முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முடிவில்லாத பாதையில்…..


We accordingly direct that in cases of sitting MPs and MLAs, who have charges framed against them under offences of the Representation of the People Act, the trials are concluded as speedy as possible and in no case later than one year from the date of framing of charges.
குற்றச்சாட்டுக்கள் வரையப்பட்ட காலத்திலிருந்து ஒரு ஆண்டுக்குள், அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும், முடிக்கப்பட வேண்டும். வழக்குகள் தினந்தோறும் நடத்தப்பட வேண்டும். தவிர்க்க இயலாத தாமதம் ஏற்பட்டால் தாமதத்துக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட நீதிபதி, தலைமை நீதிபதிக்கு இது குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும். இதுதான் இந்த ஆண்டு மார்ச் 10 அன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோதா மற்றும் குரியன் ஜோசப் அளித்த இடைக்கால தீர்ப்பு.
திங்கட்கிழமை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் செல்லமேஸ்வர் அடங்கிய அமர்வு, பெங்களுரில் நடந்து வரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்று வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பு அளித்து உள்ளது.
sasi3
ஒரு ரூபாய் சம்பளத்தில் வாங்கிய பளபளக்கும் உடைகளோடு, ஜெயா மற்றும் சசி.
இரண்டு செய்திகளும் முரணான செய்திகள் போலத் தோன்றலாம். உண்மைதான். ஜெயலலிதா வழக்கில் தடை விதித்துள்ள மனுவும் விசித்திரமானது. சொத்துக் குவிப்பு வழக்குக்கு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் பவானி சிங். சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரசு வழக்கறிஞரின் வாதங்கள் மற்றும், எதிரித் தரப்பு வாதங்கள், ஆகிய இரண்டும் முடிவடைந்ததும், தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். இந்த நிலையில்தான் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.
பவானி சிங் மட்டுமே என் வழக்கில் வாதாடும் அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்ற வினோதமான வழக்கை குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தார். அந்த வழக்கையும், உச்சநீதிமன்றம் சிரமேற்கொண்டு விசாரித்து, ஜெயலலிதா கேட்ட பெட்ரோமாக்ஸ் லைட்தான் சிறந்தது. வேறு பந்தமெல்லாம் கிடையாது என்று தீர்ப்பளித்தது. அடுத்து, செப்டம்பர் 30 அன்று ஓய்வு பெற இருந்த நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு கொடுத்து, அவரையே தொடர்ந்து தீர்ப்பளிக்கச் செய்ய வேண்டும் என்று மற்றொரு விசித்திர வழக்கை தொடுத்தார் ஜெயலலிதா. அதையும் விசாரித்தார்கள் நீதி நாயகர்கள். பேரம் படியவில்லையோ என்னவோ… பாலகிருஷ்ணா எனக்கு பணி நீட்டிப்பு வேண்டாம் என்று கூறி விட்டார். அதனால் வேறு வழியில்லாமல், ஜெயலலிதாவின் விருப்பத்தை உச்ச நீதிமன்ற நீதி நாயகர்களால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது.
அதன் பிறகு, பெங்களுரு வழக்கில் இறுதி வாதங்கள் தொடங்க இருந்தது. தொடங்கும் நேரத்தில், பவானி சிங் “ரெஸ்பெக்டட் சார், அஸ் ஐ யம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்” என்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நீதிமன்றம் வர இயலாது என்று கூறினார். நீதிபதியும், இரண்டு முறை பொறுத்துப் பார்த்தார். மூன்றாவது நாள் அதே காரணத்தை கூறியதும், எரிச்சலடைந்த நீதிபதி, பவானி சிங்கின் ஒரு நாள் ஊதியமான 65 ஆயிரத்தை அபராதமாக விதித்தார். அப்போதும் சிங் வரவில்லை. மறுநாள் மீண்டும் ஒரு 65 ஆயிரத்தை அபராதமாக விதித்ததும், பவானி சிங் நீதிமன்றம் வந்தார். வந்து இரண்டு வார்த்தைகள் பேசி விட்டு, மயக்கமடைந்ததைப் போல உட்கார்ந்து கொள்வார். பிறகு, அவரது உதவியாளர் வாதிட்டார். தனக்கு 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றார் பவானி சிங். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா, பவானி சிங்கின் தகிடுதத்தங்கள் முழுமையையும் அறிந்து, விரிவான ஒரு தீர்ப்பை வழங்கினார்.
