முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாமழை - புனைவு


உங்களுக்கு என்னங்க இந்த வயதிலும் அழகாகத்தான் இருக்கிங்க.. எதற்கு சரோ இப்படி சொன்னான் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மது, ''ஒருவேளை நான்தான் காரணமா? அதுகிடக்கட்டும் அதென்ன இந்த வயதிலும்? அவனை விட வயது மூத்தவள் என்பதை குத்திக் காட்டுகிறானா? எல்லாவற்றிலும் இந்த வயதை இழுக்கிறான்.. இந்த வயதில் இத்தனை உடல்வாகு இத்தனை கச்சிதம்.. போதும் ச்சீ கண்ணாடி முன் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள் பிரசவத்தில் விட்டுப்போய் தளர்ந்த உடம்பு அப்படியே பழகி இன்று வடிவு இழந்திருந்தது. ஆனாலும் அழகாகவே இருந்தாள் அவளுக்கு.
பட் பட் பட்டென்று அறைக்கதவு தட்டப்பட நைட்டியை அணிந்தபடி கதவைத் திறந்தாள்..
கதவ பூட்டிக்கிட்டு என்ன பண்ணிட்டு இருக்கிற நீ? ஆடை மாற்றிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள்.
''இதென்ன புதுசா? கதவை சாத்தி டிரஸ் மாத்துறது. இந்த வீட்ல உன்னை என்னை தவிர வேற யார் இருக்கா? கேள்விக்கு பதில் சொல்லாமல் அவ்விடம் விட்டு நகன்றாள். மறைப்பதற்கு அதிசயமாக உன்னிடம் எதுவும் இல்லை.. உன் நிர்வாணம் அப்படி ஒன்றும் எனக்கு கிளர்ச்சி தராது.. என்னும் தாக்குதலாக அவளுக்குப் பட்டது., ஏன் நான் என்னை மறைக்கக் கூடாதா? கிளர்ச்சி அடையச் செய்யும் நிர்வாணம் மட்டும்தான் மறைக்கப் படக்கூடியதா? அவளுக்கு கேள்விகள் இருந்தன பதில்கள் இல்லாமல்.
''கௌசிக் இந்த செம் லீவுக்கு friends வீட்டுக்கு போறானாம் அடுத்த செம் லீவுக்கு friendsகள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதா சொல்றான். என்ன சொல்லட்டும்..''
....சரின்னு சொல்லிடுங்க.
வாட்சப் திறந்ததும் சரோவின் மெசேஜ்
''என்ன நான் சொன்ன மாதிரி கண்ணாடி முன்ன நின்னு பார்த்திங்களா? இப்பவாது தெரிஞ்சுக்கோங்க நீங்க ரொம்ப அழகுன்னு''
..ம்ம்ம்ம்...
''என்ன ம்ம்ம்ம்?''
....ம்ம்ம்ம்ன்னா ம்ம்ம்...
''நீங்க மட்டும்தான் உங்க அழகை பார்ப்பிங்களா?''
''hello'''
''hello''
கௌசிக்கிற்கும் சரோவிற்கும் எத்தனை வயது வித்தியாசம் என்று யோசித்தாள்..மனதுள் ஏதோ இடறியது.
..........................
