முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முழுமையான மனிதன்..? - சரவணன் சந்திரன்

கலைஞர் தன்னுடைய அரசியல் புற வாழ்வில், வெற்றிகள் பலவற்றைப் பார்த்துவிட்டார். அதில் அவர் தொடாத உச்சங்கள் இல்லை. ஆனால் அவருடைய கடைசிக் காலகட்டத்தில் அவருடைய அகவாழ்வும் துலங்கிட வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்.

  • Saravanan Chandran
    • Saravanan Chandran
    • ambiarchives Contributor
கலைஞரைப் பற்றி புதிதாக என்ன சொல்லி விட முடியும்..? லட்சம் பக்கங்களில் அவருடைய புற வாழ்வு குறித்த வெற்றிச் செய்திகள் குவிந்து கிடக்கின்றன. அள்ள முடியாத அளவிற்குப் பெருமைகளும் சிறுமைகளும் அதில் விரவிக் கிடக்கின்றன. துலாக் கோல்கள் கொண்டு அதில் எவை அதிகம் என எண்ணிப் பார்க்கிற நேரமில்லை இது. பொதுவாகவே முழுமையான மனிதன் என்பதற்கான அளவீடாக ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். ஒரு மனிதனின் வாழ்வை அகவாழ்வு - புறவாழ்வு என இரண்டாகப் பிரித்து, இரண்டிலும் வெற்றி பெற்றவர்களையே முழுமையான மனிதன் என்பார்கள்.
வரலாறு நெடுகிலும் எடுத்துப் பார்த்தால், புறவாழ்வில் வெற்றி கண்ட பல சாதனையாளர்கள் தங்களுடைய அகவாழ்வில் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர். அகவாழ்வில் மட்டும் வெற்றி கண்டவர்களை வரலாறு எப்போதும் கணக்கில் வைப்பதில்லை. குடும்ப அரசியல் என்கிற வாள் கலைஞரின் முதுகைச் சுற்றியே இத்தனை ஆண்டுகளும் சுற்றி வந்திருக்கிறது. ஒருவகையில் வேலியில் போன ஓணான்களை எல்லாம் வேட்டிக்குள் இழுத்துப் போட்டது அவர்தான். தவிர்க்க முடியாத சூழலிலும் அவர் இருந்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய அரசியலில் குடும்ப அரசியல் என்கிற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் காந்தி காலத்தியவை என்பதைச் சொல்லியும் தெரிய வேண்டுமா..?
’கனியிருப்ப காய் கவர்ந்தற்று’ என ஒரு வாரிசின் அரசியல் பிரவேசத்தை அவர் மறுத்துக் கொண்டிருந்த காலகட்டமது. பேட்டியொன்றிற்காக அவரைச் சந்தித்தபோது, இதைப் பற்றிய கேள்வியொன்றை கேட்டபோது, வழக்கம் போலவே மழுப்பலான பதிலையே அதற்கும் தந்தார். பேட்டி முடிந்து லிப்ட்டில் கீழே வந்தபோது, அவர் எதிரே நின்றிருந்த அந்த வாரிசிடம் சொன்னார், “நீ கேக்க சொன்ன கேள்விய அவங்க என்ட்ட கேட்டுட்டாங்க.” அவரது குடும்பத்தின் அரசியல் அபிலாஷைகளை அவர் அறிந்தேயிருந்தார். 
“அவர் இன்னைக்கு முதலமைச்சராக காலை ஆட்டிக்கிட்டு இருக்காருன்னா அதுக்கு காரணம் நாங்கதான்” என்றார் இன்னொரு வாரிசு. அந்த வாரிசு பற்றி அவர் ஒருமுறை கூறியபோது, “என் மருமகன் எப்போதும் நான் உக்காந்திருக்கிற நாற்காலிக்கு ஆசைப்பட்டதில்லை” என்றார். இதையும்கூட அவர் அறிந்தேயிருந்தார். இந்த விஷயத்தில் முதுகிற்குப் பின்னாலும் அவருக்குக் கண்கள் இருந்தன. ஆனாலும் அதையெல்லாம் மீறி, ஒருத்தரிடமிருந்து மீள இன்னொருத்தர். இன்னொருத்தரின் அழுத்தத்திற்காக வேறோருத்தர் என அவர் களத்தில் ஒவ்வொருவராக இறக்கினார்.
நிறுவனமாகிவிட்ட எதன் மேலும் மிகையான குடும்ப அழுத்தங்கள் வரத்தான் செய்யும். இந்தியளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான பொதுப்போக்கு அது. அது தவறுதான் என்ற போதிலும், குடும்ப அரசியல் என்று விமர்சனத்தை எளிதாக எறிந்துவிட்டுப் போய்விட முடியும். சாதாரண ஒரு எலெக்ட்ரிக்கல் கடை போட்டாலே, கல்லாவில் மனைவி வழி மச்சானைக் கொண்டு வந்து அமர வைக்கும் பாரம்பரியத்தில் அவர் மட்டும் விதிவிலக்கா என்ன..?
