முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே



வ்வொரு பத்திரிகையும் சில விஷயங்களைப் பெருமிதமாய்ச் சொல்வார்கள்.

தாங்கள் தான் முதன்முதலில் போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தோம், வீட்டு வசதி வாரிய  முறைகேட்டினை அம்பலப்படுத்தினோம், இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாய்ச் செய்து வருகிறோம் என்று, அவர்களுக்கு அதில் உரிமை இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உரிமை கோருவார்கள்,அதில் பெருமிதமும் சாதித்து விட்ட திருப்தியும் வெளிப்படும்.

ஆனால் இந்த 'இந்தியா டுடே'காரர்களுக்கோ வேறு விதமான உரிமை கோரல்.

பாலியல் இச்சைகளின் ஆய்வுகள் தொடர்பான நீண்டகால உரிமை கோரல் தான். தாங்கள் தான்  11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தேசத்தின் தலையணை பேச்சுகளை படம் பிடித்துக் காட்டி வருகிறோம் எங்க‌ளை விட யாருக்கு இதில் தகுதியும் அனுபவமும்  இருக்கிற‌து என . உங்களுக்கு இது வக்கிரமாகவும் கழிசடையின் பிறப்பிடமாகவும் தெரியலாம்,ஆனால் அவர்களுக்கோ அது பெருமிதம்.

ஆனால் அவர்களுக்கே இந்த வழக்கமான பள்ளிய‌றை, கழிப்பறை பாலியல் தொடர்பு ஆய்வுகள்,இட்டுக்கட்டல்கள் அதைத்தொடர்ந்த  பூச்சுகள் அலுத்து விட்டதா என்று தெரியவில்லை.புதிய‌ வெரைட்டியைத் தேடியிருக்கிறார்கள்.

அதனால் தான் வழக்கமான ஆண்- பெண் உறவுகள் தொடர்பான ஆய்வு முடிவுகளைத் தங்களது விற்பனை யுக்தியாய் பயன்படுத்தாமல் இந்த முறை பதின்பருவத்தினர் குறித்த பாலியல் ஆய்வுகள் என்று சொல்லிக் கொண்டு பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமிகள் தொடங்கி  கல்லூரி மாணவ மாணவிகள் வரையிலான  பாலியல் தேர்வுகளை,விருப்பங்களையும் அது குறித்த முடிவுகளை ஆய்ந்தறிவதாகச் சொல்லி 'பதின்பருவத்தில் பூக்கும் காமம்' எனத் தலைப்பிட்டு வெளியிட்டு இருக்கிறார்கள்.

வக்கிரம் பிடித்தவனுக்கு பெற்ற தாய்க்கும், பிள்ளைக்கும், மனைவிக்கும் வித்தியாசம் தெரியாதது போல 'இந்தியா டுடே' காரர்களுக்குத் தெரிய‌வா போகிறது..? விற்பனைக் கச்சாப் பொருளாக எந்தச் சதை கிடைத்தால் என்ன..? அது மனைவியினுடையதானால் என்ன மகளுடையதானால் என்ன..? நமக்கு கல்லா கட்டணும்,சந்தையில் தொடர்ச்சியாய் நிற்க வேண்டும்.தனது உயர்தட்டு வாசகர்களின் வக்கிரத்துக்குத்  தீனி போடணும்.அவ்வளவு தான்.

சனவரி (16-21)2015 நாளிட்ட இதழில் இந்த 'ஆய்வுகள்' மட்டும் மொத்தம் 24 பக்கங்கள்.

இதனைத் தாங்கிய முகப்பு அட்டை. 'பதின்களில் பூக்கும் காமம்'

முகப்பு கட்டுரையின் முதல் பக்கத்திலேயே ஒரு சிறுமி தனது உடைகளைக் களைந்து விட்டு தன்னை விட‌ சற்று வயது அதிகமான‌ ஆணுடன் கட்டித்தழுவி உடலுறவில் இருப்பது போல ஒரு படம் வரையப்பட்டிருக்கிறது. அருகில் அந்த சிறுமியின் பள்ளிக்கூடப்  பை கிடக்கிறது.

