முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிரோட்ட பாதையில் ஒரு தமிழ் சினிமா!


monday, march 31, 2014

     அம்பிஆர்கைவ்ஸ் கார்பன் காப்பி..           

குக்கூ …. திரைவிமர்சனம்.


குக்கூ …. திரைவிமர்சனம்.
Kukkoo… Tamil Film Review
ராஜீமுருகன், முன்னாள் ஆனந்தவிகடன் நிரூபர், புதிய படத்திற்கு இயக்குநராகி படைத்திருப்பதுதான் குக்கூ… நிரூபராக இருந்த காலத்தில், பலதரப்பட்ட மக்களை சந்தித்ததாகவும், அதில் இந்த காதல் கதை நாயகனையும், நாயகியையும் சந்தித்ததாகவும், அவரே திரையில் தோன்றி கதையுடன் அப்வெப்பொழுது வந்து சொல்கிறார்.

எலக்ட்டிரிக் டிரெய்னில் பொருள்கள் விற்கும் கண்ணில்லாத கதாநாயகன், அவருடைய கூட்டாளிகள் (பெண்களும் உண்டு) கண்ணில்லாத சுதந்திரக்கொடி (அதாங்க கதாநாயகி பேரு)யை ஒரு சில சந்தர்ப்பங்களில் வழக்கமான திரைப்படங்கள் போல, முதலில் சண்டை பின்னர், கொஞ்சல் பார்முலாவில் காதலிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாக, அதனை நெய் ஊற்றி வளர்க்கும் விதமாக சுற்றத்தாரும் நடந்துகொள்ள கண்ணில்லாத இருவர் காதலும் திருஷ்டி சுந்றி போடும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. இடையில், காதலியின் அண்ணன் நண்பன் காதலியின் மீது ஆசைப்பட்டு 3 லட்சம் செலவு செய்து, ஆசிரியர் பணி வாங்க உதவிசெய்தும், திருமணம் முடிக்கவும் ஏற்பாடாகிறது. இதனால், காதலர்களை சேரவிடாமல் துரத்தியடிக்க, விதிவசத்தால் அருகருகே இருக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டும், பல விபத்துக்களை சந்தித்துத்தும் இருவரும் இணைய முடியாத சூழ்நிலைகள்… பார்வையாளர்கள் நமக்கோ என்ன விதிடா இதுன்னு? நொந்துகொள்ள வேண்டி வருகிறது. காதலர்கள் இணைய 3 லட்சம் திருப்பி கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், கண்ணில்லாதவர்கள் அனைவரும் உதவ, கண்னுள்ளவர்கள் உதவமாலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லவர் மாதிரி நடித்து, பணத்தை ஆட்டைய போட்டு, நாயகனையும் நடுரோட்டில் விட்டுச்செல்வதையும், ஒருசிலர் மனசாட்சி இல்லாமல் செல்வதும், அதில் ஒருவர் மிகவும் உதவி செய்து நாயகனைக் காப்பாற்றுவதும்.. அருமையான திரைக்கதை அமைப்பு. பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடுகிறார்கள். முடிவில், காதலர்கள் இருவரும் வேறு வேறு திசையில் இருக்க, ஆனந்த விகடன் உதவியுடன், நாயகி மும்மையில் இருக்கிறார் எனத் தெரியவர, நாயகன் ரயிலில் சென்று நாயகியை கண்டுபிடிக்கிறாரா என்பதே கிளைமாக்ஸ்.


