முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மயில், கழுகு மற்றும் புறாக்கள்


(இந்த விமர்சனத்தில் ஸ்பாய்லர் இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை. அப்படி யோசித்து எழுதுவது என் வேலையும் இல்லை என நினைக்கிறேன். அதனால் பார்க்காதவர்கள் படித்து விட்டு ஸ்பாய்லர் ஸ்பாய்லர் என்று கூவ‌ வேண்டாம்.)

பிரயத்தனம்

கடைசியில்
ஒரு கண்ணாடிக் கோப்பை
கீழே விழுந்து
உடைவதற்குத்தானா
இத்தனை ஆயத்தம்
இத்தனை பதட்டம்
இத்தனை கண்ணீர்?

- மனுஷ்ய புத்திரன் 


'இறைவி' போல் மற்றுமொரு ஃபெமினிஸ முயற்சிப் படம். அதை விட நன்றாக இருக்கிறது என்பது மட்டும் ஆறுதல்.

குறிப்பாய் சில வசனங்கள் மற்றும் காட்சிகள். ராமிடம் எப்போதுமே அது உண்டு எனலாம். உதாரணமாய் கற்றது தமிழில் "Touch me if you dare"  போல் இதில் "Hope this size fits you". ராமின் சில மனநிலைகள் ரசித்துப் புன்னகைக்க வைக்கின்றன.

முதல் 45 நிமிடங்கள் (பிரபுவுக்கு தியா மீது சந்தேகம் வரும் வரை) இது வேறு ஒரு ஜாதிப் படமாக இருந்தது. மிக ஈர்த்தது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டதெல்லாம் சுவாரஸ்யமாகவே இருந்தன. அப்பகுதிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது "எம் காலத்தின் கலைஞன்" என்று ராம் குறித்து படத்தின் விமர்சனத்தில் எழுத வேண்டும் என்றெல்லாம் மனதில் ஓடியது. ஆனால் அடுத்த ஒண்ணே முக்கால் மணி நேரம் அதை மெல்ல மெல்ல மழுப்பி சமநிலைக்குக் கொண்டு வந்து விட்டது (மீண்டும் நாகூர் காட்சிகளில் அதே அளவிலான‌ டெம்போ வந்தடங்கியது).

முதல் சறுக்கல் பிரபுநாத் பாத்திரம் திருகலாக அமைக்கப்பட்டிருப்பது. முதல் 45 நிமிடம் அந்த‌ப் பாத்திரம் காட்டும் முதிர்ச்சிக்கும் அறத்துக்கும் அடுத்து சட்டெனக் குருட்டுத்தனமான சந்தேகக்காரனாக, அதன் நீட்சியாய் முரட்டுத்தனமான சாடிஸ்டாக மாறுவதற்கும் ஒட்டவேயில்லை. (பாத்திரங்கள் கருப்பு - வெள்ளையாகவே இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொல்லியே எல்லாப் பாத்திர முரண்களையும் கடக்க முடியாது அல்லவா!)

ஆன்ட்ரியாவுக்கு நிச்சயம் இது வாழ்நாள் படம் தான். ஆனால் அவர் பாத்திரமும் கூட ஒரு மாதிரி விசித்திரமானது. ஓர் உறவில் வரும் குழப்பத்தில், சண்டையில் தன் தரப்பை விளக்கவே மாட்டேன், "ஆமாம்டா, நான் அப்படித்தான்" என்றிருப்பது அறிவீனம் தான். திரைக்கதையை இழுக்க இரண்டு இடங்களில் தியா பாத்திரத்தை இப்படி assassinate செய்து விட்டார் ராம் (பாஸின் அழைப்புக் குறுஞ்செயதி மற்றும் தியாவின் ஃபேஸ்புக் அப்லோட்). ஆனால் துரதிட்ஷ்டவசமாய் அதை எல்லாம் பெண்ணியத்தில் சேர்த்து இங்கே கைதட்டுகிறார்கள்! அவர் நடிப்பும் சாதாரணமாகவே இருந்தது!

