முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொச்சு





“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது.
ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல்.

இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்கிருத வேர்ச்சொல்லிலிருந்து வந்தது அது என்று சொல்வோருண்டு (உதா: “புச்சம் ப்ரதிஷ்டா…” - தைத்திரீய உபநிடதம்).
பொதுவாய் புட்டம் என்ற அர்த்ததில்தான் இது மக்களிடையே வழக்கிலிருக்கிறது. குழந்தைகள் மலங்கழித்து விட்டு வருகையில் “பொச்சு கழுவி விடவா?” என்றுதான் கேட்பார்கள் (“குண்டி கழுவுதல்” என்ற பொருளில்). காலையில் துயிலெழத் தாமதமானால் “பொச்சுல வெயிலடிக்கத் தூங்கறான்” என்பார்கள். எள்ளலுக்குரிய அபத்தமான சூழலைப் பற்றிய பேச்சில் “பொச்சுலதான் சிரிக்கனும்” என்பார்கள். திட்டும் போது “பொச்சுலயே போடு”, “பொச்சுல பீ வர மிதி” என்பார்கள். (கவுண்டமணி சில படங்களில் இம்மாதிரி சொற்றொடர்களைப் பயன்படுத்தி இருப்பார். உதா: தாய் மாமன் படத்தில் நிச்சயம் செய்யப் போகும் காட்சியில் “பொச்சைப்புடிச்சு கடிச்சு வெச்சிரும்” என்பார்.) “பொச்சுக்கொழுப்பா?” எனக்கேட்கும் வழக்கமுண்டு, “சூத்துக் கொழுப்பா?” என்ற பொருளில் (உதா: பாண்டியக்கண்ணனின் சலவான் நாவல், பக்கம் 219). “பொச்சு தேச்சுக்குளிக்கனும்”, “பொச்சு மணலைத்தட்டி விடு”, “பொச்சு வணங்காம உக்காந்து திங்கறான்”, “பொச்சு வத்துனா தானாவருவான்” எனப்பலவாறு புழங்குகிறது.

பொறாமை மற்றும் வயிற்றெரிச்சலைக் குறிக்கின்ற பொச்சரிப்பு / பொச்செரிப்பு கூட இதிலிருந்து வந்திருக்கும் எனத்தோன்றுவதுண்டு. (“மொச்சைக்கொட்டை தின்றாலும் பொச்செரிப்பு; மோர் விட்டுச்சாப்பிட்டாலும் பொச்செரிப்பு” என்பது சொலவடை.) போன இடத்தில் கைமறதியாய் ஏதேனும் பொருளை வைத்து விட்டு வருவதைக் கிண்டல் செய்ய “பேண்ட இடத்துல பொச்சை வெச்சிட்டு வந்தானாம்” என்பார்கள். ‘பொச்சு’ என்பது மலங்கழித்தலுடன் தொடர்புடைய பிருஷ்டத்தையே குறிக்கிறது என்பதற்கான மற்றொரு உதாரணம் இது. அதே சமயம் “முட்டையிடும் கோழிக்குத் தான் பொச்சு வலிக்கும்” என்றொரு பழமொழியும் இருக்கிறது. அது முட்டை இடுகையில் பிறப்புறுப்பு வலிப்பதைக்குறிக்கிறதா அல்லது முட்டை மீதமர்ந்து அடைக்காக்கும் போது புட்டம் வலிப்பதைக்குறிக்கிறதா என்பது தெளிவில்லை.
சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரகராதியில் (பக்கம் 2912) ‘பொச்சு’ என்பதற்கு சொல்லுக்கு பெண்குறி மயிர், பெண்குறி, மலத்துவாரம் ஆகிய பொருள்கள் உள்ளன. மைரன் வின்ஸ்லோ தமிழ்- ஆங்கில அகராதி (பக்கம் 816), ஜேபி ஃபேப்ரிஷியஸ் தமிழ்- ஆங்கில அகராதி (பக்கம் 281), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (6ம் மடலம், 3ம் பாகம், பக்கம் 143), தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழ்- தமிழ் அகரமுதலி, பழநியப்பா பிரதர்ஸ் பால்ஸ் தமிழ்- தமிழ்- ஆங்கில அகராதி (பக்கம் 623) ஆகிய ஐந்திலுமே கிட்டத்தட்ட இதே அர்த்தங்களே தரப்பட்டுள்ளன. ‘பொச்சு’ என்றால் ஐரோப்பிய அகராதி (EUdict) பெண்குறி என்ற பொருளையே அளிக்கிறது. யோனியில் அமைந்துள்ள பூப்பெலும்பை (Pubis) பொச்சு எலும்பு என்றும் குறிப்பார்கள். மக்களின் பயன்பாட்டில் ஒரு பொருள் இருக்க, பண்டிதர்கள் அகராதியில், அதற்கு நேரெதிர் (அல்லது சில மிமீ தூர) பொருள் வந்தது ஆச்சரியத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உரியதே!