குக்கூ… ஒரு கவிதை…. சவுண்ட் எபக்ட்தான் படத்தின் சிறப்பான அம்சம். இளையராஜாவின் பாடல்களை சரியாக பயன்படுத்தியிருப்பது… ஆடல்பாடல் கலைஞர்களையும் கதாபாத்திரங்களாக உலாவவிட்டுருப்பது, வெறித்தனமான ரசிகனின் ரசிக்கத்தன்மையை வெளிப்படுத்துவது. கண்ணில்லாதவர்களின் உலகை கூடுமானவரை, உறவினர்களின் சுயநலத்தை, நல்இதயங்களின் செயல்களையும். கண்ணில்லாதவருக்கு பாடம் கற்பிப்பவரையே காதலானக தவறாக நினைத்து வாழும் கதாநாயகி, எதார்த்ததை புரிந்து கொள்வதும், பழைய துணிகளை அணிந்துகொள்ள கொடுத்ததை ஏற்காமல் தன்னுடைய கர்சீப்பை அதனில் வைத்துவிட்டு வருவது 100 சதவீதம் கௌரமாக வாழ கண் அவசியம் இல்லை என்பதை நிரூபிப்பது என… அனைத்து வகையிலும் குக்கூ.. ஒரு கவிதை. சல்யூட் ராஜீமுருகன் சார்.
t3
கண்களுடன் இந்த உலகை எதிர்கொள்ளும் நாம், கண்ணில்லாமலே நம்மிடையே வாழ்ந்து வரும் எண்ணற்றவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவிய அனைத்து தொழில்நுப்ட கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.             


கருப்பு திரையில் சப்தங்களுடன்...  நாம் யாரை பற்றிய படத்தை பார்க்க போகின்றோம்.. 
 என்பதை சப்தங்கள் மூலம் உணர வைக்கின்றார். இயக்குனர் ..
கதைக்கு ராஜூ முருகன் எங்கேயும் அலையில... தான் பத்திரிக்கையில வேலை செய்யும் போது கட்டுரைக்கு ரெடி பண்ணும் போது  சந்திச்ச விஷயத்தை அவர் அசல்ட்டா   திரைக்கதையாக்கி இருக்கின்றார்... இப்படி திரைக்கதையாக்கியதில் ஒரு பெரிய  நல்ல விஷயம்.. செஞ்சோற்று கடனையும் தீர்த்து விட்டார்... விகடன் கண்ணன் எல்லாம் என்னதான் மாய்ந்து மாய்ந்து லட்சம் எடிஷனை ரெடி பண்ணாலும் அவர் வேலை பார்க்கற ஆனந்த விகடன்லேயே ஒரு போட்டோ போட்டுக்க சாத்தியமே இல்ல... பட் அவரை செல்லுலாய்டில்  சிறை பிடிக்க வைத்ததில் இருந்து , அவருடைய திரையுலக குரு  லிங்குசாமியை நடிக்க வைப்பதில் இருந்து செஞ்சோற்றுகடனை   முதல் படத்திலேயே தன்  திரைக்கதை மூலம் தீர்த்துக்கொண்டார்... அந்த ஒரு டச்சிங்காக  வெல்டன் அன்டு ஒன்டர்.



சட்டுன்னு தினேஷ் என் மனசுல பச்சக்குன்னு ஓட்டிக்கனது எங்க தெரியுமா? கண்ணை மேல பார்க்கற நடிப்புல இல்லை... கல்யாண  வீட்டுல  இளையராஜா பாட்டை பாடும் போது,ஒரு மாதிரி தலையை ஆட்டி கைய ஒரு மாதிரி மடக்கனாம் பாருங்க...சான்சே இல்லை..


ஒரு டிவி பேட்டியில  அட்டக்கத்தி தினேஷ் பேட்டிக்கொடுக்கறதுக்கு பக்கத்துல  இருந்தவர் மீது சாய்ந்துக்கிட்டு தெனாவெட்டா பேட்டி கொடுத்த  போது சட்டுன்னு ஒரு எரிச்சல்.... பட்.... படம் பார்க்கும் போது அது ஆர்வக்கோளாறு என்றும் இன்னும் சின்ன பையானக இருக்கின்றார் என்றும் உணர முடிந்தது.   சான்சே இல்லை.. அசத்திட்டான்யா மனுஷன்... கண்ணு தெரியாம கமல் மட்டும்தான் திரையுலகில் டெடிகேஷனாக நடிக்க முடியும் என்று கடந்த தலைமுறையின் பிம்பத்தை சுக்கு நூறாக்கி இருக்கின்றான் குக்கூ படத்தின் ஒவ்வோரு பிரேமிலேயும்.


அந்த பொண்ணு மாளவிகா... மலையாள இறக்கு மதி.. ஏற்கனேவே மலையாளத்துல வழக்கு எண்  படத்துல   அசத்திய பொண்ணு... இயக்குனர் பாலாஜி சக்திவேல் ரெக்மன்ட் செய்ய ராஜு முருகன் அதை மோல்ட் பண்ணட்டார்... என்ன நடிப்பு.. 


