முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீதும் நன்றும் பிறர்தர வாரா.


கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
46070
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்..
சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனுமதி மறுக்கப்படடுள்ளது, திமுக தலைவர் கருணாநிதி கூறியது போல ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதா ?
கேடி சகோதரர்களின் ஆக்டோபஸ் வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டதல்ல.   படிப்படியாக, திமுக தொண்டனின் ரத்தத்தில் ஏற்பட்ட வளர்ச்சி அது.  அதிமுக இரட்டைப் புறா (ஜானகி), சேவல் (ஜெயலலிதா) என்று பிரிந்து கிடந்த நிலையில், மக்கள் தற்போது கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தது போலவே 1989ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தார்கள்.
4 R
அப்போதெல்லாம் கேபிள் டிவி என்பது உருவாகாத காலம்.   வீடு வீடாக வீடியோ, டெக் எனப்படும் வீடியோ கேசட் ப்ளேயர்கள் வலம் வந்து கொண்டிருக்கும்.  தூர்தர்ஷனில், The World This Week என்று முதன் முதலாக ஒரு நிகழ்ச்சியை பிரணாய் ராய் தொகுத்து வழங்குகிறார்.   ஏஷியா நெட்டின் சஷிகுமார் மேனன் அதன் தயாரிப்பாளர் என்று நினைவு. அந்த The World This Week நிகழ்ச்சி, வீடியோ ஜர்னலிசத்தின் மைல்கல் என்று தாராளாக சொல்லாம்.  அப்படி ஒரு தரமான நிகழ்ச்சியாக அது வந்து கொண்டிருந்தது.  அந்நிகழ்ச்சியின் வெற்றியைப் பார்த்து, வீடு வீடாக மாதப்பத்திரிக்கைகள் போடுவது போல, வீடியோ கேசட்டுகளை போடலாம் என்று ஒரு புதிய திட்டம் உருவாகுகிறது.  இந்தியா டுடே குழுமம் என்று நினைவு. ஆங்கிலத்தில் நியூஸ்ட்ராக் என்ற வீடியோ இதழை வெளியிடுகிறது.  அந்த வீடியோ கேசட், பரவலான வரவேற்பை பெறுகிறது. இந்த திட்டத்தை அப்படியே காப்பியடித்த கேடி சகோதரர்கள் பூமாலை என்று தமிழில் ஒரு வீடியோ மேகஸின் தொடங்குகிறார்கள்.  வீடியோ ஷுட் செய்வதற்கெல்லாம் அப்போது விலையுயர்ந்த கேமரா வேண்டும்.  படம் பிடிக்க கேமராமேன்களின் ஊதியம் மிக அதிகம்.   அதற்கு வேறு வழியின்றி செலவு செய்த கேடி சகோதரர்கள் செய்தி சேகரிப்பதற்கென தனியே ஊழியர்களை நியமிக்கவில்லை.  அப்போது கேடி சகோதரர்கள் நடத்திக் கொண்டிருந்த வண்ணத்திரை, முத்தாரம், குங்குமம் போன்ற இதழ்களின் ஊழியர்கள் இந்தப் பணியையும் சேர்த்துச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தப் பட்டனர்.   சம்பளம் கொடுக்கும் விஷயத்தில் கேடி சகோதரர்கள் எவ்வளவு கப்பித்தனமானவர்கள் என்பதை உங்கள் நண்பர்கள் சன் டிவியில் பணியாற்றினால் கேட்டுப் பாருங்கள்.
பூமாலை வீடியோ மேகசின் 1990ல் வெளியானதும், யாரும் அதைச் சீண்டவில்லை. விலை கொடுத்து கேசட்டுகள் தயாரித்து அதை யாருமே வாங்கவில்லை என்றால் நஷ்டத்தை எப்படி பொறுத்துக் கொள்வார்கள் கேடி சகோதரர்கள் ? இருக்கவே இருக்கிறது தாத்தாவின் காவல்துறை.   அப்போது தொழிலில் கொடிகட்டிப் பறந்தவை வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விடும் கடைகள். அந்தக் கடைகளில் பூமாலை கேசட்டுகளை வாங்கி விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது.  மறுக்கும் வீடியோ கடைகாரர்களின் கடைகளில் நீலப்படம் வைத்திருந்ததாக காவல்துறையின் திடீர் சோதனைகள் நடைபெற்றன.
1991ல் ராஜீவ் மரணத்தில் ஏற்பட்ட அனுதாப அலையால் பதவிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியில், பூமாலை வாடி வதங்கி உதிர்ந்து போனது.  ஜெயலலிதா ஆட்சியில் கேடி சகோதரர்களின் திட்டங்கள் எடுபடவில்லை.
வட இந்தியாவில் சுபாஷ் சந்திரா ஜீ தொலைக்காட்சியைத் தொடங்குகிறார்.  சஷிகுமார் மேனன்,   வெளிநாட்டு வாழ் மலையாளிகளுக்காக நான்கு மணி நேர மலையாள நிகழ்ச்சியை தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறார்.  இதே போல தமிழில் நான்கு மணி நேர நிகழ்ச்சி தயாரித்துத் தருமாறு, ஏற்கனவே பூமாலை நடத்திய அனுபவம் இருந்ததால் கேடி சகோதரர்களை நிகழ்ச்சித் தயாரித்துத் தருமாறு  கேடி சகோதரர்களின் டாடி முரசொலி மாறனிடம் கேட்கிறார்.  முரசொலி மாறனோ… நான் என்ன உனக்கு நிகழ்ச்சி தயாரித்துத் தருவது…. நான் நேரடியாகவே பேசிக் கொள்கிறேன் என்று சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி, புதிய தொலைக்காட்சிச் சேனலைத் தொடங்குவதற்கே வாய்ப்பு ஏற்படுத்துகிறார்.
DAYANIDHI__amp__KAL_952560f
சன் டிவி ஏப்ரல் 1993ல் உருவாகிறது.   சேனல் உருவானாலும், மாதற்தோறும் கொடுக்க வேண்டிய ட்ரான்ஸ்பாண்டர் வாடகையை சன் நிறுவனத்துக்கு வரும் வருமானத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.  விளம்பரங்களும் போதிய அளவில் வரவில்லை.   கடன் வாங்கித்தான் சேனலை நடத்த வேண்டிய நிலை.  இந்தியன் வங்கியை அணுகினால், அவர்கள் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட சன் டிவிக்கு கடன் தர மறுத்து விட்டார்கள்.
கழகம் ஒரு குடும்பம் போன்றது என்று கருணாநிதி அடிக்கடி சொல்வது கருணாநிதியின் மனசாட்சியான முரசொலி மாறனுக்குத் தெரியாதா ?  திமுக உடன்பிறப்புக்கள் கட்சிக்காக கொடுத்த பல கோடி ரூபாய் நிதியை, மந்தைவெளியில் உள்ள கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியில் முதலீடு செய்கிறார்கள்.  அந்த முதலீட்டின் பேரில் வாங்கிய கடனில்தான் சன் டிவி நடைபெற்றது.
வி.பி.சிங் அரசில் அமைச்சராக இருந்த முரசொலி மாறனுக்கு பல்வேறு தொழில் அதிபர்களோடு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அந்த நட்பை பலமாகப் பயன்படுத்திக் கொண்ட மாறன், ஒரு தொழில் அதிபருக்கு பரிசாகக் கிடைத்த ட்ரான்ஸ்பாண்டரை தனக்குத் தரும்படி கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்.  அந்த ட்ரான்ஸ்பான்டர் மூலமாகத்தான் சன் ஒளிபரப்பப் பட்டது.  அப்போது இருந்த   ஜெ.ஜெ டிவி இது போன்ற தில்லாலங்கடி வேலைகள் தெரியாததன் காரணமாகத்தான் அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கினர்.  சன் டிவியின் பங்குதாரர்களாக தயாளு அம்மாள், முரசொலி மாறன், மல்லிகா மாறன், கேடி சகோதரர்கள் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.  சன் டிவியின் அலுவலகம், அறிவாலய அலுவலக வளாகத்திலேயே செயல்பட்டது.
சன் டிவி தொடங்கப்பட்ட பிறகு பெரிய அளவில் பிரகாசிக்க முடியாவிட்டாலும், தமிழில் தொடங்கப்பட்ட முதல் சேனல் என்பதால், அது ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது.  தூர்தர்ஷனை விட்டால் வேறு சேனலே இல்லை என்பதால், அந்த இடத்தை சன் டிவி ஆக்ரமித்தது.     1991-1996 ஜெயலலிதா ஆட்சி, சன் டிவியின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியது.  நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்குப் போட்டது, சந்திரலேகா ஐஏஎஸ் முகத்தில் ஆசிட் வீசியது, 100 கோடி ரூபாய் வளர்ப்பு மகன் திருமணம் போன்ற செய்திகளை தூர்தர்ஷன் கவல் செய்யாத காரணத்தால் சன் டிவியின் பக்கம் மக்கள் திரும்பினர்.  வளர்ப்பு மகன் திருமணத்தில் வீடியோ எடுத்தார் என்ற காரணத்தால், சன் டிவியின் கேமராமேன் கண்ணன் என்பவரை, ஜெயலலிதாவின் விசுவாசமான அடிமை விஜயக்குமார் ஐபிஎஸ் கைது செய்தார்.  இந்த விவகாரத்தை சன் டிவி பெரிய அளவில் எடுத்தச் சென்றதும் சன் டிவியின் வளர்ச்சிக்கு உதவியாக அமைந்தது.   தற்போது அதிமுகவின் அடிமைகள் சங்கத்தில் உறுப்பினராகி ராஜ்ய சபை எம்.பியாக இருக்கும் ரபி பெர்நார்ட், அப்போது சன் டிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சி நடத்துபவர்.
மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக கேடி சகோதரர்களின் டாடி நியமிக்கப்பட்டதும், சன் டிவியின் விளம்பர வருவாய் பல மடங்கு பெருகியது.  தொழில் அதிபர்களை மிரட்டி, சன் டிவிக்கு விளம்பரம் தருமாறு நெருக்கடி தரப்பட்டது.
சன் டிவி தொடங்கிய ஒரு சில  ஆண்டுகளிலேயே பல்வேறு திரைப்படங்களின் உரிமையை வைத்திருந்த ராஜ் வீடியோ விஷன், ராஜ் டிவியை தொடங்கியது.  அப்போதெல்லாம் கேபிள் டிவி ஒளிபரப்புவதென்றால் வடை சுடும் சட்டியைப் போன்ற பெரிய டிஷ்களை வீட்டின் மாடியில் வைத்து, அதிலிருந்து கேபிளில் ஒளிபரப்ப வேண்டும்.   இலவசமாக பல்வேறு சேனல்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்டார் குழுமம், தங்கள் சேனல்களைப் பெறுவதற்கு பணம் கட்ட வேண்டும் என்ற பே சேனல் முறையைக் கொண்டு வருகிறது.  இந்த பே சேனல் முறை அமலுக்கு வந்ததும், வெறும் தொலைக்காட்சிச் சேனலை மட்டும் வைத்தால் போணியாகாது என்பது புரிந்த கேடி சகோதரர்கள், 2000 ஆண்டில் சுமங்கலி கேபிள் விஷன் என்ற கேபிள் விநியோக நிறுவனத்தை தொடங்குகிறார்கள். அது வரை தமிழகத்தில் கேபிள் விநியோகம் ஆங்காங்கே இருந்த சிறு சிறு ஆபரேட்டர்களால் தனித்தனியாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது.  இதை ஒருமுகப்படுத்தி சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகளில் கேபிள் டிவி சேவையை வழங்கிக் கொண்டிருந்தது ஹாத்வே என்ற நிறுவனம்.  ஹாத்வே நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டால், தங்கள் தொழிலுக்கு ஆபத்து என்பதைப் புரிந்த கேடி சகோதரர்கள், தமிழகமெங்கும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை அழைத்து,  தனித்தனியே தொழில் நடத்த வேண்டாம் எங்களோடு இணைந்து தொழில் நடத்துங்கள் என்று மிரட்டுகிறார்கள்.   கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வேறு வழியே இல்லை.  தனித்தனியே அவர்களால் ஸ்டார் குழுமத்துக்கு பணம் கொடுக்க முடியாது.   இணைய மறுத்தால் தொழிலை மூடி விட்டுப் போக வேண்டும்.
ss
இணைய மறுக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டார்கள்.  தாத்தாவின் காவல்துறை கேடி சகோதரர்களின் சேவைக்கில்லாமல் வேறு எதற்கு ? ஹாத்வே நிறுவனத்தினர் உயர் அழுத்தக் கம்பி வட இணைப்பின் மூலம், கேபிள் மற்றும் இன்டெர்னெட் இணைப்பு கொடுக்க உத்தேசித்து அதற்கான வேலைகளில் இறங்கிய போது, அப்போது சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த தங்கள் மாமா ஸ்டாலினை வைத்து,  அனுமதி மறுத்தனர்.  மீறி கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்ட இடங்களில் இணைப்புகள் அறுத்தெறியப் பட்டன. ஒரு சில ஆண்டுகளில், ஹாத்வே மொத்த கூடாரத்தையும் காலி செய்து விட்டு, சென்னையை விட்டே ஓடியது.
எஸ்.சி.வி மூலமாக தமிழகத்தின் ஒட்டுமொத்த கேபிள் சாம்ராஜ்யத்தையும் தங்கள் வலைக்குள் கொண்டு வந்தார்கள் கேடி சகோதரர்கள். தமிழில் சேனல் தொடங்க வேண்டுமென்றால் எஸ்.சி.வி நிர்ணயித்ததுதான் விலை.  அவர்கள் வைத்ததுதான் சட்டம்.  அதை மீறினால் சேனலுக்கு பெரிய பூட்டு போட வேண்டியதுதான்.   இவர்களின் அதிகாரத்தின் காரணமாக, தமிழில் தொலைக்காட்சிச் சேனல் தொடங்க முடியாமல் ஓடியவர்களின் பட்டியல் பெரியது.
முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு 2004ல் மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் யாரை நிறுத்தலாம் என்ற விவாதம் நடக்கிறது.  கருணாநிதி மத்திய சென்னைத் தொகுதியில் நிறுத்த விரும்பியது, கனிமொழியைத்தான்.   இரண்டாவது குடும்பத்தின் தொடர்ந்த நச்சரிப்புகள் காரணமாகவும், கனிமொழிக்கு அரசியல் ரீதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவுமே, கனிமொழியை அந்த இடத்தில் போட்டியிடச் சொன்னார்.   கனிமொழிக்கு அப்போது அரசியலில் ஆர்வம் இல்லை. இலக்கிய உலகில், ஒரு பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்பதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தார்.   தன் தந்தையைப் போல, தமிழ் பேசியே தமிழ்நாட்டை சூறையாடலாம் என்று திட்டமிட்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை.  மத்திய சென்னைத் தொகுதியில் போட்டியிட விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டார்.  அந்த இடத்தை சின்னக் கேடி தயாநிதிக்குத் தர வேண்டும் என்று, சிஐடி காலனியிலேயே கேடி சகோதரர்கள் தவமாய்த் தவமிருந்தார்கள். அவர்கள் தவத்தின் பலனாக, ராசாத்தி அம்மாள் கேடி சகோதரர்களின் விஷத்தன்மை அறியாமல் அந்தப் பாம்புகளுக்கு பால் வார்த்தார்.
2004 பாராளுமன்றத் தேர்தலும் வந்தது.  ஜெயலலிதா “மிகச் சிறப்பான முறையில்” நடத்திய ஆட்சியால் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.   குறைவான சீட்டுகளையே பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்ததால், ஆட்சி அமைப்பதற்கும், தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கும் திமுகவின் தயவிலேயே இருந்தது காங்கிரஸ்.   தனது எம்.பிக்கள் எண்ணிக்கையால், மத்திய அரசையே தன் விரலசைவில் வைத்தார் கருணாநிதி. கருணாநிதி சொன்னவர்தான் மந்திரி.  கருணாநிதி வேண்டிய இலாக்கா கொடுக்கப்பட வேண்டும். நினைத்ததை நடத்தினார் கருணாநிதி.
மத்திய மந்திரியாக தன் ரத்த சொந்தம் யாராவது ஆக வேண்டும் என்பதற்காக கருணாநிதி தேர்ந்தெடுத்த நபர்தான் தயாநிதி மாறன்.  கட்சியில் எவ்வளவோ மூத்தவர்கள் இருக்க, இப்போதுதான் கட்சியில் சேர்ந்த தயாநிதி மாறனை கேபினெட் மந்திரியாக்க பரிந்துரைக்கிறீர்களே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, கருணாநிதி சொன்ன பதில் “விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப தயாநிதியின் திறமையை நான் சிறு வயதிலேயே பார்த்திருக்கிறேன் என்பதுதான்.”
The Minister for Communication & IT Shri Dayanidhi Maran and CMD Sun Network Shri Kalanidhi Maran presenting a cheque of Rs. 5.5 crore to Prime Minister Dr. Manmohan Singh towards PMNRF for Tsunami Victims in New Delhi on February 2, 2005.
The Minister for Communication & IT Shri Dayanidhi Maran and CMD Sun Network Shri Kalanidhi Maran presenting a cheque of Rs. 5.5 crore to Prime Minister Dr. Manmohan Singh towards PMNRF for Tsunami Victims in New Delhi on February 2, 2005.
அமைச்சர் பதவி கிடைத்தது  முதலே தங்கள் கைவரிசையை கேடி சகோதரர்கள் காண்பிக்கத் தொடங்கினர்.   இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாட்டாவையே மிரட்டினர்.  இன்று பிரபலமாக இருக்கும் டாட்டா ஸ்கை நிறுவனத்துக்கு தொழில் நடத்த லைசென்ஸ் வழங்காமல் அலைய விட்டார் தயாநிதி.   டாட்டா ஸ்கைக்கு முன்பாக, சன் டிடிஎச் தொடங்க வேண்டும் என்பதே அதற்கு காரணம்.   இந்த சன் டிடிஎச் நிறுவனத்தில்தான், 2ஜி ஊழல் வழக்கில் தொடர்புடைய மேக்சிஸ் நிறுவனம் ஏராளமான பணத்தை முதலீடு செய்தது.
கேடி சகோதரர்கள் தங்களின் சன் டிடிஎச் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீட்டை வரவழைப்பதற்காக, ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வந்த சிவசங்கரனுக்கு லைசென்ஸ் வழங்காமல் எத்தனை ஆண்டுகாலம் இழுத்தடித்தனர் என்பது ஊரறிந்த உண்மை.   இந்த முதலீட்டின் காரணமாகவே, தற்போது 2ஜி வழக்கை எதிர்நோக்கி உள்ளனர்.
இன்று கேடி சகோதரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அனைத்துக் கட்சிகளும், இவர்களின் கடந்த கால செயல்பாடுகளை வசதியாக மறந்துவிடுகின்றனர்.   சுமங்கலி கேபிள்ஸ் என்ற தங்களது கேபிள் தொடர்பு நிறுவனத்தை வைத்து, தமிழகத்தில் சேனல் நடத்த முயன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினர்.     மதுரை தினகரன் ஊழியர்கள் எரிப்புக்கு பின்னால், கேடி சகோதரர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கருணாநிதி அரசு கேபிள் தொடங்கினார்.    அந்த அரசு கேபிள் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட விலை உயர்ந்த கம்பி வடங்களை ரவுடிகளை விட்டு அறுத்து எரிந்தது யார் ?
ராஜ் டிவியை நடத்த விடாமல் அதற்கு கடுமையான அழுத்தம் கொடுத்தது யார் ?
விஜய் டிவி என்டிடிவி நிறுவனத்தோடு இணைந்து நடத்திய செய்தி ஒளிபரப்பை தடுத்தது யார் ?
சன் பிக்சர்ஸ் என்று ஒரு நிறுவனத்தை தொடங்கிவிட்டு, அனைத்து தமிழ்ப் படங்களையும் அடிமாட்டு விலைக்கு வாங்கி, திரைத் துறையையே நெருக்கடிக்கு உள்ளாக்கியது யார் ?
தினகரன் நாளிதழை ஒரு ரூபாய்க்கு தொடங்கி இதர அச்சு ஊடகங்களை நசுக்க முயன்றது யார் ?
இவை எல்லாவற்றையும் விட, அரசு தொலைபேசி இணைப்புகளை திருடி, கோடிக்கணக்கான பணத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியது யார் ?
2009ம் ஆண்டு இந்த விவகாரம் வெளி வந்ததும், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்த உயர் அதிகாரியை மிரட்டி, தயாநிதி மாறன் திருடவேயில்லை என்று அறிக்கை வெளியிட வைத்தது யார் ?
legal_notice_Page_6
கேடி சகோதரர்கள் இந்தியாவிற்கே மிகப்பெரிய தீயசக்திகள். அவர்கள் மண்ணோடு மண்ணாக அழிவது காலத்தின் தேவை.   ஊடக சுதந்திரம் என்று இன்று குரல் கொடுப்போர், இப்படியொரு நெருக்கடி வரவில்லையென்றால் இதே கேடி சகோதரர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.   இவர்களை ஆதரிப்பது என்பது, பாம்புக்கு பால் வார்ப்பது போல.   தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பவர்கள் இந்த கேடி சகோதரர்கள்.
இவர்களும், இவர்களின் சன் குழுமமும் இன்று சந்திக்கும் நெருக்கடிகள் இவர்களின் செயல்பாடுகளின் காரணமாகவேயன்றி, வேறு காரணமல்ல.
தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...