முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறை செல்லும் சீமாட்டி


மனிதனின் தேவைகளுக்கு இந்த உலகில் போதுமானவைகள் உள்ளன. ஆனால், அவன் பேராசைக்கு போதுமானவைகள் இல்லை என்றார் காந்தி.
“There is a sufficiency in the world for man’s need but not for man’s greed.” -Mahatma Gandhi
காதற்ற ஊசியும் வாராதுகண் கடைவழிக்கே என்றார் பட்டினத்தார். ஆனால், இந்த மனிதசமூகத்தின் காதுகளில் இவையெல்லாம் ஏறுகிறதா என்ன ?
Jayalalithaa withdraws orders against Sasikala
ஊழல் இச்சமூகத்துக்கு எத்தகைய தீங்கு பயப்பிக்கக் கூடியது என்பதை, பாலகிருஷ்ண தத்தாரேயா என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
“Corruption is not only a punishable offence but also undermines human rights, indirectly violating them, and systematic corruption, is a human rights’ violation in itself, as it leads to systematic economic crimes.”
ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறுகிறது. கவனமாக செய்யப்படும் ஊழல் எனபது, மனித உரிமைகள் மீறல் மட்டுமல்ல, அது, தொடர்ந்த பொருளாதாரக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய நீதி நாயகன் மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
A-1 is occupying a high position in the Government of State of Tamil Nadu. It is often observed “just as those at high places behave, so others below”. If persons holding higher positions indulge in corruption, not only those below get encouraged to indulge in corruption, but also the person holding higher position will not be in a position to exact honesty from them or to take action against delinquent officials.
குற்றவாளி 1 (ஜெயலலிதா) தமிழக அரசில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். ‘மேலே இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ, கீழே இருப்பவர்களும் அப்படியே நடந்து கொள்வார்கள் என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு’. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபட்டால், அவருக்கு கீழே உள்ளவர்கள் ஊழலில் ஈடுபட துணிவு கொள்வார்கள் என்பதோடு, தலைமைப் பொறுப்பில் இருக்கும் அந்த ஊழல் நபரால் தனக்குக் கீழ் உள்ளவர்களிடம் நேர்மையை எதிர்ப்பார்க்க இயலாது என்பதோடு, தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இயலாது.
ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, உரக்க உரக்க கூவிய அதிமுக அடிமைகள்…. ஏன் கருணாநிதி ஊழல் செய்யவில்லையா ? திமுக நேர்மையான கட்சியா என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். கருணாநிதி ஊழல் அரசியல்வாதிதான். திமுக ஊழல் கட்சிதான். அப்படிப்பட்ட கருணாநிதி மீதும், திமுக மீதும், 2001 முதல் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? 2011 முதல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? ஜெயலலிதாவை யாராவது கையைப் பிடித்துத் தடுத்தார்களா ?
திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றாலும், இரண்டுக்கும் மெல்லிய வேறுபாடு இருக்கிறது.
திமுக ஆட்சியில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும். சாலைகள் போடப்படும். குளங்கள் தூர் வாரப்படும். புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். அதிலிருந்து பெரிய குடும்பம், சின்ன குடும்பம், துணைக் குடும்பம், இணைக் குடும்பம் என்று அத்தனை குடும்பங்களும் கமிஷன் பெறும். அரசு நூறு ரூபாய் செலவு செய்தால், ஒரு எழுபது ரூபாய் மக்களைச் சென்றடையும்.
ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியில்….. ? கடந்த மூன்று வருடங்களாக, ஒரே ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டிருக்கிறதா ? ஒரு புதிய தொழிற்திட்டங்கள் வந்திருக்கின்றனவா ? டாஸ்மாக் விற்பனையைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகம் நடக்கின்றதா ? முதல்வர் பன்னீர்செல்வம், கருணாநிதியைப் பார்த்து சொன்ன அதே பழமொழியை சொல்ல விரும்புகிறேன். “அறுக்கமாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவா” என்ற பழமொழிக்கு ஏற்ப, சாதா முதல்வர், மக்கள் முதல்வர், சாதா தலைமைச் செயலர், மக்கள் தலைமைச் செயலர், சாதா டிஜிபி, மக்கள் டிஜிபி என்று ஆயிரத்தெட்டு அமைச்சர்கள், அதிகாரிகள்.