தவிர, வேட்டிக்குள் புகுந்த ஓணான்களை இனி அப்புறப்படுத்தவும் முடியாது. தவிர்க்க முடியாத பட்சத்தில் சகித்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்வதுதான் இயற்கை. அவை கட்சியில் இரண்டறக் கலந்தும் விட்டன. பலவீனங்களைவிட அதனால் பலங்களும்கூட அதிகமாக இருக்கத்தான் செய்கின்றன. வெற்றி தோல்வி என்பதையெல்லாம் மக்கள் முடிவு செய்யட்டும்.
இந்த இடத்தில்தான் இன்னொரு கோணம் குறித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. விவரம் புரியாமல் உடன் பிறப்புகள் கம்பு சுற்றக் கிளம்பி வந்தாலும் பரவாயில்லை. மனச்சார்புகள் இல்லாத தேர்தல் அரசியல் நோக்கர்கள் இதற்குப் பின்னால் இருக்கிற அபாயத்தை உணர்வார்கள். கலைஞர் தனது சக்கர நாற்காலிப் பருவத்தில் ‘கண்கள் பனித்து இதயம் இனிக்கவே’ ஆசைப்பட்டார். தன்னால் உருவாக்கிய பிளவுகளைச் சரிசெய்யவே அதிகம் முயன்றார் என்பதை அவரோடு தொடர்பில் இருந்த மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் அறிவார்கள்.
திமுக என்கிற இயக்கத்தில் இருக்கிற இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் இந்தக் குடும்ப அரசியல் பிளவுகளால் அதிகமும் வெறுத்துப் போயிருக்கின்றனர். யாருக்கு வணக்கம் வைப்பது..? யாரோடு தோள் தொட்டு நிற்பது..? என்றெல்லாம் மருகிப் போய்க் கிடக்கின்றனர். கலைஞர் இல்லாத நிலை என்ற ஒன்று வருகிற கட்டத்தில் இந்தப் பிளவு, அரசியல் எதிரிகளிடமிருந்து பாரதூரமான விளைவுகளை உருவாக்கி விடும். அதற்காகத்தான் அவர்கள் பகடைக் காய்களை உருட்டிக் கொண்டு காத்தும் கிடக்கிறார்கள். “செயல்படாத தலைவர் சென்னையில் இருக்கிறார்” என அழகிரி மார்தட்டுவதும் செய்திகளில் வரத்தானே செய்கிறது..? 
செயல் தலைவர் அந்த நாற்காலியில் அமர முடியாத அன்றைக்கு கேக் வெட்டிக் கொண்டாடியவர்களும் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இவர்களைக் கொண்டு அரசியல் எதிரிகள் கேக் வெட்டி விளையாடி விடக்கூடாது. திமுகவில் இன்றைய நிலையில் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தலைவராக ஸ்டாலின் உருவாகி நிற்கிறார். அரசியலில் தவிர்க்க முடியாத அந்தக் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் செயல் தலைவரின் பின்னால் சத்தம் காட்டாமல் அணிவகுப்பதே அந்தக் கட்சிக்கும் அவர்களுக்கும் நல்லது. ஒருவகையில், தமிழக அரசியலுக்கும் நல்லது. இதைத்தான் அவர்கள் சார்ந்த தோழமைக் கட்சிகளும் விரும்புகிறார்கள்.
கலைஞர் தன்னுடைய அரசியல் புற வாழ்வில் வெற்றிகள் பலவற்றைப் பார்த்துவிட்டார். அதில் அவர் தொடாத உச்சங்கள் இல்லை. ஆனால் அவருடைய கடைசிக் காலகட்டத்தில் அவருடைய அகவாழ்வும் துலங்கிட வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும். தமிழக மக்கள் பல்வேறு நெருக்கடியான சமயங்களில் அவருக்குத் தோள் கொடுத்து அவருடைய புறவாழ்வை அர்த்தம் மிக்கதாக மாற்றிக் காட்டியிருக்கின்றனர். அவருடைய சொந்தக் குடும்பம், கட்சியின் நலன் கருதி ஒற்றுமையாக ஒருகுடையின் கீழ் நின்று அவரது அகவாழ்வையும் வெற்றிக் கணக்கில் வைக்க வேண்டும். அவரை முழுமையான மனிதனாக வரலாற்றில் நிறுத்தும் கடமையில் தமிழக மக்கள் ஒருபோதும் தவறியதில்லை. ’அவருடைய சொந்தக் குடும்பம் அதில் தவறிவிட்டது’ என்கிற வரலாற்றுப் பழிக்கு ஆளாகி விடக்கூடாது. மருத்துவமனையில் தொடரும் இந்த ஒற்றுமை பிற்காலங்களிலும் தொடர வேண்டும். காலத்தின் கட்டளை இது என எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை..!

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...