முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாமழை - புனைவு


உங்களுக்கு என்னங்க இந்த வயதிலும் அழகாகத்தான் இருக்கிங்க.. எதற்கு சரோ இப்படி சொன்னான் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மது, ''ஒருவேளை நான்தான் காரணமா? அதுகிடக்கட்டும் அதென்ன இந்த வயதிலும்? அவனை விட வயது மூத்தவள் என்பதை குத்திக் காட்டுகிறானா? எல்லாவற்றிலும் இந்த வயதை இழுக்கிறான்.. இந்த வயதில் இத்தனை உடல்வாகு இத்தனை கச்சிதம்.. போதும் ச்சீ கண்ணாடி முன் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள் பிரசவத்தில் விட்டுப்போய் தளர்ந்த உடம்பு அப்படியே பழகி இன்று வடிவு இழந்திருந்தது. ஆனாலும் அழகாகவே இருந்தாள் அவளுக்கு.
பட் பட் பட்டென்று அறைக்கதவு தட்டப்பட நைட்டியை அணிந்தபடி கதவைத் திறந்தாள்..
கதவ பூட்டிக்கிட்டு என்ன பண்ணிட்டு இருக்கிற நீ? ஆடை மாற்றிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள்.
''இதென்ன புதுசா? கதவை சாத்தி டிரஸ் மாத்துறது. இந்த வீட்ல உன்னை என்னை தவிர வேற யார் இருக்கா? கேள்விக்கு பதில் சொல்லாமல் அவ்விடம் விட்டு நகன்றாள். மறைப்பதற்கு அதிசயமாக உன்னிடம் எதுவும் இல்லை.. உன் நிர்வாணம் அப்படி ஒன்றும் எனக்கு கிளர்ச்சி தராது.. என்னும் தாக்குதலாக அவளுக்குப் பட்டது., ஏன் நான் என்னை மறைக்கக் கூடாதா? கிளர்ச்சி அடையச் செய்யும் நிர்வாணம் மட்டும்தான் மறைக்கப் படக்கூடியதா? அவளுக்கு கேள்விகள் இருந்தன பதில்கள் இல்லாமல்.
''கௌசிக் இந்த செம் லீவுக்கு friends வீட்டுக்கு போறானாம் அடுத்த செம் லீவுக்கு friendsகள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதா சொல்றான். என்ன சொல்லட்டும்..''
....சரின்னு சொல்லிடுங்க.
வாட்சப் திறந்ததும் சரோவின் மெசேஜ்
''என்ன நான் சொன்ன மாதிரி கண்ணாடி முன்ன நின்னு பார்த்திங்களா? இப்பவாது தெரிஞ்சுக்கோங்க நீங்க ரொம்ப அழகுன்னு''
..ம்ம்ம்ம்...
''என்ன ம்ம்ம்ம்?''
....ம்ம்ம்ம்ன்னா ம்ம்ம்...
''நீங்க மட்டும்தான் உங்க அழகை பார்ப்பிங்களா?''
''hello'''
''hello''
கௌசிக்கிற்கும் சரோவிற்கும் எத்தனை வயது வித்தியாசம் என்று யோசித்தாள்..மனதுள் ஏதோ இடறியது.
..........................