தமிழ்நாட்டில் நடப்பது போல கேடுகெட்ட ஆட்சி எங்குமே நடக்காது தோழர்களே…. ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி, அரசுக் கோப்புகளைப் பார்க்கிறார். அந்த தண்டிக்கப்பட்ட குற்றவாளியிடம், படித்த அரசு அதிகாரிகள் மண்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
jjsasikalanakeeran
தமிழக அரசில் என்ன நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா ? 2011ல் ஜெயலலிதா பதவியேற்ற நாள் முதலாகவே …. ? வசூல், வசூல், மற்றும் வசூல். மாத வசூல் கிடையாது. வார வசூல். ஒவ்வொரு அமைச்சருக்கும், அவரது துறைக்கு ஏற்றார்ப்போல, டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் வாரந்தோறும் பணத்தை வசூல் செய்து, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும் ஒரு பங்களாவில் தங்கள் வசூல் தொகையை கொண்டு செலுத்த வேண்டும். அப்படி செலுத்துகையில் அத்தனையும் புதிய கரன்சித் தாள்களாக இருக்க வேண்டும். அந்த கரன்சிக் கட்டின் மேல்புறத்தில், முதல் நோட்டின் எண்ணையும், கடைசி நோட்டின் எண்ணையும் ஒரு தாளில் குறிப்பிட்டு சொருகியிருக்க வேண்டும். தொகையைக் கொடுத்ததும், ஒவ்வொரு அமைச்சருக்கம் அவர்கள் கொடுத்த தொகையில் 30 சதவிகிதம் திரும்ப அளிக்கப்படும். யாராவது ஒரு அமைச்சர் தனக்குச் சேர வேண்டிய 30 சதவிகிதத்தை எடுத்துக் கொண்டு தொகையைக் கொடுத்தால் அவ்வளவுதான்.. ங்கொய்யால என்ன நடக்கும்னே தெரியாது. அப்படி வசூல் செய்யப்பட்ட தொகை, பல்வேறு ஆடிட்டர்களின் வழியாக ஹவாலா மூலமாகவும், பல்வேறு இடங்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது.
ஒரே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். தமிழ்நாடு ஒரு நாளைக்கு 3000 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து வாங்குகிறது. தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதலாக ஒரே ஒரு மின் உற்பத்தித் திட்டம் கூட செயல்படுத்தப்பட வில்லை. ஏறக்குறைய ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய்க்கும் அதிகமாக மின்வாரியத்தால் தனியாரிடமிருந்து வாங்கப்படுகிறது. இதில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு ஒரு யூனிட்டுக்கு கமிஷன் 20 பைசா. மின்வாரிய சேர்மன் கப்பர் சிங் என்கிற ஞானதேசிகன் ஐஏஎஸ்க்கு ஒரு யூனிட்டுக்கு இரண்டு பைசா. இந்த கணக்குப்படி பார்த்தால், கப்பர்சிங்குக்கு ஒரு நாளைய வருமானம் 14.40 லட்சம் மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு ஒரு நாளைய வருமானம் 1.44 கோடி. இவர்கள் இருவரும் தனித்தனியாக ஜெயலலிதாவுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
Natham Viswanathan
டாஸ்மாக் கடைகளை பார்வையிட்டிருக்கக் கூடியவர்களுக்கு டாஸ்மாக்கில் ஒரு நாளும் விற்பனை குறைவதேயில்லை என்பது நன்கு புலப்படும். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், இரண்டு முறை சரக்கு விலை உயர்த்தப்பட்டது. இருந்தபோதும், டாஸ்மாக் வருவாய் கடந்த தீபாவளியன்று குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இணைப்பு  இது எப்படி ?
டாஸ்மாக்கோடு இணைக்கப்பட்டுள்ள பார்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலானவர்கள் பார்களில் அமர்ந்தே குடிக்கின்றனர். இவ்வாறு குடிப்பவர்கள், பார்களில் அமர்ந்து சப்ளை செய்பவர்களிடமே ஆர்டர் செய்கின்றனர். அவர்களுக்கு, சப்ளையர், டாஸ்மாக் கடையில் சரக்கை வாங்குகிறாரா அல்லது, அவர் பாரில் உள்ள சரக்கை எடுத்துத் தருகிறாரா என்பது தெரியாது… அதை தெரிந்து கொள்ளவும் யாரும் ஆர்வம் காட்டப்போவதில்லை. நத்தம் விஸ்வநாதன் தன்னுடைய நூதனமான தந்திரத்தின் மூலமாக, சரக்கு விற்பனையாளர்களிடமிருந்து, நேரடியாக பார்களுக்கு தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் சரக்கை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்பவர், நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் கோபி.
