முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!



ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!


அம்பி ஆர்கைவ்ஸ் கார்பன் காப்பி.

   ·   PRINT   ·   T+  


வீரம் படத்தில் நடிகர் அஜித்
ஜில்லா, வீரம் ஆகிய படங்களின் 'மாபெரும்' வெற்றிக்கு முக்கியமாக உழைத்தவர்கள் தல - தளபதியின் ரசிகர்கள்.
U - அனைவரும் பார்க்கலாம்
U/A - பெரியவர்களுடன் பார்க்க வேண்டிய படம்
A - கண்டிப்பாக பெரியவர்கள் மட்டும்...
இதில் புதிதாக ஒரு சென்சார் சான்றிதழை, T - தல, தளபதி ரசிகர்களுக்கு மட்டும் என்று கொண்டு வரவேண்டும்.
ஜில்லா, வீரம் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்த படம் கிடையாது. என்ன... ஒன்று சுமார் மொக்கை, இன்னொன்று சூர மொக்கை.
இரண்டு படங்களிலும் ஹை-லைட் காட்சி என்று கூற, ஒன்றுகூட இல்லை. வெறும் சண்டை, பன்ச் டயலாக்.
மசாலா படங்களுக்கு தேவையான இன்சைட்டிங் பாயின்ட் என்ற ஒரு விஷயம் சுத்தமாக தென்படவில்லை.
இந்த இரண்டு படங்களில் 'நம்பர் ஒன்' ஆகச் சிறந்து விளங்குவது ஜில்லா. கடுப்பேற்றிய முதல் விஷயம் எடிட்டிங். அப்படியே எடிட்டங் இல்லாமலே படத்தை தூக்கிக் கொட்டிவிட்டார் இயக்குனர். 'இந்தாங்க... நீங்க விஜய் ரசிகர்கள். நாங்க எதை வேணுன்னாலும் கொட்டுவோம்; அதுல உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கோங்க' என்று சொல்லும் அளவுக்கு மோசமான எடிட்டிங்.
வில்லனுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக், மோகன்லால் - சிறு வயது விஜய்க்கு ஒரு ஃப்ளாஷ் பேக், விஜய்க்கு ஒரு இன்ட்ரோ, மோகன்லாலுக்கு ஒரு இன்ட்ரோ, காஜலுக்கு ஒரு இன்ட்ரோ, இதுக்கு நடுவுல ஒரு தங்கச்சி சென்டிமென்ட், ஒரு தம்பி சென்டிமென்ட், சூரிய வம்சம் அப்பா சென்டிமென்ட், அம்மா சென்டிமென்ட். இது எல்லாத்துக்கும் நடுவுல, விஜய் போலீசா வேற திடீர்னு அவதாரம் எடுத்து 'சாரே ஜஹான் சே அச்சா' இப்படி ஏதேதோ ஹிந்தி வசனம் பேசி சிரிப்பை மூட்டுகிறார்.
படத்தில் வரும் ஒரு காட்சிக்கும், அதற்கு அடுத்து வரும் காட்சிக்கும் பெரிய லிங்கே கிடையாது.
'சிவன் இல்லாம சக்தி கிடையாது; சக்தி இல்லாம எவனும் கிடையாது'
வேட்டைக்காரன் படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் பேசுவாரே தளபதி, அதே பாணியில்தான் இந்தப் படத்திலும் பேசியிருக்கிறார். மாடுலேஷன் முடியல்ல்ல்ல.
'அவன் உன் பொண்ணு வண்டி சத்தத்தையே இப்படி நோட் பண்றானே அப்போ உன் பொண்ணு! உங்கப் பொண்ணுக்கு இருக்கே ரெண்டு (சிறிய இடைவெளி) கண்ணு அதுதான் ரொம்ப புடிச்சிருக்கு!'
இந்த வசனங்கள் தான் காமெடியாம்.
காஜல் அகர்வாலை போலீசாக பார்ப்பதைவிட ஒரு மிகக் கொடுமையான அனுபவம் ரசிகருக்கு கிடைத்திருக்காது.
கமிஷனரின் கையை நட்டநடு ரோட்டில் வெட்டும் விஜய், அடுத்தக் காட்சியில் ஒரு எக்ஸாம் எழுதிவிட்டு அசிஸ்டென்ட் கமிஷனராக மாறுவது, அடுத்த சில காட்சிகளில் டெபுடி கமிஷனராக மாறுவது... இதெல்லாம் விஜய்க்கு மட்டுமே சாத்தியப்படும்.
முரட்டுக் காளை படத்தில் அமைந்த சுருளி ராஜன் கதாப்பாத்திரம் போல் சம்பத்தின் கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. அய்யய்யோ ட்விஸ்ட் வெளியே வந்துடுச்சோ... முரட்டுக் காளை பார்க்காதவர்களுக்கு, ஜில்லா ட்விஸ்ட் புதுமையாக தோன்றலாம்.
