முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுன்னத் கல்யாணம்



பெரும்பாலானோருக்கு என்னவென்று புரிந்திருக்கும்புரியாதோருக்கு, சுன்னத் கல்யாணம் இஸ் நத்திங்பட் சர்கம்சிஷன் AKA கு** கல்யாணம்.

இதற்கு ஏன் கல்யாணம் என்று பெயர் வந்தது எனப்புரியவில்லைஇப்போதெல்லாம் சு.க பெரும்பாலும்ஆஸ்பத்திரியிலேயே முடிந்துவிடுகிறது. 90கள் வரை கிராமங்களிலும் டவுன்களிலும் அது ஒரு விழா போலநடக்கும்இப்போது 89% குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களிலேயே நடத்தி விடுகின்றனர்முன்பு பெரியவன் ஆன பின்னும் சிலருக்கு நடப்பதுண்டுஎனக்கு மிகத்தெரிந்த ஒரு பையனுக்கு அஞ்சாப்புஆனுவல் லீவ்ல நடந்துச்சு (யார்னு கேக்கப்படாது).
<<<<<<கொசுவத்தி ஸ்டார்ட்ஸ்>>>>>>
அது ஒரு இனிய ஞாயிறுநாங்கள் இருந்தது ஊத்துக்கோட்டை என்னும் சிற்றூரில்வீட்டின் மாடியில்ஷாமியானா போடப்பட்டுஅக்கம்பக்கத்தினர்உறவினர்சுற்றம் சூழ வந்து வீடே கலகலவென்றிருந்தது.ஒரு பக்கம் “தம்” பிரியாணி தயாராகிக்கொண்டிருந்ததுதிடீரென்று கிடைத்த லைம்லைட்டில் தலைகால் புரியாது இரு இளந்தளிர்கள் சுத்தி சுத்தி வந்தனஒன்று நான்மற்றொன்று என் அண்ணன் (பெரியப்பாமகன்).

மதிய விருந்து தடபுடலாக நடக்கஎங்களுக்கு ஆட்டுக்கால் உறிஞ்சி & எக்ஸ்ட்ரா சிக்கன் 65 தரப்பட்டது.அடுத்த ஆடு நாம் தான் என அறியாத அவ்விரு ஆடுகளும் இலையில் வைக்கப்பட்ட ஆட்டை, அள்ளிஅள்ளிப்பருகவேண்டிய அமிர்தமடா இதுவென உண்டன

பின் , போட்டோகிராபரொருவர் வீட்டுக்கு வந்தார். 90களின் Kidஸல்லவாபோட்டோகிராபரைப்பார்த்ததும்இன்னோவாவை கண்ட நாஞ்சிலாராய் உள்ளம் பூரித்து, எங்களுக்கு செய்யப்பட்ட அலங்காரம் (புது பேண்ட்,சொக்காய்தொப்பிமூஞ்சி முழுக்க பான்ஸ் பவுடர்)  கண்டு கண்கள் பனித்துஇதயம் இனித்து,முத்தாய்ப்பாய் அவர்கள் சூட்டிய ரோஜா மாலையை அணிந்ததும் ஆனந்தத்துக்கம் தொண்டையைஅடைத்தது.
“ச்சளக்...கிஷ்க்யூவ்ன்...ச்சளக்...கிஷ்க்யூவ்ன்... ” - அணி அணியாய் எங்களோடு சேர்ந்து எல்லாரும்போட்டோ எடுத்துக்கொண்டாயிற்று.

மாலை சுமார் 6 இருக்கும்எங்களுடையது இரு வீடுகள் அருகருகே சேர்ந்த ஒற்றை வீடுவீடு #1ல் இருஆடுகள் & ஃபுல் தாய்மார்கள்வீடு #2ல் வெள்ளைத்தொப்பி போட்ட வித வித பாய்மார்கள். அனைவரும் யாரையோ எதிர்பார்த்துக்காத்திருந்தனர். 