அதன் தொடர்ச்சியாக 'காதல் வேண்டும் புதிய பதின் பருவ‌த்தினர்,' 'செக்ஸ் பற்றிப்பேசும் நேரம் இது சரியா ?,' 'செக்ஸ் அகராதி-இளசுகளின் வார்த்தைகள்,' 'வளாகத்தில் விளையாட்டுகள்,' 'தொலைந்த பிள்ளைகள்,' 'எல்லாமே இணையத்தில்,''மூன்று நகரங்களின் கதை,' 'கூர் தீட்டப்படும் அழகு,' 'உண்மை தரும் துணிவு,' 'பெருஞ்சுவர் - எல்லைகளை மீறி' என கட்டுரைகள்

ஒவ்வொரு செய்திப்பதிவின் தலைப்பை மட்டும் யாரும் பார்த்தால் முற்போக்கு ஹோல்சேல் குத்தகை எடுத்தது போலத்தெரியும்.விஷயம் படித்தால் காறித்தான் துப்ப முடியும்.





வ்வொரு பகுதி குறித்தும் சில வார்த்தைகள் குறிப்பிட வேண்டுமென்றால்,

'காதல் வேண்டும் புதிய பதின் பருவ‌த்தினர்,'பகுதியில் பள்ளி-கல்லூரி மாணவிகளிடையே,

அ)   10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியர்களில் எத்தனை விழுக்காடு கன்னித்தன்மை மிக்கவர்கள்..?

ஆ) பள்ளி வளாகங்களில் எத்தனை விழுக்காட்டினர் உபயோகப்படுத்திய ஆணுறைகள் கிடக்கின்றன..?

இ) எத்தனை சிறுவ சிறுமியர்கள் ஆன்லைனில் போர்னோ பார்த்திருக்கிறார்கள்.?

ஈ) கன்னித்தன்மையை மதிப்பவர்கள் எத்தனை பேர்..?

இந்தக் கட்டுரையை 'இந்தியா டுடே' இதழின் துணை ஆசிரியர் தமயந்தி தத்தா எழுதியிருக்கிறார்.



நாம் ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும் பொழுது ஏ முதல் இசட் வரை ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் 'இந்தியா டுடே' இதழோ தில்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற‌வர்கள் தொகுத்த 'இளசுகளின் அகராதி' எனத் தலைப்பிட்டு ஒன்றை வெளியிட்டுள்ள‌து.

இதன் படி A பார் ஆப்பிள் அல்ல, தான் படுக்கையைப் பகிர விரும்பும் ஆண்ட்டியை சிறுவன் குறிப்பதாகச் சொல்லும் சொல்லின் முதல் எழுத்து என்கிறது.

G என்பது got if  என்பதன் சுருக்கமாம் அது.

அதாவது வாய்ப்புக் கிடைத்தால் குறிப்பிட்ட நபருடன் படுப்பாயா ? என்பதைக் கேட்கப் பயன்படுத்தும் சங்கேத வார்த்தை என்கிறது. ஆங்கிலத்தில் பெயர்கள் குறிப்பிட்டிருக்கின்றன. தமிழில் பிரியா,ரமேஷ் என இரண்டு பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள்.

K என்பதன் விரிவாக்கம் காமசூத்ராவாம். 69 பொஷிசனின் சுருக்கமாம் அது.

S  என்பது எப்பொழுதும் செக்சுக்குத் தயாரானவரைக் குறிக்கும் எழுத்தாம்.

W என்பதன் விரிவாக்கம் விங்மேன் என்பதன் சுருக்கமாம். அதாவது பாலியல் தரகராம்.