“இந்த வழக்கில் வாதங்கள் 02.08.2013 அன்று தொடங்கின. எதிரிகள் தரப்பில் வாதங்கள் 16.08.2013 அன்று முடிவடைந்தன. அரசுத் தரப்பு 23.08.2013 அன்று தொடங்கிய வாதங்கள் 27.08.2013 அன்று நின்று போயின. இந்த வழக்கு 27.08.2013 முதல் தினந்தோறும் தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், எத்தனையோ முறை தேதி வழங்கினாலும், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வாய்தா வாங்குகிறார். மருத்தவ சான்றிதழை அளிக்கிறார். மருத்துவ சான்று அளித்த மருத்துவரின் பெயரைக் கூறுமாறு நீதிமன்றம் கேட்டபோது, கடைசி வரை கொடுக்காமல் மறுத்துள்ளார். இதனால், ஒவ்வொரு முறையும், என்ன காரணத்தினாலோ, இந்த வழக்கை தாமதப்படுத்துவதில் மிகுந்த முனைப்பு காட்டுகிறார்.
நீதிமன்றத்தின் வழக்கு உத்தரவுகளை பார்வையிட்டதில், ஒவ்வொரு முறை இந்த வழக்கு முடியும் தருவாயை நெருங்கும்போது, இந்த வழக்கை விரைவாக முடிப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், நீதிமன்றத்தோடு ஒத்துழைக்காதது மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறையும், நீதிமன்றத்தோடு மோதும் போக்கை கடைபிடித்துள்ளது தெளிவாக தெரிய வருகிறது. மேலும், அவருக்கு நீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் எண்ணம் துளியும் இல்லை என்பதும் தெரிய வருகிறது. இந்த வழக்கு 17 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் அரசு வழக்கறிஞரை நீதிமன்றத்தோடு ஒத்துழைக்க நெருக்கடி தந்தே ஆக வேண்டும் என்ற அசாதாரண சூழலில் வேறு வழியின்றி அவரை ஒத்துழைக்க வைக்க இந்த நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில், இந்த ஆணைக்கு தடை விதித்தாலோ, இந்த ஆணையை மாற்றினாலோ, இந்த வழக்கை விரைவாக முடிக்க நினைக்கும், நீதிபதிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
மேலும், இந்த நீதிமன்ற குறிப்புகளைப் பார்வையிடுகையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், நேரில் ஆஜராகாமல், ஒவ்வொரு முறையும் மனுத்தாக்கல் செய்வதும், வாதங்களை தொடங்க விடாமல் தாமதப்படுத்துவதும், என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, அதன் மூலம், விசாரணை நீதிமன்றத்தை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.
KarnatakaHC
Karnataka High Court Principal Bench, Bengaluru
இந்தப் பின்னணியில்தான் 14.03.2014 அன்று ஒரு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது (65 ஆயிரம் அபராதம் விதித்த உத்தரவு) குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களாலும், அரசுத் தரப்பாலும், எந்த அளவுக்கு நீதிமன்றம் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது அந்த உத்தரவு மிக மிக தெளிவாக, எடுத்துரைக்கிறது. இந்த உத்தரவு மிக மிக நியாயமானதும், சரியானதும் ஆகும். இதன் காரணமாக, இந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை”
இந்த உத்தரவில் என்ன அய்யா தவறு ? ஒரு நீதிமன்றத்தில் மருத்துவ சான்றிதழ் தெரிவித்து விட்டு, அந்த மருத்துவரின் பெயரைக் கூட சொல்லாமல் மறைக்கும் ஒரு அயோக்கியனின் ஒரு நாள் ஊதியத்தை பிடிப்பதில் என்ன தவறு ? இந்த பவானி சிங், அரசுத் தரப்போடு கூட்டு சேர்ந்து கொண்டு, ஜெயலலிதாவை காப்பாற்றத் துடிக்கும் துடிப்பை நீதிமன்றம் தடை செய்தது நியாயமான காரியமா இல்லையா ? இதில் என்ன தவறு இருக்கிறது ? ஆனால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், பவானி சிங் செய்த மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர் மற்றும் சவுஹான் ஆகியோர், சொத்துக் குவிப்பு வழக்கு நடத்துவதற்கு மூன்று வார காலம் தடை விதித்துள்ளனர். எதற்காகவென்றால், பவானி சிங் சிகிச்சை எடுக்க வேண்டுமாம்.
