முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பார்பி கண்ணில் இருக்கும் குன்றிமணிகளின் வாழ்க்கை!


-சரவணன் சந்திரன்
பார்பி பொம்மையைப் பார்த்திருப்பீர்கள். உடன் வைத்திருக்க விரும்பியிருக்கிறீர்களா? என்று கேட்டால் ஆமாம் என்றுதான் சொல்வேன். எல்லோருக்குள்ளும் ஒரு பார்பி பொம்மை கனவாய் உறைந்து கிடக்கிறது. பார்பி என்பதே ஒரு குறியீடுதான். வாழநினைக்கிற வாழ்க்கை என்பதன் குறியீடுதான் அது. என்னிடமிருக்கிற பார்பி பொம்மையில் அப்படி என்ன விஷேசம்? உலகம் முழுக்க லட்சக்கணக்கான விலைகளில் பார்பி பொம்மைகள் இருக்கின்றன. என்னுடைய பார்பி பொம்மை திருடப்பட்டதுதான். ஆனால் கன்னத்தில் பருக்கள் இருக்கிற பார்பி பொம்மை எங்களிடம் மட்டுமே இருக்கின்றன. உலகில் யாரோ ஒரு சிறுவனிடமும் இதைப் போலவொரு பார்பி பொம்மை இருக்கவும்கூடும்.
இந்தப் பொம்மை எங்களுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்தது. எங்களோடு இரவுகளில் படுத்துக் கிடந்தது நட்சத்திரங்களை எண்ணியபடி. பிறத்தியார் பார்வைக்குப் படாதபடி இந்தப் பார்பி பொம்மையை ஒளித்து வைக்கிறோம். ஒருநாள் அந்த பார்பி பொம்மை எங்களிடம் இருந்து விலகி இன்னொரு கைகளுக்குச் சென்று விடுகிறது. பார்பி தன்னோடே இருந்து விடமாட்டாளா என்பது ஒரு தலைமுறையின் ஏக்கம். முட்டி மோதி தப்பிப் பிழைக்கிற புளியம் விதையொன்றின் துயரம். ஒரு வகையில் நாங்கள் கடந்து வந்திருக்கிற வாழ்க்கையின் வழியாக மாவிலக்கிற்கு உருட்டுவதைப் போலத் திரட்டித் தொகுத்த துயரம். புலம்பல்கள் இல்லை இதில்.
கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கத் துடிக்கிறோம். இந்தத் துயரத்தின் வழியாக அடுத்த தலைமுறையைத் துடுப்புப் போட்டு வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறோம்.
எழுபதுகளின் பிற்பகுதியில் பிறந்த தலைமுறை ஊரை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு பூமியைத் தொட்டவர்கள். கிராமங்களை விட்டு நகரங்களுக்கு புலம்பெயர்ந்த வாழ்க்கை.
தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகம் வெகுவாக மாறி விட்டது. பிழைக்க வழியில்லை ஊரில். பிழைக்கலாம்தான். ஆனால் காட்சி வடிவங்களில் காட்டும் வாழ்க்கை குறித்த கனவுகளில் இருப்பவர்கள், தீக்குச்சியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்க முடியாது. அப்படி நினைத்தவர்கள் ஹாக்கி என்கிற மட்டையைப் பிடித்துக் கொண்டு அந்தக் கிராமங்களை விட்டுத் தவ்வி வெறொரு இடத்திற்குச் செல்லப் பிரியப்பட்டார்கள். கோவில்பட்டி என்பது ஒரு ஊர்தான். அங்கு ஹாக்கி விளையாடப்படுகிறது. உலகில் ஹாக்கி மட்டும்தான் முற்றும் முழுதான விளையாட்டா என்ன? இந்தியா முழுக்க இப்படி பல்வேறு கிராமங்கள் இருக்கின்றன.
தான் நம்பும் ஒரு விஷயத்தை நம்பிக்கைக் கல் போலக் கையில் வைத்துக் கொண்டு இன்னொரு நிலத்தில் நல்ல மேய்ச்சலைப் பார்த்து விடலாம் என்கிற சாகசத்தில் திளைக்கும் சாண்டியாகு போல, உலகெங்கும் மனிதர்கள் கிளம்பி வருகிறார்கள். அப்படி அந்த கந்தக பூமியிலிருந்து கிளம்பி மேலெழுந்த பல வாழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன். ஒருவகையில் ஒட்டுமொத்த நிலத்தில் தூவப்பட்ட பருத்தி விதைகளைப் போலத்தான் எல்லாமும். சில விதைகள் பீம புஷ்டி அல்வா மாதிரி ஓங்கி வளர்கின்றன. சில விதைகள் பற்றாக்குறைகளின் காரணமாக எழுவதற்கு முன்பாகவே மண்ணில் மடிகின்றன. பீமனின் கரங்களாய் தன்னைக் கற்பித்துக் கொண்டு முட்டி மோதி மேலே வருகிற ஒரு விதையின் கதைதான் இந்த நாவல்.
இந்த நாவலின் ஆன்மா இதுதான். பார்பியின் ஆன்மா இதுதான். உலகம் வெவ்வேறு உடையை பார்பிக்கு அணிவிக்கிறது. நான் எனக்கு நன்றாகத் தெரிந்த கண்டங்கிச் சேலையை பார்பிக்கு அணிவிக்க முயன்றேன். அந்தச் சேலையில் சுற்றி மடித்து வைக்கப்பட்டிருக்கிறது எங்களது வெக்கை வாழ்க்கை. அந்தச் சேலையில் சொருகப்பட்டிருக்கிற சுருக்குப் பையில் இருக்கிறது எங்களுக்கான மகிழ்ச்சி. பார்பியை எல்லாமுமாக நாங்கள் பார்க்கிறோம். எங்கள் சித்திகள், அத்தைகள், ஆச்சிகள் அவர்களைச் சுற்றியிருக்கிற மனிதர்கள் என எல்லோரும் ஒரு வகையில் பார்பிகள்தான். அவர்கள் வழியாக கடந்து வந்த வாழ்க்கையை முன்னிறுத்த பிரயத்தனப்பட்டேன்.
நியாயமாக இதுதான் என்னுடைய முதல் நாவலாக வந்திருக்க வேண்டும். அடியாழத்தில் இன்னமும் விளையாட்டை கக்கத்தில் தூக்கிக் கொண்டு ஓடுகிற ஒருத்தனின் முதல் படைப்பு அந்தக் களமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் எல்லா களங்களிலும் நான் விளையாட்டுக் காரன் போலத்தான் தலைதெறிக்க ஓடியிருக்கிறேன் என்பதால் அது இடராகவும் தோன்றவில்லை. நான் வாழும் சமகாலம் முன்னோர்களுக்கு இருந்ததைக் காட்டிலும் எங்களுக்குச் சிக்கலாக இருக்கிறது.
மூச்சு முட்ட வைக்கும் சங்கிலிகளுக்கு மத்தியில் தப்பி வெறொரு இடத்திற்குப் போய்விட வேண்டும் என்கிற முனைப்பில் தட்டலைகிறோம். சுருக்கமான வாழ்க்கை இதுவென்கிற ஞானம் சின்ன வயதிலேயே புகட்டப்பட்டும் விட்டது.
அப்படித் தப்பிக்கிற முயற்சியில் தடைகளாய் வருபவை எவையெவை என்பதைத்தான் இந்த நாவலில் விரிவாகப் பேசியிருக்கிறேன். செவ்வக வடிவிலான ஹாக்கி மைதானத்திற்குள் நின்று கொண்டு ஒட்டுமொத்த எங்கள் வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்திருக்கிறேன். ஹாக்கி மைதானத்தில் ஸ்ப்ரிங்லர் என்ற ஒன்று இருக்கும். மலையடிவார பழத் தோப்புகளில் இதைப் பார்த்திருப்பீர்கள். சுற்றிச் சுழன்றடித்து மழைநீரை மைதானங்கள் எல்லாம் பரப்பும். ஒருவகையில் செயற்கை மழை. அப்படியான மழை நீரைத்தான் இந்த நிலத்தில் நான் பீய்ச்சியடித்திருக்கிறேன். வந்து விழுகிற ஒவ்வொரு துளியும் நாங்கள் கடந்து வந்த வாழ்க்கை.
அதில் கந்தக வாசனையைப் பார்த்திருக்கிறோம். டிசம்பர் பூக்களின் வாசனையைப் பார்த்திருக்கிறோம். மலைப் பலாவின் வாசனையைப் பார்த்திருக்கிறோம். நாவல் பழங்களின் வாசனையைப் பார்த்திருக்கிறோம். கோடை வெள்ளரியின் வாசம் எங்களை மூடிக் கொண்டு கடந்து போயிருக்கிறது. நிலக்கடலையை அவித்துத் தின்று பசியாறிய வாசனையும் இன்னமும் பக்கத்திலேயே இருக்கிறது.
எங்களுடைய அண்ணன்களும் தம்பிகளும் பக்கத்தில் வெட்டிக் கொண்டு சரிந்தபோது காலுக்குக் கீழே ஓடிய சிங்கர் பொட்டு நிற செங்குருதியின் அடர்த்தியான வாடை இரவெல்லாம் கூடவே இருந்திருக்கிறது.
ஆட்டு இரத்தம் வேண்டி ஏந்திய கைகளில் எங்களது அண்ணன்களில் இரத்தம் ஊற்றப்பட்டது. இரண்டு கைகளிலும் ஏந்தி நிமிர்ந்து பார்த்தால், எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தம் செய்யுகின்றார் என ஏசுராஜா பாடிக் கொண்டிருப்பார். மதம் எங்களை ஒன்றும் செய்யவில்லை. காய்ச்சல்காரனுக்கு முகத்தில் தண்ணீர் அடித்து தலையை மயிலிறகால் விசிறி விடுகிற இஸ்மாயில் தாத்தாக்கள் இருந்தார்கள்.
