முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பால்வாடி கேர்ளின் பால்கனி பிரவேசம்


மேம்பாலங்களில் இதை கவனித்திருக்கலாம். யாராவது மேம்பாலத்தின் உச்சியில் வண்டியை நிறுத்தி கீழே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தால், இயல்பாக இன்னொருவரும் வண்டியை நிறுத்தி எட்டிப்பார்ப்பார்கள். அடுத்தடுத்து ஆட்களும் எதற்கு பார்க்கிறோம் என்பதே தெரியாமல் பார்ப்பார்கள். காவல்துறை வந்து கடமையை செய்தால்தான் கூட்டம் கலையும். ஜெயாடிவி அமைந்திருக்கிற ஈக்காட்டுத்தாங்கல் பாலத்திற்கு பக்கத்தில் அடிக்கடி இந்த காட்சி அரங்கேறும். நானும் கூட இப்படி வண்டியை நிறுத்தி எட்டிப் பார்க்கிற வழக்கம் உள்ளவன்தான். சிலநேரங்களில் அதிரவைக்கிற காட்சிகள் காணக்கிடைக்கும். பிணங்கள் கூட மிதந்துகொண்டிருக்கும்.
அப்படித்தான் இன்றும் பாலத்திற்கு கீழே சிலர் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தனர்... நானும் போய் நின்றேன். எப்போதும்போலவே விபரங்களை விசாரித்தேன். ''தீபாம்மா போறாங்க'' என்றார் ஒருவர். எனக்கு புரியவில்லை. ''என்னாம்மா போறாங்க'' என்றேன்... அதாங்க தீபாம்மா என்று அழுத்தமாகச் சொன்னார். புரியமாலே போயிருக்கலாம். அப்படியே மேம்பாலத்தில் இருந்து குதித்துவிடலாமா என்று இருந்தது.
மன்னார்குடி மாபியாவின் அரசியல் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நடுவில் நகைச்சுவை பகுதிபோல நடக்கிறது அண்ணன் மகள் தீபாவின் அடாவடி. அவர் எந்த அடிப்படையில் அதிமுகவை கைகொள்ள துடிக்கிறார். எதற்காக அவர் அதிமுகவிற்கு தலைமை தாங்க நினைக்கிறார் என்பது அம்மாவின் ஆன்மாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது. இருந்தாலும் கடுமையான இந்த வெயில் காலத்திலும் சாமக்கோடங்கி போல போர்வையை போர்த்திக்கொண்டு துணிச்சலாக திரிகிறார். கட்சியின் அடிமட்டத் தொண்டர் போல ''ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிக்கொள்ள கூடாது'' என்கிறார்.
புதிதாக தொடங்குகிற அமைப்புக்கு பெயர் வைக்கும்போது மறக்காமல் தன் பேரையும் சேர்த்துக்கொள்கிறார். பேர் வச்சியே சோறுவச்சியா என்கிற முதுமொழிக்கு இணங்க... கட்சிக்கு என்னம்மா கொள்கைகள் என விசாரித்தால்... ஜெயலலிதா மரண மர்மத்தை கண்டுபிடிப்பது, ஜெ சொத்துக்களை மீட்பது என்கிறார். இரட்டை இலையை காப்பாற்றுவது என்கிறார். இதையெல்லாம் சாதித்து அதை யாரிடம் கொடுக்கப்போகிறார் என்பதுதான் இந்தக்கதையில் இருக்கிறது சுவாரஸ்யமே!
எக்காலத்திலும் தீபாவை ஜெயலலிதா குறிப்பிட்டு பேசியதோ அல்லது ஊடகங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியதோ கூட இல்லை. இவரும் இத்தனை காலமும் எங்கும் எப்போதும் முன்வந்து உரையாடியதில்லை. தீபா தனி மனுஷியாகவும் மக்கள் பிரச்சனைகளுக்காகவோ... அல்லது தன்னுடைய அத்தையின் பிரச்சனைக்களுக்காகவோ கூட வாசல் தாண்டியதில்லை! எங்கோ பதுங்குகுழியில் பல ஆண்டுகளாக இருந்தவர். அத்தைக்கு உடம்புக்கு முடியவில்லை என சாலையில் இறங்கியிருக்கிறார். அவருக்கு அத்தையை தூரத்தில் நிறுத்தியாவது ''தோ பார் ஆன்ட்டி'' எனக்காட்டி அனுப்பியிருந்தால் தமிழ்நாடு இந்த காமெடிகளை தவறவிட்டிருக்கும். நல்லவேளையாக கைதி எண் 9234 புண்ணியத்தில் நமக்கு நல்ல டைம்பாஸ்!
ஒருவேளை இத்தனை ஆண்டுகளும் பதுங்கி இருந்ததே தமிழகத்திற்கான அடுத்த அம்மா ஆவதற்கான தகுதியாக நினைத்தாரோ என்னவோ.... ஆமாம் நம்முடைய முன்னாள் முதல்வரும் அப்படித்தானே... ஆட்சியில் இல்லாத போதெல்லாம் கொடநாட்டில் தானே பதுங்கி இருப்பதைத்தானே முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்தார். ஆட்சியில் இல்லாத போது எப்போதாவது போராட்டத்தில் ஈடுபட்டதை நாடு பார்த்ததுண்டா?
அப்படி பிஸியாக இவ்வளவு காலமும் சும்மாவே இருந்த தீபா... இப்போது திடீரென்று அதிமுகவின் மீதும், தமிழக மக்களின் மீதும் அன்பு உண்டாகி களமிறங்கி தினமும் தவறாமல் காலை மாலை இரண்டுவேளையும் பால்கனியில் நின்று கை ஆட்டிக்கொண்டிருக்கிறார். தன்னளவில் அதுவே இந்த மக்களுக்கு செய்கிற மாபெரும் புரட்சி என கருதுகிறாரோ என்னவோ... இதே காலகட்டத்தில் இங்கே எது எதுக்கோ ஆளாளுக்கு போராடிக்கொண்டிருக்க... இவர் மட்டும் அப்படி ஒன்று தமிழ்நாட்டில் நடப்பதே இல்லைபோல வாழ்ந்துகொண்டிருந்தார்.
இவர் அரசியலில் களமாடத்தொடங்கிய கடந்த நான்கு வாரங்களாக செய்திருக்கிற அதிரடியான அரசியல் நடவடிக்கைகளில் முக்கியமானது ஜெயலலிதாவை போலவே விளக்கெண்ணெய் போட்டு படிய படிய தலை வாரி சீவியது. ஜெவைப்போலவே உடை அணிவது. ஜெவைப்போலவே பால்கனியில் நின்று கைகாட்டுவது. ஜெவைப்போலவே மிமிக்ரி பண்ண முயல்வது... ஜெவைப்போலவே நம்பிவந்த அடிமைகளையும் பேட்டிக்கு வந்த ஊடகங்களையும் வாசலில் மணிக்கணக்கில் தேவுடு காக்கவைப்பது.... மதியம்தான் தூங்கி எழுவது... என எல்லாமே அப்படியே அச்சு அசலாக ஜெதான்!
இதே வேகத்தில் அதிகாரம் கிடைத்தால் நிறையவே ஊழல்கள் செய்து உடன்பிறவா சகோதரியை தத்தெடுத்துக்கொண்டு, தன் வளர்ப்பு மகனுக்கோ மகளுக்கோ பிரமாண்டமான காதுகுத்து விழாகூட நடத்தி நான்தான் உண்மையான அம்மாவின் வாரிசு என நிரூபித்தாலும் நிரூபிக்கலாம்.
செய்தி சேனல்கள் ஒரு சிலரை இரண்டு மூன்றுநாட்களுக்கு செய்திகளின் சுவைக்காக புரட்சி வீரனாக, புதிய நம்பிக்கையாகவெல்லாம் ப்ரேக்கிங் நியூஸ் நாயகர்களாக முன்னிறுத்தும். பிறகு கழட்டி எறிந்துவிட்டு வேறொருவருக்கு பின்னால் ஓடிவிடும். அப்படித்தான் ஜெ அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது ஒவ்வொரு நாளும் அதே புளித்துப்போன அப்பல்லோ அறிக்கைகளையும் வளர்மதிகளின் சரஸ்வதிகளின் முதலைக் கண்ணீர்களையும் காட்டிக் காட்டி மக்களை போராடித்து கொண்டிருந்தனர். அந்த வேளையில், நியூஸ் சேனல்களுக்கு லட்டுபோல வாகாக வந்து சிக்கியவர்தான் தீபா.
முதலில் மண்டையை படிய வாரி சீவிக்கொண்டார். அடுத்து பச்சை நிற சால்வை போர்த்திக்கொண்டார்... கண்களை உருட்டி உருட்டி பார்த்தார். அப்போதும் ஜெயலலிதா சாயல் வரவில்லை. சன்னமாக லிப்ஸ்டிக் அடித்துக்கொண்டு தாடையை மேல் நோக்கி இழுத்து ஒருமாதிரி சோக ஸ்மைலி போல முகத்தை வைத்துப்பார்த்தார்... தேர்ந்த மிமிக்ரி கலைஞரைப்போலவே ஜெயலலிதா பாணியில் பேச முயன்றார். ஆனால் என்னதான் உடலெல்லாம் சூடு போட்டுக்கொண்டாலும் மைக் முன்னால் மியாவ் மியாவ் என்றுதான் நமக்கு கேட்டது. ஏன் என்றால் ஜெயலலிதாவே புலி கிடையாது... நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊழல் பூனைதான். ஆனால் இத்தகைய ஒரு அரசியல் பிரவேசத்தை இந்தியா மட்டுமல்ல உலகமே கண்டிருக்காது!
ஏதோ இருட்டுக்குள் பார்க்கும்போது ஒரு சாயலில் ஜெயலலிதா போல வெள்ளையாக உருண்டையாக இருக்கவே அதையே பயன்படுத்தி பரபரப்பாக்கியது ஊடகங்கள்தான். தீபாவின் கதையில் ஒரு மர்மம் இருக்கிறது. அவர் ஜெ. சாயலில் இருப்பதால் அவர் ஜெயலலிதாவின் மகளாக இருப்பாரோ என எல்லோருக்குமே ஒரு சந்தேகம் இப்போதும் உண்டு. அதனாலேயே மக்களும் இரண்டு நாட்களுக்கு ''அதே கண்ணு அதே மூக்கு கன்பார்ம் அடுத்த ஜெயலலிதாதான்'' என ஏற்றிவிட... கங்கா தன்னை சந்திரமுகியாகவே நினைக்க ஆரம்பித்தார். அதற்கேற்ப வடமாவட்டங்களில் சிலர் அம்மாவின் ரத்த சொந்தம்தான் அதிமுகவின் வாரிசு என உளற... அதற்கு பிறகுதான் பால்வாடி கேர்ளின் பால்கனி பிரவேசம் தொடங்கியது.
அம்மாசாயல் இருக்கு இவங்கதான் அடுத்த முதல்வர் என மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல ஒரு குரூப் தீபாவின் பின்னால் அலைகிறது. சொல்லப்போனால் தீபாவை விடவும் அம்மாவின் சாயல் அதிகமுள்ளவர் ப்ரியாதம்பிதான். அவரைக்கூட வாரிசாக முன்னிறுத்தலாம். ஆனாலும் மானுடகுல வரலாறு இத்தகைய கொடூரமான அடிமைகளை கண்டிருக்கவே கண்டிருக்காது. அம்மாவின் ரத்த சொந்தம்தான் எங்களை ஆளவேண்டும் என போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். குனியறோம் ஏறி மிதிங்க என்று வான்டடாக போய் நிற்கிறார்கள்.
ஆனால் மன்னார்குடியர்களை எதிர்ப்பது அத்தனை சுலபமல்ல. பின்புலத்தில் வலிமையான ஆதரவுக்கரங்கள் இல்லையென்றால் இதைப்பற்றி யாருமே சிந்திக்கவும் தயங்குவார்கள். அந்தக்கரங்கள் பாஜகவின் தமிழக ஏஜென்டுகளுடையதாக இருக்கலாம்.
இங்கே கால்பதிக்க நினைக்கிற பாஜகவோ ஆட்சியை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக ஒருபக்கம் பன்னீர் செல்வத்தை இயக்குகிறது. சுனாசாமியைக்கொண்டு அதிமுகவிற்குள் காய்நகர்த்துகிறது. பாஜகவின் அப்படிப்பட்ட முன்னகர்வுகளில் சிறியரக ஆயுதமாக தீபாவை பயன்படுத்துகின்றன என தாரளமாக சந்தேகிக்கலாம். ஏன் என்றால் செத்துப்போன அத்தையின் சாவில் இருக்கிற மர்மத்தை அறிவதுதான் தீபாவின் தேவை என்றால் இவ்வளவு காமெடிகள் தேவைப்படாது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்கிற அமைப்புகள் வேண்டியதாயிருக்காது. ஆனால் அவருக்கு வேண்டியதெல்லாம் வேறு என்னவோ... அது கிடைத்ததும் நிச்சயம் கிளம்பிவிடுவார்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...