எனக்கு இது தொடர்பாய் ஓர் ஊகம் இருக்கிறது. தன் 'கெட்ட வார்த்தை பேசுவோம்' நூலில் பெருமாள்முருகன் ஒரு முக்கிய விஷயத்தைச் சுட்டுகிறார். தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் “அல்குல் தைவரல்” என்று ஓர் இடத்தில் வருகிறது. காதலனைச் சந்திக்கையில் அவனுடன் கூட விரும்பும் பெண் நாண மிகுதியால் வெளிப்படையாக அதைச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துகிறாள். அல்குல் என்பது யோனி; தைவரல் என்பது தடவுதல். ஆனால் இதற்கு உரையெழுதிய நாவலர் சோமசுந்தர பாரதி (1942) ‘அல்குல்’ என்றால் பிருஷ்டம் என்று புதுப்பொருள் சொல்கிறார். அங்கே பெண்குறி என்று போட்டால் தமிழ்ப் பெண் பற்றிய பிம்பம் உடைந்து கலாசாரம் கெட்டு விடும் என்று அதைக் காக்கும் நோக்கில் பொருளைத் திரிக்கிறார். பிறப்புறுப்பை இருப்புறுப்பு ஆக்கி விட்டார். கம்பராமாயணம், தனிப்பாடல்கள் எனத் தமிழ் இலக்கியம் நெடுகவும் இந்தக் கத்தரி ஒப்பனை வேலை நடந்திருக்கிறது. இந்த உதாரணத்தை நீட்டித்துப் பார்த்தால், ஓரிடத்தில் எப்படி அல்குல் பிருஷ்டம் ஆனதோ அதேபோல் மற்றோர் இடத்தில் பொச்சு பெண்குறி ஆகி இருக்கலாம் என்பதென் துணிபு. அச்சொல் புரியாத குழப்பத்தில் அல்லது வசையாகப் பயன்படுத்துகையில் அதன் வீரியத்தைப் பெருக்கிக் காட்டும் முனைப்பில் நிகழ்ந்திருக்கலாம். (அல்லது வெளிச்சம் குறைந்த இடத்தில் பெண்ணிடம் பாடம் கேட்ட ஓர் இளங்கவிஞனின் மயக்கமாகவும் இருக்கலாம்!)
ஓர் உளவியல் விஷயம். பெண்கள் பொதுவாய் பெண்குறி தொடர்பான வசைகளைப் பேசுவதைத் தவிர்ப்பதைக்கவனித்திருக்கிறேன். அது சுயஅவமதிப்பு ஆகிவிடும் என்ற ப்ரஞையாக இருக்கலாம். ஆனால் ‘பொச்சு’ என்ற சொல்லைப்பெண்கள் சகஜமாகப் பயன்படுத்துகிறார்கள். அதனாலும் இது ஆசனப்பகுதியையே குறிக்கிறது எனலாம்.
இன்னொரு கருத்து ‘பொச்சு’ என்பது ஆண்குறி, பெண்குறி இரண்டையும் குறிக்கும், ஆனால் பொதுவெளியில் அவற்றுக்குரிய அசல் சொற்களைப் பயன்படுத்தத்தயங்கி இடக்கரடக்கலாக இதைப்பயன்படுத்துகிறார்கள் என்பது. அதனாலேயே பெரும்பாலான அகராதிகளில் பெண்குறியைக் குறிக்கும் சொற்கள் இதற்கு