முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூதாடி!


-


ஜொலிக்கிற துறையொன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் குறித்துச் சொல்வதற்கு முன்னால் சில வார்த்தைகள். ஏனெனில் இது வெறுமனே கட்டுரையாக மட்டும் இல்லை. வண்ணமயமான உலகமொன்றினுள் நுழைவதற்கான முஸ்தீபுகள். சுபிட்ச முருகன் என்று சொல்லிக் கொண்டு சீக்குப் பிடித்த தாடியை வறக் வறம் என சொறிந்தபடி, வானத்தைப் பார்த்து அமர்ந்து பார்த்தாயிற்று.
எப்போதுமே ஆனந்தத்தை அடைய வழி ஒன்றுமட்டுமே என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்ததே இல்லை. பழனி மலைப் படிக்கட்டு போல, ஏராளமான படிக்கட்டுக்கள் ஆனந்தத்தை அடைவதற்கு வழிகாட்டுகின்றன.
இடைப்பட்ட சில நாட்களாக எங்கேயாவது ஓடிப் போனால்தான் தப்பிப்பேன் என்கிற மனநிலையில் உழன்று கொண்டிருந்தேன்.
எப்போதும் போல அடிவாரத்தில் போய் அமர்ந்தேன். சுபிட்ச முருகன் மெதுவாக தன் சட்டையை உறித்து மலைப் படிக்கட்டுகள் வழியாக ஏறிப் போனார். அந்தக் கணத்தில் சூதாடியாகவே மாறிப் போயிருந்தேன். சோர்ந்திருந்த தோள்களை நிமிர்த்தி அமர்ந்தேன். ஆனந்தி சுந்தரவதனன் என்கிற பெயரைக் கொண்ட ஒருத்தி, கையில் ஜாக் டானியல் மதுக்குவளையோடு படியிறங்கி வந்து கொண்டிருந்தாள்.
எல்லோரையும் ஒருநாள் ஒய்யாரமாய்க் கொண்டையில் முடியப் போகிறாள் பாருங்களேன். வண்ணமயமான உலகொன்று என் கண் முன்னால் விரிந்தது.எனக்கு நன்றாகத் தெரிந்த உலகது. ஊதாவும் சிவப்பும் ஆரஞ்சையும் கலந்து நட்சத்திரங்களை விளக்கொளி போல் தூவி விட்ட உலகு. லாட்டரிச் சீட்டு பார்த்திருக்கிறீர்களா? உலகில் உள்ள அத்தனை நிறங்களும் உண்டு அங்கே. அதைப் போலத்தான் சூதாடியின் உலகில் அத்தனை நிறங்களும் பின்னிப் பிசைகின்றன. அவள் அதில் செங்காந்தள் மலரின் நிறம்.
அந்த நிற உலகம் நம் தோளிற்குப் பக்கத்தில்தான் நகர்கிறது. அந்த வண்ணமயமான உலகத்தின் வாசலில் நின்று, மெதுவாய்த் திரும்பிப் பார்க்கிறவனின் கதையே அது.
அப்படியான உலகமொன்றில் நடக்கும் அதிவேகப் பாய்ச்சல்களைப் பற்றித்தான் இப்போது சொல்லப் போகிறேன். நாவலுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சூதாடிகள் சூழ் உலகு என்பதற்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.\