சிறிது நேரத்தில் தட் டுத்தடுமாறி ஒரு வயதான (அழுக்கேறிப்போய் ப்ரவுனாக மாறிய வெள்ளைதொப்பியும்ரீகல் சொட்டு  நீலத்தால் வெளுக்கப்பட்ட சட்டை கைலியும் உடுத்தியிருந்ததாத்தா வந்தார்பரஸ்பரம்அஸ்ஸலாமு அலைக்குமும் அலைக்கும் சலாமும் பகிர்ந்த பின்னர் ஊதுபத்திகள் மணம் பரப்பஅரபியில்துஆ (ப்ரார்த்தனைநடைபெற்றதுமுடிந்ததும் கற்கண்டுபேரீச்சை &  ஆசை சாக்லேட் அன்போடுபகிரப்பட்டதுஇதுவரை சிறப்பாக போய்க்கொண்டிருந்த “அப்துல் இன் ஒண்டர்லான்ட்” தினத்தில் கேவிஆனந்த் பட டுஸ்ட்டாக ‘அது’ நடந்தது.
 வயதில் மூத்தவர் என்ற திருக்காரணத்தினால் என் அண்ணனும், பாச்சா என எல்லோராலும் அன்போடுஅழைக்கப்படும் முதல் ஆட்டை வீடு நம்பர் 1ல் இருந்து வீ. 2க்கு அழைத்துச்சென்றனர்சுமார் 3 நிமிடம் 60நொடிக்கு மயான அமைதி.

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ"
கேட்டுச்சே ஒரு சத்தம்எங்கண்ணன்கிட்டருந்து அந்த வீட்டில். 

 சடாரென்று எல்லாம் விளங்கியதுஎங்களை இதுவரை  போஷித்துபரிபாலித்து போற்றி வளர்த்தது பலிகொடுக்கத்தான்கழுத்தில் கத்தி வைத்து கரகரகர... நாம அம்பேல்... நாம மவுத்தாகப்போறோம்நம்மலகுர்பானி குடுக்கப்போறாங்க.. சூரியனில்லாததால் இருட்டிவிட்டது என்பதையும் தாண்டி எனக்கு மட்டும்ப்ரத்யேகமாக உலகம் இருண்டது.

10 நிமிடம் இருக்கும்சிவப்புத்துணி போர்த்தப்பட்டு (என்னது எங்கேயா? ‘அங்க’தான்...)  கண்ணீர் பீய்ச்சியபடிகிடந்த எங்கண்ணனைக் கையில் ஏந்தி வந்தார்கள்.

கொலை செய்யப்படுவதை விட கொலை செய்யப்படுவதைக்காண்பதும்அடுத்து தானும்அதுபோலக்கொல்லப்படப்போகிறோம் என அறிவதும் மிகப்பெரும் சித்ரவதைஅது எனக்கு நேர்ந்தது.அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லைஆனால் நிச்சயம் ஆபத்து உண்டென்றுஉள்ளங்கை ஸ்மார்ட் போன் போல தெரிந்தது.

அண்ணனை பாயில் கிடத்திஅடுத்து என்னை அழைத்தனர்நானாவது போறதாவது, “என்ன உட்டுடுங்கடாடாய்” என எங்கப்பாரைப்பார்த்து கத்தவும், என்ன பாய் பேசிட்டு இருக்கீங்க என ஒரு தடி தாடி பாய்என்னைஅலேக்காக தூக்கிச்செல்லவும் சரியாய் இருந்தது.

அந்த அறை.

முதலில் மல்லாக்க படுக்கப்போட்டு சட்டையையும்பேண்ட்டையும் கழட்டினர்பின் "சக்கரையில்” ஒருதிரவத்தை ஊற்றி உள்ளே ஊசிபோட்டனர்.  அப்போதே ஆரம்பித்துவிட்டேன் என் ஆலாபனையைகைகாலை உதற முடியாமல் பல பாய்மார்கள் அழுத்திக்கொண்டனர் (மத்தியானம் சாப்ட்ட ஓசி பிரியாணிக்குவிசுவாசமாம்... தக்காளி).
ஊதுபத்தி வாசம்இனிப்பு வகைகள்ரோஜா மாலைகள் சூழ்ந்திருக்கநடுவே ட்ரெஸ் இல்லாமல்அம்மன்குண்ஸாக நான்சுத்திலும் தாடிவாலாஸ். இதை விட ரொமாண்டிக்காக எதும் இருக்க முடியுமாஹூம்ம்ம்...
 