உச்சநீதிமன்றம் தன்னுடைய உத்தரவில், “மனுதாரர் (பவானி சிங்) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மனுதாரருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும், அவர்தான் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்பதால், அவர் வேலையை வேறு யாரிடமும் வழங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சிகிச்சை எடுக்க மூன்று வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, மூன்று வார காலத்துக்கு பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குக்கு தடை விதிக்கிறோம். 28 ஏப்ரல் 2014 வரை இந்த தடை. 28 ஏப்ரல் 2014க்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்ந்து, தினந்தோறும் நடக்க வேண்டும். அப்போதும் பவானி சிங்குக்கு உடல் நிலை சரியில்லை என்றால், அவர் பெங்களுரு உயர் நீதிமன்றத்தை அணுகி வேறு அரசு வழக்கறிஞரை நியமிக்குமாறு நாங்கள் அவரை கேட்டுக் கொள்வோம்.”
இதுதான் அந்த உத்தரவு. பவானி சிங்கை விட்டால், ஒட்டு மொத்த கர்நாடக மாநிலத்தில் வேறு வழக்கறிஞர்களே இல்லையா ? இவர் மட்டும்தான் சட்டம் பயின்றவரா ? அப்படியா யாருமே இல்லாமல் போய் விட்டார்கள் ? உடம்பு சரியில்லாத கழுதைக்கு நீதிமன்றத்தில் என்ன வேலை ? மருத்துவமனையில் படுத்து சிகிச்சை எடுக்க வேண்டியதுதானே ? இது ஒரு புறம் இருக்கட்டும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஒரு வாதத்துக்காக சரி என்றே ஏற்றுக்கொள்வோம். இந்த உத்தரவின்படி, மூன்று வாரங்கள் கழித்து பவானி சிங் ஆஜராக வேண்டும். அப்படி இல்லையென்றால், வேறு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்துக்குத்தானே உத்தரவு போட்டிருக்க வேண்டும் ? அந்த தீர்ப்பின் வாசகங்களை கவனமாக பாருங்கள். ” அப்போதும் பவானி சிங்குக்கு உடல் நிலை சரியில்லை என்றால், அவர் பெங்களுரு உயர் நீதிமன்றத்தை அணுகி வேறு அரசு வழக்கறிஞரை நியமிக்குமாறு நாங்கள் அவரை கேட்டுக் கொள்வோம்”. மூன்று வாரங்களில் பவானி சிங்குக்கு உடல் நிலை சரியில்லை என்றால், வேறு வழக்கறிஞரை கர்நாடக உயர்நீதிமன்றம் நியமித்து, இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்றுதானே உத்தரவிட்டிருக்க வேண்டும் ?
BhavaniSingh_1788597f
அரசு வழக்கறிஞர் பவானி சிங்
இதில்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தந்திரம் அடங்கி இருக்கிறது. மூன்று வாரங்கள் கழித்து இந்த வழக்கு மீண்டும் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வரும். அப்போது, பவானி சிங், உட்காரும் இடத்தில் கட்டி என்று ஒரு புது மனுவை தாக்கல் செய்வார். உட்காரும் இடத்தில் கட்டியோடு ஒரு வழக்கறிஞரை வாதாடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, மனித உரிமை மீறலாகும். அந்த கட்டி சரியாகும் வரை, சிறப்பு நீதிமன்றம் காத்திருக்க வேண்டும். கட்டியின் தற்போதைய வளர்ச்சி அல்லது கிளர்ச்சி குறித்து, கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர், எங்கள் முன்னால் ஒரு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கட்டி சரியாகும் வரை, வழக்கை கட்டி வைக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு போடுவார்கள்.
இதற்காகத்தான் இந்த வழக்கை நிலுவையில் வைத்திருக்கின்றனர் செல்லமேஸ்வர் மற்றும் சவுகான் ஆகிய நீதியரசர்கள். இந்த அமர்வில் மூத்த நீதிபதியான சவுகான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு நெருக்கமோ நெருக்கம். அவர் என்ன சொன்னாலும் செய்வார். மற்றொரு நீதிபதியான செல்லமேஸ்வரின் பெயரும், உச்சநீதிமன்றத்தில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த பிரகஸ்பதிகள்தான், தடை விதித்து தீர்ப்பெழுதியுள்ளனர்.
பவானி சிங்குக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது குறித்து, வரலாற்றை சற்றே பின்னோக்கிப் பார்ப்போம். 
