முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல்
இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம்.

உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள் நன்றாக இருந்ததும் தெரிய வந்தது.

ஆனால் பிரா அணியும் வழக்கம் கொண்ட பெண்களுக்கு இதில் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு சீக்கிரமே மார்புகள் தொங்கிப் போகக் கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது என அந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக, மார்பகங்களுக்கு பிரா அவசியமே இல்லை என்று இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பிரான்சின் பெஸன்கான் நகரில் உள்ள பிரான்ச் கோம்டே பல்கலைக்கழக பேராசிரியர் ஜீன் டெனிஸ் ரூயிலன் கூறியுள்ளார். இதைத்தான் அவர்களுக்கு ஆய்வு நிரூபித்துள்ளது.

இந்த பிரா அணியிறதால ஒரே நன்மை என்னென்னா முன்னழகை நல்ல எடுப்பா காட்டி, மத்தவங்களோட குறிப்பா ஆண்களோட கவனத்தை கவரலாம். மத்தப்படி அதால எந்த யூசும் இல்லன்னு தான் சொல்லுவேன். “பிரா போடுறதால மார்பகங்கள் தளர்ந்து போகாம இருக்கும். அது தான் பார்க்க அழகா இருக்கும். தொங்கிப் போன முலைகள் அசிங்கம். அதனால பிரா அணிஞ்சு தான் ஆவணும்.” இப்டி எல்லாம் இருக்கிற சமூக பார்வையும், கட்டாயமும் ஆணாதிக்க சிந்தனையா தான் எனக்கு தோணும்.

என்னோட ஒரு உடல் பாகம் எப்படியிருக்கணும், அது எப்படி மத்தவங்க கண்ணுக்கு தெரியணும்னு தீர்மானிக்க வேண்டியது நான் மட்டுமா தான் இருக்கணும். “எனக்கு புடிச்சா போடுவேன். இல்லன்னா கழட்டி வீசிட்டு திரிவேன” அப்டீங்கிறது தான் சுதந்திரம். மார்பகம் பெரிசா தெரியிறது தான் கவர்ச்சி. அப்டியிருந்தா தான் ஆண்களுக்கு நம்மள புடிக்கும். அப்டியில்லாத பெண்களுக்கு தன்னம்பிக்கை குறைவா இருக்கும் என்கிறதெல்லாம் சமூக பொதுப்புத்தியில் நிதர்சனம் தான்னாலும் என்னைப்பொறுத்த அளவில் பெரும் முட்டாள்தனம்.

இது ஒருவகையில் ஆணாதிக்க அடக்குமுறை. குழந்தைக்கு பால் குடுக்கிறதுக்காக படைக்கப்பட்ட ஒரு உடல் உறுப்பு என்ன சைஸ்ல இருந்தா என்ன? என்னைப்பொறுத்த அளவில், ஆணுடைய கண்களுக்கு அழகாய் தெரிவதற்காய் உருவாக்கப்பட்ட பிரா என்னும் உள்ளாடை ஒரு அட்டர் வேஸ்ட். பெண்களை போகப் பொருளாக கவர்ச்சி பொருளாக மட்டும் காட்ட பயன்படும் ஆடை அது. சினிமாவுக்காக தயாரிக்கப்பட்ட ஆடையை எவ்வளவு எளிதாக அடிப்படை உடையாக மாற்றி விட்டார்கள். அதை நம்பி அணியும் முட்டாள் பெண்ணினம் திருந்தணும். Say No to Bras.

பிரா போடுறதுல உள்ள மெயின் பிரச்சனை என்னன்னா ஃப்ரீயா இருக்க முடியாது. எப்பயுமே யாரோ நெஞ்ச இறுக்கி பிடிச்சிட்டிருக்கிற மாதிரி ஒரு உணர்வு இருக்கும். பிரா அணிந்திருக்கும்போது எனக்கு மூச்சு விடக் கூட சிரமம் இருக்கும். ஆனால் பிரா அணியாத நிலையில் நான் இயல்பாக மூச்சு விடமுடிகிறது. இதனாலேயே இப்போது எனக்கு பிரா மீதான மோகம் அறவே இல்லை என்பேன். உண்மையை சொன்னால் பிரா மீது ஒரு வெறுப்புணர்வே தோன்றிவிட்டது.

அதுமட்டுமில்ல, பிரா கொக்கியை கையை பின்னோக்கி வளைத்து மாட்டுறது எல்லாம் எம்புட்டு பெரிய இம்சை தெரியுமா? இங்க பெரும்பான்மையான பிராக்கள்ள 3 ஹூக் வச்சிருக்கானுக. இதுல ராத்திரி 2 மணி வரைக்கும் பேஸ்புக்ல கடலையை போட்டுட்டு, காலங்காத்தால 6.30 மணிக்கு அலாரம் அடிச்சது கூட தெரியாம அசந்து தூங்கிட்டு அப்புறம் ஏதோ ஒரு உள்ளுணர்வில 7.30க்கு அலறியடிச்சு எந்திரிச்சி, 8 மணிக்கு ட்யூட்டி ஸ்டார்ட் பண்ணணுமேன்னு அவசர அவசரமா பிராவ போடுறப்ப கீழ் கொக்கிய மேலயும் மேல் கொக்கிய கீழயும் மாத்தி மாட்டிகிட்டு, மிடில் கொக்கிய மாட்ட முடியாம நாம படுற அவஸ்தையிருக்கே, வார்த்தைல விவரிக்க முடியாது.

சில சமயம் இப்டியொரு யோகா போஸ்ல பிரா கொக்கி மாட்டுறப்ப முதுகு வேற பிடிச்சிகிட்டு வலி பின்னிரும். அப்புறம் “ஏப்பா ஏப்பா முதுக கொஞ்சம் தடவி வுடுவியளா?” அப்டீன்னு கெஞ்சி கூத்தாடிகிட்டு வேற திரியணும். வீக் எண்ட்ல பிரியாணி செஞ்சு தந்தா தான் தடவி உடுவேன்னு பிகு பண்ணுறவர தாஜா பண்ணி கொண்டு வரதுக்குள்ள நமக்கு தாவு தீந்திரும்.

இந்த பிரச்சனையால டெய்லி ஆபீஸுக்கு லேட்டா போயி மேனேஜர்கிட்ட திட்டு வாங்குறோம். அது மட்டுமில்லாம சரியான நேரத்துல பணிகள் முடிக்கப்படாததால் பொருளாதார இழப்பும் ஏற்படுது. இதுக்கு வேலைக்கு போறப்ப பிராவே போட வேணாம்னு சொல்லிட்டா எம்புட்டு ஈசியா இருக்கும். இதெல்லாம் uniform policy and procedures எழுதுற இந்த ஆம்பள இலிமினாட்டிகளுக்கு எங்க புரிய போவுது. அவனுவளுக்கு என்ன மூளை(முலை)யா இருக்கு நம்ம கஷ்டம் புரியிறதுக்கு.

அதுக்காக நீ பிரா போடுறதே இல்லியான்னெல்லாம் வந்து கேட்டுகிட்டு நிக்காத. எனக்கு தோணுறமாதிரி நடப்பேன். அம்புட்டு தான். இன்னிக்கு ஆஃபீஸுக்கு பிரா அணிய தேவையில்லைன்னு சொல்லிட்டதால நிறையபேர் ஃப்ரீயா திரிஞ்சாங்க.

ஆங் நானா? சொல்லமாட்டேன். ஏன்னா எங்கூட்டுகாரரு மானம் போயிரிச்சின்னு குய்யா முய்யான்னு கத்துவாரு. அப்பறம் டேக் பண்ணி பதிவு போட்டு திட்டுவாரு. அதெல்லாம் எனக்கு தேவையா? நான் புத்திசாலி! 💪💪💪

லுலு தேவ ஜம்லா
13/10/2017
6:45 pm
மீள் பதிவு

பிகு:- இது போன வருஷம் இதே நாள்ள என்னோட பழைய ஐடியில எழுதின பதிவு... இன்னிக்கு எழுதியிருந்தா இது இன்னும் உக்கிரமா இருந்திருக்கும், அதாவது நீ இந்த படத்துல பிரா போடலியான்னு யாராச்சும் கேட்டா “இல்ல போடல, இப்ப என்னான்னுற?” அப்டீன்னு டைரக்ட் பதிலா இருந்திருக்கும்னு சொல்ல வரேன்
அன்பில்

தேவ ஜம்லா
13/10/2018
2:40 pm😁😁😁
 — with Lulu Deva Jamla G andதேவ ஜம்லா.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.. சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனு...