முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகிழ்ச்சியின் விலை என்ன?






சரவணன் சந்திரன்

-மகிழ்ச்சி என்பது இங்கே விலை போகிற சமாச்சாரம் என்று யூகித்திருக்கிருக்கிறோமா? ஆழமாக விவாதிப்பதென்றால், மகிழ்ச்சி என்று இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிற உணர்வு கைதேர்ந்த கைகளால் உருக்கி உருவாக்கப்பட்ட சரக்கு. கவலைகளை மறந்து எந்நேரமும் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருப்பது. காடுகளில், மலைகளில், ஒரு கோப்பைத் தேநீரில் என சந்தை வழிநடத்தும் இடங்களிலான தேடல் அது.
தொண்ணூறுகள் என்றில்லை. எண்பதுகளின் இறுதியில் இருந்தே இந்த மகிழ்ச்சி வணிகம் மெல்ல இந்தியாவிற்குள் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. வறுமையின் நிறம் சிவப்பு என சாக்கடைக்குள் அமிழ்ந்து கிடக்கிற ஆப்பிளை எடுத்து கழிவிரக்கத்தோடு உண்ணும் தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் சந்தைச் சரக்கது. எதுவெல்லாம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்? என்னென்ன பரிந்துரைகள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன? உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமெனில் மகிழ்ச்சியாய் மலர்ந்து சிரிப்பதற்கு ஒரு கோல்கெட் தேவையாக இருக்கிறது.
மெல்ல பின்னோக்கி யோசித்தால், உலகமயமாக்கல் என்கிற கரங்கள் எந்நேரமும் மகிழ்ச்சி என்னும் கருதுகோளை மக்கள் மத்தியில் எப்படி மெல்ல விதைத்தார்கள் என்பது விளங்க வரும். இதனடிப்படையில் உலகச் சந்தைகளில் இருக்கிற அத்தனை துறைகளையும் உள்ளொடுக்கி விவாதித்து விட முடியும்.
சினிமா துறையைப் பொறுத்தவரை, நடிகர் ரஜினியை இந்த ஒட்டுமொத்த போக்கின் மிகச் சிறந்த மகிழ்ச்சிச் சந்தைச் சரக்கென்பேன். சமீபத்தில் அவர் ஒரு படத்தில் அழுத்தம் திருத்தமாக மகிழ்ச்சி என்று உச்சரிப்பார். ஆனால் அப்போது அவருடைய முகபாவங்கள் மகிழ்ச்சி என்பதற்கு நேரதிரான பாவனையைக் காட்டிக் கொண்டிருக்கும். கண்களில் நிரந்தரமாய் மகிழ்ச்சிக்கு எதிரான ஒரு தடத்தை உருவாக்கிக் கொண்டே அவர் பல ஆண்டுகளாகச் சுற்றி வருகிறார். தன் காலுக்கடியில் இருப்பதை விடுத்து மகிழ்ச்சியை அவர் வேறொரு பக்கம் தேடிக் கொண்டிருக்கிறாரோ?
ரஜினி கொண்டு வந்த மகிழ்ச்சி என்பது வெறும் திரை சார்ந்தது மட்டுமல்ல. திரைக்கு வெளியேயும் அவர் மகிழ்ச்சியின் தூதுவரே. எங்களது வீட்டிற்குப் பக்கத்தில் அண்ணன் ஒருத்தர் சோடா கம்பெனி நடத்தி வந்தார். ரஜினி படம் ரிலீஸாகும் போதெல்லாம் அவர் குஷியாகி விடுவார். வேறொன்றுமில்லை? அன்றைக்கு அதிக சோடாக்கள் விற்றிருக்கும். வீட்டிற்கு கைநிறைய பூந்திப் பொட்டலங்களோடும் பகோடா பொட்டலங்களோடும் திரும்பி வருவார். அவரது அன்றைய தின மகிழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்திருக்கிறேன்.
அவருக்கும் கஷ்டங்கள் வரும். அப்போதெல்லாம் தலைக்கு மேலே கையை உயர்த்தி, “எல்லாம் மேல இருக்கிற ஆண்டவன் பாத்துப்பான்” என்பார் மெல்ல நகைத்தபடி. துக்கத்தை மீறி நம்பிக்கையைக் காட்டும் ஒரு மகிழ்ச்சியான முறுவல் இருக்கும் அதில். இந்த உணர்வைத்தான் ரஜினி ஆழமாக அவருடைய ரசிகர்களிடம் ஊன்றியிருக்கிறார்.