அந்த அலுவலகத்தில் மதுவிடம் கணக்குக் காட்டவேண்டிய விற்பனைப் பிரதிநிதி சரோ. இவன் போன இடத்தில் என்ன நடந்தால் எனக்கென்ன அதையெல்லாம் எதற்கு என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.. சில நாட்களில் இன்று என்ன நடந்தது என்று மதுவே கேட்கலானாள்.. பேசுவதற்கு ஏதுமில்லாத போது அன்றைய செய்தித்தாள் செய்திகள் உரையாடல் செய்திகளாயின.. பார்த்த அழகிய பெண்கள்.. தன் காதலை ஒதுக்கிய பெண்கள்.. பெண்களால் ஒதுக்கப்பட்டவன் நான் ஒரு விர்ஜின் என்றவன் சொல்லும் போது மதுவிற்கு சிரிப்பாக வரும்.. அவன் புத்திசாலி சுவாரஸ்யமானவன் நிராகரிக்கப்பட காரணங்கள் இல்லாதவன். ஏன் எதனால் என்று கேட்டாள்.. அலைவரிசை ஒத்துவரவில்லை உங்களுக்கும் எனக்கும் இருப்பதைப் போல.. நீங்கள் ஏன் சீக்கிரமாகப் பிறந்திர்கள் என்று கோபிப்பான். அதில் விகல்பமே இல்லாமல் மனதில் பட்டதை அந்த நொடியே சொல்லும் வெளிப்படை மதுவை வெகுவாய் ஈர்த்தது..
உங்களிடம் எத்தனை பேர் propose பண்ணினாங்க? யாருமே இல்லை என்றாள்.. உங்களுக்கு என்னங்க இந்த வயதிலும் அழகாகத்தான் இருக்கிங்க.. இளமையில் எப்படி இருந்திருப்பிங்க! என்று சொல்லி அவள்காலத்து இளைஞர்களை ரசனை கெட்டவர்கள் என்று திட்டினான். அதற்குமேல் அவனின் பேச்சை மதுவால் தவிர்க்க முடியவில்லை.. உடலின் கட்டுக்கோப்பும் நிர்வாணத்தின் அழகும்
என்று வந்து நின்றது.
...................
ஒரு இளைஞன் தன்னை வியப்பது அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.. அத்தனை இளம் பெண்களையும் தாண்டி அவனைக் கவர்ந்ததில் அவளுக்கே கொஞ்சம் கர்வம்.. அவன் கண்களுக்கு அழகாகத் தெரியவேண்டி காலையில் தயாராகுதல் நினைத்து சிரித்துக் கொள்வாள்.
வந்ததும் கேட்டான்.. நேத்து அனுப்பின மெசேஜ்க்கு நீங்க பதிலே சொல்லலியே.. - சொல்வாங்க சொல்வாங்க உன்னைய கொல்வாங்க. என்று சிரித்தாள்.
எல்லையற்ற பேச்சுக்கள் எல்லையற்ற பார்வை மேய்தல்கள். அனுமதித்து ரசிக்கும் கயமைகள் தொடுகைக்குக் காத்திருந்தது
அன்றிரவு அவன் மீண்டும் கேட்டால் கேட்டதை அனுப்பவேண்டும் என்னும் முடிவோடு மெசேஜ்க்கு காத்திருந்தாள்.. காத்திருப்பது இப்படி இதயம் நடுங்கச் செய்யும் என்பதையே அன்றுதான் உணர்ந்தாள்.. எந்த விதத்தில் selfie எடுக்க வேண்டும் என்பதற்கு புரண்டு படுத்து ஒத்திகை நடத்தினாள்.. கன்னத்திற்கும் கழுத்திற்கும் இடையில் வெட்கம் ஓடிக்கொண்டிருந்தது.. உடலை நெளித்து துணியை போல திருகிப் போட்டால் தேவலாம் என்றிருந்தது.. பல் எளிர் முதற்கொண்டு நமைந்தது...கால்களைப் பின்னிக் கொண்டாள். இந்த அவஸ்தை அவளுக்குப் புதிது.. புதிதான சந்தோசம் எண்ணி திளைத்திருந்தாள், கடைசியில் இவளே oi என்று அனுப்பினாள்..தூங்கும் வரைக்கும் ஒரு டிக்கில் மெசேஜ் இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்..
கனவில் கௌசிக்.. உடல் உதறி எழுந்தாள்.. ஐயோ என்ன இது.. அவனுக்கு இதுவெல்லாம் தெரிந்தால் என்ன ஆகும். அவள் உணர்வுகள் தாய்மையோடு முட்டி மோதிக்கொண்டிருந்தது.. ஒருவேளை சரோ மேலிருப்பதும் ஒருவித தாய்மை உணர்வுதானா? நான்தான் தேவையில்லாமல் குழம்புகிறேனா? அவளுக்கு மீண்டும் கேள்விகள் பதில் இல்லா கேள்விகள்.
காலையில் அலுவலகத்தில் அவன் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்திருப்பதாகத் தெரிந்தது.. இருப்புகொள்ளாமல் தவித்து என்ன செய்து கொண்டிருப்பான் என்று யோசித்தாள். உடல் நிலை சரியில்லைன்னு ஒரு வார்த்த அவன் சொல்லிருந்தா நான் போயி அவனை கவனித்து இருக்கலாமே.. தனியாக இருப்பதாக வேற சொன்னான் என்ன செய்வான்.. அவளிடம் பெருங்கருணை சுரந்து கொண்டிருந்தது.. மேலும் ஒரு தடையும். ஐயோ பாவம், இரக்கம், காதல் காமம்.. எல்லாம் கலந்த ஒரு நிலையில் இருந்தாள்.. இப்போது அவன் வீட்டில் போய் நின்றால் என்ன செய்வான்? யாருமே இல்லை என்று வருந்தியவன் என் வருகைக்கு மகிழ்ந்து கட்டிப்பிடித்து அழுவானா? அன்பின் அணைப்பை விட எது பெரியது இவ்வுலகில்.. காமம் எல்லாம் ஊடுவிளைவு தான். காமம் நிகழ்ந்தால்தான் என்ன தவறு.. நான் அந்த கருணையையும் அவனுக்கு வழங்குவேன்.. எனக்குள்ளிருக்கும் காதலும் காமமும் இதைக் கருணை என்று தனக்கு வசதியாக மொழி பெயர்ப்பதாக தோன்றுகிறதே. பரவாயில்லை mutual தானே! யோசனைகளில் நாள் கடத்தி மறுநாள் விடுப்பெடுத்தாள்..
தோழிக்கு உடல்நிலை சரியில்லை பார்க்கப் போவதாக கணவனிடம் காரணம் சொன்னாள்..
என்ன வாங்கிச் செல்வது? ஏதும் வேண்டாம் அங்கு அவனுக்கு சமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தாள்.. பேரன்பை வழங்கப் போகிறோம் என்ற திமிர் அவள் நடையிலேயே தெரிந்தது.. மிகுந்த உற்சாகம்.
வாசலே அலங்கோலமாக பேச்சுலர் வீட்டிற்கு அத்தனை தகுதியோடும் இருந்தது சரோ வீடு.. முதலில் கூட்டிபெருக்கி கோலம் போடவேண்டும் அப்போதுதான் வாசல் வாசலாக இருக்கும் இதுதான் முதல்வேலை என்று மனதில் நிறுத்தி.. காலிங் பெல் அழுத்தினாள்.. கதவு திறந்துதான் இருக்குது உள்ள வாங்க என்றான் சரோ.. கட்டிலில் படுத்திருந்தான் அவன் அருகில் அவன் கால் பாதத்தை சூடு பறக்க தேய்த்து விட்டுக் கொண்டிருந்தாள் ஒரு இளைஞி.. இந்த மேடம் தான் என்னோட சீஃப் என்று அந்த இளைஞியிடம் அறிமுகம் செய்தான்..
இவ என்னோட friend மேடம் என்றான்.. முதல் முறையாக மேடம் என்றழைக்கிறான்..
என்ன இந்தப்பக்கம் என்று அவனும் கேட்கவில்லை.. இவளும் எந்த பொய்க்காரணமும் சொல்லவில்லை. get well soon என்று வெளிவந்தாள்
அண்ணாந்து பார்த்தாள். மழைக்கு எந்த அறிகுறியும் இல்லை.
மழைபெய்தால் நன்றாக இருக்கும் தோன்றிற்று
.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...