அந்த அலுவலகத்தில் மதுவிடம் கணக்குக் காட்டவேண்டிய விற்பனைப் பிரதிநிதி சரோ. இவன் போன இடத்தில் என்ன நடந்தால் எனக்கென்ன அதையெல்லாம் எதற்கு என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.. சில நாட்களில் இன்று என்ன நடந்தது என்று மதுவே கேட்கலானாள்.. பேசுவதற்கு ஏதுமில்லாத போது அன்றைய செய்தித்தாள் செய்திகள் உரையாடல் செய்திகளாயின.. பார்த்த அழகிய பெண்கள்.. தன் காதலை ஒதுக்கிய பெண்கள்.. பெண்களால் ஒதுக்கப்பட்டவன் நான் ஒரு விர்ஜின் என்றவன் சொல்லும் போது மதுவிற்கு சிரிப்பாக வரும்.. அவன் புத்திசாலி சுவாரஸ்யமானவன் நிராகரிக்கப்பட காரணங்கள் இல்லாதவன். ஏன் எதனால் என்று கேட்டாள்.. அலைவரிசை ஒத்துவரவில்லை உங்களுக்கும் எனக்கும் இருப்பதைப் போல.. நீங்கள் ஏன் சீக்கிரமாகப் பிறந்திர்கள் என்று கோபிப்பான். அதில் விகல்பமே இல்லாமல் மனதில் பட்டதை அந்த நொடியே சொல்லும் வெளிப்படை மதுவை வெகுவாய் ஈர்த்தது..
உங்களிடம் எத்தனை பேர் propose பண்ணினாங்க? யாருமே இல்லை என்றாள்.. உங்களுக்கு என்னங்க இந்த வயதிலும் அழகாகத்தான் இருக்கிங்க.. இளமையில் எப்படி இருந்திருப்பிங்க! என்று சொல்லி அவள்காலத்து இளைஞர்களை ரசனை கெட்டவர்கள் என்று திட்டினான். அதற்குமேல் அவனின் பேச்சை மதுவால் தவிர்க்க முடியவில்லை.. உடலின் கட்டுக்கோப்பும் நிர்வாணத்தின் அழகும்
என்று வந்து நின்றது.
...................
ஒரு இளைஞன் தன்னை வியப்பது அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.. அத்தனை இளம் பெண்களையும் தாண்டி அவனைக் கவர்ந்ததில் அவளுக்கே கொஞ்சம் கர்வம்.. அவன் கண்களுக்கு அழகாகத் தெரியவேண்டி காலையில் தயாராகுதல் நினைத்து சிரித்துக் கொள்வாள்.
வந்ததும் கேட்டான்.. நேத்து அனுப்பின மெசேஜ்க்கு நீங்க பதிலே சொல்லலியே.. - சொல்வாங்க சொல்வாங்க உன்னைய கொல்வாங்க. என்று சிரித்தாள்.
எல்லையற்ற பேச்சுக்கள் எல்லையற்ற பார்வை மேய்தல்கள். அனுமதித்து ரசிக்கும் கயமைகள் தொடுகைக்குக் காத்திருந்தது
அன்றிரவு அவன் மீண்டும் கேட்டால் கேட்டதை அனுப்பவேண்டும் என்னும் முடிவோடு மெசேஜ்க்கு காத்திருந்தாள்.. காத்திருப்பது இப்படி இதயம் நடுங்கச் செய்யும் என்பதையே அன்றுதான் உணர்ந்தாள்.. எந்த விதத்தில் selfie எடுக்க வேண்டும் என்பதற்கு புரண்டு படுத்து ஒத்திகை நடத்தினாள்.. கன்னத்திற்கும் கழுத்திற்கும் இடையில் வெட்கம் ஓடிக்கொண்டிருந்தது.. உடலை நெளித்து துணியை போல திருகிப் போட்டால் தேவலாம் என்றிருந்தது.. பல் எளிர் முதற்கொண்டு நமைந்தது...கால்களைப் பின்னிக் கொண்டாள். இந்த அவஸ்தை அவளுக்குப் புதிது.. புதிதான சந்தோசம் எண்ணி திளைத்திருந்தாள், கடைசியில் இவளே oi என்று அனுப்பினாள்..தூங்கும் வரைக்கும் ஒரு டிக்கில் மெசேஜ் இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்..
