முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாமழை - புனைவு


உங்களுக்கு என்னங்க இந்த வயதிலும் அழகாகத்தான் இருக்கிங்க.. எதற்கு சரோ இப்படி சொன்னான் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மது, ''ஒருவேளை நான்தான் காரணமா? அதுகிடக்கட்டும் அதென்ன இந்த வயதிலும்? அவனை விட வயது மூத்தவள் என்பதை குத்திக் காட்டுகிறானா? எல்லாவற்றிலும் இந்த வயதை இழுக்கிறான்.. இந்த வயதில் இத்தனை உடல்வாகு இத்தனை கச்சிதம்.. போதும் ச்சீ கண்ணாடி முன் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள் பிரசவத்தில் விட்டுப்போய் தளர்ந்த உடம்பு அப்படியே பழகி இன்று வடிவு இழந்திருந்தது. ஆனாலும் அழகாகவே இருந்தாள் அவளுக்கு.
பட் பட் பட்டென்று அறைக்கதவு தட்டப்பட நைட்டியை அணிந்தபடி கதவைத் திறந்தாள்..
கதவ பூட்டிக்கிட்டு என்ன பண்ணிட்டு இருக்கிற நீ? ஆடை மாற்றிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள்.
''இதென்ன புதுசா? கதவை சாத்தி டிரஸ் மாத்துறது. இந்த வீட்ல உன்னை என்னை தவிர வேற யார் இருக்கா? கேள்விக்கு பதில் சொல்லாமல் அவ்விடம் விட்டு நகன்றாள். மறைப்பதற்கு அதிசயமாக உன்னிடம் எதுவும் இல்லை.. உன் நிர்வாணம் அப்படி ஒன்றும் எனக்கு கிளர்ச்சி தராது.. என்னும் தாக்குதலாக அவளுக்குப் பட்டது., ஏன் நான் என்னை மறைக்கக் கூடாதா? கிளர்ச்சி அடையச் செய்யும் நிர்வாணம் மட்டும்தான் மறைக்கப் படக்கூடியதா? அவளுக்கு கேள்விகள் இருந்தன பதில்கள் இல்லாமல்.
''கௌசிக் இந்த செம் லீவுக்கு friends வீட்டுக்கு போறானாம் அடுத்த செம் லீவுக்கு friendsகள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதா சொல்றான். என்ன சொல்லட்டும்..''
....சரின்னு சொல்லிடுங்க.
வாட்சப் திறந்ததும் சரோவின் மெசேஜ்
''என்ன நான் சொன்ன மாதிரி கண்ணாடி முன்ன நின்னு பார்த்திங்களா? இப்பவாது தெரிஞ்சுக்கோங்க நீங்க ரொம்ப அழகுன்னு''
..ம்ம்ம்ம்...
''என்ன ம்ம்ம்ம்?''
....ம்ம்ம்ம்ன்னா ம்ம்ம்...
''நீங்க மட்டும்தான் உங்க அழகை பார்ப்பிங்களா?''
''hello'''
''hello''
கௌசிக்கிற்கும் சரோவிற்கும் எத்தனை வயது வித்தியாசம் என்று யோசித்தாள்..மனதுள் ஏதோ இடறியது.
..........................