இப்படிக் கஷ்டப்பட்டு 'அகராதி' உருவாக்கியிருக்கிறார்கள்,ஆனால் தொகுத்தவர்களின் பெயர் குறிப்பிடக்கூட இல்லை. எடிட்டோரியல் டீம் இதனைச் செய்திருக்கும் போல.


டுத்து -'டீன் ஏஜ் வாக்குமூலம்' என்று தலைப்பிட்டு இன்னொரு பகுதி.

எதையும் அறியாத ஒரு 'பச்சைக்குழந்தை' அனைத்தையும் அறியும் நோக்குடன் ஒரு ஆய்வைச் செய்யத்தொடங்கியதாகவும் அதன் முடிவு என்ன என்றும் எழுதியிருக்கிறார்கள்.

எங்கு வைத்து உடலுறவு வைத்துக்கொள்வீர்கள்..? எப்பொழுது வைத்துக் கொள்வீர்கள்..? சுய இன்பம் காண்பதற்கு சராசரி வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன..? பெண்களுக்கு சுய இன்பத்தில் திருப்தி உண்டா..?,
 24 மணி நேரத்தில் எத்தனை முறை உடலுறவு கொள்ள முடிந்தது ? எத்தனையாவது முறையிலிருந்து வலிக்க ஆரம்பித்தது என்பன போன்ற‌ அனைத்தையும் எழுதி விட்டு இதனை 'பச்சைக்குழந்தை' ஆய்வு செய்ததாகவும்,இந்த ஆய்வின் மூலம் பல தயக்கங்களை உடைத்ததாகவும்,இது குறித்து  தீவிரமாக விவாதிக்க முடிந்ததாகவும் எழுதியிருக்கிறார்கள்.



டுத்து 'தொலைந்த பிள்ளைகள்' என்றொரு பகுதி.

பள்ளி மாணவிகள் பற்றியது. உடல் உறவின் பொழுது, எத்தனை விழுக்காடு பேருக்கு உடைகள் களையப்பட்டது,மார்பகங்களை எத்தனை விழுக்காடு தொடப்பட்டது..? வாய்வழி புணர்ச்சி எத்தனை விழுக்காடு..? பேச்சு மட்டும் எத்தனை விழுக்காடு..?சுய இன்ப விழுக்காடு போன்ற 'அரிய' தகவல்களுடன் ஆய்வு முடிவுகள்.

'செக்ஸ் பற்றிப்பேசும் நேரம் இது சரியா ?' என்ற கட்டுரையை 'இந்தியா டுடே' சீனியர் எடிட்டர் 'காயத்ரி ஜெயராமன்' எழுதியுள்ளார்.

'எல்லாமே இணையத்தில்' என்ற தலைப்பின் கீழ் என்றொரு பகுதி. இந்தப்பகுதிக்கு ஆங்கில பதிப்பில் can you see the boobs ? எனத் த‌லைப்பிட்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்த இதழிலும் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இது போல சிறு சிறு வித்தியாசம் தான்.

இணையத்தொடர்பு எவ்வளவு பாதகங்களை உருவாக்குகிறது என்று சொல்லிவிட்டு 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள். இதனை 'இந்தியா டுடே' வின் சீனியர் கரஸ்பான்டென்ட் 'மரூஷா முசாபர்' எழுதியுள்ளார்.

டுத்ததாய் 'மூன்று நகரங்களின் கதை' என்றொரு பகுதி. அதில் இந்தியாவின் பழமையான மூன்று நகரங்களின் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் பாலியல் விருப்பங்கள்,தேர்வுகள்,உடை,பழக்க வழக்கங்கள் குறித்து ஆராய்வதாகச் சொல்கிறது. இதனை இந்தியா டுடேவின் அசோசியேட் எடிட்டர்களான சுகாரி சிங்,அமிதாப் ஸ்ரீ வத்சவா,ரோகித் பரிகர் ஆகியோர் எழுதியுள்ள‌னர். ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 19 நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் சென்னையும்  இடம் பெற்றுள்ளமையால் அது குறித்து குறிப்பாக எதுவும் இருக்கிறதா எனப் பார்த்தோம். ஆனால் எதுவும் இடம் பெறவில்லை. ஒருவேளை 'இந்தியா டுடே' வின் பிற மொழிப்பதிப்பு எதிலாவது சென்னையின் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் குறித்த இவர்களின் ஆய்வுகள் இடம் பெற்றிருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம். (தேடிக்கொண்டிருக்கிறோம்.)