அவர்கள் பகல் வேலைகளில் ஊரெல்லாம் சாம்பிராணியைக் கையிலேந்தி நடந்து மணக்க வைத்தார்கள். செண்பகவல்லி அம்மன் கோவிலுக்குள்ளும் இதே சாம்பிராணி வாடையைத்தான் உணர்ந்திருக்கிறேன். பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை எனக்கு. மூளைக்கு பிரித்துப் பார்க்கத் தெரியும். மூக்கிற்குத் தெரியாது அது பாவம்.சாதி சகலமும் செய்து விட்டது எங்களுக்கு.
எல்லா வாடைகளையும் அடக்கி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ரத்த வாடை மட்டுமே ஒரு நகரத்தில் அடர்த்தியான கரும்புகை போல சுற்றிக் கொண்டிருந்தது. கொசு மருந்தடிக்கும் இயந்திரம் கடந்து போன பிறகு வரும் கரும்புகை போல அது. தென்மாவட்டங்கள் அந்தக் கரும்புகை வாடையில் சாதிச் சண்டைகளின் காரணமாக மிதந்தன. மனிதர்கள் எறும்புகள் போல பதற்றமடைந்து நகரங்களிலும் கிராமங்களிலும் தட்டழிந்து அலைந்து கொண்டிருந்தார்கள்.
தென்மாவட்ட சாதிக் கலவரம் பல உயிர்களைக் கேட்டு வாங்கிக் கொண்டது. அந்தக் கலவரத்திற்கு வீட்டிற்கு ஒரு ஆண்மகன் போருக்கு அனுப்புவதைப் போல அனுப்பி வைக்கப்பட்டனர். புறநானூற்றுப் போர் அதுவென கருதிக் கொண்டார்கள். அப்படிக் கிளம்பிப் போய்த் திரும்ப வரவே வராத என் நண்பர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். அதைப் பதிவு செய்து விடவேண்டும் என்பது அடியாழத்து ஊக்கம்.
அந்தச் செவ்வக வடிவ மைதானத்தில் மனிதர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் செவ்வக வடிவத்தைச் சுற்றியும் தீ எரிகிறது. ஒருவகையில் ஒருவேள்வி நடப்பதைப் போலத்தான் அந்தச் செந்நிறக் காட்சியும். வெளியே இருந்து நிறையப் பேர் மைதானத்திற்குள் விழுகிறார்கள்.
மைதானம் தன்னிலிருந்து பிரித்து அந்தத் தீக் கங்குகளுக்குள் தன் மைந்தர்களை எறிகிறது. தப்பிப் பிழைத்தவர்கள் மைதானத்திற்கு அடங்கி லாயத்தில் கட்டப்பட்ட மாடுகளைப் போல அதற்குள்ளே சுற்றி வருகிறார்கள். உலகத்தின் உச்சியில் ஒரு மலை இருக்கிறது. அந்த மலையில் ஒரு சமதளம் இருக்கிறது. அந்த சமதளத்தில் ஆழமான ஒரு அமைதி இருக்கிறது. அங்கே ஒரு மைதானத்தில் கைப்பிடித்து வழிநடத்த ஒரு குள்ளச் சித்தன் நின்று கொண்டிருக்கிறான்.
சுற்றிப் பற்றியெறிகிற அம் மைதானத்தில் இருந்து தப்பி மலை மைதானத்தில் விளையாட நினைக்கிற ஒருத்தனின் கதைதான் பார்பி. அது ஒருத்தனின் கதை மட்டுமல்ல. எங்கள் எல்லோருடைய கதையும்தான் இது. இந்தக் கதையைச் சொல்லும்போதுகூட என் பக்கத்தில் இருக்கும் பார்பி பொம்மையின் கண்ணில் இருக்கிற குன்றி மணிகள் சேல் அகட்டுகின்றன. அதன் கண்ணில் உறைந்திருக்கிற கருப்பு எங்களது வாழ்க்கை. சுற்றிப் படர்ந்திருக்கிற சிவப்பு நாங்கள் வாழ நினைக்கிற வாழ்க்கை. எங்களைச் சுற்றி ஏராளமான நிறங்கள் இறைந்து கிடக்கின்றன. வண்ணங்களின் போர்வையில் கத்தரிப்பூ நிற உடையணிந்த பார்பி ஓங்கி மேலெழுந்து நிற்கிறாள். ஒரு ஜாடையில் அவள் எங்களூர் செண்பக வல்லியம்மனைப் போலக்கூடத் தெரிகிறாள். அரசிகள் முறைதவறாமல் நகர்வலம் போவார்கள் எங்கள் நிலத்தில்!

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...