முதற் காட்சியில் அறுக்கப்படுவது ஜெயபாலனின் கழுத்து மட்டுமல்ல; ரசிகர்களின் கழுத்தும் தான். காட்சிக்கு காட்சி மோகன்லால் 'இந்த சிவன்னுக்கு, இந்த சிவனுக்கு' என்று ஒரே மாதிரி வசனத்தை பேசி கழுத்தருக்கிறார். மோகன்லாலை போன்ற ஒரு நடிகரை இப்படி வெறும் பன்ச் வசனத்திற்காக விரயம் செய்திருக்க வேண்டாம்.
இமானின் இசை ஆறுதல், அதுவும் தேவையற்ற இடங்களில் வருவது சலிப்பைக் கூட்டுகிறது.
இதற்கு மேலும் விவரித்தால் ஒரு நெடுந்தொடர் போல் நீண்டு கொண்டே செல்லும். அதனால் இத்துடன் ஜில்லா பற்றி பேசுவதற்கு முற்று புள்ளி வைக்கிறேன்.
னந்தம் படத்தின் கதைக்களத்திற்கு சரவணாவின் திரைக்கதை கோட்டிங்காக கொடுக்கப்பட்டால் அது வீரமாக தோன்றும்.
படம் முழுக்க இருக்கின்ற ஒரே விஷயம் தல புராணம். நல்ல விஷயம் டைட் - எடிட்டிங், கரெக்ட்டான பன்ச் வசனங்கள்.
ஒட்டு மொத்த படத்தையும் புரட்டிப் போட்டுப் பார்த்தாலும் புதுசா பார்ப்பதற்கு ஒன்றுமே கிடையாது. அஜித்திற்கும் தமன்னாவிற்கும் வருகின்ற காதல் கொஞ்சம்கூட கன்வின்சிங்காக இல்லை. 'ஒரு குருவிக் கூட்ட பிரிக்காதவ குடும்பத்த பிரிக்க மாட்டா மாமா'. இந்த மாதிரி ஹீரோயின் செய்யற செயலை பார்த்து வியந்து காதலில் விழும் நாயகனை நாம சமுத்திரம் காலத்திலிருந்து பார்த்திருக்கோம். வீரம்ல தல காதலில் விழப் பார்ப்பதற்கு புதுசாக இருக்கோ? சந்தானம் காமெடி ரசிக்கற மாதிரி அமைந்திருந்தது.
டெண்டர் காட்சி மரண மாஸ். அய்யய்யோ சான்ஸ் இல்லை என்று விவரித்தார்கள். அப்படி என்னங்க இருக்கு இதுல. மிஸ்டர் பாரத், அண்ணாமலை படத்துலலாம் இந்த மாதிரி காட்சியை எத்தனை வாட்டி பார்த்திருப்போம்.
வீரம் டார்கெட் செய்திருப்பது பன்ச் பேச ஒரு இடம், சண்டை போட ஒரு களம் இவ்வளவு தான். லவ், சண்டை, பஞ்ச். சென்டிமென்ட், பஞ்ச், லவ்.
தம்பிங்கடா, அண்ணணன்டா, தலடா, ரசிகன்டா. இவ்வளவு தான் வீரம் கொடுக்கிற விஷயம்.
எஸ்.பி.முத்துராமன் படங்கள் பார்த்து வளரவில்லை என்றால் வீரம், ஜில்லாவை மசாலா படம் என்று கூறியிருப்பேன்.
ஷங்கர் தந்த க்ளாஸ் மசாலா படங்களை பார்க்காமல் போயிருந்தால் வீரம், ஜில்லாவை மசாலா என்று கூறியிருக்கலாம்.
இன்னும் பத்து வயதை தாண்டாமல் குழந்தையாகவே இருந்திருந்தால் இவ்விரு படங்களும் மாஸ் என்று தோன்றியிருக்கும்.
இவ்விரண்டு படங்களை காட்டிலும் சுசீந்திரன் இயக்கிய 'பாண்டிய நாடு' எவ்வளவோ நல்ல மசாலா.
படம் பார்க்கும்போது கதாநாயகனின் மாஸ்'ஸினை கூட்ட சம்மந்தம் இல்லாமல் அடி வாங்கும் ஜிம்பாடி பாய்ஸ், முறுக்கு மீசை வில்லன்களை பார்க்கையில் பாவமாகத்தான் தோன்றுகிறது.
இந்த இரண்டு படமும் ஹிட் ஆகும்போது இது மாதிரி தரக் குறைவான படங்கள் நிறைய வரக் கூடுமோ என்ற அச்சம்தான் கூடுகிறது.
ரஜினி என்ற நடிகரை சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தினால் மாஸ் படத்திற்கென்று ரசிகர்கள் முடக்கினார்கள். இப்போது அதைப்போல் தல - தளபதி என்ற பட்டத்தினால் விஜய், அஜித் என்ற நடிகர்கள் தொலைந்துவிடுவார்களோ என்ற அச்சம் கூடுகிறது.
சாதாரண சினிமா ரசிகனாக பார்க்கும்போது ஜில்லா, வீரம் இரண்டுமே கேலிச் சித்திரங்களாகத்தான் தோன்றுகிறது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