அந்த அலுவலகத்தில் மதுவிடம் கணக்குக் காட்டவேண்டிய விற்பனைப் பிரதிநிதி சரோ. இவன் போன இடத்தில் என்ன நடந்தால் எனக்கென்ன அதையெல்லாம் எதற்கு என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.. சில நாட்களில் இன்று என்ன நடந்தது என்று மதுவே கேட்கலானாள்.. பேசுவதற்கு ஏதுமில்லாத போது அன்றைய செய்தித்தாள் செய்திகள் உரையாடல் செய்திகளாயின.. பார்த்த அழகிய பெண்கள்.. தன் காதலை ஒதுக்கிய பெண்கள்.. பெண்களால் ஒதுக்கப்பட்டவன் நான் ஒரு விர்ஜின் என்றவன் சொல்லும் போது மதுவிற்கு சிரிப்பாக வரும்.. அவன் புத்திசாலி சுவாரஸ்யமானவன் நிராகரிக்கப்பட காரணங்கள் இல்லாதவன். ஏன் எதனால் என்று கேட்டாள்.. அலைவரிசை ஒத்துவரவில்லை உங்களுக்கும் எனக்கும் இருப்பதைப் போல.. நீங்கள் ஏன் சீக்கிரமாகப் பிறந்திர்கள் என்று கோபிப்பான். அதில் விகல்பமே இல்லாமல் மனதில் பட்டதை அந்த நொடியே சொல்லும் வெளிப்படை மதுவை வெகுவாய் ஈர்த்தது..
உங்களிடம் எத்தனை பேர் propose பண்ணினாங்க? யாருமே இல்லை என்றாள்.. உங்களுக்கு என்னங்க இந்த வயதிலும் அழகாகத்தான் இருக்கிங்க.. இளமையில் எப்படி இருந்திருப்பிங்க! என்று சொல்லி அவள்காலத்து இளைஞர்களை ரசனை கெட்டவர்கள் என்று திட்டினான். அதற்குமேல் அவனின் பேச்சை மதுவால் தவிர்க்க முடியவில்லை.. உடலின் கட்டுக்கோப்பும் நிர்வாணத்தின் அழகும்
என்று வந்து நின்றது.
...................
ஒரு இளைஞன் தன்னை வியப்பது அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.. அத்தனை இளம் பெண்களையும் தாண்டி அவனைக் கவர்ந்ததில் அவளுக்கே கொஞ்சம் கர்வம்.. அவன் கண்களுக்கு அழகாகத் தெரியவேண்டி காலையில் தயாராகுதல் நினைத்து சிரித்துக் கொள்வாள்.
வந்ததும் கேட்டான்.. நேத்து அனுப்பின மெசேஜ்க்கு நீங்க பதிலே சொல்லலியே.. - சொல்வாங்க சொல்வாங்க உன்னைய கொல்வாங்க. என்று சிரித்தாள்.
எல்லையற்ற பேச்சுக்கள் எல்லையற்ற பார்வை மேய்தல்கள். அனுமதித்து ரசிக்கும் கயமைகள் தொடுகைக்குக் காத்திருந்தது
அன்றிரவு அவன் மீண்டும் கேட்டால் கேட்டதை அனுப்பவேண்டும் என்னும் முடிவோடு மெசேஜ்க்கு காத்திருந்தாள்.. காத்திருப்பது இப்படி இதயம் நடுங்கச் செய்யும் என்பதையே அன்றுதான் உணர்ந்தாள்.. எந்த விதத்தில் selfie எடுக்க வேண்டும் என்பதற்கு புரண்டு படுத்து ஒத்திகை நடத்தினாள்.. கன்னத்திற்கும் கழுத்திற்கும் இடையில் வெட்கம் ஓடிக்கொண்டிருந்தது.. உடலை நெளித்து துணியை போல திருகிப் போட்டால் தேவலாம் என்றிருந்தது.. பல் எளிர் முதற்கொண்டு நமைந்தது...கால்களைப் பின்னிக் கொண்டாள். இந்த அவஸ்தை அவளுக்குப் புதிது.. புதிதான சந்தோசம் எண்ணி திளைத்திருந்தாள், கடைசியில் இவளே oi என்று அனுப்பினாள்..தூங்கும் வரைக்கும் ஒரு டிக்கில் மெசேஜ் இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்..