உதாரணத்துக்கு எஸ்என்ஜே டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அரசுக்கு ஒரு பாட்டில் பியரை 100 ரூபாய்க்கு வழங்குகிறதென்றால் அதன் அடக்க விலை 30 ரூபாய் இருக்கும். மீதம் உள்ள 70 ரூபாயும், அரசு விதிக்கும் வரி. அரசுக் கணக்குக்கே வராமல், நேரடியாக பார்களுக்கு எஸ்என்ஜே டிஸ்டில்லரிஸ் சரக்கு வழங்கினால், அதாவது டாஸ்மாக் கணக்குக்கே வராமல். அரசுக்கு வர வேண்டிய 70 ரூபாய் வருவாய் யாருக்குப் போகும் ? இது ஒரு பியர் பாட்டிலினுடைய கணக்கு. இது போல, லட்சக்கணக்கான பாட்டில் பியர்கள் மற்றும் இதர மதுபானங்கள் பார்களுக்கு சப்ளை செய்யப்பட்டால் கிடைக்கும் வருவாயை யோசித்துப் பாருங்கள். டிஸ்டில்லரீஸ் மற்றும் ப்ரூவரி நிறுவனங்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. எங்கே கொடுத்தாலும் அவர்களின் அடக்கவில்லை கிடைத்தால் போதுமல்லவா ? இது போல கிடைக்கும் வருமானத்திலும் பெரும்பங்கு, கொடநாடு கோமலவள்ளிக்கே செல்கிறது.
சரி. இப்படியெல்லாம் வசூல் செய்யும் பணத்தை என்ன செய்கிறார்கள் ஜெயலலிதா மற்றும் சசிகலா என்ற கேள்வி இயல்பாக எழும் அல்லவா ? அவர்கள் அந்தப் பணத்தை என்ன செய்திருக்கிறார்கள் என்பதைப் பற்றித்தான் இந்த கட்டுரை.
ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல்வரான பிறகு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயரில் ஏராளமான பினாமி நிறுவனங்களை தொடங்குகிறார் என்று கூறியுள்ளார் மைக்கேல் குன்ஹா. இவை அனைத்தும் பினாமி நிறுவனங்கள் என்பது, அந்த வழக்கில் தெள்ளத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
Cho_ramasamy
இது போல ஜெயலலிதாவின் பினாமி நிறுவனமாக தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட். 05 செப்டம்பர் 2005ல் இந்த நிறுவனம் தொடங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தொடக்க கால இயக்குநர்களாக யார் இருந்தார்கள் என்ற விபரம் இல்லை.
ஆனால், சசிகலா டிசம்பர் 2011ல் வெளியேற்றப்பட்ட உடனே இந்த ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தில் இயக்குநர்களாக நியமிக்கப்படுபவர்கள் இரண்டு பேர். ஒருவர் தன்னை தமிழகத்தின் மிகப்பெரிய நியாயவானாக சித்தரித்துக்கொள்ளும், தலைச்சிறந்த ப்ரோக்கர் சோ ராமசாமி. இவர் பேசும் ஊர் நியாயத்தைக் கேட்டால் காது கிழியும். அப்படி ஒரு நேர்மையாளர் போல பேசுவார். நேரம் இருந்தால் கேளுங்கள்.     யு ட்யூப் இணைப்பு
மிடாஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த இந்த மிடாஸ் மாமா சோ ராமசாமிதான் இந்த ஹாட்வீல்ஸ் நிறுவனத்தில் மன்னார்குடி மாபியாவின் வெளியேற்றத்துக்குப் பிறகு இயக்குநராக இருந்தார். இவராடு இருந்த மற்றொரு இயக்குநர் பூங்குன்றன். இந்த பூங்குன்றன் யார் தெரியுமா ? இவரது தந்தையின் பெயர் புலவர் கலியபெருமாள். சொந்த ஊர் சூரக்கோட்டை. இவருக்கு வேலை, நமது எம்ஜிஆரில் கட்டுரை எழுதுவது, ஜெயலலிதாவுக்கு அறிக்கைகள் எழுதித்தருவது ஆகியன. இந்த கலியபெருமாளை சசி ஜெயா சகோதரிகள் ஒரு நாள் திடீரென்று விரட்டி விட்டனர். அவரை விரட்டி விட்டு விட்டு, அவர் மகன் பூங்குன்றனை அவர் தந்தை இடத்தில் வேலைக்கு வைத்துக் கொண்டனர்.