அபூர்வ சௌம்யா (அஞ்சலி) பாத்திரம் மட்டுமே எதிர்மறை என்றாலும் ஓர்மையுடன் (integrity) எழுதப்பட்டிருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை சுயநலமான சூழ்நிலைக் கைதியாகவே இருந்து விடுகிறார். ஆனால் அழுது கொண்டே இருந்தவள் இப்போது அவள் அழுவதில்லை. அதிகபட்சம் பத்து நிமிடமே வந்தாலும் ஆன்ட்ரியாவை விட அஞ்சலியின் பாத்திரமே அதிகம் யோசிக்க வைத்தது. பிரபுநாத் அவளிடம் சுமூகமாகவே பணம் கேட்காமல் முதலிலேயே ஏன் கூட இருப்பது போல் படமெடுத்து மிரட்டிக் கேட்க வேண்டும் எனப் புரியவில்லை. அவனது திரிபுக்கான லீடாகக் கொள்ளலாம்.

பிரபுநாத் இடையில் பெண்களின் எண்களை எல்லாம் தேடி எடுத்து அவர்களை வலையில் வீழ்த்துவது ஒரு மன்மத சைக்கோத்தனமாகத் தோன்றினாலும் அது மாதிரியான சைக்கோக்கள் சூழத் தான் வாழ்ந்திருக்கிறோம். அவ்வகையில் அது ஒரு முக்கியமான பதிவு. அப்புறம் அதைத் தொடங்கும் முன் அவன் பெண்கள் எல்லாம் இப்படித் தான் என பர்ணபாஸுக்கு நீருபிப்பதாகச் சொல்வான். அவர் எனக்கு எதுக்குலே நீ நிரூபிக்கனும் எனக் கேட்பார். அவன் அதை உணர்ந்து தனக்குத் தானே நிரூபிக்க என்று திருத்திக் கொள்வான். ஆனால் அவன் கடைசியில் அவருக்குத் தான் அதை நிரூபிப்பான். அதே சமயம் அவனும் அதில் புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொள்வான். அப்படி எல்லோரையும் சொல்ல முடியாது என!

அழகம் பெருமாளுக்கு 'கற்றது தமிழ்' போலவே ஒரு முக்கியமான பாத்திரம் - பர்ணபாஸ். அழகாகச் செய்திருக்கிறார். மீனம்மா தன் பதிவொன்றில் அவரது கடைசிக் காட்சியைச் சிலாகிப்பவர்களைத் திட்டி இருந்தார். எத்தனை பேர் அதன் பொருளை உள்வாங்கிப் பாராட்டுகிறார்கள் என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் அதை மிகைக் காட்சியாக மட்டும் நான் கடக்கவில்லை. பர்ணபாஸ் ஏன் பிரபுநாத்திடம் "நீ அவளுக்கு நல்லது தாம்லே பண்ணி இருக்கே" என்று சொல்கிறார்?

1) அத்தனை வருடம் அவர் மீது பேரன்பு கொண்ட மனைவிக்கு சபலம் வரக்கூடும் என்பது பர்ணபாஸுக்கு ஒரு திறப்பு. அவளுக்குமே. இனி அவளுக்கு மறுபடி அப்படியானதொரு சபலம் வராது. அதுவே அவளுக்கு அவன் செய்த நல்லது. 2) அந்தப் பாடத்தைக் கற்க அவள் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கவில்லை என்பதும் முக்கியமானது. அது பிரபுநாத்தின் நற்குணமே! அதுவும் அவன் அவளுக்குச் செய்த நன்மை. 3) ஒரு சகோதரியோ மகளோ தடம் புரள்கையில் ஆண் கண்டித்துச் சீர்திருத்தவே முற்படுவான், தூக்கியெறிய மாட்டான். ஆனால் அதுவே மனைவி எனில் கொலை அல்லது பிரிவு. அது தவறு என்று இயக்குநர் சுட்டிக் காட்ட முனைகிறார். அத்தருணத்தில் அவள் கணவனும் கூட‌ அவளைத் தவறு செய்யச் சாத்தியமுள்ள சக மானுட ஜீவியாகப் பார்க்கவும், அவள் வாழ்க்கை மீதான அக்கறையுடன் அணுகவும் முற்பட வேண்டும் என்கிறார். அது முக்கியக் கருத்து தான். ஆனால் ஒற்றை வரி வசனம் மூலம் அது சரியாய் convey ஆக‌வில்லை என நினைக்கிறேன். அப்புரிதல் தனக்கு வர வாய்ப்பளித்த பிரபு அப்படியாய்த் தன் மனைவிக்கு நல்லது செய்திருக்கிறான் என்கிறார் பர்ணபாஸ். 4) "பர்ணபாஸ் வாக்கு பைபிள் வாக்கு" என்கிறார். "உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு" என்ற வாசகம் பைபிளின் புதிய ஏற்பாட்டில் குறைந்தது இரண்டு இடங்களில் வருகிறது. அதாவது "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்" என்கிறார் இயேசு. அந்த அடிப்படையிலும் அறியாமல் தனக்குத் துரோகம் செய்து விட்ட பிரபுநாத்தை மன்னித்து விட்ட பாவனையில் அவன் அவளுக்கு நன்மையே செய்ததாகச் சொல்கிறார். (அதற்கு முந்தைய வசனத்தில் பிரபு அவர் நினைப்பது போல் அவரது செல்பேசியிலிருந்து அவர் மனைவி எண்ணை எடுக்கவில்லை, ரீசார்ஜ் கடையில் எடுத்தது எனத் தெளிவாக்குகிறான். ஆக அது அறியாமல் நிகழ்ந்து விட்ட துரோகமே எனத் தெளிகிறார்.)