40 ஆயிரம் விலை மதிப்புள்ள செல்போனுக்காக  மகிழ்ச்சியுடன் தன்னை அளித்த‌ பெண் குறித்து விளக்கி விட்டு ஓரிரு சந்திப்புக்குப்பின் அந்த ஆளுடனான உறவை  மற‌ந்து விட்டதையும் எழுதுகிறது. அதைத் தொடர்ந்து தார்மீகச் சிங்கங்களுக்கு இது குறித்துப் பேசினால் எரிச்சல் உண்டாக்கலாம் எனவும் எழுதியுள்ள‌து.

இப்படி பக்கத்துக்கு பக்க‌ம் டீன் ஏஜ் வயதினரின் என்ற பட்டியலில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியரின் பாலியல் தேர்வு,விருப்பங்கள் என வகை வகையாய் பக்கத்தை நிரப்பியுள்ள‌து இந்தியா டுடே. தாங்கள் சொன்ன விஷயம் படிப்ப‌வர்களுக்குப் புரியாமல் போய் விடுமோ என்ற 'அக்கறையில்' வரைபடங்கள்.'ஈர்க்கக் கூடிய ' தலைப்புகள்.

ங்கில புது வருடத்தின் இரண்டாவது இதழை இப்படி வெளிக்கொணர்ந்து தனது தேக்கமான விற்பனை நிலையைச் சரிக்கட்டி இருக்கிறது. வழக்கமாய் செவ்வாய்க்கிழமை இரவு வரை கடையில் கிடைக்கும் இந்தியா டுடே இதழானது இந்த முறை கடைக்கு வந்த ஞாயிறு மாலையே விற்றுத் தீர்ந்து விட்டது. இந்த சர்வே எப்படியும் 3 மாதங்கள் அதன் விற்பனையைத் தக்க வைக்கும். (அடுத்து இருக்கிறது இன்னொரு சர்வே.! சிறுவ சிறுமியர்களிடையே அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கை என ஒன்றை எடுத்து விட்டால் கிடக்கிறது.எவன் கேட்கப் போகிறான்..?)

பள்ளி,கல்லூரி மாணவிகள் எப்படி உடலுறவு கொள்கிறார்கள்,அதில் மார்பைத்தொடுவது எத்தனை விழுக்காடு../ வாய்வழிப்புணர்ச்சி எத்தனை விழுக்காடு என்பது ஒரு ஆய்வு. ( இதனை எடுத்தார்களா இல்லையா என்ற கேள்வியே இங்கு அனாவசியம்.)அதற்கு ஒரு கவர் ஸ்டோரி. இதற்கு எடிட்டோரியல் குழு.

இது தான் இந்தியாவின் நம்பர் ஒன் செய்திப் பத்திரிகை எனச் சொல்லிக்கொள்ளும் 'இந்தியா டுடே'வின் வழக்கமான லட்சணம். இந்தியாவைப் புரிந்து கொள்ள இதைப்படிக்க வேண்டுமாம்.

இது தான் அவர்கள் கட்டமைக்க விரும்பும் இந்தியா.

*****



ந்தியா முழுவதும் குழந்தைகள் உட்பட இளம் பிராயத்தினர் மீதான பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் முன் எப்பொழுதையும் விட மிக அதிக அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. 'இந்தியா டுடே' இதழே சில இதழ்களுக்கு முன் 'சிதையும் குழந்தைமை' என ஒரு முகப்புக் கட்டுரையை வெளியிட்டது. இன்றோ சிறுவ சிறுமிகளின் பாலியலை கதைகளாகவும் ஆய்வுகளாகவும் அகராதியாகவும் எழுதி குழந்தைகளை பாலியல் விருப்பத்துக்குள் தள்ளி விடும் வேலையைத் திட்டம் போட்டுச் செய்கிறது.

பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் சீரழிந்த நிலையை உருவாக்கி, மிக மிகக் குறைந்த விழுக்காட்டினரின்  செயல்களை ஆய்வு என்று அதற்கு நாமகரணம் சூட்டி ஒட்டுமொத்த சமூகத்தின் நடவடிக்கையாக மாற்றி அதனை விற்பனைப் பொருளாக்கி காசு பார்க்கத் துடிக்கிறது வக்கிர இந்தியா டுடே கும்பல். இதுவரை தனது விற்பனைப்பொருளாக பெண்களைப் பயன்படுத்தி வந்த இதழ் இப்பொழுது இளம் பிராயத்தினரைப் பயன்படுத்த தொடங்கி இருக்கிறது.



இந்த இதழில் கண்துடைப்புக்காகவாவது  ஏதாவது மனநல மருத்துவர்,குழந்தைகள் நல நிபுணர் யாரிடமாவது கருத்து வாங்கி பள்ளி மாணவிகள் மீதான தனது 'அக்கறையை' வெளிப்படுத்தி இருப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக பக்கத்துக்குப் பக்கம்  ஆணுறை விளம்பரங்கள் .வயதான ஆண்களுக்கு எழுச்சியை உண்டாக்கும் Vacurect சாதன விளம்பரமும் வண்ண‌த்தில் இருக்கிறது.

அப்படியானால் தங்க‌ள் நோக்கம் என்ன என்பதை வெளிப்படையாகப் பறைசாற்றுகிறது.

எதை வலியுறுத்துகிறது 'இந்தியா டுடே'..?

இதனைப் படிக்கும் இரு தரப்பினரும்  சக பாலினரை   என்ன மனநிலையில் அணுகுவார்கள்..? அவர்களின் மீதான தாக்குதலை எதிர்க்கும் மனநிலையுடன் பயிற்றுவிக்கப்படுவானா அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது தனது இச்சைக்கு அவர்களைப் பயன்படுத்த நினைப்பானா..?

அது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பிரச்சனையையும் 'இந்தியா டுடே' 'கொண்டாட்ட' மனநிலையுடன் அணுகுகிறது. அதனால் தான் 3 ஆண் நண்பர்களுடன் உறவு வைத்திருக்கும் பெண் குறித்துக் கூறும் பொழுது இவரின் செயல் தார்மீகச் சிங்கங்களுக்கு எரிச்சலை உண்டாக்கலாம் என நக்கலாய் எழுதுகிறது.

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களிலாவது அவர்கள் தங்களுக்கு இழைக்கப்ப‌டும் தீங்கு குறித்து தெரிந்திருக்கின்றனர். அதனை எதிர்கொள்ள ஓரளவுக்காவது மன வலிமையும் உடல் பலமும் இருக்கிறது.

ஆனால்  சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதலை எதிர்கொள்ள அவர்களுக்கு எந்த வடிவத்திலும் உரிய பக்குவம் இருப்பதில்லை. ஆனால் அத்தகைய வன்முறையையும் அவர்கள் மீதான பாலியல் சீண்டலையும் 'இந்தியா டுடே' திட்டமிட்டு உருவாக்க நினைக்கிற‌து.

ஆபாச பத்திரிகையை சட்டப்படி இந்தியாவில் பதிவு செய்ய முடியாது. ஆனால் 'இந்தியா டுடே' போன்ற பத்திரிகைகள் அத்தகைய வேலையைத் தான் மறைமுகமாய்ச் செய்கின்றன.  இத்தகைய பத்திரிகைகளைத் தடை செய்வது தான் சரியாக இருக்கும். அதற்கான கோரிக்கைகள் இனி வலுப்பெற வேண்டும்.

