணான்களை எல்லாம் வேட்டிக்குள் இழுத்துப் போட்டது அவர்தான். தவிர்க்க முடியாத சூழலிலும் அவர் இருந்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய அரசியலில் குடும்ப அரசியல் என்கிற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் காந்தி காலத்தியவை என்பதைச் சொல்லியும் தெரிய வேண்டுமா..?
’கனியிருப்ப காய் கவர்ந்தற்று’ என ஒரு வாரிசின் அரசியல் பிரவேசத்தை அவர் மறுத்துக் கொண்டிருந்த காலகட்டமது. பேட்டியொன்றிற்காக அவரைச் சந்தித்தபோது, இதைப் பற்றிய கேள்வியொன்றை கேட்டபோது, வழக்கம் போலவே மழுப்பலான பதிலையே அதற்கும் தந்தார். பேட்டி முடிந்து லிப்ட்டில் கீழே வந்தபோது, அவர் எதிரே நின்றிருந்த அந்த வாரிசிடம் சொன்னார், “நீ கேக்க சொன்ன கேள்விய அவங்க என்ட்ட கேட்டுட்டாங்க.” அவரது குடும்பத்தின் அரசியல் அபிலாஷைகளை அவர் அறிந்தேயிருந்தார். 
“அவர் இன்னைக்கு முதலமைச்சராக காலை ஆட்டிக்கிட்டு இருக்காருன்னா அதுக்கு காரணம் நாங்கதான்” என்றார் இன்னொரு வாரிசு. அந்த வாரிசு பற்றி அவர் ஒருமுறை கூறியபோது, “என் மருமகன் எப்போதும் நான் உக்காந்திருக்கிற நாற்காலிக்கு ஆசைப்பட்டதில்லை” என்றார். இதையும்கூட அவர் அறிந்தேயிருந்தார். இந்த விஷயத்தில் முதுகிற்குப் பின்னாலும் அவருக்குக் கண்கள் இருந்தன. ஆனாலும் அதையெல்லாம் மீறி, ஒருத்தரிடமிருந்து மீள இன்னொருத்தர். இன்னொருத்தரின் அழுத்தத்திற்காக வேறோருத்தர் என அவர் களத்தில் ஒவ்வொருவராக இறக்கினார்.
நிறுவனமாகிவிட்ட எதன் மேலும் மிகையான குடும்ப அழுத்தங்கள் வரத்தான் செய்யும். இந்தியளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான பொதுப்போக்கு அது. அது தவறுதான் என்ற போதிலும், குடும்ப அரசியல் என்று விமர்சனத்தை எளிதாக எறிந்துவிட்டுப் போய்விட முடியும். சாதாரண ஒரு எலெக்ட்ரிக்கல் கடை போட்டாலே, கல்லாவில் மனைவி வழி மச்சானைக் கொண்டு வந்து அமர வைக்கும் பாரம்பரியத்தில் அவர் மட்டும் விதிவிலக்கா என்ன..?
தவிர, வேட்டிக்குள் புகுந்த ஓணான்களை இனி அப்புறப்படுத்தவும் முடியாது. தவிர்க்க முடியாத பட்சத்தில் சகித்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்வதுதான் இயற்கை. அவை கட்சியில் இரண்டறக் கலந்தும் விட்டன. பலவீனங்களைவிட அதனால் பலங்களும்கூட அதிகமாக இருக்கத்தான் செய்கின்றன. வெற்றி தோல்வி என்பதையெல்லாம் மக்கள் முடிவு செய்யட்டும்.
இந்த இடத்தில்தான் இன்னொரு கோணம் குறித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. விவரம் புரியாமல் உடன் பிறப்புகள் கம்பு சுற்றக் கிளம்பி வந்தாலும் பரவாயில்லை. மனச்சார்புகள் இல்லாத தேர்தல் அரசியல் நோக்கர்கள் இதற்குப் பின்னால் இருக்கிற அபாயத்தை உணர்வார்கள். கலைஞர் தனது சக்கர நாற்காலிப் பருவத்தில் ‘கண்கள் பனித்து இதயம் இனிக்கவே’ ஆசைப்பட்டார். தன்னால் உருவாக்கிய பிளவுகளைச் சரிசெய்யவே அதிகம் முயன்றார் என்பதை அவரோடு தொடர்பில் இருந்த மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் அறிவார்கள்.
திமுக என்கிற இயக்கத்தில் இருக்கிற இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் இந்தக் குடும்ப அரசியல் பிளவுகளால் அதிகமும் வெறுத்துப் போயிருக்கின்றனர். யாருக்கு வணக்கம் வைப்பது..? யாரோடு தோள் தொட்டு நிற்பது..? என்றெல்லாம் மருகிப் போய்க் கிடக்கின்றனர். கலைஞர் இல்லாத நிலை என்ற ஒன்று வருகிற கட்டத்தில் இந்தப் பிளவு, அரசியல் எதிரிகளிடமிருந்து பாரதூரமான விளைவுகளை உருவாக்கி விடும். அதற்காகத்தான் அவர்கள் பகடைக் காய்களை உருட்டிக் கொண்டு காத்தும் கிடக்கிறார்கள். “செயல்படாத தலைவர் சென்னையில் இருக்கிறார்” என அழகிரி மார்தட்டுவதும் செய்திகளில் வரத்தானே செய்கிறது..? 
செயல் தலைவர் அந்த நாற்காலியில் அமர முடியாத அன்றைக்கு கேக் வெட்டிக் கொண்டாடியவர்களும் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இவர்களைக் கொண்டு அரசியல் எதிரிகள் கேக் வெட்டி விளையாடி விடக்கூடாது. திமுகவில் இன்றைய நிலையில் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தலைவராக ஸ்டாலின் உருவாகி நிற்கிறார். அரசியலில் தவிர்க்க முடியாத அந்தக் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் செயல் தலைவரின் பின்னால் சத்தம் காட்டாமல் அணிவகுப்பதே அந்தக் கட்சிக்கும் அவர்களுக்கும் நல்லது. ஒருவகையில், தமிழக அரசியலுக்கும் நல்லது. இதைத்தான் அவர்கள் சார்ந்த தோழமைக் கட்சிகளும் விரும்புகிறார்கள்.
கலைஞர் தன்னுடைய அரசியல் புற வாழ்வில் வெற்றிகள் பலவற்றைப் பார்த்துவிட்டார். அதில் அவர் தொடாத உச்சங்கள் இல்லை. ஆனால் அவருடைய கடைசிக் காலகட்டத்தில் அவருடைய அகவாழ்வும் துலங்கிட வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும். தமிழக மக்கள் பல்வேறு நெருக்கடியான சமயங்களில் அவருக்குத் தோள் கொடுத்து அவருடைய புறவாழ்வை அர்த்தம் மிக்கதாக மாற்றிக் காட்டியிருக்கின்றனர். அவருடைய சொந்தக் குடும்பம், கட்சியின் நலன் கருதி ஒற்றுமையாக ஒருகுடையின் கீழ் நின்று அவரது அகவாழ்வையும் வெற்றிக் கணக்கில் வைக்க வேண்டும். அவரை முழுமையான மனிதனாக வரலாற்றில் நிறுத்தும் கடமையில் தமிழக மக்கள் ஒருபோதும் தவறியதில்லை. ’அவருடைய சொந்தக் குடும்பம் அதில் தவறிவிட்டது’ என்கிற வரலாற்றுப் பழிக்கு ஆளாகி விடக்கூடாது. மருத்துவமனையில் தொடரும் இந்த ஒற்றுமை பிற்காலங்களிலும் தொடர வேண்டும். காலத்தின் கட்டளை இது என எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை..!

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...