தங்கள் வேதனையை மறைத்து  கொள்ள சமுகத்தில் தங்களையும் ஒரு ஆளாக  இருக்க வேண்டும் என்றுதான் நிறைய நக்கல் கலாய்ப்பில் மாற்று திறனாளில்கள்  ஈடுபடுவார்கள்... அவர்கள் முகத்தில் அடித்தால் போல  நேரில் சொல்லாவிட்டாலும்...
ங்கோத்தா நான் சொல்லை...  நொண்டிக்கு   நூத்தி எட்டு  குறும்புடா.... ஷீலா மாரு எலுமிச்சை பழ  சைசுக்கு இருக்குன்னு எப்படி நக்கல் உடறான் பார்த்திய அந்த நொண்டிப் பு...........!


ஆனால் இவர்கள் பப்பாளியில் இருந்து  தேங்காய் வரை பேசி இருப்பார்கள்... ஆனால்    மாற்றிதிறனாளி நண்பர்களில்  அப்படி பேசினால் தாங்காது.. காரணம்,.. உன்னை விட நான்  இந்த கடவுளால் நன்றாக படைக்க பட்டு இருக்கின்றேன்... நீ பேச அருகதை இல்லை.. எனக்கு மட்டுமே பேச அருகதை  உள்ளது.. எனக்கு மட்டும்தான் கொம்பு இருக்கின்றது  என்று கங்கனம் கட்டிக்கிட்டு கொண்டு  இருப்பார்கள்.. உணர்வு  என்பது யாவருக்கும் ஒன்றுதான் என்பதை உணராத மூடர்கள்... அல்லது அப்படியே வளர்க்கப்பட்ட பொது புத்தியும் அதற்கு காரணமாக இருக்கலாம்.


  மாற்றி திறனாளிகளின் காதல்... இரண்டு பேருக்குமே இருக்கும் உணர்வு ஏக்கங்கள் விரசம் இன்றி செல்லுலாய்டில்  சிறை பிடித்து இருக்கும் ராஜு முருகனுக்கு நன்றிகள்.
முக்கியமா அந்த   பொண்ணை எந்த இடத்திலேயும்.. தப்பா ஒரு பிரேம் கூட வைக்கலை..   ஷேர்  ஆட்டோ  ஜிலாக்கி  கொடி உடம்பை ரசிக்கின்றான் என்று  ஒரு ஷாட் வைத்து இருந்தாள் யாரும்  எதுவும் கேட்டு விட முடியாது... ஆனால் ஒரு கேக் வாங்கி பாதி கடிச்சிட்டு  அதை கொடுத்து அவளை தின்ன வைக்க முயற்சிப்பது போல  எடுத்த காட்சி கிளாஸ்..


 டெர்மினேட்டர்ன்னு நினைக்கறேன்...  சிறையில் இருக்கும் நாயகியை செக்  பண்ணும் போது காமத்தை வெளிப்படுத்த நாயகி கன்னத்தை அப்படி  நக்குவான்.... அவ்வளவுதான்... அது போல ஒரு காட்சி அமைப்பு...
 படத்துல  ரொம்ப ரசிச்ச விஷயம் சந்திரபாபு  இசைக்குழு அப்படியே துருத்திக்கிட்டு இருக்காம  இயல்பாக  இருந்தது...


வினோத் ஓட்டலுக்கு  அழைச்சிக்கிட்டு போய் கொடிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறது... பழைய துணியை அயர்ன் பண்ணி பேக்ல கொடுக்கும் போதும்,.  சாப்பிடும் போது அதை  எடுத்து  செல்போன்ல  போட்டு லைக் வாங்கறதை பப்ளிசிட்டி மைன்ட்ல செய்ற அந்த ஷாட்டும் அதுக்கு கொடி வெதும்புற  வெதும்பல் இருக்கே.. சான்சே இல்லை...
  படத்துல வரும் சந்திரபாபு கேரக்டர் சான்சே  இல்லை.... அந்த டுருப்பு.. அஜித்து விஜய், எம்ஜிஆர்... வாழ்ந்து இருக்கின்றார்கள்.. அதை விட எம்ஜிஆர் பிம்பத்துக்கு லைட்டிங் கம்மியான இடத்துல நிக்க வச்சி... அப்படியே முன்னாடி  நடந்து வரும்  போது புல் லைட்டுக்கு வந்து அதுக்கு ஒரு சின்ன ஆர் ஆர் போட்டு....  அப்படியே செயினை கழட்டி போடுறான் பாரு மனுஷன்... அதுதான் எம்ஜிஆர்  நிழலா  இருந்தாலும் புத்தி வள்ளல்தன்மைன்னு சொல்லறதும் அதை காட்சி படுத்திய விதமும் அருமை.. ஸ்டேஜ்ல வேஷம் கட்டிக்கிட்டு இருக்கும் போது... மூனு லட்சம் பணம் கேட்டு எம்ஜிஆர் வேஷத்தோடு  வந்து  செயினை கழட்டி கொடுத்து இருந்தா கூட இவ்வளவு ரசனையா  நெகிழ வைக்கறாப்பபோல இருந்து  இருக்காது.  கிளிஷேவா இருந்து இருக்கும் ... அப்படி கிளிஷேவா எழுதி இருந்தா... இப்படி கொண்டாடி அந்த ஷாட்டை எழுத போறது இல்லை....


டிரெயின்ல  கண்ணு தெரியாதவங்க... விக்கற  பொருள் எங்க வாங்கறாங்க....  எங்க கடனுக்கு கொடுப்பாங்க... எல்லாத்திலேயும்.. அவ்வளவு டீடெயில்.... மூர்மார்கெட்டின் இன்னோரு  பக்கத்தை புட்டு புட்டு வச்சி இருக்காப்புல... முக்கியமா கடை வச்சி இருக்கும் பார்வையற்றவர்... என்ன தொள்ளாயிரம்தான் இருக்கு... நல்லா எண்ணி பாருங்க..1100 கொடுத்து இருக்கேன் என்று கலாய்க்க... ஆயிரம் என்று ஒத்துக்கொள்ளும்  காட்சிகள்.. அவருக்கு  பிறந்த  குழந்தையை கொடி  தடவி  பார்த்து   குழந்தையின் லுல்லு அருகே கை வரும் போது  காட்டும்  எக்ஸ்பிரஷன் மற்றும் பாடிலாங்வேஜ்.... அருமை.


ரிடிங் கிளாஸ்ல டிச்சர் சொல்லிக்கொடுக்கறது ரம்பமாவும் அவ பேசறது மழை சாரல் போலவும் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுத்து அழகாக்கும் காட்சிகள்...

தடவிதான் உணர வேண்டும்... அம்மா மொகம் பார்க்கவங்க பாருங்க என்று வெட்டியான் சொல்ல.... அம்மா முகத்தை  தடவும் போது நமக்கு கண்ணிர் எட்டிப்பார்க்கின்றது.

செக்யூரிட்டி அண்ணன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது இல்லை என்று சொல்ல..  எங்க அண்ணி வச்ச கருவாட்டு கொழ்ம்பு எனக்கு தெரியாதா என்று சொல்லும் காட்சி நெகிழ்ச்சி. அதே போல அந்த அண்ணி முஞ்சி எங்ககேயோ  பார்த்த பழக்கப்பட்ட   முகமா இருக்கேன்னு நினைச்சேன்...  கடைசியல அது தங்க மீன் டீச்சர்.
 திணேஷ் கூட வரும் அந்த பார்வையற்ற இளைஞர் இளங்கோ... மார்க்  போடும்  நண்பர் முகம்  நிமிர்ந்து பார்க்காம ஆஸ்திரேலியா  சட்ட  ஒழுங்கை பற்றி  கவலை படும் அம்பி என்று அநியாயத்துக்கு போகின்ற போக்கில் தட்டி விட்டு   அசத்துகின்றார் முருகன்.


அரசியல்  நையாண்டிகள்  அருமை


ஜெனிவா மாநாடு என்று சொல்லும் போது  அரசியல் பேசாதே என்று மறுக்கும் சந்திரபாபு...
முக்கியமாக எனக்கு ஓம் நமச்சிவாயம் கேரக்டர் ரொம்ப  புடிச்சி இருந்துச்சி... அது சட்டுன்னு  டேய்   அண்ணணுக்கு எல்லாம் வேல்யூ இல்லை... தம்பிக்குதான் வேல்யூ அப்டேட்டா இருங்கடான்னு   போகிற போக்கில் கலாய்த்து  வாருகின்றார்.
இரட்டை அர்த்தங்களை  பளிசின்னு சொல்லாம... ஹலோ..  என்ன பிங்க்... ஸ்டாபெர்ரி வாசனையெல்லாமா வருது...?

செக்யூரிட்டி அண்ணன்  நானும்  குடும்பத்துக்கு உழைக்கின்றேன் என்று சொல்ல அண்ணிக்காரி வயிற்றை தடவும் காட்சிகள் கவிதை.

 கேமரா கோணத்துக்கு வேணா  எலக்ட்ரிக் டிரெயின்ல புட்  அடித்து காதலை பில் பண்ணுவது போல ஷாட்டு  எடுத்து இருக்காங்க...  ஆனா எதாவது எலக்ட்ரிக்கல் போஸ்ட்டுல அடிச்சி  திகேஷ் பிராணனை விட்டுடப்பபோறான்னு மனசு அடிச்சிக்குது பாருங்க.. அது தான் அந்த கேரக்டர்கள் நம்ம மனசுல நல்லா உட்காந்துடுச்சின்னு சொல்லும் காட்சிகள்.


  பாட்டு சான்சே இல்லை... நிலவே.... சோறுட்டுதேன்னு  சொல்லும் போது வயிறு குழச்சிடுச்சி. எல்லாம் சாங்கும் அருமை... ஒளிப்பதிவில் டாப் ஆங்கிள் ஷாட்.. என்ஜின் டிரைவர் கேபின் ஷாட்.. முக்கியமா மழை பேயும்  போது காலியா இருக்கும் பிளாட்பாரம்.. என்று  நிறைய கவிதையான காட்சிகள்.

இளையாராஜா  பாட்டு கேட்கும் போது எல்லாம்  நெகிழ வைக்குது..25 வருஷம் அந்த ஆளு இசை  மட்டும் கேட்டு வளர்ந்த மனசு.. அதான் காரணம்.


படத்தின் குறை  அதுவும் ராஜூ முருகன்தான்..

ராஜு  படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் போது அருமை.. ஆனால்   இடைவேளையில் தினேஷை  கூட்டம் மொத்தி எடுக்கும் போது ஆட்டோகிராப் சேரன் போல   நிற்பதும்...  சதர்ன் ரயில்வே லோக்கல் டிரெயின் டிக்கெட் கட்டிடத்துக்கு மேல தினேஷ்  இடம் கதை கேட்கும் காட்சிகளில்  கஞ்சி போட்ட சட்டை போல விறைப்பாய்  உட்கார்ந்த கொண்டு   கேட்பது.... லிங்குசாமி சாங் சிக்வென்ஸ் எடுத்துக்கொண்டு இருக்கும் போது.. போன் வர விகடன் வாசகர் அந்த பொண்ணை பார்த்தேன் என்று சொல்லும் போது என்னமாதிரி எக்ஸ்பிரஷன் கொடுத்து இருக்க வேண்டும்? ம்ஹூம்.... கொஞ்சம் நடிக்க பாஸ் என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.. சில  லாஜிக்  மீறல்கள்... இது சினிமா தானே.. அப்புறம்  லாஜிக் மீறல் இல்லைன்னே???
சான்சே இல்லை... படம் ஒன்டர்.... அனைவரும்  குடும்பதோடு தியேட்டரில் போய் அவசியம் பாருங்கள்...

==========
படத்தின் டிரைலர்..




============
படக்குழுவினர்  விபரம்


Directed by Raju Murugan
Starring Dinesh
Malavika
Music by Santhosh Narayanan
Cinematography P. K. Varma
Editing by Shanmugam Velusamy
Studio Fox Star Studios
The Next Big Film Productions
Release dates
March 21, 2014[1]
Country India
Language Tamil

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...