முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜொலிக்கிற சின்னத்திரைத் துருவ நட்சத்திரங்கள்

நாம் எப்போதும் சினிமாவைப் பற்றிப் பேச மட்டுமே பழக்குவிக்கப் பட்டிருக்கிறோம். மூக்கணாங்கயிறு கட்டப்பட்ட தொழுவத்து மாடோ அல்லது வண்டி மாடோ எப்படி கயிறு கட்டப்பட்ட அடுத்த நொடியிலிருந்து தன்னுடைய பாதையை இயந்திர கதியில் கண்ணுக்குள் கொண்டு வருமோ, அப்படி சினிமா மட்டுமே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. வெள்ளித்திரை அது என்பதை மறுப்பதற்கில்லை. ஜொலிக்கிற துருவ நட்சதிரங்கள் அங்கேதான் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதேசமயம் வெள்ளித் திரையையும் சார்ந்து வாழும் சின்னத் திரையில் அவ்வப்போது என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்துவிட்டு வருவது தப்பில்லைதானே? வெறும் நான்கு வரிச் செய்திகளாகவே முடித்து விட்டால் எப்படி? அமெரிக்கத் தேர்தலில் எல்லோரும் ஹிலாரிதான் வெற்றி பெறுவார் எனக் கணித்தார்கள். மனிதர்களைத் தாண்டி சில குரங்குகளும் தவளைகளும்கூட கணித்தன. ஆனால் மாறாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ட்ரம்ப்பின் வெற்றியைப் போலவே சின்னத்திரையிலும் ஒரு வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சத்தமில்லாத சாதனை அது. அதேசமயம் அந்தச் சாதனைக்குப் பின்னால் உள்ள மாறியிருக்கிற சில அம்சங்கள் குறித்தும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
சின்னத் திரையைப் பொறுத்தவரை சூரியன்தான் எல்லாமும். மற்ற நட்சத்திரக் கூட்டங்களெல்லாம் எப்போதும் சூரியனை அடியொற்றித்தான் தங்கள் பாதையை வகுத்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளாக சன் தொலைக்காட்சி தவிர்த்த மற்ற சேனல்கள் எப்படியாவது இந்த பெருவெளிச்சத்திற்கு நடுவே தாங்களும் வெளிச்சத்திற்கு வந்துவிட மாட்டோமோ எனப் போராடிக் கொண்டிருக்கின்றன. சன் தொலைக் காட்சியை குறைந்தது இன்னும் பத்தாண்டுகளுக்கு இந்த வணிகத்தில் நெருங்கக்கூட முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை என்பதை இவை ஏற்கனவே புரிந்து கொண்டு விட்டன. ரஜினியை எப்படி நெருங்க முடியாதோ அது போல என்று புரிந்து கொள்ளுங்கள். இரண்டாவது இடத்திற்குத்தான் மற்ற சேனல்கள் போட்டியிடுகின்றன. கடந்த மாதம் முதல் தமிழ் பொழுதுபோக்குத் தொலைக்காட்சி ஓட்டத்தில் இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த விஜய் டீவியைப் பின்னுக்குத் தள்ளி ஜீ தமிழ் அந்த இடத்திற்கு வந்திருக்கிறது. இதைத்தான் நான் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு நிகரானதாகக் கருதுகிறேன். ட்ரம்ப்பின் வெற்றியை முழு மனதோடு கொண்டாட முடியாத மாதிரி, சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகுகிற மாதிரி, கொஞ்சம் காமெடியாக அணுகுகிற மாதிரி, ஜீ தமிழின் வெற்றியையும் இந்தச் சந்தையில் எல்லோரும் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறார்கள்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் ஜீ தமிழில் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பித்த காலத்தில், சில பத்திரிகைகளில் அந்தத் தொலைக்காட்சியைக் கிண்டலடிப்பார்கள். டப்பிங் படங்களை ஒளிபரப்பும் ஒரு தொலைக் காட்சியாகத்தான் அது அறியப்பட்டிருந்தது. ஜீ தமிழில் வேலை பார்க்கிறேன் என்று வீட்டாரிடம் சொல்லக்கூட கூச்சமாக இருக்கும். இந்த ஐந்தாண்டுகளில் அப்படியென்ன மாற்றம் வந்துவிட்டது? ஜீ தமிழை டாப்டென், அஞ்சறைப் பெட்டி, சொல்வதெல்லாம் உண்மை ஆகிய மூன்று நிகழ்ச்சிகள் சென்னை தவிர்த்த பிற இடத்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தன. எனக்குத் தெரிந்து ஒரு நிகழ்ச்சிக்கு 0.05 ரேட்டிங் வாங்கிக் கொண்டிருந்த ஜீ தமிழ் இப்போது தடாலடியாக இரண்டாம் இடத்திற்கு எப்படி நகர்ந்து வந்தது? ஜீ தமிழ் புதிய படங்கள் வாங்குவது உண்மைதான். ஆனால் அப்படியொன்றும் அது ரஜினி கமல் நடித்த படங்களையெல்லாம் வாங்கவில்லை. ஏன் இன்னமும் அது விஜய், அஜீத், தனுஷ் ரேஞ்சிற்குக்கூட தன்னை நகர்த்திக் கொள்ளவில்லை.
அதில் வருகிற நிகழ்ச்சிகள் எல்லாமும் ஏதாவதொன்றின் காப்பிதான் என்று சொல்பவர்களும் உண்டு. ஜீ தமிழின் பிரத்தேயக் கண்டுபிடிப்பு நிகழ்ச்சி என்று எதையும் சொல்ல முடியாது. ஏன் சொல்வதெல்லாம் உண்மைகூட விஜய் டீவியில் ஒளிபரப்பான கதையல்ல நிஜம் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுச் செய்ததுதான். ஒரு மூன்று மணி நேரம் அமர்ந்து பார்த்தால், விஜய் டீவியின் பி டீம் என்று உடனடியாகச் சொல்லி விடலாம். ஆனாலும் அது எப்படி இரண்டாவது இடத்திற்கு தன்னை நகர்த்திக் கொண்டது என்கிற கேள்வியில்தான் இந்தத் துறையில் ஏற்பட்டிருக்கிற சமீபத்திய மாற்றங்கள் அடங்கியிருக்கின்றன.

இதற்கு முன்பு அமெரிக்க நிறுவனமான ஏசி நீல்சன் கம்பெனியின் துணை நிறுவனமொன்று இந்தியாவில் டீ.ஆர்.பி எனப்படும் டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட் கணக்கீடுகளை எடுத்துக் கொண்டிருந்தது. விளம்பரதாரர்கள், சேனல்காரர்கள் எல்லாரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் புதன் கிழமை இரவு முழுக்கத் தூங்கவே மாட்டார்கள்.
காலையில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டுதான் அலுவலகத்திற்கு வருவார்கள். கோலாகலமாக அந்த வாரத்திற்கான ரேட்டிங் வெளியாகும். வழக்கம் போலத்தான் என்று உயரதிகாரிகள், டாக்டர்கள் கழற்றுகிற மாதிரி கண்ணாடியைக் கழற்றுவார்கள். ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். நம்பர் இப்படி வந்து விழுந்திருக்கும். சன் டீவி – 1300, விஜய் டீவி – 286, பாலிமர் டீவி - 111, ஜீ டீவி – 87, ராஜ் டீவி – 64, ஜெயா டீவி – 53. இந்த எண்ணில் கூடக் குறைச்சல் இருக்கலாம். ஆனால் ட்ரெண்ட் இப்படித்தான் இருக்கும். எல்லோரும் முட்டி மோதிப் பார்த்தார்கள். பருப்பு எதுவும் வேகவில்லை. இரண்டாம் இடத்தில் விஜய் டீவி நங்கூரம் இட்டு முன்னூறிலிருந்து நானூறு என்று ஊசலாடிக் கொண்டிருந்தது. மூன்றாம் இடத்தில் இன்று இருப்பவர், நாளை இல்லை என்கிற நிலைமையில்தான் ஓடிக் கொண்டிருந்தார்கள். இந்த எண் விளையாட்டில் எல்லோருக்கும் திருப்தி இல்லை. வழக்கம் போல சூரியன் மட்டும் சிரித்துக் கொண்டது.
என்ன காரணம் என்று ஆராய்ந்தார்கள். உதாரணமாக டி.ஆர்.பி ரேட்டிங் எடுப்பதற்கான பாக்ஸ்கள் மொத்தமே எழுநூற்றுச் சொச்சம் மட்டுமே இருந்தன. அதில் பாதிக்குப் பாதி சென்னையில் இருந்தன. மீதி பெட்டிகள் இரண்டாம் நிலை நகரங்களில் இருந்தன. அதாவது பத்து இலட்சத்திற்கு மேல் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே இருந்தன. ஒரு இலட்சம் மக்கள் அல்லது அதற்குக் குறைவான அளவில் மக்கள் வசிக்கும் நகரங்களில் இல்லை. கிராமப்புறங்களில் இல்லவே இல்லை. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாதையிலேயே மாடுகளும் தங்களுக்குப் போடப்பட்டிருக்கிற மூக்கணாங் கயிற்றோடு சுற்றிக் கொண்டிருந்தன. ஏசி நீல்சன் நிறுவனத்தை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தைக்கூட நாடினார்கள். இந்த விஷயத்தில் நிறைய வம்பு வழக்குகளும் இருக்கின்றன. மாற்று என்ன என்று எல்லோரும் சேர்ந்து யோசித்த போதுதான் பார்க் Broadcast Audience Research Coucil (BARC) என்ற ஒரு அமைப்பைத் தோற்றுவித்தார்கள்.
இப்போது பார்க்கின் வழியாகத்தான் இந்த எண் விளையாட்டுக்கள் நிகழ்த்தப்படுகின்றன. இதை விளம்பரதாரர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே இருந்த முறைக்கும் இந்த முறைக்கும் என்ன வித்தியாசம்? ஏற்கனவே இருந்ததில் 41 சதவீத ஒதுக்கீடு (weightage) சென்னைக்கு மட்டுமே இருந்தது. இப்போது சென்னையின் ஒதுக்கீடு 13 சதவீதம். தமிழக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றே முக்கால் கோடி மக்கள் வசிக்கும் கிராமப்புறங்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் இருந்த நிலை மாறியிருக்கிறது. எழுநூறு கணக்கிடும் பாக்ஸ்கள் பழைய முறையில் இருந்தன. இப்போது தோராயமாக இரண்டாயிரம் பாக்ஸ்களுக்கு மேல் இருப்பதாகச் சொல்கிறார்கள். எதிர்காலத்தில் இவை பத்தாயிரம் பாக்ஸ்களாகக்கூட உயர்த்தப்படலாம் என இந்தத் துறை சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். பார்க் தமிழகத்தின் எல்லா கிராமப் பகுதிகளையும் ஆய்விற்கு உட்படுத்துகிறது என்கிறார்கள்.
பெருநகரங்கள் மட்டுமல்லாமல் சிறு நகரங்களும் கணக்கீட்டிற்குள் வந்திருக்கின்றன. கணக்கீடுகளை எடுப்பதற்கு கண்ணுக்கே தெரியாத வாட்டர் மார்க் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள். இதோடு டிஜிட்டல் தொலைக்காட்சிப் புரட்சியும் சேர்ந்து கொள்ள சந்தையில் இப்போது வெவ்வேறு மாற்றங்கள் நிகழ ஆரம்பித்திருக்கின்றன.

தன் சந்தையைத் தீர்மானிப்பதில் சிறு நகரத்தானுக்கும் கிராமத்தானுக்கும் இப்போது பங்கு கிடைத்துவிட்டது. அதனால்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி இரண்டாம் இடத்தைத் தட்டிப் பறித்திருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே அது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் வழியாகக் கிராமப் புறங்களில் வலுவாக தன்னுடைய அடித்தளத்தை அமைத்திருந்தது. அதை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது. வழக்கம் போல முதலிடம் சூரியனுக்குத்தான். ஏற்ற இறக்கங்கள் கொண்ட இந்தச் சந்தையின் வணிக மதிப்பீடுகள் ஒருபக்கம் இருந்தாலும், நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் கோணத்தில் இப்போது நிறைய மாற்றங்கள் வரத் துவங்கியிருக்கின்றன. இப்போது தீடீரென விஜய் டீவி நடந்தது என்ன? என்கிற க்ரைம் சார்ந்த நிகழ்ச்சியைத் தூசு தட்டி மறுபடியும் கையில் எடுத்திருப்பதை இந்தக் கோணத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை ஒதுக்கப்பட்டிருந்த கிராமத்தான் கையிலும் பாயிண்டிங் ரிமோட்டைக் கொடுத்த வகையில் இதை ஒரு புரட்சியாகத்தான் பார்க்க முடிகிறது.
கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் உள்ள பார்வையாளர்களை உள்ளடக்கியும் இப்போது நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களும் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் பொழுதுபோக்குத் தொலைக்காட்சிச் சேவைகளை மட்டுமே குறிப்பிடுகிறேன். செய்தித் தொலைக்காட்சிகளைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவை மிகச் சின்ன அளவிலேயே இந்தச் சந்தையில் தங்களுக்கான இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. சரியான உதாரணத்தைச் சொல்ல வேண்டுமெனில், வாரத்தில் ஐந்து நாட்களில் ஐந்து மணி நேரம் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி 50 ஜி.ஆர்.பிகளை வாங்குகிறது. 24 மணி நேரமும் ஏழுநாட்களும் ஓடும் செய்தித் தொலைக்காட்சிகள் இப்போதுதான் முப்பதைத் தொட ஆரம்பித்திருக்கின்றன.
சன் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை எப்போதும் நகரங்களைப் போலவே கிராமங்களிலும் தன்னுடைய பலத்தை ஏற்கனவே உறுதி செய்திருக்கிறது. இன்னமும் கிராமப்புறங்களில், ‘எங்கள் வீட்டில் சன் டீவி கனெக்ஷன் வந்துவிட்டது’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை தன்னுடைய கணவன் குறித்துப் புகார் சொன்ன மனைவி ஒருத்தர் இப்படிச் சொன்னார். “எங்க வீட்டுக்காரரு சன் டீவி வயற எடுத்துக் கழுத்த நெறிச்சாரு”.
இந்தச் சந்தை இப்போது டிஜிட்டல் தரத்தில் துல்லியமாகியிருக்கிறது. சுதந்திரமான போட்டியும் இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு சன் தொலைக்காட்சி பெரும்பலத்தோடு இருந்ததைப் போல இப்போது இல்லை. கோட்டையைக் கரையான்கள் மெல்ல அரிக்க ஆரம்பித்திருக்கின்றன. சன் தொலைக்காட்சி மனதளவில் சோர்ந்து போயிருக்கிற மாதிரித்தான் தெரிகிறது. ஏனெனில் விஜய் டீவி அப்போது கதையல்ல நிஜம் நிகழ்ச்சியைக் கொண்டு ஹிட் அடித்த போது, சன் டீவி அதைக் கண்டு கொள்ளக்கூட இல்லை. ஆனால் காலத்தின் மாற்றமாய் இப்போது அது சொல்வதெல்லாம் உண்மைக்குப் போட்டியாக நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவை வைத்து நிஜங்கள் என இறங்கி வந்திருக்கிறது. இந்த எண் விளையாட்டில் தமிழகத்தின் எல்லா இடங்களும் உள்ளடக்கப்பட்டு விட்டதால், இப்போது கலவையான நிகழ்ச்சிகளைத் தந்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு எல்லா தொலைகாட்சி நிறுவனங்களும் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதைத்தான் இந்த உதாரணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இந்தத் திறந்த சந்தையில் எல்லோருக்குமான இடமும் இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இன்று ஜீ தமிழ் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது. நாளை பாலிமர் வரலாம். நாளை மறுநாள் ராஜ் டீவி வரலாம். அடுத்த வாரம் ஜெயா டீவிகூட வீறுகொண்டு எழுந்து வரலாம். ஆனாலும் சன் தொலைக்காட்சியின் கோட்டையை அரிக்க முடியுமே தவிர, இப்போதைக்கு சாய்க்க முடியாது. அதுதான் நிதர்சனமான உண்மை. ஒரு சந்தையில் அடுத்தவனை அதிகமான விலை வைத்து விற்கச் சொல்லும் விநோதமும் தமிழ்த் தொலைக்காட்சிச் சந்தையில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக பத்து நொடிகளுக்கு சன் டீவி நாற்பதாயிரம் ரூபாய் வரை விளம்பரக் கட்டணமாக வசூலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கடுத்த இடங்களில் இருப்பவர்கள் இருபதாயிரம், பத்தாயிரம், ஆறாயிரம் என விளம்பரக் கட்டணத்தை நிர்ணயம் செய்வார்கள். இப்போது தயாரிப்புச் செலவு என்பது எல்லோருக்கும் ஒன்றாகி விட்டது. சன் டீவி தன்னுடைய கட்டணத்தை எழுபதாயிரம் என்று நிர்ணயித்தால், மற்ற போட்டியாளர்களும் தங்களுடைய கட்டணத்தை உயர்த்த முடியும்.
ஆனால் சன் தொலைக்காட்சி எனக்குக் கிடைக்கும் இலாபம் போதும் என சொல்லாமல் சொல்கிறது. மற்றவர்கள் புலம்புகிறார்கள். போட்டியாளனின் விளம்பரக் கட்டணத்தை அதிகரிக்கச் சொல்லும் பரிதாப நிலையில்தான் வர்த்தக ரீதியில் மற்ற சேனல்கள் இன்னமும் இருக்கின்றன.
அதேசமயம் தங்களுக்கான பிரத்யேகமான சந்தையை நோக்கியும் மற்ற சேனல்கள் இப்போது திட்டமிட்டு நகரத் துவங்கியிருக்கின்றன. அதை இந்தச் சமீபத்திய பார்க் புரட்சி உறுதி செய்திருக்கிறது. இனியும் யாரையும் நீங்கள் கேலி பேசமுடியாது. டப்பிங் சேனல் என ஒருகாலத்தில் கிண்டலடிக்கப் பட்ட ஜீ தமிழ் இப்போது ‘சொல்லு மாமா ஜீ’ என தன்னை மேல் நோக்கி இந்தப் போட்டியில் நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஒருவகையில் மற்ற சேனல்களுக்கு அது நம்பிக்கையையும் தந்திருக்கிறது. தமிழ்த் தொலைக்காட்சி சந்தையில் மாற்றங்களுக்கான நேரம் கனிந்து வந்திருக்கிறது. மற்ற சிறிய நட்சத்திரங்களும் பார்வைக்குத் தட்டுப்பட ஆரம்பித்திருக்கின்றன
.
கட்டுரையாளர் சரவணண் சந்திரன் பத்திரிக்கையாளர் ,எழுத்தாளர்
இவரது "ஐந்து முதலைகளின் கதை" ,"ரோலக்ஸ் வாட்ச்"."வெண்ணிற ஆடை" நாவல்கள் பரவாலான வரவேற்பை பெற்றன‌ .

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.. சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனு...