முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூதாடி!


-


ஜொலிக்கிற துறையொன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் குறித்துச் சொல்வதற்கு முன்னால் சில வார்த்தைகள். ஏனெனில் இது வெறுமனே கட்டுரையாக மட்டும் இல்லை. வண்ணமயமான உலகமொன்றினுள் நுழைவதற்கான முஸ்தீபுகள். சுபிட்ச முருகன் என்று சொல்லிக் கொண்டு சீக்குப் பிடித்த தாடியை வறக் வறம் என சொறிந்தபடி, வானத்தைப் பார்த்து அமர்ந்து பார்த்தாயிற்று.
எப்போதுமே ஆனந்தத்தை அடைய வழி ஒன்றுமட்டுமே என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்ததே இல்லை. பழனி மலைப் படிக்கட்டு போல, ஏராளமான படிக்கட்டுக்கள் ஆனந்தத்தை அடைவதற்கு வழிகாட்டுகின்றன.
இடைப்பட்ட சில நாட்களாக எங்கேயாவது ஓடிப் போனால்தான் தப்பிப்பேன் என்கிற மனநிலையில் உழன்று கொண்டிருந்தேன்.
எப்போதும் போல அடிவாரத்தில் போய் அமர்ந்தேன். சுபிட்ச முருகன் மெதுவாக தன் சட்டையை உறித்து மலைப் படிக்கட்டுகள் வழியாக ஏறிப் போனார். அந்தக் கணத்தில் சூதாடியாகவே மாறிப் போயிருந்தேன். சோர்ந்திருந்த தோள்களை நிமிர்த்தி அமர்ந்தேன். ஆனந்தி சுந்தரவதனன் என்கிற பெயரைக் கொண்ட ஒருத்தி, கையில் ஜாக் டானியல் மதுக்குவளையோடு படியிறங்கி வந்து கொண்டிருந்தாள்.
எல்லோரையும் ஒருநாள் ஒய்யாரமாய்க் கொண்டையில் முடியப் போகிறாள் பாருங்களேன். வண்ணமயமான உலகொன்று என் கண் முன்னால் விரிந்தது.எனக்கு நன்றாகத் தெரிந்த உலகது. ஊதாவும் சிவப்பும் ஆரஞ்சையும் கலந்து நட்சத்திரங்களை விளக்கொளி போல் தூவி விட்ட உலகு. லாட்டரிச் சீட்டு பார்த்திருக்கிறீர்களா? உலகில் உள்ள அத்தனை நிறங்களும் உண்டு அங்கே. அதைப் போலத்தான் சூதாடியின் உலகில் அத்தனை நிறங்களும் பின்னிப் பிசைகின்றன. அவள் அதில் செங்காந்தள் மலரின் நிறம்.
அந்த நிற உலகம் நம் தோளிற்குப் பக்கத்தில்தான் நகர்கிறது. அந்த வண்ணமயமான உலகத்தின் வாசலில் நின்று, மெதுவாய்த் திரும்பிப் பார்க்கிறவனின் கதையே அது.
அப்படியான உலகமொன்றில் நடக்கும் அதிவேகப் பாய்ச்சல்களைப் பற்றித்தான் இப்போது சொல்லப் போகிறேன். நாவலுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சூதாடிகள் சூழ் உலகு என்பதற்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.\