அந்தா வலது ஓரத்துல கோழி திருடுன மாதிரி நிக்கிறாரே.... அவருதான் தொழில் அதிபர் பூங்குன்றன்.
அந்தா வலது ஓரத்துல கோழி திருடுன மாதிரி நிக்கிறாரே…. அவருதான் தொழில் அதிபர் பூங்குன்றன்.
Form 32 Cho_Page_1
பூங்குன்றனின் தற்போதைய பணி, ஜெயலலிதாவுக்கு வரும் கடிதங்களை பிரித்து அவர் மேசையில் வைப்பது, செய்தித்தாள்களை அவர் பார்வைக்கு வைப்பது உள்ளிட்டன. இந்த பூங்குன்றனும், ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குநராம். ஜெயலலிதா தன்னை இயக்குநராக இருக்கும்படி கேட்டதும், உடனடியாக ஒப்புக்கொண்டு சாராய ஆலையான மிடாஸுக்கும், ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கும் இயக்குநராக இருக்க ஒப்புக்கொண்ட சோ ராமசாமி, நவம்பர் 2012ல், இந்த நிறுவனங்களையெல்லாம் விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்.
இந்த நிறுவனங்களில் மீண்டும் இயக்குநரானவர்கள் இரண்டு பேர். ஒருவர் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார். மற்றொருவர் கார்த்திகேயன் கலியபெருமாள்.
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்துக்கு மொத்தம் இரண்டு மகள்கள். ஒருவர் பிரபாவதி. மற்றொருவர் அனுராதா. இந்த அனுராதாவின் கணவர்தான் டிடிவி.தினகரன். மற்றொரு மகளான பிரபாவதியின் கணவர்தான் டாக்டர் கே.எஸ்.சிவக்குமார். இந்த சிவக்குமார்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பவர்.
சிவக்குமார் மற்றும் பிரபாவதி தம்பதியினர்
சிவக்குமார் மற்றும் பிரபாவதி தம்பதியினர்
மற்றொரு இயக்குநரின் பெயர் கார்த்திக்கேயன் கலியபெருமாள். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு இரண்டு மகள்கள். ஒருவர் பெயர் ஷகீலா ஜெயராமன். மற்றொருவர் பெயர் கிருஷ்ணபிரியா ஜெயராமன். ஒருவரின் கணவர் பெயர் ராஜராஜன். மற்றொருவரின் கணவர்தான் கார்த்திகேயன். இது தவிர இளவரசிக்கு விவேக் ஜெயராமன் என்றொரு மகன் உண்டு. அவர்தான் இப்போது போயஸ் தோட்டத்து கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார்.
sasi2
சசிகலா மற்றும் இளவரசி
இளவரசியின் மகன் மற்றும் இரு மகள்கள்
இளவரசியின் மகன் மற்றும் இரு மகள்கள்
இந்த ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பெயரை ஜாஸ் சினிமாஸ் என்று திடீரென்று ஜுலை 2014ல் மாற்றுகிறார்கள். ஏன் திடீரென்று ஒரு நிறுவனத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று வியப்பாக இருக்கிறதா ? சோழியன் குடுமி சும்மா ஆடாதது போலவே, மன்னார்குடி மாபியாவின் மயிர் கூட சும்மா அசையாது.
இந்த ஜாஸ் சினிமாஸ் நிறுவனமும் இவர்கள் தொடங்கிய நிறுவனம் அல்ல.  சினிமா தயாரிப்பாளர் பதம் சந்த் போத்ரா மற்றும் சண்முகம் என்ற இருவர் தொடங்கியதே ஜாஸ் சினிமாஸ்.