ஒரு கிழவனார் "தீன் தீன் மொஹ்மாத்...தீன் தீன் மொஹ்மாத் சொல்லுஎன்றார்எனக்கு பகலிலேயேபாத்திமா கேக்காதுராத்திரியில் ராக்கம்மாவா கேட்கும்சரியாய் புரியாமல் "தீன் தீன் மாமா"எனக்கதறினேன். “அரே... மாமா இல்ல... மொஹமத்” என்றார்வந்த கடுப்பில் "ப்போடாஎன நான்எதிர்வினையாற்றஎமோஷனை வெளிக்காட்டாதுஆத்திரத்தில் அந்தக்கிழவர்  காலை இன்னும் இறுக்க,ஒரு சைனா கத்தரியால் (அல்லது சேவிங் கத்தி), பிறந்ததிலிருந்து என்னுடன் வாழ்ந்த ‘அது’பிப்ரவரி14க்கு ரோஜா மொட்டு செடியிலிருந்து களையப்படுவதுபோல் கத்தரிக்கப்பட்டது.
அந்த வலியை சொன்னால் புரியாது.
பிறகு இன்னும் சில பல அடித்தல் திருத்தல்கள்லத்தி சார்ஜ்துப்பாக்கி சூடுகள் என "சம்பவஇடத்தைஅடித்து நொறுக்கிய பின்இடுப்பில் சிவப்பு துணி (யெஸ்.. ஸேம் ப்லட்... ஸேம் செஹப்புத்துணி… பாரபட்சம்பாக்காம அடிச்சுப்புட்டானுவபோர்த்தப்பட்டு அரை மயக்க நிலையில் மைனர் operated குஞ்சு கிடத்தப்பட்டார்
  
சிறிது நேரத்திற்குப்பின் கண்விழிக்கையில் எங்களைச் சுற்றி அக்கம்பக்கத்திலுள்ள அத்தனை பெண்களும்(ஹிந்து & கிர்ஸ்டின்ஸ்கூடி விட்டனர்அவர்கள் இது போன்ற சம்பவத்தை செவி வழிச்செய்தியாகமட்டுமே அறிந்துள்ள படியால் நேரலைக்காட்சிக்காக கூடினர் (6லிருந்து 60 வரை). வரும்ஒவ்வொருவருக்கும் முதலில் "சப்ஜெக்ட்குறித்து 5 நிமிடம் தியரி வகுப்பு நடைபெறும்பின் “நாடகமேடையின்” சிவப்புத்திரை விலக்கப்பட்டு நான் & என் அண்ணன் பங்கேற்கும் "இரு கோடுகள்எனும்பிரசித்தி பெற்ற நாடகம் காட்டப்படும்.
"ஸ்ஸ்ஸ்....ஷ்ஹ்ஷ்ஹ்ஸ்ஷ்....அய்யூஊஊ... உஹ்ப்ஹ்ப்ஃப்ஃப்…என ஒவ்வொரு பொண்ணும்  ஒவ்வொருஃபீலிங்ஸைக்கொட்டசிவப்புத்திரை மூடப்பட்டுவரிசையில் அடுத்து வருபவருக்கு ஷோ ஆரம்பிக்கும்.

லேடீஸ் பாத்தாங்களேகூச்சமா இல்லையா என ஆங்காங்கே சிலர் நினைப்பது கேட்கிறதுநானெல்லாம்கவரி மான் பரம்பரைவந்த ஆத்திரத்துக்கு சிக்கென கண்ணை இறுக மூடிக்கொண்டேன் (வேறு வழி?)

எங்கண்ணன் கொஞ்சம் ரொம்பவே வெள்ளைநான் லைட்டா காக்காவுக்கு காம்படிசன்சில கிழடுகள்எங்கண்ணனுடையதை சாதாரணமாகவும்என்னுடையதை கண்கள் சுறுக்கிவெயில் நேரத்தில் நெற்றியில்கையை வைத்துப்பார்ப்பதுபோல் பார்த்து உண்மையிலேயே வெந்த புண்ணில் விழி பாய்ச்சிச் சென்றதுகள்.

