முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் டாக்டர் கஃபீல் கான் பேசுகிறேன்.

  டாக்டர் கஃபீல் கான் ஆகஸ்ட் 2017ல், உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், 290  பச்சிளம் குழந்தைகள் இறந்தன.  இணைப்பு    கட்டுப்படுத்த முடியாத ஒரு தொற்றுநோயின் காரணமாக இக்குழந்தைகள் இறந்திருந்தால், நாம் மிக எளிதாக கடவுளை திட்டி விட்டு கடந்திருக்கலாம்.  ஆனால் அந்தக் குழந்தைகள் இறந்தது, ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாத காரணத்தால். எல்லா துர்நிகழ்வுகளிலும், கடவுளர்களின் கற்பனை அவதாரங்களைப் போல, சில மனிதர்கள், கடவுள் செய்ய வேண்டும் என்று நாம் விரும்புவதை நம் கண் முன்னே நிகழ்த்துவார்கள்.  அவர்கள் மனிதர்கள் என்பதை, நாம் வசதியாக மறந்து விட்டு, இது கடவுள் அனுப்பிய அவதாரமே என்று நாமே இல்லாத கடவுளுக்கு முட்டுக் கொடுப்போம். அப்படி கடவுளின் அவதாரமாக இருந்தவர்தான் டாக்டர் கஃபீல் கான்.  ஆகஸ்ட் 10 அன்று இரவு, ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, வெறும் 2 மணி நேரம்தான் தாக்கு பிடிக்கும் என்பதை உணர்ந்த கஃபீல் கான், தன் காரை எடுத்துக் கொண்டு, இரவு முழுவதும் தனியார் மருத்துவமனைகளை அணுகி, ஆக்சிஜன் சிலிண்டர்களை சேகரித்தார்.    ...

நவீன இளைஞர்கள்

இன்றைய நவீன இளைஞர்கள் / இளைஞிகளிடம் அசாத்திய திறமைகள் இருக்கின்றன.நம்ப முடியாத அளவு மெச்சூரிட்டியும் இருக்கிறது.எந்த தயக்கமும் இல்லாமல் 60 வயது ஆளிடம் சரிக்கு சமமாக பேச முடியும். சுதந்திரமாக இருக்கிறார்கள். இந்த ப்ளஸ்களெல்லாம் இருந்தாலும் ஒரு சிறு குறை இருக்கிறது. சின்ன சின்ன சிக்கல் வந்தாலும் உடனே டிப்ரஷன் என்கிறார்கள். கொஞ்சம் போரடிப்பது போல இருந்தால் ஸ்டிரெஸ் என்கிறார்கள். மூட் ஸ்விங்க் எல்லோருக்கும் இருக்கும் அல்லவா ? கொஞ்சம் மூட் டல்லாக இருந்தாலே ப்ரெஷர் ,  ஆங்க்சைட்டி என இருக்கும் மன நோய் பெயர்களையெல்லாம் உச்சரிக்கிறார்கள். 20 வருடங்களுக்கு முன் பொருளாதாரம் டிங்கி அடித்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில் , சிங்கிள் டீக்கே வழியில்லாமல் ஒட்டிய வயிறோடு திரிந்து கொண்டிருந்த இளைஞர்கள் நண்பர்களுடன் சேர்ந்து கலகலப்பாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது வர்களுக்கு ஸ்டிரெஸ் , டிப்ரஷன் வந்து இருக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகள் அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தங்களுக்கு வந்தது ஸ்டிரெஸ் , ஆங்க்சைட்டி , டிப்ரஷன் என்பது தெரியாமலேயே அதைக் கடந்து வந்தனர். நண்பர்கள் சூழ இரு...

அருப்புக்கோட்டையிலிருந்து புறப்பட்ட செக்ஸ் ராக்கெட்

கல்விக்கூடங்களில் காத்திருக்கும் கொக்குகள்! இந்தியா டுடே செக்ஸ் சர்வே 2018 மார்ச் பல்கலைக்கழகப் பெண் கணிதப் பேராசிரியர் ஒருத்தர் நான்கு மாணவிகளிடம் பேசியதாக உலாவரும் அந்த ஆடியோவை முழுமையாகக் கேட்டேன். எங்களுக்கு அதில் இஷ்டமில்லை என்று சொல்லிய பிறகும்கூட அந்தப் பேராசிரியர் விடாப்பிடியாக வற்புறுத்துவதன் பின்னணியில் சில சமூகப் பொருளாதாரக் காரணிகள் இருக்கின்றன. செருப்பாலடிக்கிற விஷயம் ஒன்றை வைத்துக்கொண்டு இப்படிச் சுற்றிவளைத்துப் பேசுவது சரியா என்கிற கேள்வியும் உடனடியாக மேலெழுந்து வருகிறது. அதேசமயம் இதற்குப் பின்னால் இருக்கிற மோசடி வலைப்பின்னல் ஒன்றை அடையாளப்படுத்தும் முயற்சியாகவும் இந்த விஷயத்தைச் சொல்லிப் போகலாம் என்றும் தோன்றுகிறது. ‘குற்றம் நடந்தது என்ன?’ காலத்தில் இருந்து இந்த மோசடியைப் பின்தொடர்ந்து போகிறோம் என்கிற வகையில் இதை முக்கியமானதாகவும் கருதுகிறேன். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு இந்தத் தொழிலில் இருக்கும் ‘சோர்ஸ்’ ஒருத்தர் அழைத்துப் போய்க் காண்பித்தார். நடுத்தர வயதுப் பெண்மணி அவர். பாரகான் செருப்புப் போட்டுக்கொண்டு ஏதோ ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பார்பி கண்ணில் இருக்கும் குன்றிமணிகளின் வாழ்க்கை!

- சரவணன் சந்திரன் பார்பி பொம்மையைப் பார்த்திருப்பீர்கள். உடன் வைத்திருக்க விரும்பியிருக்கிறீர்களா? என்று கேட்டால் ஆமாம் என்றுதான் சொல்வேன். எல்லோருக்குள்ளும் ஒரு பார்பி பொம்மை கனவாய் உறைந்து கிடக்கிறது. பார்பி என்பதே ஒரு குறியீடுதான். வாழநினைக்கிற வாழ்க்கை என்பதன் குறியீடுதான் அது. என்னிடமிருக்கிற பார்பி பொம்மையில் அப்படி என்ன விஷேசம்? உலகம் முழுக்க லட்சக்கணக்கான விலைகளில் பார்பி பொம்மைகள் இருக்கின்றன. என்னுடைய பார்பி பொம்மை திருடப்பட்டதுதான். ஆனால் கன்னத்தில் பருக்கள் இருக்கிற பார்பி பொம்மை எங்களிடம் மட்டுமே இருக்கின்றன. உலகில் யாரோ ஒரு சிறுவனிடமும் இதைப் போலவொரு பார்பி பொம்மை இருக்கவும்கூடும். இந்தப் பொம்மை எங்களுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்தது. எங்களோடு இரவுகளில் படுத்துக் கிடந்தது நட்சத்திரங்களை எண்ணியபடி. பிறத்தியார் பார்வைக்குப் படாதபடி இந்தப் பார்பி பொம்மையை ஒளித்து வைக்கிறோம். ஒருநாள் அந்த பார்பி பொம்மை எங்களிடம் இருந்து விலகி இன்னொரு கைகளுக்குச் சென்று விடுகிறது. பார்பி தன்னோடே இருந்து விடமாட்டாளா என்பது ஒரு தலைமுறையின் ஏக்கம். முட்டி மோதி தப்பிப் பிழைக்கிற புளியம...

பார்வதி தாண்டவம் (சிறுகதை)

“தேவுடியா பசங்க... பீயத் தின்ற நாயே... அறிவில்ல? முண்டம். முட்டா புண்டை, கூமுட்ட. என்ன நெனப்புடா ஒனக்கு? வேர்வயோட மாரக் காட்னா பொம்பளைங்க மடிஞ்சிருவாங்கன்னு நெனப்பா? செருப்பெடு... நாரக்கூதிமவனே’’இன்று என்னவோ என் குரல் அதிக கொடூரமாக எனக்கே திரும்பக் கேட்டது. எனக்குக் கோவமான கோவம். நான் லுலூ. என் குடும்பத்தோடு இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது.  வந்தது முதலே பார்க்கிறேன். அந்த ஆள் எப்போது பார்த்தாலும் பெண்கள் இருக்கும் பக்கமாகவே சுற்றுகிறான். அவன் மட்டும்தான் என்றில்லை. அங்கே ஆண்கள் அனேகருமே பெண்கள் புழங்க அசெளகரியமாக, பெண்களை நோட்டம் விட்டபடி, சும்மாவேனும் பம்படியில் நின்று பேசுவது, சத்தம் போட்டுச் சிரிப்பது... தவிர பக்கத்து கடைத்தெரு குட்டிச் சுவற்றில் வேறு சில நாய்கள் பெண்கள் புழங்கும் பக்கமாகவே நோட்டம் போட்டுக் கொண்டிருக்கும்.  கடைத் தெருவை ஒட்டியே அமைந்த எட்டு குடும்பங்கள் கொண்ட முடுக்கு வீடு இது. நடுவில் கிணறும், அடிபம்பும். சுற்றி ‘ப’ வடிவத்தில் எட்டு வீடுகள். எல்லோரும் புழங்கும் பொது புழக்கடை. கடை கண்ணிக்குப் போக சுலபமாக இருக்கும் என நினைத்துதா...

ஒரு கல்! ஒரு கண்ணாடி!

-சரவணன் சந்திரன் விஜய் தொலைக்காட்சியில் உதயநிதி ஸ்டாலின் நடித்த படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சமீப காலமாகவே அவரைச் சுற்றி வருகிற அரசியல் சர்ச்சைகள் குறித்துக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். முழுக்கவும் எதிர் மனநிலையில் விதம் விதமான விமர்சனங்கள், விதம் விதமான தொனிகளில் வெளிப்பட்டிருந்தன. இவற்றை உள்வாங்கிக் கொண்ட பின்னணியில்தான் அவரைச் சுற்றி யோசித்துப் பார்த்தேன். பரிந்துரை அல்ல. தொகுத்துப் புரிந்து கொள்கிற முயற்சி. அரசியல் குடும்பங்களில் உள்ள அடுத்த தலைமுறை இளைஞர்கள் பலரை நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கல்லூரி காலத்து தொடர் சங்கிலி அது. இப்போது உச்சத்தில் இருக்கிற நடிகர் விஜய்யை லயோலா கல்லூரி கூடைப் பந்து மைதானத்தில் வைத்துக் கிண்டலடித்தவர்கள் அவர்கள். அந்த இடத்தில்தான் விஜய் தன்னுடைய முதல் படத்தில் நடித்தார். அந்த நேரத்தில் இன்றைக்கு உச்சத்தில் இருக்கிற சூர்யா அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். வேடிக்கை பார்ப்பதென்றால் அந்த இடத்தில் நின்று நோட்டம் விடுவது அல்ல. ஏதோ ஒரு வகையில் இந்தச் சூழலுக்குள் இருந்தார்கள். இதே அரசியல் குட...