டைம்பாஸ்,வண்ணத்திரை,சினிக்கூத்து இதழ்கள் கூட இப்படிப்பட்ட மனநிலையை உருவாக்க முனைவதில்லை. தங்கள் விற்பனைப் பொருட்களாக பெண்களுடன் மட்டும் நிறுத்திக் கொள்கின்றனர்.ஆனால்  'இந்தியா டுடே' பதின்பருவத்தினர் எனச் சொல்லிக் கொண்டு சிறுவ சிறுமியர்களை வைத்து அருவருப்பான இதழை வெளியிட்டிருக்கிற‌து.

இந்த செக்ஸ் சர்வே முழுவதும் டெல்லியில் இருந்து முடிவு செய்யப்பட்டு ஒட்டு மொத்த இந்தியா முழுமைக்கும் ஒன்று போல் வெளியிடப் பட்டிருக்கின்றன.

இதில் குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பெண்களையும் (தென்னக வார்த்தை என லாவகமாய் சொல்லியிருக்கிறார்கள்) மிக இழிவு படுத்தியிருக்கிறார்கள்.

இளசுகளின் அகராதியில், UB என்பது பின்னாலிலிருந்து கவர்ச்சியாகவும் முன்னால் அப்படி இல்லாமலும் இருக்கும் பெண் என்று எழுதியிருக்கிறார்கள். பெண்களை மிக இழிவுபடுத்தியதற்காய் தமிழ்நாட்டு பெண் முற்போக்காளர்கள் எனச் சொல்லப்படுவோர் 'இந்தியா டுடே' சென்னை அலுவலகத்தை இதற்காய் முற்றுகையிட வேண்டும். ஜெயமோகன் விமர்சனத்துக்கு எதிராய் சாரை சாரையாய் அணிவகுத்து பக்கம் பக்கமாய் எழுதி கொடி பிடித்த‌ பெண் 'போராளிகளில்' ஒரே ஒருத்தர் கூட 'இந்தியா டுடே' போன்ற ஊடகத்தை எதிர்த்து முணுமுணுக்க கூட மாட்டார்கள் என்பது தான் கசப்பான உண்மை.

சிலர் நினைக்கலாம் தமிழ் பதிப்பு எடிட்டோரியலில் பெண்கள் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள்.அசோசியேட் எடிட்டர் கவிதா முரளிதரனும்,அசோசியேட் காப்பி எடிட்டர் கவின் மலரும் முற்போக்காளர்கள் என வெளியுலகில் அறியப்படுபவர்கள் அவர்களை மீறி எப்படி இதுவெல்லாம் வந்தது என ? அப்படி நினைத்தால் நினைப்பவர்கள் ஊடக அறியாமையில் இருக்கிறார்கள் எனலாம்.

காவல் நிலையத்தில் மகளிர் காவலர்கள் இருப்பதானலேயே அங்கு செல்லும் பெண்கள் மீதான  மீதான வன்முறைகள்,தாக்குதல்கள்,பாலியல் கொடுமைகள் நின்றுவிட்டனவா.. என்ன..? அது போலத்தான் இங்கும். 'இந்தியா டுடே' இந்த இதழில் இடம்பெற்றுள்ள வக்கிரமான கட்டுரைகள் டெல்லியில் இருந்து முடிவு செய்யப்பட்டவை,எங்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை  என வாதிடுவது சரியாகாது. அருண் பூரி தலைமையிலான  எடிட்டோரியலில் இருக்கும் அனைவரும் தமிழ்ப் பதிப்பில் வெளிவந்தமைக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் தான்.

india today editor arun purie
இந்தியா டுடே சீப் எடிட்டர் அருண் பூரி


ந்தியாவைப் புரிந்து கொள்ள இந்தியாடுடே வைப்படிக்க வேண்டுமாம்.

