முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அருப்புக்கோட்டையிலிருந்து புறப்பட்ட செக்ஸ் ராக்கெட்


கல்விக்கூடங்களில் காத்திருக்கும் கொக்குகள்!



இந்தியா டுடே செக்ஸ் சர்வே 2018 மார்ச்


பல்கலைக்கழகப் பெண் கணிதப் பேராசிரியர் ஒருத்தர் நான்கு மாணவிகளிடம் பேசியதாக உலாவரும் அந்த ஆடியோவை முழுமையாகக் கேட்டேன். எங்களுக்கு அதில் இஷ்டமில்லை என்று சொல்லிய பிறகும்கூட அந்தப் பேராசிரியர் விடாப்பிடியாக வற்புறுத்துவதன் பின்னணியில் சில சமூகப் பொருளாதாரக் காரணிகள் இருக்கின்றன. செருப்பாலடிக்கிற விஷயம் ஒன்றை வைத்துக்கொண்டு இப்படிச் சுற்றிவளைத்துப் பேசுவது சரியா என்கிற கேள்வியும் உடனடியாக மேலெழுந்து வருகிறது. அதேசமயம் இதற்குப் பின்னால் இருக்கிற மோசடி வலைப்பின்னல் ஒன்றை அடையாளப்படுத்தும் முயற்சியாகவும் இந்த விஷயத்தைச் சொல்லிப் போகலாம் என்றும் தோன்றுகிறது.
‘குற்றம் நடந்தது என்ன?’ காலத்தில் இருந்து இந்த மோசடியைப் பின்தொடர்ந்து போகிறோம் என்கிற வகையில் இதை முக்கியமானதாகவும் கருதுகிறேன். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு இந்தத் தொழிலில் இருக்கும் ‘சோர்ஸ்’ ஒருத்தர் அழைத்துப் போய்க் காண்பித்தார். நடுத்தர வயதுப் பெண்மணி அவர். பாரகான் செருப்புப் போட்டுக்கொண்டு ஏதோ அலுவலகத்தில் வேலை பார்க்கிற தோற்றத்தோடு நின்றுகொண்டிருந்தார். அங்கு வரும் பிற அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்களிடம் பழக்கமாகி மெல்ல அவர்களை இந்த வணிகத்துக்கு ஒப்புக்கொடுப்பதுதான் அந்தப் பெண்மணியின் வேலை. முழுநேர வேலையாகவே அதைச் செய்துகொண்டிருந்தார்.
பல நேரங்களில் அலுவலக வேலை நிமித்தமாக அந்தப் பகுதியைக் கடக்கும்போதுகூட அந்தப் பெண்மணி அங்கே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். மீனிருக்கும் இடங்களில்தான் கொக்குக்கு வேலை. சமூகம் நேர் எதிரானது என்று வரையறுக்கிற வேலையை அவர் செய்துகொண்டிருந்தார்.
அழைத்துப்போன சோர்ஸிடம் கேட்டபோது, “இன்றைக்குத் தேதியில் குடும்பப் பெண்கள் அதிலும் இளம் பெண்களுக்குத்தான் மார்க்கெட்டில் கிராக்கி. கஸ்டமர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.
காமத்தின் கரங்கள்
ஒழுக்க அளவுகோல்களை விலக்கிவைத்துவிட்டுச் சொல்வதென்றால், தமிழ்நாட்டில் இந்த வணிகம் இப்போது வீங்கிவிட்டது. சென்னையில் பாலியல் தொழிலுக்கு அத்தனை நாட்டுப் பெண்களும் குவிகிறார்கள். இந்தத் தொழிலில் விக்கி என்கிற முதலை இருக்கிறது. அது எந்நேரமும் நாற்பது, ஐம்பது சர்வதேசப் பெண்களுடன் சர்வதேச விமான நிலையங்களில் நீந்திக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் சலிப்படைகிற மனங்கள் காமம் என்று வரும்போது எல்லா இலைகளிலும் வாய் வைக்க நினைக்கின்றன. அலுவலகங்களில் வாய்ப்புக் கிடைப்பவர்கள் அதிகாரங்களைப் பிரயோகிக்கிறார்கள். பல அலுவலகங்களில் இந்த அதிகார மையங்கள்தான் விசாகா கமிட்டியை அமைக்கத் தடையாக இருக்கின்றன என்பதைக்கூடத் துணிந்து சொல்லலாம். கண்ணுக்குத் தெரியாத சல்லடைகள் எங்கும் இருக்கின்றன. அதில் நம்முடைய கண்ணுக்குத் தெரியாத கசடு வந்து கொட்டிவிடக் கூடாது. அவ்வளவுதான்.
இயல்பாக அல்லது சில நேரங்களில் அதிகாரத்தின் துணைகொண்டு இதுபோல் நடக்கும் அலுவலகங்களில் இப்படி இந்தத் தொழிலில் இருக்கிற புரோக்கர்கள் இருப்பார்களா? இருப்பார்கள் என்பதுதான் நிஜம். தி.நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்த பெண் ஒருத்தர் இப்படித்தான் அலுவலகத்தில் வேலை பார்த்த பெண் புரோக்கர் ஒருத்தரிடம் மாட்டிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்தார். அந்தப் பெண்ணுக்கு அவசரத் தேவைக்குப் பத்தாயிரம் கொடுத்துவிட்டு அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து போகும் கஸ்டமர் ஒருத்தருக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பெண் அந்தச் சுழலில் மாட்டிக்கொண்டு சிக்கிச் சின்னாபின்னப்பட்ட பிறகு அந்தக் கதையை வந்து சொன்னார். கறிகாய் வாங்குகிற இடத்திலேயே இவர்கள் நுழைந்துவிட்டால் மற்ற இடங்களில் கேட்கவும் வேண்டுமா? விரும்பிப் போகிறவர்களை இதில் சேர்க்கவே இல்லை.
இப்படியான வறுமையில் இருக்கும் பெண்களைப் பயன்படுத்தி உள்ளே இழுப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அதென்ன வசியப்படுத்தி எனக் கேள்விகள் கேட்கலாம். நெருங்கிப் போய்ப் பார்த்தால் இந்த வசியம் படிப்படியாக நடப்பது புரியும். ராயலாக காரில் ஏற்றி அழைத்துக்கொண்டு போவது வேறு. அப்பனின் கழுத்தில் மருத்துவமனை வயர்கள் தொங்கும்போது அழைத்துச் செல்வது என்பது வேறு. எல்லோருமே இது மாதிரிப் பெண்களுக்கு அக்காவாகிறார்கள் முதலில். அப்புறம் பிரா, பேண்டி உள்ளாடைகள் வாங்கித் தருகிற இடத்துக்கு நகர்ந்து இறுதியில் பேரம் பேசுகிற இடத்துக்கு நகர்கிறார்கள். இது அவர்களுக்கு முழு அளவிலான வேலைத் திட்டம். இதில் நினைத்ததைவிட அதிகப் பணம் கிடைக்கிறது. பத்தாயிரம் வியாபாரம் நடக்கிற இடத்தில் இது போன்றவர்களுக்குத் தூண்டில் போடும் வழியில் ஐம்பதாயிரம் என்கிற புள்ளியை எட்டிவிடுகிறார்கள். அதற்காகக் கொட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிற மனிதர்கள் நகரச் சாலைகளில் அலைந்தபடி இருக்கிறார்கள்.
தூண்டிலோடு அலையும் புரோக்கர்கள்
வேட்டையாடப்படுகிற விலங்கின் கண்களில் பயம் தெரிய வேண்டும். பல வேட்டைகளைப் பார்த்த விலங்குகளை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். வேட்டையில் ஆணென்ன, பெண்ணென்ன? 