1996ல், ஜெயலலிதா அரசு படுதோல்வியடைந்ததை அடுத்து, மத்திய அரசும் மாநில அரசும் மள மளவென்று ஜெயலலிதா மீதும் சசிகலா மீதும் வழக்குகளை தொடுத்தன. முதன் முதலாக வழக்கில் சிக்கியவர், அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த ஆதிராஜாராம். வழக்கறிஞர் விஜயனை வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்தார். அந்த வழக்கை மாநில புலனாய்வுத் துறை விசாரித்ததும், குற்றவாளிகள் பிடிக்கப்படவேயில்லை. உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதும், வழக்கு சூடு பிடித்தது. ஆதி ராஜாராம் மீது பிடிவாரண்ட் போடப்பட்டது. உடனடியாக ஆதிராஜாராம், மருத்துவமனையில் நெஞ்சு வலி என்ற அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு எப்போது வேண்டுமானாலும் நெஞ்சு வலி வரலாம். ஆனால், அது பரிசோதனையில் தெரியாது என்று கூறினார்.
அமலாக்கப்பிரிவால் அடுத்து கைது செய்யப்பட்டவர், மன்னார்குடி மாஃபியாவைச் சேர்ந்த டிடிவி.பாஸ்கரன். இவரை கைது செய்து, சிறையில் அடைக்க செல்லும் வழியிலேயே நெஞ்சு வலி என்றார். அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதும், உடனடியாக ஏ.சி அறையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் இருந்த அறையில், வண்ணத் தொலைக்காட்சி, வீடியோ கேசட் ப்ளேயர் ஆகியவை வழங்கப்பட்டன. அவருக்கு செல்போனும் வழங்கப்பட்டது. தினந்தோறும் பல்வேறு பார்வையாளர்கள் அவரை பார்த்துச் சென்றனர். ஆனால் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றதும், மருத்தவர்கள், அவர் உடல் நிலை சரியில்லை என்று கூறி, அவரை பார்க்க அனுமதி மறுத்தனர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றம் சென்று விசாரிக்க உத்தரவு பெற்று வந்தனர். அதிகாரிகள் வந்த போது, பாஸ்கரன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
sasi4
நீதிமன்றப் படியேறும் சசிகலா மற்றம் இளவரசி
அடுத்தது உடன்பிறவா சகோதரி சசிகலா. 2 ஜனவரி அன்று சசிகலா கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. சிறையிலிருந்து அவர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அரசு மருத்துவமனையில் அவரது நோய்க்கு சிகிச்சை அளிக்க, போதுமான வசதிகள் இல்லையென்று கூறி, அப்போல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 
ஜுன் 1997ல் அவர் நீதிமன்றத்துக்கு வரத் தவறினார். அவர் வழக்கறிஞர்கள், சசிகலாவால் நடக்கவே முடியாது என்று கூறினர். நீதிபதியோ, இந்தக் கதையெல்லாம் கூறாதீர்கள். அடுத்த வாய்தாவுக்கு வந்தே தீர வேண்டும். வரவில்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன் என்றார். ஜுன் 25 1997 அன்று, ஆம்புலன்ஸில் வந்து, இரண்டு செவிலியர்கள் புடைசூழ, நீதிமன்றத்தின் உள்ளே ஸ்ட்ரெச்சரில் வந்தார் சசிகலா. கையில் க்ளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. நீதிபதி சம்பந்தம், நான் நீதிபதி என்பது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். நீதிபதி பேசுவதையே புரியாதது போல பார்த்துக் கொண்டிருந்தார் சசிகலா. எரிச்சலான நீதிபதி, உடனடியாக சசிகலாவை அப்படியே அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். பயந்து போன சசிகலா, நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது என்றார். அரசு மருத்துவர் குழு சசிகலாவை பரிசோதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி. சசிகலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நல்ல ஆரோக்யத்துடன், சரியான மனநிலையில் இருக்கிறார் என்று சான்றளித்தனர். அதன் பிறகு, நீதிமன்றத்துக்கு வரும்போதெல்லாம் வீல் சேரில்தான் வருவார் சசிகலா. சசிகலாவை நீதிமன்றத்துக்கு வரும்படி கட்டாயப்படுத்திய நீதிபதியின் பெயர் சம்பந்தம். இந்த சம்பந்தம்தான், மேயர் சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளையின் சட்ட ஆலோசகராக அவர் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது (சின்னம்மா… நோட் பண்ணுங்கம்மா)
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்போது கடைபிடித்த உத்தியை தற்போது அரசு வழக்கறிஞர் கடைபிடித்து வருகிறார். இதே வழக்கில் பிறப்பிக்கப்பட்ட மற்றொரு உத்தரவும் விவாதிக்கப்பட வேண்டியது.
கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கிய ஒரு தீர்ப்பு ஒரு ஊழல் வழக்கின் போக்கையே திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலோ, அல்லது மற்ற வழக்குகளிலோ, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கையிலோ, அல்லது அதற்கு முன்னதாகவோ, அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களை நீதிமன்றத்தில் இணைத்து உத்தரவு பிறப்பிப்பார்கள். அந்த உத்தரவு எதற்காகவென்றால், வழக்கு முடிவதற்குள், சம்பந்தப்பட்டவர், சொத்தை விற்று விடக்கூடாது என்பதற்காக. ஜாபர் சேட் மீது தொடரப்பட்ட வழக்கில் கூட, அவர் வாங்கிய வீட்டு மனைக்கு இணைப்பாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த இணைப்பாணையை சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றமோ, அல்லது, அந்த சொத்து இருக்கும் இடத்தில் உள்ள நீதிமன்றமோ பிறப்பிக்கலாம். இப்படி ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக இருந்த 22 நிறுவனங்களின் சொத்துக்களுக்கு இணைப்பாணை பிறப்பித்திருந்தது, இந்த இணைப்பாணை பிறப்பிக்கப்பட்ட ஆண்டு 2000. இதன் பிறகு, 2003ம் ஆண்டில், இந்த வழக்கை தமிழகத்திலிருந்து பெங்களுருக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது பின்னால் நடந்தது. 2000ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்துத்தான் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள் ஜெயலலிதா உள்ளிட்டோர்.
ஒரு வழக்கு, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, அது தொடர்பான வழக்குகுளை, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் முறை. இதுதான் இந்திய நீதித்துறை நடைமுறை. ஆனால், வழக்கு பெங்களுருக்கு மாற்றப்பட்ட பின்னரும், நீதிபதி அருணா ஜெகதீசன், இந்த வழக்கை எடுத்து விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதன் பின்னணியில் இருப்பவர், தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சதீஷ் அக்னிஹோத்ரி. இவர் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி, முதலில், நீதிபதி தேவதாஸிடம் கேட்டுக் கொண்டதாகவும், அவர் மறுக்கவே, நீதிபதி அருணா ஜெகதீசனிடம் வழக்கை அனுப்பி வைத்ததாகவும் கூறுகின்றன நீதிமன்ற வட்டாரங்கள்.
06MA-CITY-PORKIZHI_1386733f
நீதிபதி அருணா ஜெகதீசன்
நீதிபதி அருணா ஜெகதீசன் மாவட்ட நீதிபதியாக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியானவர் அவர் கணவர் ஜெகதீசனும் வழக்கறிஞர். இவர் எளிமையானவர். எளிமையானவர் என்றதும், பந்தா பகட்டையெல்லாம் விரும்பாதவர் என்று நினைத்து விடாதீர்கள். எளிதில் அணுகக் கூடிய நீதிபதி என்றே இவருக்கு உயர்நீதிமன்றத்தில் பெயர். இவரை அணுக, வழக்கறிஞரான இவர் கணவர் ஜெகதீசனை அணுகினால் போதுமானது. இவர் மாவட்ட நீதிபதியா இருந்தபபோது, இவரின் கட்டுப்பாட்டில் உள்ள நடுவர் நீதிமன்றங்களில், இவர் கணவர் ஏதாவது ஒரு வழக்குக்காக சென்றால், உடனே அருணா ஜெகதீசன், சம்பந்தப்பட்ட நடுவரை அழைத்து, “இன்னைக்கு சார் வருவார். பாத்துக்கங்க” என்று கூறுவார். அதாவது என்னவென்றால், ஜெகதீசன் கேட்கும் உத்தரவை அந்த நடுவர் பிறப்பிக்க வேண்டும். தவறியவர்களின் வருடாந்திர ரகசிய அறிக்கையில் மோசமான குறிப்புகள் அருணா ஜெகதீசனால் எழுதப்படும். அப்படி மீறும் துணிச்சல் உள்ள நடுவர்கள் ஒருவர் கூட கிடையாது என்பதுதான் யதார்த்தம்.