பொதுவாகவே வெள்ளித் திரையில் தும்மினால்கூட எல்லோருக்கும் சத்தம் கேட்டு விடுகிறது. சின்னத்திரை ஆட்களெல்லாம் கொஞ்சம் பாவம்தான். சின்னச் சின்னப் பெட்டிச் செய்திகளாகக் கொண்டாடி விட்டுக் கடந்து விடுவார்கள். அந்த உலகத்தில் இருந்து ஏக்கத்தோடு உயரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் என்கிற முறையில் கொஞ்சம் இப்போது தன்னம்பிக்கையோடு பேச ஆரம்பிக்கிறேன்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனந்த விகடன் இதழில்தான் அப்படி எழுதியிருந்தார்கள். ஜீ தமிழ் டப்பிங் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது என கிண்டலடித்து எழுதியிருந்தார்கள். இது நடந்து ஒரு ஏழு வருடங்கள் இருக்கலாம். எனக்கு உயரதிகாரிகளாக இருந்த, கண்ணன் மற்றும் பிரேம் மேனன் இருவரும், “பொறுமையா இருங்க. நமக்குன்னு ஒரு காலம் வரும்” என்று கொந்தளித்துப் போய் அறைக்குள் நுழைகிற என்னிடம் சொல்வார்கள். ஐம்பது ஐம்பது செங்கற்கற்கள் கொண்டு கட்டப்பட்ட அக்கட்டிடம் இப்போது வளர்ந்து நிற்கிற உயரத்தைப் பார்த்தேன்.
கடந்த தீபாவளி தினத்தன்று ரஜினியின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். ஆனாளப்பட்ட சன் தொலைக் காட்சியிலேயே அப்பேட்டி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஷயம் அதில்லை. வரவிருக்கும் 2.0 படத்தை அக்குழுமம்தான் வாங்கியிருக்கிறது என்று காரணத்தைச் சொல்லலாம். ஒரு உண்மையைச் சொல்லவா? கதிர்வேலுவின் காதல் படத்தை அந்நிறுவனம்தான் அதிக தொகைக்கு விலைக்கு வாங்கியிருந்தது. ஆனால் இங்கே வந்து பேட்டி தருவதற்காகப் பதிலாக நயன்தாரா, விஜய் தொலைக்காட்சியில் போய் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். கொதித்துப் போய் விட்டேன். இப்போது ரஜினியையே வரவைத்தார்கள் இல்லையா?
நாடோடி என்று ஒரு படம். அந்த நிறுவனம்தான் அதன் உரிமையை வைத்திருந்தது. ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் சன் தொலைக்காட்சி அந்தப் படத்தை தன்னுடைய அலைவரிசையில் ஒளிபரப்பியது. துடித்துப் போனார்கள் எல்லோரும். ஒன்றுமே செய்ய முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும்தானே? இன்றைக்கு ஜீ தமிழின் சின்னத் திரை தொடர் ஒன்று சன் டீவியை விட முந்திக் கொண்டு போய் நிற்கிறது. அந்தத் துறை சார்ந்த புள்ளி விபரங்களை எல்லாம் எடுத்துப் பாருங்கள். முட்டி மோதி தட்டிப் பறிக்கிற வெற்றிகள் குவிந்திருக்கின்றன அங்கே. ஆரோக்கியமான துறை சார்ந்த போட்டியும் அது.
“என்னது இஸட் தமிழா” என்று கேட்டவர்களுக்கு மத்தியில் அது தன்னை நிலை நிறுத்திக் கொண்டு விட்டது. இரண்டாமிடப் போட்டியில் அந்த நிறுவனம் தற்சமயப் புள்ளி விபரங்களின் படி வெற்றியும் பெற்றிருக்கிறது. வாரா வாரம் ஒவ்வொருத்தரின் தலைவிதியை நிர்ணயிக்கும் சூதாட்டமும் இங்கே நடக்கத்தான் செய்கிறது. சொல்லி முட்டி மோதுகிற யாருமே சூதாடிதான். சுற்றிச் சுழல்கிற சூதுச் சக்கரத்தில் எண்களை தன்னுடைய பிளேசர் பாக்கெட்டுகளில் கவ்விக் கொண்டு வருகிறவனே ராஜா இங்கே. அப்படியான சூதாடி ஒருத்தனின் கதையே அது. அவன் வெற்றி பெறுகிற ஒவ்வொரு சூதிலும் ஜாக் டேனியலின் வாசம் மிச்சமிருக்கும். ஆனந்தத்தை அடைகிற பாதையில் இருக்கிற படிக்கட்டுகளில் ஒன்றுமது. வெட்கம், துக்கம் தேவையில்லை அங்கே!\

சரவணன் சந்திரன்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...