முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புக் கட்டுரை: ஸ்கார்ப்பியோ வாங்கிக் கொடுப்பாரா கமல்?

- சரவணன் சந்திரன்

சிறப்புக் கட்டுரை: ஸ்கார்ப்பியோ வாங்கிக் கொடுப்பாரா கமல்? - சரவணன் சந்திரன்
அவர் இளம் வயதிலேயே ஓய்வுபெற்ற சினிமா நடிகர். அரசியல் ஆசை உண்டு அவருக்கு. நல்ல நண்பரான அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, “அங்க இங்க அலைஞ்சு பாத்துட்டோம். பேசாமல் கமல் சாரோடு போய் செட்டிலாகிவிடலாம் என்று நினைக்கிறேன்” என்றார். அதே நடிகர் கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதிக்கு வேறொரு கட்சிக்காக வேலை பார்த்தார். அப்போது நடந்த விஷயங்களை ஏற்கெனவே நிறையச் சொல்லியிருக்கிறார்.
தேர்தல் பணிமனை திறந்த அன்று மட்டும் 22 லெட்டர் பேட் அமைப்புகள் வந்து நின்றிருக்கின்றன. படித்தவர்கள் நிறைந்த அமைப்புகளும் அவற்றில் அடக்கம். அத்தனை பேரும் தங்களிடம் ஆயிரம் ஓட்டுக்கள் இருக்கின்றன / இரண்டாயிரம் ஓட்டுக்கள் இருக்கின்றன என்று சொல்லிப் பணம் கேட்டிருக்கிறார்கள். சாயாந்திரம் வரை காத்திருந்து விடாப்பிடியாக பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றனராம். “உங்கள் கமல் சார் வந்தால் தந்துவிடுவாரா இப்படி?” என்று கேட்டேன். சந்தேகம்தான் என்று சொல்லி உதட்டைப் பிதுக்கினார் அவர்.
கள யதார்த்தம்
எல்லாவற்றையும் மாற்றப் போகிறேன் என்று சொல்லி வருபவரை நோக்கி இப்படி முட்டுக்கட்டை போடுவது சரியா என்று கேட்டால், சரியில்லை என்பதுதான் என்னுடைய பதிலும். ஆனால், கள யதார்த்தத்தை வேறு எப்படிச் சொல்லிப் புரியவைக்க முடியும்? பொதுவாகவே இங்கு ஏற்கெனவே இருக்கிற கட்சிகள், தேர்தல் அரசியல் செயல்பாடுகள் என்பதைத் தாண்டி மிகப் பெரிய பொருளாதாரத்தை நிர்வகிக்கிற மையங்களாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்சி சார்ந்தும் மறைமுகமாகத் தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. நேற்றுவரை கால்நடையாகப் போய்க்கொண்டிருந்த ஒருத்தர் திடீரென ஸ்கார்பியோவில் போவது எப்படிச் சாத்தியமாகிறது? இந்தப் பொருளாதார சங்கிலியில் இதுவரை மக்கள் விடுபட்டிருந்தனர். ஆனால், இப்போது இந்தப் பொருளாதாரத்தில் தங்களுக்கான பங்கை மக்கள் கேட்டுப் பெற ஆரம்பித்து விட்டனர். சில இடங்களில் அடித்துப் பிடுங்கவும் தயாராகிவிட்டனர்.
உதாரணத்துக்கு அரவக்குறிச்சி தொகுதி தேர்தலையே எடுத்துக்கொள்வோம். முதலில் இவர் ஐநூறு கொடுத்தார். வாங்கிக் கொண்டார்கள். அதற்குப் போட்டியாக அவர் எழுநூற்றைம்பது கொடுத்தார். அதையும் வாங்கிக்கொண்டார்கள். இப்படியே இந்த ஏலம் ஏறிக்கொண்டு போய் எங்கே நின்றது தெரியுமா? எங்கள் வீட்டில் பன்னிரண்டு ஓட்டுக்கள் இருக்கின்றன என்று சொல்லி ஒரு குடும்பம் ஏசி மிஷினை பேரம் பேசி வாங்கிக்கொண்டது. அரசியல்வாதிகளுக்காவது பணம் தருவது சம்பந்தமான அச்சங்கள், எரிச்சல்கள், குமைச்சல்கள் இருக்கின்றன. ஆனால், வாங்குவது குறித்த எந்தவித சங்கடமும் மக்களுக்கு இல்லை. இனி, குறைந்தது பத்து கோடி ரூபாய் இல்லாமல் ஒரு தொகுதியில் வேட்பாளராக நிற்கவே முடியாது என்பதுதான் நிலைமை.
கமல் முன்வைக்கும் அரசியல் எது?
இந்த நிலைமையை எப்படி எதிர்நோக்கப் போகிறார் கமல் என்று அந்த நண்பரிடம் கேட்டேன். “மாற்றத்தைக் கொண்டுவருவது என்று சொல்வது இதற்கும் சேர்த்துத்தான்” என்றார் அவர். “இந்த மாற்றத்தை உடனடியாகக் கொண்டுவந்துவிட முடியுமா?” என்று கேட்டேன். “நிச்சயம் முடியாது. ஆண்டுக்கணக்கில் ஆகும்” என்றார்.
இந்த இடத்தில்தான் கமலின் மனநிலை செயல்படும் விதத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. சமீபத்திய அவரது பேச்சுக்கள் எல்லாமே உன்னைப் போல ஒருவன் படத்தின் கதாபாத்திரம் பேசுவது போலவே இருக்கின்றன. பிக் பாஸ் மேடையில் நின்றுகொண்டு உள்ளே இருப்பவர்களை நோக்கி அவர் பேசும் தொனியிலேயே அரசியல் களத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்படிப் பேசுவது அவரது இயல்பு என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவரை நம்பி வருபவர்களுக்கு என்ன விதமான அரசியல் புரிதலை அவர் கற்பிக்க விரும்புகிறார்?
நான் காவியல்ல, கம்யூனிஸ்ட் என்கிறார். இன்னொரு நாள் நான் கறுப்புச் சட்டை போட்டவன் என்கிறார். எல்லாவற்றையும் நல்ல விதமாகவே எடுத்துக்கொள்ளலாம். ரஜினி வந்தால் அவரோடு இணைந்து செயல்படத் தயார் என்கிறார். இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை. இருவரும் நேரெதிர் துருவங்கள். ஒருதடவை மலேசியக் கலை விழாவில் தன்னுடைய இமயமலைப் பயணம் குறித்து மேடையில் சிலாகித்துப் பேசினார் ரஜினி. அருகில் மைக் பிடித்து நின்றுகொண்டிருந்த கமல், உங்களுக்கு எப்படியோ எனக்கு டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி இருக்கிறது என்று மென்மையாய் கிண்டலடித்தார். இப்போதைய அரசியல் சர்ச்சைகள் தொடங்கிக்கொண்டிருந்த காலகட்டத்திலும் தன்மானம் இருப்பதால் வந்திருக்கிறேன் என்று நேரடியாகவே குத்திக் காட்டினார். கமல் இதுவரை பேசி வந்த அரசியலுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு தடவை விஜயகாந்த்திடம், ‘ரஜினியிடம் அரசியல் ஆலோசனை பெறுவீர்களா?’ என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அதற்குக் கூர்மையாக எதிர்வினையாற்றினார். “நான் எம்.ஜி.ஆரிடம் அரசியல் பயின்றவன். கலைஞரிடம் பயின்றவன். ரஜினியிடம் ஏன் ஆலோசனை கேட்க வேண்டும்?” என்றார். நான் அவரோடு இருந்தவன், இவரோடு இருந்தவன் என்றெல்லாம் அடிக்கடி பேசும் கமலுக்கு, விஜயகாந்த்துக்கு இருக்கிற அரசியல் புரிதல் ஏன் வரவில்லை? துப்புரவுப் பணியாளர்களின் துயரத்தைப் பேசுபவராகத் தன்னை இதுவரை அடையாளப்படுத்திக்கொண்டிருந்த கமல், ‘தூய்மை இந்தியா’ பற்றி இப்போது பேசிக்கொண்டிருப்பதிலேயே அவருடைய புரிதல் எப்படிப்பட்டதென்று தெரியவில்லையா? பொத்தாம் பொதுவான ஒரு அரசியல் புரிதலை வைத்துக்கொண்டு தன்னுடைய புகழ் தன்னைக் கரை சேர்த்துவிடும் என நம்புகிறார் என்று தோன்றுகிறது.
கமலைச் சூழந்திருக்கும் மாயை
உடனடியாக நாளைக் காலையிலேயே நான் ஆட்சியைப் பிடித்துவிடுவேன் என்கிற மாயைப் பேச்சுகளில் இருந்து அவர் விடுபட வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சி வழியாக அவர் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைப்பற்றிவிடுவதைப் போல பாவனைகள் செய்கிறார். இந்தத் துறை சார்ந்தவனாக ஓர் உண்மையைச் சொல்லவா? மிஞ்சிப்போனால் அந்த நிகழ்ச்சி பத்து டிவிஆர் (டி.ஆர்.பி கணக்கீடு) வாங்கலாம். ரஜினி நடித்த முத்து படத்தை இதுவரை ஆயிரம் தடவைக்கு மேலே தொலைக்காட்சியில் போட்டிருப்பார்கள். அது வெகு சாதாரணமாக இருபது டிவிஆர் வாங்கும். மிகச் சிறிய கூட்டத்தை நோக்கித்தான் கமல் சமத்காரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு விளங்கவே விளங்காது. விளங்குகிற இடத்திலும் அவர் தன்னை வைத்துக்கொள்ளவில்லை. பொதுவாகவே உச்சத்தை நோக்கிப் போகிறவர்களின் பிரச்னை அது.
முக்கியமான பிரச்னைகளின்போது யாருக்குமே புரியாத நான்கு வரி ட்வீட்களே போதும் என்று நினைப்பதே எவ்வளவு புரிதல் குறைபாடு என்பதை நினைத்துப்பாருங்கள். நான் படிக்காதவன் என்பதால் நீட் பற்றித் தெரியாது என்றார். கமல் பள்ளிக்கல்வி என்பதைத் தாண்டி அவர் எவ்வளவு படித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
கமல் ஒரு மாயையில் சிக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு தடவை இந்தியா டுடே சார்பில் கமலுக்குச் சிறப்பிதழ் கொண்டுவரப்பட்டது. அப்போது அதற்கு அவர் பேட்டியளிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணத்தை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். “ரஜினி சிறப்பிதழில் ரஜினி பேட்டி கொடுத்தாரா? அப்புறம் என்னிடம் மட்டும் ஏன் பேட்டி கேட்கிறீர்கள்?” என்றார். இன்னொரு தடவை அவருடைய ரசிகர் மன்றத் தலைவரை அழைத்து, “ஏன் ரஜினி பின்னாலேயே ஓடுகிறீர்கள்?” என்று கேட்டார். கடந்த முப்பது ஆண்டுகளாக ரஜினி அவரைத் துரத்துகிறார். இதுதான் அடியாழத்தில் அவருக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. திரையில் வசூல் சக்ரவர்த்தி என்கிற இடத்தை அவர் தட்டிப் பறித்துவிட்டார். அவரது அரசியல் பிரவேசத்துக்கு முன்பு இங்காவது முந்திக்கொள்ள நினைக்கிறார் கமல். இந்த டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டுக்குத் தமிழகத்தை அடகுவைக்க முடியாது.
கமலுக்கு அதிமுக அரசோடு தனிப்பட்ட பகை இருக்கிறது. மோடியைப் பகைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. அதிமுககாரர்களிடம் பேசுவதுபோல திமுகவினரிடம் பேச முடியாது. போட்டு வெளுக்கிற அளவுக்கு விவரமானவர்கள் அங்கே நிறைந்திருக்கிறார்கள். அவர்கள்மீது கைவைக்க பயம். சினிமா தாண்டி உண்மையிலேயே அவர் தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொள்ள விரும்புகிறார். அரசியலில் ஏன் இறங்கிப் பார்க்கக் கூடாது எனத் தோன்றத் தொடங்கிவிட்டது. அதைத் தவறென்று ஜனநாயகத்தில் சொல்லவே கூடாது.
ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் எல்லாமுமே குழந்தைத்தனமானவை எனத் துணிந்து சொல்லலாம். மேலிருந்து மேடையில் நின்றுகொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களைப் பார்த்துப் பேசும் தோரணையிலேயே அவர் தமிழக மக்களையும் அணுக நினைக்கிறார். அந்த வீட்டுக்குள் இருப்பவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தவிர, இவரது நடிப்பு, திரைத்துறைச் சாதனைகள், சினிமா அனுபவம் ஆகியவற்றால் அவர்களுக்கு இவர் மீது பிரமிப்பு இருப்பதும் இயல்புதான். ஆனால், அரசியல் என்பது வேறு களம். அங்குள்ளவர்களும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அல்ல. பிக் பாஸ் அரங்கில் அவருக்கு முன்னே அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கைதட்டும் கூட்டம் இருக்கிறது. ஆனால் அந்த வீட்டுக்கு வெளியே இருப்பவர்கள் அப்படி இல்லை.
வெளியே இருப்பது சிக்கலான கூட்டம். அந்தக் கூட்டத்தைப் பணத்தால் அடிக்க முடியும். அல்லது தரையில் இறங்கித் தோளில் கைபோட்டுத்தான் அணைக்க முடியும். தமிழக அரசியலில் இதுவரை வெற்றியே பெறாத ஓர் அம்சம் கண்ணுக்கு முன்னால் அடிவாங்கிப் படுத்துக் கிடக்கிறது. அதற்குப் பெயர் மேட்டிமைத்தனம். அரசியலில் இறங்குவதற்கு முன் அவர் தன் மன அரங்கில் இருக்கும் ‘பிக் பாஸ் மேடை’யை விட்டுக் கீழே இறங்க வேண்டும்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

லாஞ்சரி(Lingerie)

சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட்  ஜெபராஜ்  ஒரு லாஞ்சரி ( lingerie )பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில் என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து , கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா ? என்றார் சித்ரா பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா ? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் Linge என்றால் ' துவைக்கக்கூடியது ' என்று பொருள். ”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது. 20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்...

ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!

தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’ சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது??  இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள  ‘தோசா ப்ளாசா ’, உலகளவில் 1 500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல  கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் ...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

Flitring - டெக்ஸ்ட் - ஆடியோ - விடியோ செக்ஸ் -

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன. 5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது. லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்...