போலீஸ்காரர் மனைவியுடனான பகுதிகள் பிரபுநாத்திடம் தியா உன்னை விட அவன் சூப்பர் என்று சொன்னதன் உளவியல் பின்னணியைப் புரிய வைப்பது மட்டும் தான் நோக்கமா? அவர் தரப்பிலிருந்து பார்த்தால் ப்ளாட்டின மோதிரத்தின் மீது அவருக்கு என்ன அக்கறை? அவரது நோக்கம் தான் என்ன? கடைசியில் லூஸு போல் கத்திக் கொண்டு ஏன் தற்கொலை செய்கிறார். கணவன் கொடுமை அன்று மட்டும் எவ்வகையில் மோசமானது. இன்னும் சொல்லப் போனால் அன்று அவனுக்கு அவள் மீது வலுவாய்ச் சந்தேகப்பட அத்தனை முகாந்திரங்களும் இருந்தன. மனைவி தனித்திருக்கையில் வீட்டில் ஒருவன் ஒளிந்திருந்தாலும் அதைக் கேள்விக்குட்படுத்தக்கூடாது என்பது தான் ராம் சொல்ல வரும் பெண்ணியமா?

கார்பரேட் நிறுவனங்களில் பெண்களுக்கு பாஸ்களால் பாதுகாப்பில்லை என்பது படத்தில் அழுத்திச் சொல்லப்படுகிறது. நான் 11 ஆண்டுளாய் ஐடி துறையில் இருக்கிறேன். ஒருமுறை கூட இப்படியான சம்பவங்களைக் கேள்விப்பட்டதில்லை. அதுவும் தற்போதைய நிறுவனத்தில் workplace harassment தொடர்பாய் ஆண்டுதோறும் இருபாலருக்கும் கட்டாயப் பயிலரங்குகளே உண்டு. மேலாளர் தனக்குக் கீழ் பணிபுரியும் எதிர்பாலரிடம் பேசுவதில் reasonable restrictions உண்டு. அத்துமீறல் குறித்துப் புகாரளிக்க பாதுகாப்பான நடைமுறைகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக‌, "உங்கள் செயலின் நோக்கம் முக்கியமே இல்லை. அது எவ்விதம் எதிர்பாலினரால் உணர / புரிந்து கொள்ளப்படுகிறது என்பதே முக்கியம்" என்பதைத் தான் இவ்விடயத்தில் thumb-rule ஆக வைத்திருக்கிறார்கள்! பெண் ஊழியைகளுக்கு அத்தனை பாதுகாப்பு கார்பரேட்டில் இருக்கிறது என்பதே என் புரிதல். ராம் சொல்வதெல்லாம் கார்பரேட்டில் பரவலாய் நடக்கிறதா என நண்பர்கள் சொல்லலாம். ஆனால் நான் வேலை பார்த்தது பெரும்பாலும் product based கம்பெனிகளில். ஒருவேளை ஐடி சர்வீஸ் கம்பெனிகளில், கால் சென்டர்களில் இப்படி எல்லாம் நடக்கிறதா? (இப்படி எல்லாம் நடக்கவே இல்லை எனச் சொல்ல வில்லை. ஆனால் ராம் காட்டியது இரண்டே பாஸ்கள். இரண்டுமே பொறுக்கிகள். அது நியாயமா என்று தான் கேட்கிறேன்.)