பொதுவாகவே வெள்ளித் திரையில் தும்மினால்கூட எல்லோருக்கும் சத்தம் கேட்டு விடுகிறது. சின்னத்திரை ஆட்களெல்லாம் கொஞ்சம் பாவம்தான். சின்னச் சின்னப் பெட்டிச் செய்திகளாகக் கொண்டாடி விட்டுக் கடந்து விடுவார்கள். அந்த உலகத்தில் இருந்து ஏக்கத்தோடு உயரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் என்கிற முறையில் கொஞ்சம் இப்போது தன்னம்பிக்கையோடு பேச ஆரம்பிக்கிறேன்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனந்த விகடன் இதழில்தான் அப்படி எழுதியிருந்தார்கள். ஜீ தமிழ் டப்பிங் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது என கிண்டலடித்து எழுதியிருந்தார்கள். இது நடந்து ஒரு ஏழு வருடங்கள் இருக்கலாம். எனக்கு உயரதிகாரிகளாக இருந்த, கண்ணன் மற்றும் பிரேம் மேனன் இருவரும், “பொறுமையா இருங்க. நமக்குன்னு ஒரு காலம் வரும்” என்று கொந்தளித்துப் போய் அறைக்குள் நுழைகிற என்னிடம் சொல்வார்கள். ஐம்பது ஐம்பது செங்கற்கற்கள் கொண்டு கட்டப்பட்ட அக்கட்டிடம் இப்போது வளர்ந்து நிற்கிற உயரத்தைப் பார்த்தேன்.
கடந்த தீபாவளி தினத்தன்று ரஜினியின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். ஆனாளப்பட்ட சன் தொலைக் காட்சியிலேயே அப்பேட்டி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஷயம் அதில்லை. வரவிருக்கும் 2.0 படத்தை அக்குழுமம்தான் வாங்கியிருக்கிறது என்று காரணத்தைச் சொல்லலாம். ஒரு உண்மையைச் சொல்லவா? கதிர்வேலுவின் காதல் படத்தை அந்நிறுவனம்தான் அதிக தொகைக்கு விலைக்கு வாங்கியிருந்தது. ஆனால் இங்கே வந்து பேட்டி தருவதற்காகப் பதிலாக நயன்தாரா, விஜய் தொலைக்காட்சியில் போய் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். கொதித்துப் போய் விட்டேன். இப்போது ரஜினியையே வரவைத்தார்கள் இல்லையா?
நாடோடி என்று ஒரு படம். அந்த நிறுவனம்தான் அதன் உரிமையை வைத்திருந்தது. ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் சன் தொலைக்காட்சி அந்தப் படத்தை தன்னுடைய அலைவரிசையில் ஒளிபரப்பியது. துடித்துப் போனார்கள் எல்லோரும். ஒன்றுமே செய்ய முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும்தானே? இன்றைக்கு ஜீ தமிழின் சின்னத் திரை தொடர் ஒன்று சன் டீவியை விட முந்திக் கொண்டு போய் நிற்கிறது. அந்தத் துறை சார்ந்த புள்ளி விபரங்களை எல்லாம் எடுத்துப் பாருங்கள். முட்டி மோதி தட்டிப் பறிக்கிற வெற்றிகள் குவிந்திருக்கின்றன அங்கே. ஆரோக்கியமான துறை சார்ந்த போட்டியும் அது.
“என்னது இஸட் தமிழா” என்று கேட்டவர்களுக்கு மத்தியில் அது தன்னை நிலை நிறுத்திக் கொண்டு விட்டது. இரண்டாமிடப் போட்டியில் அந்த நிறுவனம் தற்சமயப் புள்ளி விபரங்களின் படி வெற்றியும் பெற்றிருக்கிறது. வாரா வாரம் ஒவ்வொருத்தரின் தலைவிதியை நிர்ணயிக்கும் சூதாட்டமும் இங்கே நடக்கத்தான் செய்கிறது. சொல்லி முட்டி மோதுகிற யாருமே சூதாடிதான். சுற்றிச் சுழல்கிற சூதுச் சக்கரத்தில் எண்களை தன்னுடைய பிளேசர் பாக்கெட்டுகளில் கவ்விக் கொண்டு வருகிறவனே ராஜா இங்கே. அப்படியான சூதாடி ஒருத்தனின் கதையே அது. அவன் வெற்றி பெறுகிற ஒவ்வொரு சூதிலும் ஜாக் டேனியலின் வாசம் மிச்சமிருக்கும். ஆனந்தத்தை அடைகிற பாதையில் இருக்கிற படிக்கட்டுகளில் ஒன்றுமது. வெட்கம், துக்கம் தேவையில்லை அங்கே!\

சரவணன் சந்திரன்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...