சரி. விஷயத்துக்கு வருவோம். நீதிபதி அருணா ஜெகதீசன் 22 நிறுவனங்களின் சொத்துக்களை இணைத்த உத்தரவை ரத்து செய்ததோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. இணைக்கப்பட்ட இந்த சொத்துக்களின் சொந்தக்காரர்கள், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களா, இல்லையா என்பதே தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
இதற்குப் பெயர் என்ன தெரியுமா ? அதிகப்பிரசங்கித்தனம். சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ள சொத்துக்கள், ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்களா இல்லையா என்பதை, பல்வேறு சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் மூலம் விசாரணை செய்து கொண்டிருப்பது பெங்களுரு சிறப்பு நீதிமன்றம். சாட்சிகள் விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில், இந்த விவகாரத்துக்குள் செல்வதற்கு உயர்நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால், ஜெயலலிதாவுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பித்துள்ளார் அருணா ஜெகதீசன்.
iuneezelrldrck30ie3b
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் சுப்பிரமணி
இந்த வழக்கில் மற்றொரு சிறப்பு நடந்துள்ளது. உச்சநீதிமன்றத்தால் இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர்தான் பவானி சிங். அவர்தான் அருணா ஜெகதீசன் நீதிபதி முன்பாக ஆஜராகி வாதாடியிருக்க வேண்டும். ஆனால், அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியவர் யார் தெரியுமா ? அதிமுக வழக்கறிஞர்களில் ஒருவராக வழக்கறிஞர் இன்பதுரை. அதிமுக அடிமைகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இன்பதுரையும் அதற்கு விதிவிலக்கல்ல. இன்பதுரை உறுப்பினராக இருக்கும் ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளருக்கு எதிரான வழக்கில், அந்தக் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரே அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி, இவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு நீதிபதி அந்த வழக்கை விசாரிக்கும் வேடிக்கையை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ? அந்த வேடிக்கை ஜெயலலிதாவின் வழக்கில் நடந்துள்ளது.  இப்படியொரு தீர்ப்பை வழங்கியதோடு நிற்கவில்லை நீதிபதி அருணா ஜெகதீசன்.  இந்தத் தீர்ப்பை பத்திரிக்கைகளுக்கு வழங்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் பத்திரிக்கையாளர்கள், இந்தத் தீர்ப்பை முழுமையாக கையால் எழுதி செய்தி வெளியிட்டனர்.   டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தியாளர் சுப்பிரமணி மட்டுமே சிறப்பான முறையில் செய்தி வெளியிட்டிருந்தார்.  மற்ற ஊடகங்கள் இதைத் தொட்டும் தொடாமலும் விட்டு விட்டன.
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, அதில் 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு நீண்ட நெடிய பாதையில் பயணித்துக் கொண்டே இருக்கிறது. இந்தப் பாதை எங்கே செல்லும் என்பது தெரியவேயில்லை.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இப்படி முடிவில்லாமல் பயணிப்பதற்கான முழுக் காரணமும், நீதித்துறையில் நிலவும் ஊழல் மட்டுமே. ஒரு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா போன்ற நபர்களால், ஒரு வழக்கை 17 ஆண்டுகள் இழுத்தடிக்க முடிகிறதென்றால், ஜெயலலிதாவை விட அதிக பணமும் அதிகாரமும் படைத்த அரசியல்வாதிகள் என்னவெல்லாம் செய்ய மாட்டார்கள் ?
1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒரு விஏஓவை இரண்டு ஆண்டுகளில் தண்டிக்கும் நீதிமன்றங்கள், 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்த ஒரு அரசியல்வாதியை 17 ஆண்டுகள் காப்பாற்றுகின்றன.
இப்படிப்பட்ட நீதித்துறையை விமர்சிக்கத்தான் இந்தியாவில் எந்த ஊடகமும் இல்லை. நீதிமன்ற அவமதிப்பு என்ற ஆயுதத்தை கையில் வைத்து அனைவரையும் மிரட்டுகிறார்கள். அப்படியும் மீறி ஓரிருவர் எழுதினால், எழுதியவன் மீது பொய் வழக்கு போட்டு, இரண்டு மாதமாக ஜாமீன் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். அப்படி எழுதப்படும் இணையதளத்தை முடக்குவதில் முனைப்பு காட்டுகிறார்கள். மேலும் பல்வேறு வழக்குகள் பாயும் என்று மிரட்டுகிறார்கள்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்ற அத்தனை பேரும் ஊடகங்களாலும், பொதுமக்களாலும் விமர்சிக்கப்படுகையில், இவர்களுக்கு மட்டும் எதற்காக இப்படியொரு சலுகை ? வானத்திலிருந்து குதித்தவர்களா இவர்கள் ?
Be ye never so high, the law is above you என்றார் லார்ட் டென்னிங்.
அதற்கு நீதிபதிகள் மட்டும் விதிவிலக்கா என்ன ?

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...