எல்லோரும் வந்து பார்த்தும் அத்தை மகள்களை மட்டும் காணவேயில்லை. அவர்களைப்பார்த்தால் காயம் சீக்கிரம் ஆறாதாம். பாட்டி சொன்னார். “ஏன்? அவங்களப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா” எனக்கேட்கும் பகுத்தறிவு அப்போது இல்லாததால் அப்பாவி கோயிஞ்சாமியாக நம்பினோம். 
எங்களுக்கும் எங்கள் அம்மாக்களுக்கும் அன்றிரவு தூக்கமில்லைநாங்கள் புரண்டு படுத்து விடாமலும்,கொசுபூச்சி கடித்துவிடாமலும் இருக்க அருகிலேயே இருந்து விசிறிக்கொண்டிருந்தனர்.
அடுத்த நாள்இடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு கிடைப்பதுபோல பலமான மரியாதை ரிட்டன்ஸ்என்ன வேணும் என அப்பா (நேற்று “என்ன உட்டுடுங்கடா டாய்”னு திட்டினேனேதட் சேம் தகப்பன்சாமி)கேட்கடெக்கு வேணும் என கோரஸ் பாடினோம்அடுத்த ஒரு மணி நேரத்தில் டெக்கு (வீடியோ ) வந்தது.வீட்ல விசேஷங்கசத்யம் சிவம் சுந்தரம்துர்கா போன்ற காவியங்களைப்பார்த்ததாய் நியாபகம்மூன்றுவேளையும்  கோழிக்கறிபச்சை முட்டைபால்மேரி பிஸ்கட்பழம் என தடபுடல் கவனிப்புகள்.அவ்வப்போது சிவப்புத்துணி லுல்லாவில் ரத்தத்தோடு ஒட்டிக்கொண்டு பிரிக்க முடியாது  லந்து பண்ணும். And ச்சுச்சா & கக்கா போகும்போது தவிர பிரச்சினை ஏதுமில்லை.

இப்போது விருந்தினர் விசிட்டுகள் சகஜமாகஎல்லாம் இயல்பு நிலைக்குத்திரும்பியது.
ஒரு வாரத்தில் அடுத்த டுஸ்ட்டாகஒரு டாக்டர் வந்து சுடுநீர் எனப்பொய்சொல்லப்பட்ட கொதிநீரைஜிம்பலக்கடி பம்பா”வில் ஊற்றிடெட்டால் போட்டு துவைத்துவீடு முழுகிகோலம் போட்டு புள்ளி வைத்துஅவர் பங்குக்கு சம்பவம் நடத்திவிட்டுச்சென்றார்பட்ட (கா*)லிலே படும் என்பது இதுதானோ எனநொந்துகொண்டே மேலும் ஒரு வாரம் ஒடியது

மீண்டும் டாக்டர் வந்து பார்த்து சரியாகிடுச்சு என்றார்அவர் சர்ட்டிபிகேட் கொடுத்துச்சென்ற அரை மணிநேரத்தில் டெக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

சாப்பாடு கவனிப்பு மட்டும் தொடர்ந்ததுமெல்ல மெல்ல மற்ற உடைகள் உடுத்தத்துவங்கிபின்னொருகாலத்தில் நண்பர்களால்  முக்காலா முக்காபுலா பாட்டுப்பாடி கலாய்க்கப்பட்டுபாய்வீட்டுப்பெண்ணைக்காதலித்த நண்பனை “கல்யாணம்லாம் ப்ரச்சனயில்ல மச்சிஆனா மொதல்லஒன்னோட ஜிங்குனமணில “மணிய” கட் பண்ணிடுவாங்கஓகேவா” என சிரித்துப்பேச வைத்துஇன்னும் பலவெளிச்சொல்ல முடியாத “றோபல்” அனுபவங்கள் தந்துஇதோஇந்தப்பதிவு வரை கொண்டுநிறுத்தியிருக்கிறதுஎங்கள் சுன்னத் கல்யாணம்
.
நன்றி  முத்தலிப் பாய் அண்ணண்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....