சென்னை வேளச்சேரியில் ஃபீனிக்ஸ் மால் என்று ஒரு வணிகவளாகம் தொடங்கப்பட்டு அமோகமாக நடைபெற்று வருவதை அறிவீர்கள் அல்லவா ? இணைப்பு
இந்த வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகம் மும்பையைச் சேர்ந்த பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகத்தில் மொத்தம் 11 தியேட்டர்கள் கட்டப்பட்டன. வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டாலும், இதில் உள்ள தியேட்டர் மட்டும் மார்ச் 2014ல்தான் தொடங்கப்பட்டது. சென்னை நகரத்திலேயே மிகப்பெரிய வணிகவளாகத்தைக் கட்டியவர்களுக்கு தியேட்டரை மட்டும் உடனடியாக கட்டத் தெரியாதா ? ஒரு ஆண்டு தாமதம் ஏன் ? ஏன் தாமதம் என்றால் சென்னை மாநகரக் காவல்துறையும் இதர அமைப்புகளும், இந்த தியேட்டர்களைத் திறக்க அனுமதி தரவில்லை.
நம்மைப் போன்ற சாதாரண நபர்கள் ஒரு வீடோ அல்லது கடையோ கட்டினால், அதற்கு மாநகராட்சியோ, சிஎம்டிஏவோ, காவல்துறையோ அனுமதி தராமல் மாதக்கணக்கில் இழுத்தடிப்பது இயல்பான விஷயமே. ஆனால், பல கோடி ரூபாய் முதலீட்டில் வணிக வளாகம் தொடங்குபவர்கள் எதற்காக இப்படி அல்லாட வேண்டும் ? அதுவும் ஒரு வருடமாக ? ஒரு வருடம் பதினோரு தியேட்டர்களை பூட்டி வைத்திருந்தால் ஏற்படும் நஷ்டம் என்ன சிறு தொகையா ? அதுவும், சத்யம் சினிமாஸ் போன்ற மிகப்பெரிய குழுமத்துக்கு சொந்தமான ஒரு தியேட்டரை திறக்க ஒரு வருடமா ? பிறகு ஏன் இவ்வளவு தாமதம் ?
இந்த நேரத்தில்தான் சென்னை 17, தியாகராய நகர், வெங்கட்ராமன் தெரு, பழைய எண் 19 மற்றும் 20/12 புதிய எண் 38/12 என்ற முகவரியில் காலை 10.30 மணிக்கு நடந்த ஒரு கூட்டத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த கூட்டம் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் அசாதராணமான பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கியது யார் தெரியுமா ? சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியான விவேகானந்தனின் மகள் வி.கே.சசிகலா. அதில் பங்கெடுத்த மற்றொருவர் சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளியும், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகளுமான இளவரசி.
VK Sasikala, Ilavarasi, minutes_Page_1
VK Sasikala, Ilavarasi, minutes_Page_2
VK Sasikala, Ilavarasi, minutes_Page_9
கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதுதான் சிறப்பான செய்தி. ஹாட் வீல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களாகவும், லீஸ் உரிமையாளர்களாகவும் தியேட்டர்கள், மல்டிப்ளெக்ஸுகள், விளையாட்டு அரங்கங்கள், வீடியோ கேம் நிலையங்கள் ரெக்கார்டிங் நிலையங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது என்று முடிவெடுத்தனர் இரண்டு குற்றவாளிகளும். சத்யம் சினிமாஸ் நிறுவனம், வேளச்சேரி மாலில் உள்ள 11 தியேட்டர்களை வாங்குவதென்று, இந்த மால் கட்டத் தொடங்கப்பட்ட காலத்திலேயே ஒப்பந்தம் போட்டது. அதன்படி, இந்த மால் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே, மன்னார்குடி மாபியா கூட்டம் சத்யம் நிறுவனத்தாரிடம் இந்த 11 தியேட்டர்களையும் தங்கள் வசம் ஒப்படைக்குமாறு மிரட்டுகிறது. ஆனால் அவர்களோ, முடியவே முடியாது என்று உறுதியாக மறுக்கின்றனர். சின்னம்மாவுக்காக கேட்கிறோம் என்று சொன்ன பிறகும் முடியாது என்று சொல்ல எவ்வளவு இறுமாப்பு இருக்கும். வந்ததே கோபம் சின்னம்மாவுக்கு. விஷயத்தை தன் வேலையாள் ஜார்ஜிடம் சொல்லுகிறார். சின்னம்மா காலால் இட்ட பணியை தலையால் முடிப்பதல்லவா ஜார்ஜின் கடமை ???
இதற்கு முன்னதாகவே, சின்னம்மா இந்த தியேட்டரை விலைக்கு வாங்க விருப்பமாக இருக்கிறார் என்பதை அறிந்த ஜார்ஜ், இந்த தியேட்டரை திறக்க தடையில்லா சான்று தராமல் மாதக்கணக்கில் இழுத்தடிக்கிறார். ஆனால் சத்யம் குழுமம் எதற்கும் சளைக்கவில்லை.  சின்னம்மா வேண்டும் என்று சொல்லியும், விற்க மறுப்பதற்கு உனக்கு என்ன துணிச்சல் என்று வெகுண்டெழுந்தார் ஜார்ஜ். உடனடியாக நில அபகரிப்புப் புகார் பாய்கிறது சத்யம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது. சத்யம் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஸ்வரூப் ரெட்டி மற்றும் அவர் உறவினர் சுஜய் ஆனந்த் ரெட்டி ஆகியோர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சுஜய் ஆனந்த் ரெட்டி கைது செய்யப்படுகிறார். ஸ்வரூப் ரெட்டி தலைமைறைவாகிறார். ஆர்ச்சிட் ஃபவுன்டேஷன் என்ற நிறுவனத்தின் இயக்குநரான சவுந்தரபாண்டியன் என்பவரும் கைது செய்யப்படுகிறார். தலைமறைவாக இருந்த ஸ்வரூப் ரெட்டியிடம் விஷயம் தெள்ளத்தெளிவாக விளக்கப்படுகிறது. தியேட்டரை விற்றால் தப்பிப்பாய். இல்லையென்றால் புழல்தான் என்ற விஷயம் விளக்கிச் சொல்லப்படுகிறது. பணிகிறார் ரெட்டி. தியேட்டர் கைமாறுகிறது. இணைப்பு 1   இணைப்பு 2 இணைப்பு 3
ஒரு தொழில் என்று தொடங்கினால் அதை சரியாகச் செய்யவேண்டுமல்லவா ? அதற்காகத்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் பெயரை ஜாஸ் சினிமாஸ் என்று சின்னம்மா மாற்றுகிறார்.
இன்னும் ஒரே மாதத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர இருந்த நிலையில், இப்படி ஒரு கூட்டத்தை நடத்தி, அடாவடியாக 11 தியேட்டர்களை அடித்துப்பிடுங்க இந்த பேராசைக்காரிகள் இருவருக்கும் எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும் ? இது யார் தந்த துணிச்சல் ? ஜெயலலிதா இல்லாவிட்டால், இவர்களால் சினிமாத் தொழிலில் பழம் தின்று கொட்டை போட்ட சத்யம் குழுவினரை மிரட்டி 11 தியேட்டர்களை விலைக்கு வாங்க முடியுமா ?
தியேட்டர்கள் கைக்கு வந்த பிறகு, சென்னை சத்யம் தியேட்டர்கள் குழுமத்துக்கு இந்த 11 தியேட்டர்களும் லீசுக்கு விடப்பட்டுள்ளன.
1991ல் 66.5 கோடி ரூபாய்க்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து, அதற்கான வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்து, 30 நாட்களில் அந்த வழக்கில் தீர்ப்பு என்று இருக்கும் நிலையில், ஒரு தொழிலதிபரை மிரட்டி 11 தியேட்டர்களை விலைக்கு வாங்குகிறார்கள் என்றால், இந்த முட்டாள் மக்கள் நம்மை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்ற திமிரும் அகம்பாவமும்தானே… ?
sasi3
இந்த விவகாரங்களையெல்லாம் கையில் எடுத்து போராட்டத்தில் இறங்க வேண்டிய திமுக, இதை விட பகாசுர ஊழலில் ஈடுபட்டு, மகளும் மனைவியும் எப்போது சிறை செல்வார்களோ என்று அதன் தலைவரை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. திமுகவில் அமைச்சர்களாக இருந்த பெரும்பாலான அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
இதுதான் தமிழகத்தின் இன்றைய வேதனையான நிலைமை. இந்தக் கட்டுரை இத்தோடு முற்றுப்பெறவில்லை. ஜெயலலிதா 2001க்குப்பிறகு மன்னார்குடி மாபியா பெயரில் புதிதாக தொடங்கியுள்ள பல்வேறு புதிய நிறுவனங்களின் விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.
மைசூர் சீமாட்டி நிரந்தரமாக இருக்க வேண்டிய இடம் சிறை அல்லவா ?

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....