முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பார்வதி தாண்டவம் (சிறுகதை)




“தேவுடியா பசங்க... பீயத் தின்ற நாயே... அறிவில்ல? முண்டம். முட்டா புண்டை, கூமுட்ட. என்ன நெனப்புடா ஒனக்கு? வேர்வயோட மாரக் காட்னா பொம்பளைங்க மடிஞ்சிருவாங்கன்னு நெனப்பா? செருப்பெடு... நாரக்கூதிமவனே’’இன்று என்னவோ என் குரல் அதிக கொடூரமாக எனக்கே திரும்பக் கேட்டது. எனக்குக் கோவமான கோவம். நான் லுலூ. என் குடும்பத்தோடு இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. 

வந்தது முதலே பார்க்கிறேன். அந்த ஆள் எப்போது பார்த்தாலும் பெண்கள் இருக்கும் பக்கமாகவே சுற்றுகிறான். அவன் மட்டும்தான் என்றில்லை. அங்கே ஆண்கள் அனேகருமே பெண்கள் புழங்க அசெளகரியமாக, பெண்களை நோட்டம் விட்டபடி, சும்மாவேனும் பம்படியில் நின்று பேசுவது, சத்தம் போட்டுச் சிரிப்பது... தவிர பக்கத்து கடைத்தெரு குட்டிச் சுவற்றில் வேறு சில நாய்கள் பெண்கள் புழங்கும் பக்கமாகவே நோட்டம் போட்டுக் கொண்டிருக்கும். 

கடைத் தெருவை ஒட்டியே அமைந்த எட்டு குடும்பங்கள் கொண்ட முடுக்கு வீடு இது. நடுவில் கிணறும், அடிபம்பும். சுற்றி ‘ப’ வடிவத்தில் எட்டு வீடுகள். எல்லோரும் புழங்கும் பொது புழக்கடை. கடை கண்ணிக்குப் போக சுலபமாக இருக்கும் என நினைத்துதான் எல்லோருமே இந்தக் குடியிருப்புக்கு போட்டி போட்டு குடி வருகிறார்கள். இங்கே குடி இருக்கும் ஆண்கள் அநேகரும் கடைகளிலோ, தொழிற்சாலைகளிலோ மாத சம்பளம் வாங்குபவர்கள். 

வருகிற சம்பளத்தில் இந்த வீடுதான் சாத்தியம். அநேகமாக பெண்கள் எல்லோரும் வீடுகளிலேயே மெழுகுவர்த்தி, அப்பளம் என தயார் செய்து விற்பவர்கள். சுமாரான சம்பாத்தியக்காரர்கள்தான். நான் மட்டும்தான் ஒரு ப்யூட்டி பார்லரில் வெளி வேலைக்குப் போகும் பெண். 

அங்கே குடியிருக்கும் பெண்களும் இவன்களைக் கண்டு ஏன் பம்முகிறார்கள் எனத் தெரியவில்லை. எல்லோருமே இங்கே குடியிருப்பவர்கள்தானே? அட அந்த மாரைக்காட்டும் மம்முதன் நேரு... அவனைக் கூட எதிர்க்கத் துப்பில்லை. ஏன் பயப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை.

இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என அதிகாலையிலேயே பொது புழக்கடைக்கு குளிக்கக் கிளம்பினேன். அந்தப் பெண் குடிவந்து ஒரு வாரம்தான் இருக்கும். பெயர் என்னமோ லுலூ என்றார்கள். முதல் வீட்டில் அவள். ஏதோ பார்லரில் வேலை செய்கிறாளாம். வந்து ஒரு வாரமிருக்கும். கெட்ட வார்த்தைகள் எல்லாம் அநாயாசமாக வந்து விழும். இவள் புழக்கடைக்கு வந்தால் நிற்கும் ஆண்களை கையிலிருக்கும் வாளியால் நகர்த்தியபடி, கெட்ட வார்த்தையில் திட்டுவாள். 

அவளுக்கும் புருசன் பிள்ளைகள் உண்டு. நல்லவளாகத்தான் தெரிகிறாள். ஆனால், எப்போதும் கெட்ட வார்த்தைகள் வாய் விளிம்பில். எல்லா வார்த்தைகளும் பேசுவாள். பெண்களிடம் அதிகம் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டாள். எல்லாமும் ஆண்களோடுதான். ஆனால், அவர்களோடு எப்பொழுதும் சண்டை சண்டை சண்டைதான். 

கடைக்காரன் ஒரு முறை வேண்டுமென்றே இவள் கையைப் பிடித்து பாக்கி சில்லறை கொடுத்தான் என அப்படியே கொத்தாக அவன் சட்டையைப் பிடித்து அடி வெளுத்து விட்டாள். உண்மையில் அவன் ஒரு மாதிரிதான். வேணும்தான் அவனுக்கு. கொஞ்சம் பெண்களிடம் வம்பு செய்தாலும் போதும் இவளுக்கு. சண்டைக்குக் கிளம்பிவிடுவாள். சரியான பஜாரி. 

