முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகிழ்ச்சியின் விலை என்ன?






சரவணன் சந்திரன்

-மகிழ்ச்சி என்பது இங்கே விலை போகிற சமாச்சாரம் என்று யூகித்திருக்கிருக்கிறோமா? ஆழமாக விவாதிப்பதென்றால், மகிழ்ச்சி என்று இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிற உணர்வு கைதேர்ந்த கைகளால் உருக்கி உருவாக்கப்பட்ட சரக்கு. கவலைகளை மறந்து எந்நேரமும் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருப்பது. காடுகளில், மலைகளில், ஒரு கோப்பைத் தேநீரில் என சந்தை வழிநடத்தும் இடங்களிலான தேடல் அது.
தொண்ணூறுகள் என்றில்லை. எண்பதுகளின் இறுதியில் இருந்தே இந்த மகிழ்ச்சி வணிகம் மெல்ல இந்தியாவிற்குள் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. வறுமையின் நிறம் சிவப்பு என சாக்கடைக்குள் அமிழ்ந்து கிடக்கிற ஆப்பிளை எடுத்து கழிவிரக்கத்தோடு உண்ணும் தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் சந்தைச் சரக்கது. எதுவெல்லாம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்? என்னென்ன பரிந்துரைகள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன? உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமெனில் மகிழ்ச்சியாய் மலர்ந்து சிரிப்பதற்கு ஒரு கோல்கெட் தேவையாக இருக்கிறது.
மெல்ல பின்னோக்கி யோசித்தால், உலகமயமாக்கல் என்கிற கரங்கள் எந்நேரமும் மகிழ்ச்சி என்னும் கருதுகோளை மக்கள் மத்தியில் எப்படி மெல்ல விதைத்தார்கள் என்பது விளங்க வரும். இதனடிப்படையில் உலகச் சந்தைகளில் இருக்கிற அத்தனை துறைகளையும் உள்ளொடுக்கி விவாதித்து விட முடியும்.
சினிமா துறையைப் பொறுத்தவரை, நடிகர் ரஜினியை இந்த ஒட்டுமொத்த போக்கின் மிகச் சிறந்த மகிழ்ச்சிச் சந்தைச் சரக்கென்பேன். சமீபத்தில் அவர் ஒரு படத்தில் அழுத்தம் திருத்தமாக மகிழ்ச்சி என்று உச்சரிப்பார். ஆனால் அப்போது அவருடைய முகபாவங்கள் மகிழ்ச்சி என்பதற்கு நேரதிரான பாவனையைக் காட்டிக் கொண்டிருக்கும். கண்களில் நிரந்தரமாய் மகிழ்ச்சிக்கு எதிரான ஒரு தடத்தை உருவாக்கிக் கொண்டே அவர் பல ஆண்டுகளாகச் சுற்றி வருகிறார். தன் காலுக்கடியில் இருப்பதை விடுத்து மகிழ்ச்சியை அவர் வேறொரு பக்கம் தேடிக் கொண்டிருக்கிறாரோ?
ரஜினி கொண்டு வந்த மகிழ்ச்சி என்பது வெறும் திரை சார்ந்தது மட்டுமல்ல. திரைக்கு வெளியேயும் அவர் மகிழ்ச்சியின் தூதுவரே. எங்களது வீட்டிற்குப் பக்கத்தில் அண்ணன் ஒருத்தர் சோடா கம்பெனி நடத்தி வந்தார். ரஜினி படம் ரிலீஸாகும் போதெல்லாம் அவர் குஷியாகி விடுவார். வேறொன்றுமில்லை? அன்றைக்கு அதிக சோடாக்கள் விற்றிருக்கும். வீட்டிற்கு கைநிறைய பூந்திப் பொட்டலங்களோடும் பகோடா பொட்டலங்களோடும் திரும்பி வருவார். அவரது அன்றைய தின மகிழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்திருக்கிறேன்.
அவருக்கும் கஷ்டங்கள் வரும். அப்போதெல்லாம் தலைக்கு மேலே கையை உயர்த்தி, “எல்லாம் மேல இருக்கிற ஆண்டவன் பாத்துப்பான்” என்பார் மெல்ல நகைத்தபடி. துக்கத்தை மீறி நம்பிக்கையைக் காட்டும் ஒரு மகிழ்ச்சியான முறுவல் இருக்கும் அதில். இந்த உணர்வைத்தான் ரஜினி ஆழமாக அவருடைய ரசிகர்களிடம் ஊன்றியிருக்கிறார்.
ரஜினி ரசிகர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். கூட்டம் கூட்டமாக அவர்கள் கிளம்பி தெப்பக்குளத்தில், அவர் படம் வெற்றி பெற வேண்டி, படிச் சோறு சாப்பிடுவார்கள். இதென்ன காட்டுமிராண்டித்தனம் என்று எனக்கே தோன்றியிருக்கிறது. ஆனால் அவர்கள் பலரை நெருங்கிப் பார்க்கையில், வாழ்க்கையில் போராடி வெல்கிற முன்னைப்பில் இருப்பவர்கள் அல்லது போராடத் துவங்குபவர்களாக இருந்தார்கள்.
ரஜினி அடிக்கடி, குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதெல்லாம் மிகையாகப் படுகிறது இப்போது. ஆனால் அந்த வார்த்தையை அவருடைய ரசிகர்கள் மிகச் சரியாகவே எடுத்துக் கொள்வதாகப் படுகிறது. கீழே இருந்து உழைத்து மேலேறி தான தர்மம் செய்வது மகிழ்ச்சி என்பது போல பலவிதமான கருதுகோள்களை அவர்களிடையே விதைத்திருக்கிறார்.
நிஜ வாழ்வில் இப்போது அவர் எப்படியென்று தெரிய, நெருங்கிப் பழகியதில்லை. ஒருவகையில் அவருடைய வாழ்வே இப்படிக் கிளம்பி மேலே வந்ததுதானே? ஆனால் திரையின் வழி அதைத்தான் முன்னிறுத்துகிறார். சைக்கிளில் வீடு வீடாகப் போய் பால் போடுகிறவராக வாழ்க்கையைத் துவக்கி வாழ்வின் உச்சியை எட்டிப் பிடித்தவராகத்தான் அவர் பெரும்பாலும் தன்னை முன்னிறுத்துகிறார். அல்லது பெரும் பணத்தை உதறிவிட்டு சாமானியனாக தன் கூட்டிற்குத் திரும்பும் காவிய வகையிலான மகிழ்ச்சியை முன்னிறுத்துகிறார்.
தொடந்து உன்னிப்பாகக் கவனித்தால், ரஜினியைப் பற்றி சோகமயமான சித்திரங்கள் எதுவுமே சமீப காலத்தில் தட்டுப்படவில்லை. அவர் மலர்ந்த முகத்தோடு வாயைக் கோணி சிரிக்கிற தோற்றமே எப்போதும் முந்திக் கொண்டு சித்திரமாக உருவாகி வருகிறது.
அவர் மருத்துவமனையில் இருந்து ஆடியோ வெளியிட்ட போதுகூட கஷ்டப்பட்டு அவரது வழக்கமான ஹாஹாஹா என்கிற சிரிப்புச் சத்தத்தைத்தான் வலியை மீறி வலுக்கட்டாயமாக வெளிப்படுத்தினார். ஆனால் மூச்சிரைப்புகளுக்கு நடுவே அந்த மகிழ்ச்சிச் சிரிப்பை அவருடைய ரசிகர்கள் மிகச் சரியாக இனம் கண்டு கொண்டனர்.
ஆரம்ப கால படங்களில் அவர் எவ்வளவோ பரீட்சார்த்தமாக முயற்சித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் பிற்காலங்களில் தரையிலிருந்து கிளம்பி மேலெழும் பருந்து என்கிற சித்திரமே அவரிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டார்.
அதைத்தான் எல்லா நேரங்களிலும் விதைத்து அறுவடையும் செய்கிறார். சாதாரண பேச்சின் போதுகூட இந்தச் சித்திரத்தைத்தான் வரைந்தும் காட்டுகிறார். “நான் யானை இல்லை குதிரை. விழுந்தாலும் படக்குன்னு எந்திரிச்சிருவேன்” என்பதுகூட அப்படியான ஒன்றுதான். திரைக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு மாதிரியான வெற்றிக்கான அறைகூவல்களை விடுத்துக் கொண்டே இருப்பது.
தோல்வியிலிருந்து வெற்றிக்கு என்பதுதான் இந்த மகிழ்ச்சிச் சந்தையின் ஒற்றை வரி முழக்கம். ஒன்று திரட்டப்பட்ட மகிழ்ச்சியின் வழியாக போராட உந்து சக்தியளிப்பது. இதை வெறும் வணிக சூத்திரம் என்று மட்டுமே சுருக்கி விடக்கூடாது. உண்மையில் இலட்சக்கணக்கான மக்களின் அடியாழத்து வேட்கையும் இதுதான்.
இதைத்தான் ரஜினி மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். திரைக்கு உள்ளே இதைத்தான் வெவ்வேறு கச்சாப் பொருட்களின் வழியாக சந்தைப்படுத்துகிறார். அப்படித் தன்னைச் சந்தைப்படுத்துகிற இடத்திலேயும் வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் மகிழ்ச்சியான வெள்ளைப் பன்றிக் குட்டிகள் அவரது காலைச் சுற்றிக் கொண்டுமிருக்கின்றன.
திரைக்கு வெளியேயும்கூட பிரிவில்லாத குடும்பம், மகிழ்ச்சியான குழந்தைகள், மகிழ்ச்சி என்கிற கருதுகோளை நம்பிக்கைகளோடு சேர்த்துத் தூக்கிப் பிடிக்கும் கடவுள், ஜோதிடம் என அவருக்கு இருக்கும் வாழ்க்கை ஏதோவொரு வகையில் ரசிகர்களை அவர் பால் ஈர்க்கிறது. ஒட்டுமொத்தமாக அக வாழ்வு மற்றும் புறவாழ்வில் வெற்றி பெற்ற நபர் என்கிற மையத்தை உருவாக்கித் தருகிறது.
அவர் காலத்திய நடிகர்கள் பலரிடம் இல்லாத தனிப் பண்பு அது. திரைக்கு வெளியேயும் அவர் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியாகத்தான் நடக்கிறார். இது ஒரு காலகட்டத்தின் தேவை. வேலையில்லாத் திண்டாட்டங்கள் ஒழிந்து, கொட்டிக்கிடக்கிற வேலை வாய்ப்புகளிடையே முன்னேறி சந்தையை விரிவுபடுத்துகிற முயற்சிகளுக்கு முட்டுக் கொடுக்கிற நற்செயலிது.
நாற்பது வயதைத் தொட்டவர்களை மட்டுமல்லாமல், இப்போது முப்பது வயதைத் தொடுகிறவர்களையும் அதனால்தான் அவர் ஈர்க்கிறார். மகிழ்ச்சியைக் கடை விரிக்கும் சந்தையின் தேவையும் அதுதான்.
சந்தை அதனால்தான் அவரை முன்னிறுத்திக் கொண்டாட்டங்களை நடத்துகிறது. மல்டிபிளக்ஸ்களில் மட்டுமல்லாமல் விமானத்தில்கூட அவரது கொடி பறக்கிறது. சந்தைக்கு எல்லோரையுமே ஒரே நேரத்தில் கவர்ந்திழுக்கக்கூடிய ஒரு முகம் எப்போதும் தேவையாக இருக்கிறது. வராது வந்த மாமணி போல இந்த விஷயத்தில் ரஜினியை எல்லோரும் மிகச் சிறப்பாகப் பங்கு பிரித்துக் கொண்டனர். சோடா கம்பெனி நடத்துகிற அந்த அண்ணனும்கூட அடக்கம் அதில்.
மாறாக, திரைக்கு வெளியே அவர் இந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் இருந்து விலகியே அலைகிறார். அப்படியான சித்திரம்தான் அழுத்தமாக எனக்குள் எழவும் செய்கிறது. உண்மையில் அடியாழத்தில் அவர் அப்படி இருக்கவும் கூடும். அகத்தில் இல்லாதது புறத்தில் வந்து விழவே செய்யாது.
ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், ஒரு காலகட்டத்திய மகிழ்ச்சி என்கிற கருதுகோளாக அவர் இருந்தார் என்கிற வகையில் உள்ளார்ந்த மகிழ்ச்சியை அவர் உணரலாம். அவர் தேடுவது அவரது காலுக்கு அடியில்தான் கிடக்கிறது. நிறைவான வாழ்வு என்கிற குற்றவுணர்வுகள் ஏதுமில்லாத, உள்ளார்ந்த உணர்தலே அது.
அவர் திரையில் வரைந்து காட்டியதைப் போல உண்மையிலும், எல்லா வளங்களையும் உதறி மக்களுக்காக நல்லது செய்ய முன் வரும் காவிய மகிழ்ச்சி என்கிற பாவனையையும் உள்ளடக்கியதே அது. மகிழ்ச்சி என அவர் முகம் மலர்ந்து தயங்காமல் இனி அவர் உரக்கச் சொல்லவும் செய்யலாம். மகிழ்ச்சி என்கிற காலம் அவரைத் தேர்ந்தெடுத்து வழிநடத்தியது. முழுக்கவும் அவர் அதற்குச் சொந்தக்காரர்தான்!
 இந்தியாடுடே ரஜினி சிறப்பிதழில் வெளியான கட்டுரை
.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...