ரஜினி ரசிகர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். கூட்டம் கூட்டமாக அவர்கள் கிளம்பி தெப்பக்குளத்தில், அவர் படம் வெற்றி பெற வேண்டி, படிச் சோறு சாப்பிடுவார்கள். இதென்ன காட்டுமிராண்டித்தனம் என்று எனக்கே தோன்றியிருக்கிறது. ஆனால் அவர்கள் பலரை நெருங்கிப் பார்க்கையில், வாழ்க்கையில் போராடி வெல்கிற முன்னைப்பில் இருப்பவர்கள் அல்லது போராடத் துவங்குபவர்களாக இருந்தார்கள்.
ரஜினி அடிக்கடி, குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதெல்லாம் மிகையாகப் படுகிறது இப்போது. ஆனால் அந்த வார்த்தையை அவருடைய ரசிகர்கள் மிகச் சரியாகவே எடுத்துக் கொள்வதாகப் படுகிறது. கீழே இருந்து உழைத்து மேலேறி தான தர்மம் செய்வது மகிழ்ச்சி என்பது போல பலவிதமான கருதுகோள்களை அவர்களிடையே விதைத்திருக்கிறார்.
நிஜ வாழ்வில் இப்போது அவர் எப்படியென்று தெரிய, நெருங்கிப் பழகியதில்லை. ஒருவகையில் அவருடைய வாழ்வே இப்படிக் கிளம்பி மேலே வந்ததுதானே? ஆனால் திரையின் வழி அதைத்தான் முன்னிறுத்துகிறார். சைக்கிளில் வீடு வீடாகப் போய் பால் போடுகிறவராக வாழ்க்கையைத் துவக்கி வாழ்வின் உச்சியை எட்டிப் பிடித்தவராகத்தான் அவர் பெரும்பாலும் தன்னை முன்னிறுத்துகிறார். அல்லது பெரும் பணத்தை உதறிவிட்டு சாமானியனாக தன் கூட்டிற்குத் திரும்பும் காவிய வகையிலான மகிழ்ச்சியை முன்னிறுத்துகிறார்.
தொடந்து உன்னிப்பாகக் கவனித்தால், ரஜினியைப் பற்றி சோகமயமான சித்திரங்கள் எதுவுமே சமீப காலத்தில் தட்டுப்படவில்லை. அவர் மலர்ந்த முகத்தோடு வாயைக் கோணி சிரிக்கிற தோற்றமே எப்போதும் முந்திக் கொண்டு சித்திரமாக உருவாகி வருகிறது.
அவர் மருத்துவமனையில் இருந்து ஆடியோ வெளியிட்ட போதுகூட கஷ்டப்பட்டு அவரது வழக்கமான ஹாஹாஹா என்கிற சிரிப்புச் சத்தத்தைத்தான் வலியை மீறி வலுக்கட்டாயமாக வெளிப்படுத்தினார். ஆனால் மூச்சிரைப்புகளுக்கு நடுவே அந்த மகிழ்ச்சிச் சிரிப்பை அவருடைய ரசிகர்கள் மிகச் சரியாக இனம் கண்டு கொண்டனர்.
ஆரம்ப கால படங்களில் அவர் எவ்வளவோ பரீட்சார்த்தமாக முயற்சித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் பிற்காலங்களில் தரையிலிருந்து கிளம்பி மேலெழும் பருந்து என்கிற சித்திரமே அவரிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டார்.
அதைத்தான் எல்லா நேரங்களிலும் விதைத்து அறுவடையும் செய்கிறார். சாதாரண பேச்சின் போதுகூட இந்தச் சித்திரத்தைத்தான் வரைந்தும் காட்டுகிறார். “நான் யானை இல்லை குதிரை. விழுந்தாலும் படக்குன்னு எந்திரிச்சிருவேன்” என்பதுகூட அப்படியான ஒன்றுதான். திரைக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு மாதிரியான வெற்றிக்கான அறைகூவல்களை விடுத்துக் கொண்டே இருப்பது.
தோல்வியிலிருந்து வெற்றிக்கு என்பதுதான் இந்த மகிழ்ச்சிச் சந்தையின் ஒற்றை வரி முழக்கம். ஒன்று திரட்டப்பட்ட மகிழ்ச்சியின் வழியாக போராட உந்து சக்தியளிப்பது. இதை வெறும் வணிக சூத்திரம் என்று மட்டுமே சுருக்கி விடக்கூடாது. உண்மையில் இலட்சக்கணக்கான மக்களின் அடியாழத்து வேட்கையும் இதுதான்.
இதைத்தான் ரஜினி மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். திரைக்கு உள்ளே இதைத்தான் வெவ்வேறு கச்சாப் பொருட்களின் வழியாக சந்தைப்படுத்துகிறார். அப்படித் தன்னைச் சந்தைப்படுத்துகிற இடத்திலேயும் வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் மகிழ்ச்சியான வெள்ளைப் பன்றிக் குட்டிகள் அவரது காலைச் சுற்றிக் கொண்டுமிருக்கின்றன.
திரைக்கு வெளியேயும்கூட பிரிவில்லாத குடும்பம், மகிழ்ச்சியான குழந்தைகள், மகிழ்ச்சி என்கிற கருதுகோளை நம்பிக்கைகளோடு சேர்த்துத் தூக்கிப் பிடிக்கும் கடவுள், ஜோதிடம் என அவருக்கு இருக்கும் வாழ்க்கை ஏதோவொரு வகையில் ரசிகர்களை அவர் பால் ஈர்க்கிறது. ஒட்டுமொத்தமாக அக வாழ்வு மற்றும் புறவாழ்வில் வெற்றி பெற்ற நபர் என்கிற மையத்தை உருவாக்கித் தருகிறது.
அவர் காலத்திய நடிகர்கள் பலரிடம் இல்லாத தனிப் பண்பு அது. திரைக்கு வெளியேயும் அவர் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியாகத்தான் நடக்கிறார். இது ஒரு காலகட்டத்தின் தேவை. வேலையில்லாத் திண்டாட்டங்கள் ஒழிந்து, கொட்டிக்கிடக்கிற வேலை வாய்ப்புகளிடையே முன்னேறி சந்தையை விரிவுபடுத்துகிற முயற்சிகளுக்கு முட்டுக் கொடுக்கிற நற்செயலிது.
நாற்பது வயதைத் தொட்டவர்களை மட்டுமல்லாமல், இப்போது முப்பது வயதைத் தொடுகிறவர்களையும் அதனால்தான் அவர் ஈர்க்கிறார். மகிழ்ச்சியைக் கடை விரிக்கும் சந்தையின் தேவையும் அதுதான்.
சந்தை அதனால்தான் அவரை முன்னிறுத்திக் கொண்டாட்டங்களை நடத்துகிறது. மல்டிபிளக்ஸ்களில் மட்டுமல்லாமல் விமானத்தில்கூட அவரது கொடி பறக்கிறது. சந்தைக்கு எல்லோரையுமே ஒரே நேரத்தில் கவர்ந்திழுக்கக்கூடிய ஒரு முகம் எப்போதும் தேவையாக இருக்கிறது. வராது வந்த மாமணி போல இந்த விஷயத்தில் ரஜினியை எல்லோரும் மிகச் சிறப்பாகப் பங்கு பிரித்துக் கொண்டனர். சோடா கம்பெனி நடத்துகிற அந்த அண்ணனும்கூட அடக்கம் அதில்.
மாறாக, திரைக்கு வெளியே அவர் இந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் இருந்து விலகியே அலைகிறார். அப்படியான சித்திரம்தான் அழுத்தமாக எனக்குள் எழவும் செய்கிறது. உண்மையில் அடியாழத்தில் அவர் அப்படி இருக்கவும் கூடும். அகத்தில் இல்லாதது புறத்தில் வந்து விழவே செய்யாது.
ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், ஒரு காலகட்டத்திய மகிழ்ச்சி என்கிற கருதுகோளாக அவர் இருந்தார் என்கிற வகையில் உள்ளார்ந்த மகிழ்ச்சியை அவர் உணரலாம். அவர் தேடுவது அவரது காலுக்கு அடியில்தான் கிடக்கிறது. நிறைவான வாழ்வு என்கிற குற்றவுணர்வுகள் ஏதுமில்லாத, உள்ளார்ந்த உணர்தலே அது.
அவர் திரையில் வரைந்து காட்டியதைப் போல உண்மையிலும், எல்லா வளங்களையும் உதறி மக்களுக்காக நல்லது செய்ய முன் வரும் காவிய மகிழ்ச்சி என்கிற பாவனையையும் உள்ளடக்கியதே அது. மகிழ்ச்சி என அவர் முகம் மலர்ந்து தயங்காமல் இனி அவர் உரக்கச் சொல்லவும் செய்யலாம். மகிழ்ச்சி என்கிற காலம் அவரைத் தேர்ந்தெடுத்து வழிநடத்தியது. முழுக்கவும் அவர் அதற்குச் சொந்தக்காரர்தான்!
 இந்தியாடுடே ரஜினி சிறப்பிதழில் வெளியான கட்டுரை
.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....