எங்களால் சமாளிக்க முடியாத இன்னொரு ஜீவனும் உண்டு. அவன்தான் நேரு. அரசாங்க சம்பளக்காரன். ஒரு ஐம்பது, ஐம்பத்தைந்து வயது இருக்கும். எல்லா பெண்களும் அவன் மீதே மையல் கொண்டு அலைவது போல அவனுக்கே ஒரு எண்ணம். 

அழகான பெண்களிடம் இவனாகப் பேசிவிட்டு ஊருக்குள் ‘பட்சி மடிஞ்சிருச்சு’ என மார்தட்டுவான். சுமாரான பெண்கள் எனில், ‘‘சனியன், அலையுறா எவண்டா கெடப்பான்னு...” என்பான். அதனாலேயே எந்தப் பெண்ணும் அவனைச் சந்திப்பதையே தவிர்த்து வந்தோம். எவரும் எழும் முன்பே பெண்கள் புழக்கடையில் குளித்துவிடலாம் என்றால், இல்லாத பழக்கமாக அந்த வேளையிலேயே எக்ஸசைஸ் செய்வதாகச் சொல்லி ஸ்லீவ்லெஸ் பனியனும் முட்டி தெரியும் அரைபேண்டுமாகச் சுற்றுவான். 

அந்த நேரத்தில் அங்கே புழங்க வேண்டாம் என மென்மையாக பலமுறை அவனிடம் நாங்களே சொல்லியாயிற்று. அவன் கேட்பதாக இல்லை. காலையில் காய் வாங்க பெண்கள் காய் வண்டி முன் நிற்கையில் காய் விலை பேசுவது போல வியர்வை நாற்றத்தோடு வந்து நிற்பான். அவன் அரசு உத்யோகஸ்தன். எதற்கு வம்பு என ஒதுங்கிக் கொண்டிருந்தோம்.

நான் ராஜி. அன்னிக்கு அப்படித்தாங்க. எங்க வீட்டுக்காரர அந்த பஜாரி பொம்பள வாளியால இடிச்சுத் தள்ளிட்டு அடிபம்புல தண்ணி புடிச்சிட்டிருந்திருக்கா. நாங்கல்லாம் ஆம்பளைங்க அடிபம்புகிட்ட இருந்தா போகக்கூட மாட்டம். இவரு பாவம். பச்ச மண்ணு. அவள எல்லாம் எதுத்து பேசுறது கேவலமின்னு வீட்டுக்கு வந்திட்டார். 

நேத்து அடுத்த வீட்டு அக்காகிட்ட கூட அவளப் பத்தி பேசிக்கிட்டிருந்தாரு. ‘அவளை மாதிரியானவங்க ஏதோ கூட்டத்தைச் சேர்ந்தவங்களாம். சண்டை போட காரணம் கிடைக்கலேன்னா புரச்சி பேசுவாங்களாம். அக்கா நீங்கல்லாம் எவ்ள பண்பா பேசுறீஹ? சின்னப்பிள்ள மாதிரி என்னை தம்பி தம்பின்னு எப்டி அன்பா பேசுறீய? அண்ணம் பேச்சுக்கு மறு பேச்சி உண்டுமா? குடும்பப் பொண்ணுன்னா இப்டி இல்ல இருக்கோணும்!’ அக்காக்கு கூட அந்த புது பொம்பிள மேல கோவம்தான். 

‘சின்னப்பிள்ள மாதிரி, குடும்பப் பொண்ணு’ என ராஜி புருசன் என்னைச் சொன்னது எனக்கு சந்தோசமாகவே இருந்தது. வீட்டில் ஆண்கள் எல்லோரும் அந்த பார்லர்காரியை ‘ஈயம்’ எனக் கிண்டலாகக் குறிப்பிடுவார்கள். அவள் பேசுவது ‘பெண்ணியமாம்’. ஆண்களாக சொல்லிக் கொள்வார்கள். நமக்கென்ன தெரிகிறது அது பற்றியெல்லாம்?

‘அதானே, அதென்ன பொம்பிளையளுக்கு ஈயமும் பித்தாளையும். நம்மள மாதிரி இருந்திட்டு போக வேண்டியதுதானே?’ என எங்களுக்குள்ளாக பேசி சிரித்துக் கொண்டோம். ஆண்களின் முன் அவளைப் பற்றி புரணி பேசி மகிழ்ந்தோம். 

இல்லாத அதிசயமாக அந்த அதிகாலையில் லுலூவும் புழக்கடைக்கு குளிக்க வந்திருந்தாள். இவளை கவனிக்காமலோ, அல்லது எங்கள் பேச்சை எதிர்த்தோ என்னவோ, நேருவும் அங்கே ஆஜராகி இருந்தான். கையைக் காலை ஆட்டி குதித்துக் கொண்டிருந்தான். எக்சசைசாம். 

என்னவோ நடக்கப்போகிறது என எங்களுக்குள் சாடை செய்து கொண்டோம். அந்த அதிகாலை அவள் குளிக்கும் நேரமும் அல்ல. அவளின் இடமும் இது இல்லை. வேண்டுமென்றேதான் அவள் இன்று இங்கே வந்து எங்களோடு குளிக்கிறாள். 

‘‘மயிராண்டி, பொம்பளைங்க குளிக்கிற இடத்துல, நேரத்திலதான் வந்து நிப்பான். செருப்பெடு...” வீடுகளிலிருந்து ஆண்கள் எட்டிப்பார்த்து பதுங்கிக் கொண்டார்கள். அது அவனுக்கு மட்டுமான திட்டாகத் தெரியவில்லை. எல்லா ஆண்களையும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டாள் லுலூ. 

மறுபடி ஆரம்பித்தாள், ‘‘தே... பசங்க...”கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த நேரு, நாங்கள் எதிரே பார்த்திராதபடி பதில் ஏதும் சொல்லாமல், தலை கவிழ்ந்தபடி நகர்ந்தான். இருந்த ஒன்றிரண்டு ஆண்களும் முணுமுணுத்தபடி வெளியேறினார்கள். பார்க்கிற எங்களுக்கு சிரிப்புதான் வந்தது. ‘என்ன பாடு படுத்தினே எங்கள?’ மனசுக்குள் கேட்டுக் கொண்டோம்.

எங்கள் வீட்டு ஆண்கள் முன்னிலையில், ‘‘பாரேன் இந்த பஜாரிய, நேருதான் தப்பானவன். இவ அவனுக்கு மேல இருக்குறா பாரேன். நம்ம வீட்டு ஆம்பளைங்களையும் விடுறதில்ல. அன்னிக்கி அப்டித்தான ராஜி புருசன திட்டினா...” எனப் புரணி பேசினோம். நாங்கள் குடும்பப் பெண்கள் அல்லவா? லுலூ அல்லவே?

ஆனால், எங்களுக்குள் பேசிக்கொள்ளாமல் ஒன்றை மட்டுமே அத்தனை பேரும் கவனித்தோம். புன்னகைத்துக் கொண்டோம். லுலூ வந்த பிறகு இப்போதெல்லாம் ஆண்களின் அடாவடித்தனம் கொஞ்சம் குறைந்தே இருக்கிறது. புழக்கடையில் சும்மா நிற்பதெல்லாம் இல்லை. 

ஆணின் மொழி பேசினால்தான் அவர்களுக்குப் புரிகிறது போல. தன் கோவத்தை வெளிக்காட்டுவதற்கும், அதன் மூலம் தன்னை தற்காத்துக் கொள்வதற்கும் சொல்லப்படும் கெட்ட வார்த்தைக்கும், தன் திமிரைக் காட்டவும், அடுத்தவரை இழிவு செய்யவும் மட்டுமே சொல்லப்படும் கெட்டவார்த்தைக்கும் எத்தனை எத்தனை வித்தியாசம்? 

கெட்ட வார்த்தை எதுவாகவும் இருக்கட்டும், கோவத்தை வெளிப்படுத்துதலே இப்போது முக்கியம். இல்லாத அதிசயமாக தன் புருசனைத் திட்டிய கோவத்தையும் மறந்து ராஜி ஏதோ தீனி ஒன்றைக் கிண்ணத்தில் மூடி எடுத்துக் கொண்டு லுலூ வீடு நோக்கி போய்க் கொண்டிருந்தாள்.

பார்வதியுடனான போட்டி தாண்டவத்தில், சிவன் ஒரு காலைத் தூக்கி நின்றாடினாராம். அந்தரங்கம் வெளித் தெரிய, பார்வதி கூசிக் கூனிக்குறுகி, ஸ்தம்பித்து நின்றாளாம். போட்டியில் சிவனே வென்றதாக அறிவிக்கப்பட்டதாம். இது கதை. இப்போது பார்வதிகளும் பதிலுக்கு தாண்டவமாட ஆரம்பித்துவிட்டார்கள் போல. சிவன்கள் கூசிப்போகட்டுமே! குறைந்த பட்சம் இனியும் பார்வதி இதற்கெல்லாம் கூச மாட்டாள் என்றாவது 
உணரட்டுமே! இதுதான் ‘பெண்ணியம்’ என்றால் அட இருந்துவிட்டுத்தான் போகட்டுமே

                    ஹன்ஸா ஹன்ஸா தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்.















கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...