அதையெல்லாம் ஒரே எட்டில் எப்போதோ எகிறிக் குதித்துவிட்டார்கள். ஆண்களை ஏற்பாடு செய்து தருபவர்களும் இருக்கிறார்கள். சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இப்படிக் கொத்துக் கொத்தாகப் புரோக்கர்கள் இறக்கிவிடப்பட்டிருக்கின்றனர். தூண்டிலோடு அலையும் அவர்களின் வலையில் மீன்களும் சிக்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். தடுப்பது/அறிவுறுத்துவது என்பதையெல்லாம் தாண்டி இது ஒரு நெட்வொர்க் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காவல் துறைக்கு மிக நன்றாகவே தெரிந்த நெட்வொர்க் இது.
இந்தக் கல்லூரிச் சம்பவத்தை எடுத்துக்கொண்டால், அது நெட்வொர்க் இல்லைதான். அந்தப் பேராசிரியரின் முதல் முயற்சி இது என்பதாகவும் தெரிகிறது. அல்லது இதற்கு முன்னர் வேறு சில முயற்சிகளில் அவர் வெற்றிகூட அடைந்திருக்கலாம். அது தெரியவில்லை நமக்கு. ஆனால் அவர் குறிவைத்திருக்கிற மாணவிகளின் பின்புலத்தை வைத்துப் பார்க்கையில் அவர் திட்டமிட்ட வலையைப் பின்னியிருக்கிறார் என்பது தெரிகிறது. இதில் அவர் வெற்றி பெற்றிருந்தால், புதிதாய்த் தொடங்குகிற ஒவ்வொரு கல்வியாண்டும் தொட்டுத் தொடருகிற செயலாகவே இது அமைந்திருக்கும். சில மாதங்களாகவே பேச நினைத்தேன் என்பதை அவர் பேச்சினூடாகச் சொல்வதையும் கவனிக்க வேண்டும்.
                                         

                                    பேராசிரியை நிர்மலா தேவி 

எல்லாத் துறைகள் சார்ந்த அலுவலகங்களிலும் உயரதிகாரிகள், அதிகாரம் பொருந்தியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு புரோக்கர்கள் அவசியமாக இருக்கிறார்கள். வேலை பார்ப்பவர்களுக்குக்கூட புரோக்கர்கள் புரமோஷனை அளித்துவிட முடியும். அதைத்தான் அந்தத் தொலைபேசி உரையாடலில் இருந்த அந்த ஆசிரியரும் செய்திருக்கிறார். விட்டால் மற்ற இடங்களில் இருக்கிற நெட்வொர்க் பல்கலைக்கழகங்களில்கூட உருவாகக்கூடும். அப்படி நடக்கிற இடங்களும் தமிழகத்தில் இருக்கின்றன. இனிமேல் இவை ஒவ்வொன்றாகச் செய்திகளில் அடிபடக்கூடச் செய்யலாம்.
வணிகம் என்று சொன்னால் அதில் கறுப்பு வணிகமும் இருக்கும். அதில் புரோக்கர்களும் இருப்பார்கள். அது கல்விக்கூடமாக இருந்தால் என்ன? கசாப்புக் கடையாக இருந்தால் என்ன? ஒட்டுமொத்த மதிப்பீடுகளின் சரிவில், பிறரைப் போல் அல்லாமல் குற்ற மனம்கொண்ட கணக்கு டீச்சர் கணக்கு பண்ணாமல் என்ன செய்வார்?
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சரவணன் சந்திரன், ஊடகவியலாளர், எழுத்தாளர். நான்கு நாவல்களை எழுதியிருக்கிறார். பயணமும் வேளாண்மையும் இவரது செயல்பாடுகளின் மையம். தொடர்புக்கு: saravanamcc@yahoo.com

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...