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் படத்தோடு பார்க்கையில் எனக்குப் பெரிதாய்ப் பிடிபடவில்லை. பின்னணி இசை பிடித்திருந்தது. நா.முத்துக்குமாரின் வரிகளையும் கவனிக்க முடியவில்லை. கடலளவு நேசிக்கிறேன், மலையளவு வெறுக்கிறேன் என்பதெல்லாம் ரொம்பச் சாதாரண வரிகள் தாம். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு வசீகரம். குறிப்பாய் டாப் ஆங்கிள் ட்ரோன் ஷாட்களில் கடல், ஏரி, மேம்பாலம், கான்க்ரீட் வனம் என சென்னை லேஸ்ட்ஸ்கேப்பின் அழகிய பதிவு.

ஆன்ட்ரியாவின் பையனாக நடித்த பையன் நன்றாய்ச் செய்திருந்தான். சர்ச் ஃபாதர், தியாவின் அம்மா, தியாவின் கணவன், போலீஸ்காரர், அவர் மனைவி என எல்லோருமே நல்ல நடிப்பு. ராமின் வாய்ஸ் ஓவரும் ஒரு பாத்திரமாக‌ உற்சாகம்!

புறாவானது 28வது மாடி இருக்கும் உயரத்திற்குப் பறக்குமா என்ன? நான் ஒன்றரை வருட‌ம் 28வது மாடியில் அமர்ந்து பணிபுரிந்திருக்கிறேன். ஒரு புறாவையும் அங்கே கண்டதில்லை என்பதால் கேட்கிறேன். தவிர, புறாக்கள் தாம் முன்பு வசித்த மரத்தைத் தேடி வருவதாகச் சொல்லப்படுகிறது. அவ்விடம் முன்பு காடாக இருந்ததாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் 28வது மாடிக்கு இணையான உயரம் கொண்ட‌, அவை முன்பு வசித்த மரம் எது? அல்லது கவித்துவச் சுதந்திரமா!

"வெளிய தெரியறது ஒரு உருவம், ஆனா உள்ளே இருக்கறது பல ரூபங்கள்" என்று வடிவேலு சொல்வது போல் ஓர் அன்பர் "இப்படத்திற்குள் பல கட்டுரைகள் இருக்கின்றன" எனச் சொல்லி இருந்தார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. நவீன யுகத்தில் ஆண் பெண் உறவு என்ற ஒரே கட்டுரை தான் இதில் இருக்கிறது. அதில் பெண்ணியம் பற்றிய சில சரியான புரிதல்களும், சில அதீதங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அவ்வளவு தான். மற்றபடி, இணையச் சிலாகிப்புகள் மிகையே!

ராமின் நாயகர்கள் அனைவருமே ஊரோடு ஒத்து வாழாதவர்களாகவே இருக்கிறார்கள். ராமைப் போலவே. இதை அவரைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் சற்றே கவலையுடனுமே குறிப்பிடுகிறேன். ஓவர் வித்தியாசமும் ஒவ்வாமை தரலாம்.

ராமின் சிறந்த படம் இதுவல்ல. இன்னும் சொல்லப் போனால் என் வரையில் மூன்றில் இதற்கே கடைசி இடம். ஆனால் அது இயக்குநர் ராம் கவலைப்பட வேண்டிய‌ பிரச்சனை. நமக்கு இது பார்க்கக்கூடிய, பார்க்க வேண்டிய படம் தான். Watch it
ரைட்டர்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

சிம்பு குடும்பத்தாருக்கு கொற்றவை கடிதம்!

உஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்                         கொற்றவை -பெண்ணிய செயல்பாட்டாளர் ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப்படுற வழியப்பாருலே “பு.ண்.டை” நாயம் பேசிட்டு திரியுறவ” என்று சொல்வார்கள். ஓர் உயிரை பிறப்பிக்கும் பெண்ணின் உடல் உறுப்பிற்கு இந்த ஆணாதிக்க சமூகத்தில் இவ்வளவுதான் மரியாதை என்றோ அல்லது பெண் பித்து பிடித்து அலையாமல் வாழ்க்கையில் உருப்படும் வழியைப் பார் என்றோ சொல்வதாகவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் “புண்டை” நியாயம் பேச வைத்த பெருமை உங்கள் மகன்கள் மற்றும் சகோதரர்களாகிய அனிருத்துக்கும், சிம்புவுக்கும் போய்ச் சேரும். இதை எண்ணி உண்மையில் நீங்கள் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த தமிழகமும் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டும், உயிரையும் உடைமையையும் இழந்தும் துன்புருகையில் இவர்கள் “பு.ண்.டை” ஆராய்ச...