கனவில் கௌசிக்.. உடல் உதறி எழுந்தாள்.. ஐயோ என்ன இது.. அவனுக்கு இதுவெல்லாம் தெரிந்தால் என்ன ஆகும். அவள் உணர்வுகள் தாய்மையோடு முட்டி மோதிக்கொண்டிருந்தது.. ஒருவேளை சரோ மேலிருப்பதும் ஒருவித தாய்மை உணர்வுதானா? நான்தான் தேவையில்லாமல் குழம்புகிறேனா? அவளுக்கு மீண்டும் கேள்விகள் பதில் இல்லா கேள்விகள்.
காலையில் அலுவலகத்தில் அவன் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்திருப்பதாகத் தெரிந்தது.. இருப்புகொள்ளாமல் தவித்து என்ன செய்து கொண்டிருப்பான் என்று யோசித்தாள். உடல் நிலை சரியில்லைன்னு ஒரு வார்த்த அவன் சொல்லிருந்தா நான் போயி அவனை கவனித்து இருக்கலாமே.. தனியாக இருப்பதாக வேற சொன்னான் என்ன செய்வான்.. அவளிடம் பெருங்கருணை சுரந்து கொண்டிருந்தது.. மேலும் ஒரு தடையும். ஐயோ பாவம், இரக்கம், காதல் காமம்.. எல்லாம் கலந்த ஒரு நிலையில் இருந்தாள்.. இப்போது அவன் வீட்டில் போய் நின்றால் என்ன செய்வான்? யாருமே இல்லை என்று வருந்தியவன் என் வருகைக்கு மகிழ்ந்து கட்டிப்பிடித்து அழுவானா? அன்பின் அணைப்பை விட எது பெரியது இவ்வுலகில்.. காமம் எல்லாம் ஊடுவிளைவு தான். காமம் நிகழ்ந்தால்தான் என்ன தவறு.. நான் அந்த கருணையையும் அவனுக்கு வழங்குவேன்.. எனக்குள்ளிருக்கும் காதலும் காமமும் இதைக் கருணை என்று தனக்கு வசதியாக மொழி பெயர்ப்பதாக தோன்றுகிறதே. பரவாயில்லை mutual தானே! யோசனைகளில் நாள் கடத்தி மறுநாள் விடுப்பெடுத்தாள்..
தோழிக்கு உடல்நிலை சரியில்லை பார்க்கப் போவதாக கணவனிடம் காரணம் சொன்னாள்..
என்ன வாங்கிச் செல்வது? ஏதும் வேண்டாம் அங்கு அவனுக்கு சமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தாள்.. பேரன்பை வழங்கப் போகிறோம் என்ற திமிர் அவள் நடையிலேயே தெரிந்தது.. மிகுந்த உற்சாகம்.
வாசலே அலங்கோலமாக பேச்சுலர் வீட்டிற்கு அத்தனை தகுதியோடும் இருந்தது சரோ வீடு.. முதலில் கூட்டிபெருக்கி கோலம் போடவேண்டும் அப்போதுதான் வாசல் வாசலாக இருக்கும் இதுதான் முதல்வேலை என்று மனதில் நிறுத்தி.. காலிங் பெல் அழுத்தினாள்.. கதவு திறந்துதான் இருக்குது உள்ள வாங்க என்றான் சரோ.. கட்டிலில் படுத்திருந்தான் அவன் அருகில் அவன் கால் பாதத்தை சூடு பறக்க தேய்த்து விட்டுக் கொண்டிருந்தாள் ஒரு இளைஞி.. இந்த மேடம் தான் என்னோட சீஃப் என்று அந்த இளைஞியிடம் அறிமுகம் செய்தான்..
இவ என்னோட friend மேடம் என்றான்.. முதல் முறையாக மேடம் என்றழைக்கிறான்..
என்ன இந்தப்பக்கம் என்று அவனும் கேட்கவில்லை.. இவளும் எந்த பொய்க்காரணமும் சொல்லவில்லை. get well soon என்று வெளிவந்தாள்
அண்ணாந்து பார்த்தாள். மழைக்கு எந்த அறிகுறியும் இல்லை.
மழைபெய்தால் நன்றாக இருக்கும் தோன்றிற்று
.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...