முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காமக்கிழத்திகள்









===============
Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women!
முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத்துவம் காண‌ முடியும், திருப்தி கொள்ள முடியும் எனக் கேட்கும் ஒரு நவீனச் சிந்தனையுடைய திருமணமான பெண் கலிந்தி. தான் விரிவுரையாளராக இருக்கும் வகுப்பின் மாணவனுடனே உறவு கொள்கிறாள். கணவன் அருகில் இல்லை என்பதால் ஊர் மேய்கிறாள் என்று இதை எளிமையாகச் சுருக்கிப் பேச முடியும் என்றாலும் தன் செய்கை குறித்து அவளுக்கென ஒரு தர்க்கம் இருக்கிறது, அதை இடையிடையே கேமெரா பார்த்துப் பேசுகிறாள். அந்தப் பகுதிகள் யாவும் ரசனையானவை. அக்காட்சிகளில் ராதிகாவின் நடிப்பு அள்ளுகிறது.
ஆனால் கலிந்தி பேசும் தர்க்கத்திற்கும் அவள் நடந்து கொள்வதற்கும் சம்மந்தமே இருப்பதில்லை. உறவு கொண்டதைக் காரணமாக்கி மாணவன் தன் மீது ஆதிக்கம் செலுத்த முயலக்கூடாது என எதிர்பார்க்கிறாள் (உதாரணம்: அதாவது பிற ஆண்களுடன் அவள் பேசக்கூடாது என்று சொல்வது, மற்ற ஆண்களுடன் அவள் பேசுவதைப் பகிர வேண்டும் என எதிர்பார்ப்பது போன்றவை). ஆனால் உண்மையில் அவள் தான் அதை அவனுக்குச் செய்கிறாள். மாணவனின் வீட்டில் கண்டெடுக்கும் தன் பேண்டீஸையே யாருடையது என அவனைச் சந்தேகப்பட்டு அடிப்பது அதன் உச்சம். ஆனால் அதன் பொருள் மாணவன் மீது அவளுக்குக் காதல் என்பதில்லை. அவள் தன் கணவனை ஏமாற்றுகிறாள் என்பதுமில்லை (எல்லாவற்றையும் அவனிடம் பகிர்ந்து கொள்கிறாள்.) அவள் தன் மணவாழ்க்கையில் நீடிக்கவே விரும்புகிறாள். இப்படியான முரண்பாடுகளின் மூட்டையாக கலிந்தி பாத்திரம் இருக்கிறது ('உன்னாலே உன்னாலே' சதா போல்).
யோசித்துப் பார்த்தால் பெரும்பாலும் பெண்கள் இப்படியானவர்களே எனத் தோன்றுகிறது. தம் சொல்லும் செயலுக்கும் சம்மந்தமில்லாத குழம்பிய மனநிலையில் உள்ள‌வர்கள். குறிப்பாய் ஆண்களுடனான உறவுகளில் இப்படியான விநோத முரண்கள் நிரம்பியிருக்கும். அதை உடைத்துப் பேசுகிறது என்பதால் இதை ஓர் ஆணாதிக்கப் பிரதியாகவும் வாசிக்கலாம். இப்பகுதியின் வசனங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. ராதிகா ஆப்தேவும் அனுராக்குடன் இணைந்து எழுதி இருக்கிறார்!
படத்தில் ராதிகா பேசும் கடைசி வசனம் (பாகல் ஹே க்யா? ஷாதி ஷூதா ஹே மே!) மீனம்மாவின் 'அப்பாற்பட்ட மழை' சிறுகதையின் இறுதிப்பகுதியை நினைவூட்டியது. மதுவும் கலிந்தியும் ஒரே மாதிரி குழப்பம் கொண்ட பெண்கள் தாம்!
ஸோயா அக்தர் இயக்கியிருக்கும் இரண்டாம் பகுதி ஒரு பேச்சிலருக்கும் அவன் அடுக்கக வீட்டில் வேலை செய்யும் சுதா என்ற பெண்ணுக்கும் நடக்கும் உடலுறவில் தொடங்குகிற‌து. அவள் அவளை உடலுறவுக்காக மட்டுமே பயன்படுத்துகிறான், அதைத் தாண்டி அவள் மீது எந்தச் சிறுபிரியமும் கொண்டவன் இல்லை என்பது அடுத்து வரும் காட்சிகளில் தெரிய வருகிறது. ஆனால் அவளுக்கு அது ஜீரணிக்க முடியாததாய் இருக்கிறது. அதைக் கடந்து தன் இயல்பு வாழ்க்கையில் கரைவது தான் கதை. சுதாவாக வரும் பூமி பெட்னேகர் கொஞ்சமும் மிகையின்றி ஒரு பணிப்பெண்ணாக‌ அசத்தலாக நடித்திருக்கிறார். நான்கு படங்களில் எனக்கு மிகப்பிடித்தது இதுவே. காரணம் இதில் தான் வெறும் அறிவுப்பூர்வக்கதை சொல்லலாக மட்டும் எஞ்சாமல் அந்தப் பெண்ணின் உண்மையான மற்றும் நியாயமான உணர்வுகள் நம்பகத்தன்மையுடன் பார்வையாளனுக்குக் கடத்தப்படுகிறது. அளவான வசனங்கள், கச்சிதமான கலவிக்காட்சி என கலாப்பூர்வமாகவும் நிறைவான படம். படத்தின் இயக்குநர் ஒரு பெண் என்பதும் இங்கே நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை.
அடுத்தது திபாகர் பேனர்ஜி இயக்கியிருக்கும் படம். மனீஷா கொய்ராலா நடித்திருக்கிறார். மத்திய வயதுப் பெண் ரீனா தன் கணவனின் நெருங்கிய சினேகிதனுடன் சில ஆண்டுகளாகக் கள்ள உறவில் இருக்கிறாள். கணவன் அவளை ஒரு மனைவியாகப் பொருட்படுத்தாமல் தன் குழந்தைகளின் தாயாக மட்டுமே பார்க்கிறான் என்பதும் அத்திருமணத்தின் பொருட்டு தன் வாழ்வின் லட்சியங்களைத் தியாகம் செய்ய வேண்டியதாகி விட்டது என அவள் கருதுவதே காரணம். ஒரு நாள் அவள் கணவனுக்கு அவள் மீது சந்தேகம் வருகிறது. அதைக் கையாள்வதோடு எப்படி அதைத் தன் எதிர்கால நலனுக்கும் பயன்படுத்திக் கொள்கிறான் என்பது தான் கதை. Shrewd என்பார்கள். அது மாதிரி ஒரு புத்திசாலித்தனம் ரீனாவின் பாத்திரத்தில் வெளிப்படுகிறது படத்தின் பிற்பகுதியில். முற்பகுதி நமக்கு ஏற்படுத்தும் அவள் குழப்பமானவள், பலவீனமானவள், திக்கற்றவள் என்ற பிம்பம் கடைசியில் இவ்வாறு நொறுங்குகிறது. 'வெற்றி' என்ற ஜெயமோகனின் சிறுகதையை இது நினைவூட்டியது. அதன் நாயகி இப்படித்தான் நுட்பச்சதி செய்வாள். அவள் கணவனிடமே திரும்புவதும் அதன் பின்னிருக்கும் உணர்வுகளும் மீனம்மா கயலின் 'அப்பாற்பட்ட மழை' சிறுகதையை ஞாபகப்படுத்தியது.
கடைசியாய் கரண் ஜோகர் இயக்கியிருக்கும் படம். திருமணமான ஒரு பெண் கலவியில் ஈடுபடுவதன் நோக்கம் குழந்தை பெறுவது மட்டுமல்ல, அவள் உடலின்பத்துக்கும் தான் என்ற கருத்தைச் சொல்கிறது. சந்தோஷம் குழந்தை நான்கு இயக்குநர்களில் இவர் மட்டுமே வெகுஜனக் கதை சொல்லி என்பதால் இது மிக நேரடியான கதையாய் இருக்கிறது. அதுவும் வழக்கமான பாலிவுட் கதைகூறல் மொழி. இதில் பார்வையாளன் யோசிக்கவென்று ஏதும் இல்லை. உதாரணமாய் மேலே படம் என்ன சொல்கிறது என்று குறித்திருக்கிறேனோ அதையே நாயகி வசனமாய்ப் படத்தின் இறுதியில் பேசி விடுகிறாள். அத்தனை வெளிப்படையான படம்! வீட்டில் பார்த்து வைத்து திருமணம் செய்து கொள்ளும் பள்ளி ஆசிரியை மேகாவுக்குக் கணவனுடனான கலவி எப்போதும் ஐந்து விநாடிகள் தான் நீடிக்கிறது. அவள் உச்சம் என்பதை அடைவதே இல்லை. பின் தோழியின் (நேகா தூபியா) அறிவுரைப்படி மின்னணு வைப்ரேட்டரை நாடுகிறாள் (அனேகமாய் வைப்ரேட்டரைத் திரையில் காட்டிய முதல் இந்தியத் திரைப்படம் இதுவென நினைக்கிறேன்). அதன் விளைவுகள் என்ன என்பது மீதிக்கதை. மேகாவாக நடித்திருக்கும் கியாரா அத்வானி பேரழகி. நடிப்பும் வருகிறது. குறிப்பாய் கிழவி டிவி ரிமோட் இயக்கும் காட்சியில்!
அனுராக் காஷ்யப் - ஓக்கே | ஸோயா அக்தர் - நன்று | திபாகர் பேனர்ஜி - சுமார் | கரண் ஜோகர் - சுமார் | Overall - ஓக்கே

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...