முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருமணச்சதுரங்கம்

திருமணத்தில் தோல்வி என்றால் விவாகரத்து செய்வது என்று நினைக்கிறோம்.. உண்மையில் அப்படி அல்ல, மனம் உடைந்து குழந்தைகளுக்காக சேர்ந்து இருக்க நிர்பந்திக்கும் வாழ்க்கை வாய்ப்பதுதான் திருமண தோல்வி.. விவாகரத்து என்பது ஒரு வகையில் விடுதலை., அதை தோல்வி என்று சொல்தல் தகாது., அப்படிப் பார்த்தால் இங்கு நூற்றுக்கு.. இல்லை இல்லை நூறுமே தோல்வி திருமணங்களா? ஆம்! தோல்விதான் அந்த தோல்வியை எப்படி கையாண்டு மீள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது மிச்ச வாழ்வின் சுவாரஸ்யம்., கல்யாணம் என்றதும் எல்லா நண்பர்களும் ஆழ்ந்த அனுதாப வாழ்த்துகளை பகிர்ந்து ''மாட்டிக்கிட்டான்'' என்பது போல சொல்வார்கள்., அதை வேடிக்கையாக கடந்துவிடுவதே அப்போது நடக்கும்., அல்லது அவர்களுக்கு வாழத்தெரியவில்லை நாம் அப்படியெல்லாம் இருக்கக்கூடாது நமக்கு அப்படி எல்லாம் ஆகாது என்று நம்பிக்கொள்வார்கள் ஆண்கள்; கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் பெண்ணை திடீரென கல்யாணத்தில் தள்ளுவது ஒருவகை, 24 25 வயதுகளில் பெற்றோருடன் இருந்த வாழ்க்கை போரடித்து அடுத்து என்ன? கல்யாணம்! என்று விரும்பிச் செய்பவர்கள் ஒருவகை.;, பெரும்பாலான பெண்களின் கணவனு...

சிறப்புக் கட்டுரை: ஸ்கார்ப்பியோ வாங்கிக் கொடுப்பாரா கமல்?

- சரவணன் சந்திரன் அவர் இளம் வயதிலேயே ஓய்வுபெற்ற சினிமா நடிகர். அரசியல் ஆசை உண்டு அவருக்கு. நல்ல நண்பரான அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, “அங்க இங்க அலைஞ்சு பாத்துட்டோம். பேசாமல் கமல் சாரோடு போய் செட்டிலாகிவிடலாம் என்று நினைக்கிறேன்” என்றார். அதே நடிகர் கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதிக்கு வேறொரு கட்சிக்காக வேலை பார்த்தார். அப்போது நடந்த விஷயங்களை ஏற்கெனவே நிறையச் சொல்லியிருக்கிறார். தேர்தல் பணிமனை திறந்த அன்று மட்டும் 22 லெட்டர் பேட் அமைப்புகள் வந்து நின்றிருக்கின்றன. படித்தவர்கள் நிறைந்த அமைப்புகளும் அவற்றில் அடக்கம். அத்தனை பேரும் தங்களிடம் ஆயிரம் ஓட்டுக்கள் இருக்கின்றன / இரண்டாயிரம் ஓட்டுக்கள் இருக்கின்றன என்று சொல்லிப் பணம் கேட்டிருக்கிறார்கள். சாயாந்திரம் வரை காத்திருந்து விடாப்பிடியாக பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றனராம். “உங்கள் கமல் சார் வந்தால் தந்துவிடுவாரா இப்படி?” என்று கேட்டேன். சந்தேகம்தான் என்று சொல்லி உதட்டைப் பிதுக்கினார் அவர். கள யதார்த்தம் எல்லாவற்றையும் மாற்றப் போகிறேன் என்று சொல்லி வருபவரை நோக்கி இப்படி முட்டுக்கட்டை போடுவது சரியா என்று கேட்டால், சரியில்லை எ...

சிறப்புக் கட்டுரை: ஸ்கார்ப்பியோ வாங்கிக் கொடுப்பாரா கமல்?

- சரவணன் சந்திரன் அவர் இளம் வயதிலேயே ஓய்வுபெற்ற சினிமா நடிகர். அரசியல் ஆசை உண்டு அவருக்கு. நல்ல நண்பரான அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, “அங்க இங்க அலைஞ்சு பாத்துட்டோம். பேசாமல் கமல் சாரோடு போய் செட்டிலாகிவிடலாம் என்று நினைக்கிறேன்” என்றார். அதே நடிகர் கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதிக்கு வேறொரு கட்சிக்காக வேலை பார்த்தார். அப்போது நடந்த விஷயங்களை ஏற்கெனவே நிறையச் சொல்லியிருக்கிறார். தேர்தல் பணிமனை திறந்த அன்று மட்டும் 22 லெட்டர் பேட் அமைப்புகள் வந்து நின்றிருக்கின்றன. படித்தவர்கள் நிறைந்த அமைப்புகளும் அவற்றில் அடக்கம். அத்தனை பேரும் தங்களிடம் ஆயிரம் ஓட்டுக்கள் இருக்கின்றன / இரண்டாயிரம் ஓட்டுக்கள் இருக்கின்றன என்று சொல்லிப் பணம் கேட்டிருக்கிறார்கள். சாயாந்திரம் வரை காத்திருந்து விடாப்பிடியாக பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றனராம். “உங்கள் கமல் சார் வந்தால் தந்துவிடுவாரா இப்படி?” என்று கேட்டேன். சந்தேகம்தான் என்று சொல்லி உதட்டைப் பிதுக்கினார் அவர். கள யதார்த்தம் எல்லாவற்றையும் மாற்றப் போகிறேன் என்று சொல்லி வருபவரை நோக்கி இப்படி முட்டுக்கட்டை போடுவது சரியா என்று கேட்டால், சரியில்லை எ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...

தர்மத்தின் வாழ்வுதனை காவி கவ்வும்

செவ்வாய் முதல், அதிமுகவின் முன்னணி அடிமைகள் டெல்லியில் முகாமிட்டு உள்ளார்கள்.   முதல் நாள் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமனை சந்தித்தார்கள்.  அன்று மாலையே நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லியை சந்தித்தார்கள்.   புதனன்று காலை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்கள்.   ஒவ்வொரு முறை சந்திப்புக்கு பிறகும் எதற்காக அமைச்சர்களை சந்தித்தீர்கள் என்று கேட்டால், தமிழகத்தின் நலனுக்காக என்கிறார்கள். இரண்டு அடிமைப் பிரிவுகளின் இணைப்புக்கு முன்னாலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நிர்மலா சீத்தாராமன் அலுவலகத்தின் வாசலிலேயே குடியாக இருந்தார்.   தன் சொந்த அமைச்சர்களைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு நாட்டை சீரழிப்பதில் மும்முரமாக இருக்கும் மோடியே, ஓ.பன்னீர் செல்வத்தை, வாரத்துக்கு நான்கு முறை சந்தித்துக் கொண்டிருந்தார். இறுதி நிமிடம் வரை இணைப்பு நிகழுமா, நிகழாதா என்ற சந்தேகம் நீடித்துக் கொண்டிருந்தபோதே, ஆளுனர் சென்னை வந்தடைந்தார்.   இணைப்பு விழா ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே, பதவிப் பிரமாண...