கனவில் கௌசிக்.. உடல் உதறி எழுந்தாள்.. ஐயோ என்ன இது.. அவனுக்கு இதுவெல்லாம் தெரிந்தால் என்ன ஆகும். அவள் உணர்வுகள் தாய்மையோடு முட்டி மோதிக்கொண்டிருந்தது.. ஒருவேளை சரோ மேலிருப்பதும் ஒருவித தாய்மை உணர்வுதானா? நான்தான் தேவையில்லாமல் குழம்புகிறேனா? அவளுக்கு மீண்டும் கேள்விகள் பதில் இல்லா கேள்விகள்.
காலையில் அலுவலகத்தில் அவன் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்திருப்பதாகத் தெரிந்தது.. இருப்புகொள்ளாமல் தவித்து என்ன செய்து கொண்டிருப்பான் என்று யோசித்தாள். உடல் நிலை சரியில்லைன்னு ஒரு வார்த்த அவன் சொல்லிருந்தா நான் போயி அவனை கவனித்து இருக்கலாமே.. தனியாக இருப்பதாக வேற சொன்னான் என்ன செய்வான்.. அவளிடம் பெருங்கருணை சுரந்து கொண்டிருந்தது.. மேலும் ஒரு தடையும். ஐயோ பாவம், இரக்கம், காதல் காமம்.. எல்லாம் கலந்த ஒரு நிலையில் இருந்தாள்.. இப்போது அவன் வீட்டில் போய் நின்றால் என்ன செய்வான்? யாருமே இல்லை என்று வருந்தியவன் என் வருகைக்கு மகிழ்ந்து கட்டிப்பிடித்து அழுவானா? அன்பின் அணைப்பை விட எது பெரியது இவ்வுலகில்.. காமம் எல்லாம் ஊடுவிளைவு தான். காமம் நிகழ்ந்தால்தான் என்ன தவறு.. நான் அந்த கருணையையும் அவனுக்கு வழங்குவேன்.. எனக்குள்ளிருக்கும் காதலும் காமமும் இதைக் கருணை என்று தனக்கு வசதியாக மொழி பெயர்ப்பதாக தோன்றுகிறதே. பரவாயில்லை mutual தானே! யோசனைகளில் நாள் கடத்தி மறுநாள் விடுப்பெடுத்தாள்..
தோழிக்கு உடல்நிலை சரியில்லை பார்க்கப் போவதாக கணவனிடம் காரணம் சொன்னாள்..
என்ன வாங்கிச் செல்வது? ஏதும் வேண்டாம் அங்கு அவனுக்கு சமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தாள்.. பேரன்பை வழங்கப் போகிறோம் என்ற திமிர் அவள் நடையிலேயே தெரிந்தது.. மிகுந்த உற்சாகம்.
வாசலே அலங்கோலமாக பேச்சுலர் வீட்டிற்கு அத்தனை தகுதியோடும் இருந்தது சரோ வீடு.. முதலில் கூட்டிபெருக்கி கோலம் போடவேண்டும் அப்போதுதான் வாசல் வாசலாக இருக்கும் இதுதான் முதல்வேலை என்று மனதில் நிறுத்தி.. காலிங் பெல் அழுத்தினாள்.. கதவு திறந்துதான் இருக்குது உள்ள வாங்க என்றான் சரோ.. கட்டிலில் படுத்திருந்தான் அவன் அருகில் அவன் கால் பாதத்தை சூடு பறக்க தேய்த்து விட்டுக் கொண்டிருந்தாள் ஒரு இளைஞி.. இந்த மேடம் தான் என்னோட சீஃப் என்று அந்த இளைஞியிடம் அறிமுகம் செய்தான்..
இவ என்னோட friend மேடம் என்றான்.. முதல் முறையாக மேடம் என்றழைக்கிறான்..
என்ன இந்தப்பக்கம் என்று அவனும் கேட்கவில்லை.. இவளும் எந்த பொய்க்காரணமும் சொல்லவில்லை. get well soon என்று வெளிவந்தாள்
அண்ணாந்து பார்த்தாள். மழைக்கு எந்த அறிகுறியும் இல்லை.
மழைபெய்தால் நன்றாக இருக்கும் தோன்றிற்று
.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...