முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கல்! ஒரு கண்ணாடி!


-சரவணன் சந்திரன்

விஜய் தொலைக்காட்சியில் உதயநிதி ஸ்டாலின் நடித்த படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சமீப காலமாகவே அவரைச் சுற்றி வருகிற அரசியல் சர்ச்சைகள் குறித்துக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். முழுக்கவும் எதிர் மனநிலையில் விதம் விதமான விமர்சனங்கள், விதம் விதமான தொனிகளில் வெளிப்பட்டிருந்தன. இவற்றை உள்வாங்கிக் கொண்ட பின்னணியில்தான் அவரைச் சுற்றி யோசித்துப் பார்த்தேன். பரிந்துரை அல்ல. தொகுத்துப் புரிந்து கொள்கிற முயற்சி.
அரசியல் குடும்பங்களில் உள்ள அடுத்த தலைமுறை இளைஞர்கள் பலரை நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கல்லூரி காலத்து தொடர் சங்கிலி அது. இப்போது உச்சத்தில் இருக்கிற நடிகர் விஜய்யை லயோலா கல்லூரி கூடைப் பந்து மைதானத்தில் வைத்துக் கிண்டலடித்தவர்கள் அவர்கள். அந்த இடத்தில்தான் விஜய் தன்னுடைய முதல் படத்தில் நடித்தார். அந்த நேரத்தில் இன்றைக்கு உச்சத்தில் இருக்கிற சூர்யா அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். வேடிக்கை பார்ப்பதென்றால் அந்த இடத்தில் நின்று நோட்டம் விடுவது அல்ல. ஏதோ ஒரு வகையில் இந்தச் சூழலுக்குள் இருந்தார்கள். இதே அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கல்லூரி முடிந்த பின்னர் ஆளாளுக்கு ஒவ்வொரு துறையில் உச்சம் தொட்டார்கள். இந்தயிடத்தில்தான் உதயநிதியின் சினிமா பிரவேசத்தைப் பார்க்க வேண்டும். நண்பர்கள் வழியாய் தயாரிப்புத் துறையில் இருந்தவர் சினிமா வணிகத்திற்கு வருகிறார். எல்லோரும் நினைக்கிற மாதிரி அவர் தோல்வியடைந்த சினிமா தயாரிப்பாளர் இல்லை. அவர் நடித்த கதிர்வேலனின் காதல் படத்தை நான் பணிபுரிந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் எட்டே கால் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இத்தனைக்கும் அதை வாங்கிக் கொண்டு விஜய் தொலைக்காட்சிக்காகத்தான் எல்லா விளம்பரங்களையும் செய்து தந்தார்கள். அவர் படத்தை மாறி மாறி விஜய்க்கும் ஜீ தமிழுக்கும் விற்கிற வித்தை தெரிந்தவர் அவர். அரசியல் பின்புலம் இதில் இருக்கிறது என்றால், ஆமாம் இருக்கிறது.
இதே அரசியல் பின்புலத்தைத் துணைக்கு வைத்துக் கொண்டு, பல தியேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் அவரது ரெட்ஜெயண்ட் நிறுவனம் வைத்திருந்தது. நண்பர் ஒருத்தரின் படத்தை அந்நிறுவனம்தான் வெளியிட்டது. அந்நிறுவனத்தின் கோரக் கரங்கள் எந்தளவிற்கு தியேட்டர்களை வளைத்துப் பிடித்திருக்கின்றன என்பதை நேரடியாகப் பார்த்தேன். அவர்கள் கொடுத்ததுதான் கணக்கு. மதுரையில் உள்ள தியேட்டர் ஒன்றிற்கு ஆள் அனுப்பிப் பார்த்தோம். மதியக் காட்சிக்கு முன்னூறு பேர் இருந்தார்கள். கொடுத்த கணக்கென்னவோ அறுபதுதான். இப்படித்தான் இந்தத் துறையில் அவர்கள் செயல்பட்டார்கள். கேட்ட கால்ஷீட் கொடுக்காவிட்டால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொந்தரவு செய்யப்பட்டனர். நடிகர் அஜீத் பொது மேடையிலேயே மனக்குமுறலை வெளியிட்ட காட்சியும் காணக்கிடைத்ததே?
கொஞ்சம் சுமாராக இருந்தாலே அங்கே ஹீரோவாக நடிக்க வற்புறுத்தத் துவங்கி விடுவார்கள். கேமரா வெளிச்ச ஆசை யாரையும் விட்டு வைக்காது. அதுவும் படப்பிடிப்புத் தளங்களில் கிடைக்கும் போதை ராஜ போதை. அதனால்தான் சினிமா என்பது எல்லோரையும் ஈர்க்கிற குவியமாக இருக்கிறது. பெரிய இடத்துப் பிள்ளைகள் எல்லோருக்குமே அதில் ஒரு கண் எப்போதும் இருக்கும். அதை வெறும் வார்த்தைகளால் புரிந்து கொள்ள முடியாது. இரவு பார்ட்டிகளில் நீங்கள் ஐயாயிரம் கோடி ரூபாய் வைத்திருப்பவராகக்கூட இருங்கள். இரண்டு படத்தில் நடித்து விட்டு இன்னமும் சொந்தமாக ஒரு கார்கூட வாங்காத சினிமா நட்சத்திரத்திற்குக் கிடைக்கிற கண்சிமிட்டல்கள் ஐயாயிரம் கோடிக்குக் கிடைக்கவே கிடைக்காது. எல்லோரும் மேலே வந்து விழுவார்கள். உடலோடு உடல் உரசி ரம்மியமாய் உலவும் கனவு இடம் அது.
அந்த இடத்திற்குத்தான் உதயநிதியும் தாவ ஆசைப்பட்டார். இடது கையால் ஒதுக்கித் தள்ளுகிறவர் அவர் அல்ல. அவருக்கு ஒரு வியாபாரத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறார். தமிழகத்தில் நகரங்களை விட கிராமப்புறப் பகுதிகள் அடர்த்தியானவை. கொங்கு மண்டலத்தில் அவருடைய படங்கள் மற்ற இடங்களை விட நன்றாக ஓடுவதாக தியேட்டர் கணக்கீடுகள் சொல்கின்றன. இன்றைக்கு நிலையில் ஆர்யாவை விட அதிக வணிகம் இருக்கிற கதாநாயகன்தான் அவர். நடிக்கத் தெரியவில்லை. இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்கிறேன். ஆனால் மற்றவர்களை விட மோசமொன்றும் இல்லை.
இன்றைக்கு காமெடி நடிகராக இருக்கும் சத்யன் கதாநாயகனாக நடித்தார். அவரது முதல் படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். கிடைத்தால் பாருங்கள். அதையெல்லாம் ஒப்பிடும் போது உதயநிதி அவரது முதல் படத்தில் மிகச் சிறப்பாகவே நடித்திருந்தார். முதல் படத்திலேயே ஒருத்தரை நாயகராக மக்கள் ஒத்துக் கொண்டுவிட்டால் மேற்படி பயணத்தைத் தொடரலாம்.
அதில் ரஜினிக்கும் இடமிருக்கிறது. இருபது கோடி ரூபாய் பட்ஜெட் படங்களுக்கும் இடமிருக்கின்றன.
அந்த வகையில் உதயநிதி இன்னமும் பட்ஜெட் ஹீரோதான். அவருடைய வணிகம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவருக்கு என்று ஒரு கொள்ளளவு இருக்கிறது. அவரிடம் போய் ஆஸ்கர் கோப்பையை எப்போது ஏந்தி வருவாய் என்று கேட்கக் கூடாது. அவரே குபுக்கென்று சிரித்து விடுவார். அவர் நகைச்சுவை பாத்திரங்கள் வழியாகவே தன்னை இன்னமும் மக்கள் மத்தியில் இறக்கி கொண்டிருக்கிறார். ஒரு மகிழ்ச்சியான முகத்தை மக்கள் மத்தியில் எளிதில் இறக்கி விடலாம்.
அதனால்தான் அறிமுகமாகிற அத்தனை பேரும் நல்ல ஒரு காமெடி சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்க என்பார்கள். மக்கள் அடிதடியை விட அனுசரணையாக இருப்பவர்களையே அதிகமும் தங்களது குடும்பப் பையன் போல ரசிப்பார்கள். அதில் ஒரு சின்ன இடம் உதயநிதிக்குக் கிடைத்திருக்கிறது என்பதை மறுக்காதீர்கள். மக்களிடம் சென்று சேர்க்க முடியாத முகத்தை கோடிகள் கொட்டினாலும் சேர்த்து விட முடியாது.
எத்தனையோ புகழ்பெற்ற நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் ஜொலிக்க வில்லையே? அவர் தன்னுடைய சினிமாவில் ஒரு ஓரத்தில் அவரும் ஒரு நட்சத்திரமாக இருக்கிறார். அந்த நட்சத்திர பிம்பத்தைத்தான் திமுக இப்போது பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது.
திமுகவில் இப்போது சொல்லிக் கொள்கிற மாதிரி நடிகர்கள் யாரும் இல்லை. பெரும் நடிகர்கள் களத்தில் இறங்குகிறார்கள். டேமேஜ் கண்ட்ரோல் நடவடிக்கையாக தங்களிடம் இருக்கும் ஒரே அஸ்திரத்தை வீசிப் பார்க்கிறார்கள். அது குத்துமா என்கிற ஆராய்ச்சிகளில் எல்லாம் நான் இறங்க விரும்பவில்லை. அதே சமயம் திமுகவின் மேல் மட்டத்தை செயல் தலைவரின் குடும்பம் சுற்றிப் போர்த்துகிறது. எந்தவித உடைவுகளும் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அவரது குடும்பம் பின்னணியில் இறங்கியிருக்கிறது.
ஒருவகையில் தங்களது கரங்களை கட்சியின் அடிவேர் வரை பரப்புகிற முயற்சிதான். கலைஞர் அதைச் செய்தார். பிற கட்சிகளும் அதைச் செய்தன. ஜெயலலிதாவின் இல்லத்தில் இருந்த ஆட்கள்தானே இப்போது அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணத்தக்க தலைவர்கள் இதை தங்களுடைய கட்சிகளில் செய்திருக்கிறார்கள். கட்சியின் அடிமட்டம் அதை வெறுத்தாலும் வேறு வழியில்லாமல் காலப் போக்கில் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
அண்ணியார், தம்பியார், அண்ணனார் என விழுந்து கும்பிடும் மரபும் திராவிட மரபுதான். ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படி விழுந்து கும்பிடுபவர்கள் எல்லாம் நம்முடைய சொந்தக்காரர்கள்தானே?
கட்சிக்காரர்களின் கல்யாண வீடுகளுக்கு இவர்கள் போகும் போது வேடிக்கை பாருங்கள். கடவுளைப் பார்த்த மாதிரி சுற்றிப் படர்வார்கள். ஆனால் பொதுமக்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? இன்றைய தேதியில் படித்தவர்கள் இந்தப் போக்கை பெரும்பாலும் ரசிக்கவில்லை. எவன் செய்யல இதை என்று சொல்கிற ஒரு கூட்டமும் இருக்கிறது. பரவாயில்லப்பா அவங்கப்பா மாதிரி மூர்க்கமா இல்லை, சிரிச்ச மேனிக்கு இருக்கான் என்று சொல்கிற கூட்டமும் இருக்கிறது. யூஸ்லெஸ் பெலோஸ் என உமிழ்ந்து விட்டுப் போகிற கூட்டமும் இருக்கிறது.
இப்படி எல்லாம் கலந்த கூட்டத்தில் எப்படியாவது தக்கவைத்து விடலாம் என்று நம்புகிறார்கள். ஆதரவு எதிர்ப்பு என்பதைத்தாண்டி அது அவர்களுடைய களச் செயல்பாடு.
அந்த வகையில் பார்த்தால், திமுகவிற்கு இப்போது ஒரு நட்சத்திர அந்தஸ்து தேவையாக இருக்கிறது. ஏற்கனவே சொன்ன மாதிரி டேமேஸ் கண்ட்ரோல் நடவடிக்கைதான். அதேசமயம் கட்சியையும் தனது நம்பகமானவர்களை நிரப்பி கட்டுக்குள் வைக்க வேண்டிய காலக் கட்டாயம்.
திமுக தனது அஸ்திரத்தைப் பயன்படுத்திப் பார்க்கிறது. ஹம்மர் கார் வைத்திருந்தவர்தான் அவர். யார் வைத்திருக்கவில்லை என்று சொல்லுங்கள். முந்தாநாள் பிறந்த விவேக் ஜெயராமன்கூட எத்தனை கார்கள் வைத்திருந்தார். அம்பாசிடர் காரில் இவர்கள் போனால், எளிமையின் சிகரங்கள் என்று நம்புவீர்களா? இவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களது அப்பாக்களின் செல்வாக்கில் வளர்ந்தவர்கள். ஒருநாளைக்கு இருநூறு ரூபாய் சம்பாதிக்கவே அல்லாடும் பஞ்சப் பாராரிகள் நிறைந்த ஒரு கூட்டத்தில் அவர்களை ஆளும் செல்வச் சீமான்களின் புதல்வர்கள் இப்படித்தான் உலா வருகிறார்கள். காலம் பூராகவும் இதுதானே நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கவே முடியாது. எதிர்காலத்தில் தடுத்து விடலாம்தான். தடுத்து விடலாம் என்கிற மனநிலை மெல்ல சமூகத்தில் மேலெழுந்து வருகிற நேரத்தில், உதயநிதி என்கிற குட்டி நட்சத்திரம் எழுந்து மேலே வர ஆரம்பித்திருக்கிறது. காலம் அதற்குச் சாதகமாக இல்லை. ஆனாலும் வானில் நீந்தியே ஆகவேண்டிய கட்டாயம். மிச்சம் அவர்களுடைய பாடு. மக்களின் பாடு!

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.  அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...