முதன்மைப்பொருளாகக் வருக்கிறது என்ற பார்வை. அடுப்புக்குட்டு என்ற சொல் அடுப்பில் பாத்திரம் பொருத்த இருக்கும் மூன்று குமிழ்களைக் குறிப்பதுபோல் பொச்சுக்குட்டு என்ற சொல் பின்புற மேடுகளைக் குறிக்கிறது என்கிறார் பெருமாள்முருகன் (கெட்ட வார்த்தை பேசுவோம், பக்கம் 82). அங்கே அடுப்பு என்றால் இங்கே யோனிதான் இருக்கிறது. ஆக, பொச்சு யோனியைக் குறிப்பதாகிறது. பொச்சுக்குட்டு என்பதே கூட பரவலான புழக்கத்தில் காலப்போக்கில் சுருங்கி, பொச்சு என்று மட்டும் நிலைத்திருக்கவும் சாத்தியமுண்டு.
வௌவாலுக்கு மலத்துளை கிடையாது என்றொரு கருத்துண்டு. விஞ்ஞானப்பூர்வமாக அப்படி இல்லை என்றாலும் அது நார்ச்சத்து உணவுகளைத்தின்று விட்டு செரிக்காமல் துப்புவதைக் கண்டு அதற்கு ஆசன வாயே கிடையாது என நம் முன்னோர்கள் முடிவு கட்டியிருக்கக்கூடும். ஏன் வௌவாலுக்குப் பொச்சில்லாமல் போனது என்றொரு கதை உண்டு. ஒருமுறை வெளவால் கடவுளிடம் உலக மரங்களின் பழங்களை எல்லாம் தானே தின்று வாழவேண்டுமென வரங்கேட்டதாம். அதற்கு ஏதுவாக செரித்த கழிவை வெளியேற்ற தொன்னூறு பொச்சு வேண்டும் என்றதாம். அதன் பேராசை கண்டு கடவுள் சினமுற்று “உனக்கு ஒரு பொச்சும் கிடையாது. வாயால் தின்று, வாயால் பேண்டு கொள்” எனச்சபித்து விட்டாராம். அதனால்தான் வௌவால் பொச்சு இன்றி வாயிலேயே கழிந்து திரிகிறது என்பதுதான் கதை. (இன்றும் பேச்சுவழக்கில் “ஒரு பொச்சும் கிடையாது” / “ஒரு பொச்சும் வேண்டாம்” போன்ற பிரயோகங்கள் உண்டு.)
‘பொச்சு’ என்ற சொல் பெருவாரியாய்ப் புட்டம் என்ற பொருளிலேயே பயன்படுகிறது என்று தெரிகிறது. இன்னும் சரியாய்ச் சொன்னால் பலரால் அவ்வாறுதான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஜனநாயகத்தை இந்த விஷயத்திலாவது நாம் மதிக்க வேண்டும்.
நாளை எங்களூர்ப்பக்கம் வருகையில் “பொச்சை மூடு” என்ற குரலைச்சந்திக்க நேர்ந்தால் எதை மூடச்சொல்கிறார்கள் என்ற குழப்பம் வந்திடக்கூடாதல்லவா!
*சி.சரவணகார்த்திகேயன்
(விகடன் தடம் - நவம்பர் 2018 இதழில் 'மெய்ப்பொருள் காண்' தொடரில் எழுதியது.)

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...