இந்தியா டுடே வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் பிரதிபலிக்கும் இந்தியாவிலிருந்து தான் இந்தக் கட்டுரை உருவாகியுள்ளது.
எந்தச் சமூகத்தில் இருந்து வந்தார்களோ அதன் வக்கிரத்தைப் பிரதிபலிக்கிறார்கள்.

இந்தியா டுடேவின்  மேட்டுக்குடியினர் முன்பெல்லாம் பணத்தை அள்ளி இறைத்து அவர்களுக்குப் பிடித்த   அழகிகளையும் அல்லது வாய்ப்பிருந்தால் நட்சத்திரங்க‌ளையும்  தங்கள் இச்சைக்குப் பயன்படுத்துவார்கள்.அதற்குத் தோதான தரகர்களை வைத்திருப்பார்கள்.

இப்பொழுது அவர்களுக்குத் தங்களது வழக்கமான விருப்பங்கள் சலித்து விட்டது.அவர்கள் இப்பொழுது தங்களின் வக்கிரத்துக்குத் தீனி போட விரும்புகிறார்கள். அவர்கள் விரும்புவதெல்லாம் புத்தம் புதிய மலர்கள் தான். அதனால் தான் கல்லூரி,பள்ளி மாணவிகளை நோக்கித் திசை திருப்பியிருக்கிறார்கள்.இது தான் அவர்களின் இப்பொழுதைய விருப்பம்.அதற்கு என்ன விலை கொடுக்கவும் ,எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராய் இருக்கிறார்கள். அதற்கான புரோக்கர்களும் இருக்கிறார்கள். இது மேல் மட்டத்தில் சமீப ஆண்டுகளாய் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அவர்களின் இந்த வக்கிரத்தை பொதுத்தளத்தில் கடைசிக் கட்டம் வரைக்கும் கொண்டு போய் திட்டமிட்ட பண்பாட்டுச் சீரழிவை உருவாக்க நினைக்கும் செயலைத்தான்  இந்தியா டுடே செய்கிறது.அதன் விளைவு தான் இந்த இதழ்.

பெண்களிடமிருந்து விலகி சிறுமிகளை நோக்கி விபச்சாரத் தரகர்கள் தங்கள் பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள்.

விபச்சாரத் தரகர்களின் செயல்பாட்டிலிருந்து 'இந்தியா டுடே' வேலை மாறுபட்டிருக்கலாம்.

ஆனால் தன்மை ஒன்று தான்.

courtesy:kalakakural 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

அம்போவான கிம்போ

BY  JEEVANAND RAJENDRAN இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி. அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி. நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம். பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒர...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!'  - யாரோ ஒருவன். அ ந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து  ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.  ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இந்தப...

பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?

நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ” என் பெண் வருகிறாள் ” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில் , ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத பைகளும் கொண்ட ஜீன்ஸ் அணிந்து ; மேலே ஜீன்ஸின் மேல் விளிம்புடன் தொட்டும் தொடாமலும் பிரிந்த , குட்டைக்கையுள்ள வெண்ணிற மேல்சட்டை போட்டிருந்தாள். கையிலிருந்த புத்தகங்களையும் குறுவட்டுகளையும் போட்டுவிட்டு மென்னிருக்கையில் பலமாக அமர்ந்து என்னைப்பார்த்து ” ஹாய்! ” என்றாள். ” என்னைத்தெரியுமா ?” என்றேன்.பதின்பருவத்திற்குரிய மென்மை பளபளத்த கரிய சருமம். மூக்கின் மேல் வளைவு சற்றே பதிந்து சிறிய உதடுகளும் குண்டுக்கன்னங்களுமாக குழந்தைத்தனம் காட்டியது முகம். சிறு குழந்தைகளுக்கே உரிய தெளிந்த கண்களில் ஒளிபோல சிரிப்பு. ” சொல்லுங்க ” என்றாள். அந்தப்பதிலின் சாதுரியத்தின் நான் புன்னகை செய்தேன். நண்பர் , ” இவருதான் ...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest