முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காமக்கிழத்திகள்









===============
Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women!
முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத்துவம் காண‌ முடியும், திருப்தி கொள்ள முடியும் எனக் கேட்கும் ஒரு நவீனச் சிந்தனையுடைய திருமணமான பெண் கலிந்தி. தான் விரிவுரையாளராக இருக்கும் வகுப்பின் மாணவனுடனே உறவு கொள்கிறாள். கணவன் அருகில் இல்லை என்பதால் ஊர் மேய்கிறாள் என்று இதை எளிமையாகச் சுருக்கிப் பேச முடியும் என்றாலும் தன் செய்கை குறித்து அவளுக்கென ஒரு தர்க்கம் இருக்கிறது, அதை இடையிடையே கேமெரா பார்த்துப் பேசுகிறாள். அந்தப் பகுதிகள் யாவும் ரசனையானவை. அக்காட்சிகளில் ராதிகாவின் நடிப்பு அள்ளுகிறது.
ஆனால் கலிந்தி பேசும் தர்க்கத்திற்கும் அவள் நடந்து கொள்வதற்கும் சம்மந்தமே இருப்பதில்லை. உறவு கொண்டதைக் காரணமாக்கி மாணவன் தன் மீது ஆதிக்கம் செலுத்த முயலக்கூடாது என எதிர்பார்க்கிறாள் (உதாரணம்: அதாவது பிற ஆண்களுடன் அவள் பேசக்கூடாது என்று சொல்வது, மற்ற ஆண்களுடன் அவள் பேசுவதைப் பகிர வேண்டும் என எதிர்பார்ப்பது போன்றவை). ஆனால் உண்மையில் அவள் தான் அதை அவனுக்குச் செய்கிறாள். மாணவனின் வீட்டில் கண்டெடுக்கும் தன் பேண்டீஸையே யாருடையது என அவனைச் சந்தேகப்பட்டு அடிப்பது அதன் உச்சம். ஆனால் அதன் பொருள் மாணவன் மீது அவளுக்குக் காதல் என்பதில்லை. அவள் தன் கணவனை ஏமாற்றுகிறாள் என்பதுமில்லை (எல்லாவற்றையும் அவனிடம் பகிர்ந்து கொள்கிறாள்.) அவள் தன் மணவாழ்க்கையில் நீடிக்கவே விரும்புகிறாள். இப்படியான முரண்பாடுகளின் மூட்டையாக கலிந்தி பாத்திரம் இருக்கிறது ('உன்னாலே உன்னாலே' சதா போல்).
யோசித்துப் பார்த்தால் பெரும்பாலும் பெண்கள் இப்படியானவர்களே எனத் தோன்றுகிறது. தம் சொல்லும் செயலுக்கும் சம்மந்தமில்லாத குழம்பிய மனநிலையில் உள்ள‌வர்கள். குறிப்பாய் ஆண்களுடனான உறவுகளில் இப்படியான விநோத முரண்கள் நிரம்பியிருக்கும். அதை உடைத்துப் பேசுகிறது என்பதால் இதை ஓர் ஆணாதிக்கப் பிரதியாகவும் வாசிக்கலாம். இப்பகுதியின் வசனங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. ராதிகா ஆப்தேவும் அனுராக்குடன் இணைந்து எழுதி இருக்கிறார்!
படத்தில் ராதிகா பேசும் கடைசி வசனம் (பாகல் ஹே க்யா? ஷாதி ஷூதா ஹே மே!) மீனம்மாவின் 'அப்பாற்பட்ட மழை' சிறுகதையின் இறுதிப்பகுதியை நினைவூட்டியது. மதுவும் கலிந்தியும் ஒரே மாதிரி குழப்பம் கொண்ட பெண்கள் தாம்!
ஸோயா அக்தர் இயக்கியிருக்கும் இரண்டாம் பகுதி ஒரு பேச்சிலருக்கும் அவன் அடுக்கக வீட்டில் வேலை செய்யும் சுதா என்ற பெண்ணுக்கும் நடக்கும் உடலுறவில் தொடங்குகிற‌து. அவள் அவளை உடலுறவுக்காக மட்டுமே பயன்படுத்துகிறான், அதைத் தாண்டி அவள் மீது எந்தச் சிறுபிரியமும் கொண்டவன் இல்லை என்பது அடுத்து வரும் காட்சிகளில் தெரிய வருகிறது. ஆனால் அவளுக்கு அது ஜீரணிக்க முடியாததாய் இருக்கிறது. அதைக் கடந்து தன் இயல்பு வாழ்க்கையில் கரைவது தான் கதை. சுதாவாக வரும் பூமி பெட்னேகர் கொஞ்சமும் மிகையின்றி ஒரு பணிப்பெண்ணாக‌ அசத்தலாக நடித்திருக்கிறார். நான்கு படங்களில் எனக்கு மிகப்பிடித்தது இதுவே. காரணம் இதில் தான் வெறும் அறிவுப்பூர்வக்கதை சொல்லலாக மட்டும் எஞ்சாமல் அந்தப் பெண்ணின் உண்மையான மற்றும் நியாயமான உணர்வுகள் நம்பகத்தன்மையுடன் பார்வையாளனுக்குக் கடத்தப்படுகிறது. அளவான வசனங்கள், கச்சிதமான கலவிக்காட்சி என கலாப்பூர்வமாகவும் நிறைவான படம். படத்தின் இயக்குநர் ஒரு பெண் என்பதும் இங்கே நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை.
அடுத்தது திபாகர் பேனர்ஜி இயக்கியிருக்கும் படம். மனீஷா கொய்ராலா நடித்திருக்கிறார். மத்திய வயதுப் பெண் ரீனா தன் கணவனின் நெருங்கிய சினேகிதனுடன் சில ஆண்டுகளாகக் கள்ள உறவில் இருக்கிறாள். கணவன் அவளை ஒரு மனைவியாகப் பொருட்படுத்தாமல் தன் குழந்தைகளின் தாயாக மட்டுமே பார்க்கிறான் என்பதும் அத்திருமணத்தின் பொருட்டு தன் வாழ்வின் லட்சியங்களைத் தியாகம் செய்ய வேண்டியதாகி விட்டது என அவள் கருதுவதே காரணம். ஒரு நாள் அவள் கணவனுக்கு அவள் மீது சந்தேகம் வருகிறது. அதைக் கையாள்வதோடு எப்படி அதைத் தன் எதிர்கால நலனுக்கும் பயன்படுத்திக் கொள்கிறான் என்பது தான் கதை. Shrewd என்பார்கள். அது மாதிரி ஒரு புத்திசாலித்தனம் ரீனாவின் பாத்திரத்தில் வெளிப்படுகிறது படத்தின் பிற்பகுதியில். முற்பகுதி நமக்கு ஏற்படுத்தும் அவள் குழப்பமானவள், பலவீனமானவள், திக்கற்றவள் என்ற பிம்பம் கடைசியில் இவ்வாறு நொறுங்குகிறது. 'வெற்றி' என்ற ஜெயமோகனின் சிறுகதையை இது நினைவூட்டியது. அதன் நாயகி இப்படித்தான் நுட்பச்சதி செய்வாள். அவள் கணவனிடமே திரும்புவதும் அதன் பின்னிருக்கும் உணர்வுகளும் மீனம்மா கயலின் 'அப்பாற்பட்ட மழை' சிறுகதையை ஞாபகப்படுத்தியது.
கடைசியாய் கரண் ஜோகர் இயக்கியிருக்கும் படம். திருமணமான ஒரு பெண் கலவியில் ஈடுபடுவதன் நோக்கம் குழந்தை பெறுவது மட்டுமல்ல, அவள் உடலின்பத்துக்கும் தான் என்ற கருத்தைச் சொல்கிறது. சந்தோஷம் குழந்தை நான்கு இயக்குநர்களில் இவர் மட்டுமே வெகுஜனக் கதை சொல்லி என்பதால் இது மிக நேரடியான கதையாய் இருக்கிறது. அதுவும் வழக்கமான பாலிவுட் கதைகூறல் மொழி. இதில் பார்வையாளன் யோசிக்கவென்று ஏதும் இல்லை. உதாரணமாய் மேலே படம் என்ன சொல்கிறது என்று குறித்திருக்கிறேனோ அதையே நாயகி வசனமாய்ப் படத்தின் இறுதியில் பேசி விடுகிறாள். அத்தனை வெளிப்படையான படம்! வீட்டில் பார்த்து வைத்து திருமணம் செய்து கொள்ளும் பள்ளி ஆசிரியை மேகாவுக்குக் கணவனுடனான கலவி எப்போதும் ஐந்து விநாடிகள் தான் நீடிக்கிறது. அவள் உச்சம் என்பதை அடைவதே இல்லை. பின் தோழியின் (நேகா தூபியா) அறிவுரைப்படி மின்னணு வைப்ரேட்டரை நாடுகிறாள் (அனேகமாய் வைப்ரேட்டரைத் திரையில் காட்டிய முதல் இந்தியத் திரைப்படம் இதுவென நினைக்கிறேன்). அதன் விளைவுகள் என்ன என்பது மீதிக்கதை. மேகாவாக நடித்திருக்கும் கியாரா அத்வானி பேரழகி. நடிப்பும் வருகிறது. குறிப்பாய் கிழவி டிவி ரிமோட் இயக்கும் காட்சியில்!
அனுராக் காஷ்யப் - ஓக்கே | ஸோயா அக்தர் - நன்று | திபாகர் பேனர்ஜி - சுமார் | கரண் ஜோகர் - சுமார் | Overall - ஓக்கே

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

சிம்பு குடும்பத்தாருக்கு கொற்றவை கடிதம்!

உஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்                         கொற்றவை -பெண்ணிய செயல்பாட்டாளர் ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப்படுற வழியப்பாருலே “பு.ண்.டை” நாயம் பேசிட்டு திரியுறவ” என்று சொல்வார்கள். ஓர் உயிரை பிறப்பிக்கும் பெண்ணின் உடல் உறுப்பிற்கு இந்த ஆணாதிக்க சமூகத்தில் இவ்வளவுதான் மரியாதை என்றோ அல்லது பெண் பித்து பிடித்து அலையாமல் வாழ்க்கையில் உருப்படும் வழியைப் பார் என்றோ சொல்வதாகவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் “புண்டை” நியாயம் பேச வைத்த பெருமை உங்கள் மகன்கள் மற்றும் சகோதரர்களாகிய அனிருத்துக்கும், சிம்புவுக்கும் போய்ச் சேரும். இதை எண்ணி உண்மையில் நீங்கள் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த தமிழகமும் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டும், உயிரையும் உடைமையையும் இழந்தும் துன்புருகையில் இவர்கள் “பு.ண்.டை” ஆராய்ச...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...