அம்போவான கிம்போ

BY  JEEVANAND RAJENDRAN இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி. அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி. நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம். பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒர...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!'  - யாரோ ஒருவன். அ ந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து  ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.  ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இந்தப...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

இருட்டு அறையில் முரட்டு குத்து - ஐ சப்போர்ட் :-)

அராத்து இந்த படத்துக்கெல்லாம் எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் இந்த  படத்துக்கு எழும் எதிர்ப்பைப் பார்த்தவுடன் எழுத வேண்டிய கட்டாயம். முதலில் படம் :- மொக்கை படம். கொஞ்சம் கூட கவனமும் , மெனக்கெடலும் , ப்ரொஃபஷனலிஸமும் இல்லாத மட்டி படம். அடல்ட் காமடி : இதை எடுக்க மூளையும் ரசனையும் வேண்டும். கலா ரசிகனாக இருக்க வேண்டும். அடல்ட் காமடி என்ற பெயரில் இந்த படத்தில் இருப்பதெல்லாம் , கற்பனை வளம் இல்லாத அருவருப்பு காமடி.அதிலும் ஒரு ஓவியத்தை பார்த்து இருவர் நின்று கொண்டே சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகள் அருவருப்பின் உச்சம். அடல்ட் காமடியை விடுங்கள், படத்தில் காமடியே இல்லை. செக்ஸ் பற்றி , பொதுமக்கள் பேசிக்கொள்வதை , வெளிப்படையாக திரையில் வைத்ததால் ஆர்பரிக்கிறார்கள் , அவ்வளவே ! கவர்ச்சி : இதைப்போன்ற படங்களில் கவர்ச்சியாவது இருக்க வேண்டும். க்ளீவேஜ் , தொடையை காட்டினால் கவர்ச்சி என்பதெல்லாம் , பிரசாந்த் காலத்தோடு மலையேறி விட்டது. இந்த படத்தில் காயலான் கடை பார்ட்டி , டொக்கு ஒடிசல் வாங்கியதையெல்லாம் காட்டி கவர்ச்சி என்கிறார்கள், மண்ணாங்கட்டி ! அவனவனு...