முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரலாறு முக்கியம் நீதியரசரே


maxresdefault
கல்விக்கூடங்களில், அலுவலகங்களில், அங்கிங்கெனாதபடி எங்கும், வந்தே மாதரம் பாடப்படவேண்டும் என மாண்புமிகு நீதியரசர் முரளிதரனய்யா உத்திரவிட்டுவிட்டார்.
பெரிய மனது வைத்து, நீதியரசர் நியாயமான காரணங்களுக்காக பாடாமலும் இருக்கலாம் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் எது நியாயமான காரணம் என்பதை இன்னொரு வழக்கு தொடுத்துத்தான் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஏற்கெனவே அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வந்தேமாதரம் பாடப்படவேண்டும் எனக் கோரும் மனு ஒன்று உச்சநீதி மன்றத்தில் தாக்கலாகி, , மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.  அடுத்த மாதம் அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
யோகியார் உ.பி முதல்வரான பின் அங்கே தேசபக்தி பீறிட்டெழுகிறதா, மீரட் மேயர், வந்தே மாதரம் பாட மறுத்த முஸ்லீம் உறுப்பினர்கள் சிலருக்கு  மாநகராட்சி மன்ற நடவடிக்கைகளில் பங்கு பெற அனுமதி மறுக்க, முதல்வர் ஆதித்யநாத், ஆஹா, இதென்ன கொடுமை என அங்கலாய்த்திருக்கிறார். பாட மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்குப் போகலாம் எனச் சொல்லவில்லை நல்லவேளையாக.
ஆனால் உத்தராகண்ட் கல்வி அமைச்சர் ஏறத்தாழ அப்படித்தான் சொல்லியிருக்கிறார். இந்தப் பின்னணியிலேயே உச்ச நீதி மன்றத்தில் வழக்கு. இப்போது தமிழகமும் நாட்டுப் பற்றில் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது.
இதெல்லாம் போக திரையரங்குகளில் தேசியகீதம், ஜன கண மனஇசைக்கப்படவேண்டுமென்ற உச்சநீதிமன்ற உத்திரவால் விபரீத விளைவுகளை நாடு சந்தித்து வருவது நமக்குத் தெரியும். எழுந்து நிற்காதவர்களுக்கு தேசபக்த குண்டர்கள் தர்ம அடி கொடுக்கின்றனர். உடல் ஊனமுற்றவர் ஒருவரும் சிக்கியிருக்கிறார்.
பக்தாஸ், இப்டியெல்லாம் அடிச்சிடப்டாது எனும் ரீதியில், ஊனமுற்றோர் எழுந்து நிற்கவேண்டாமென்றும், திரைப்படத்திலேயே தேசிய கீதம் பாடப்படுமானால், அப்போதும் எழுந்து நிற்கவேண்டாமென்றும் உச்சநீதி மன்றம் கூறியது.
ஜனகனமணதான் நாட்டின் அதிகாரபூர்வ தேசிய கீதம் (National Anthem), வந்தேமாதரத்தின் முதல் இரு கண்ணிகள் தேசியப் பாடல் (National Song).
துர்கா தேவி என விதந்தோதப்படும் அன்னை இந்திராவின் ஆட்சியில்தான் தேசத்திற்கு அவமரியாதை இழைப்பதைத் தடுக்கும் சட்டம் (Prevention of Insults to National Honour Act, 1971) என ஒன்று இயற்றப்பட்டது. அதாவது அவசர நிலைக்கு முன்பே.
அச் சட்டத்தின் கீழ்தான் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்குமானால் உரிய மரியாதை செலுத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும் எனக் கோரி  வழக்கு தொடரப்பட்டது. கேட்டது ஒலிக்குமானால் உரிய மரியாதை என்பது மட்டுமே. கனம் உச்ச நீதிமன்றமோ திரைப்படம் துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும், அப்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும், எனக் கூற, ஒரே களேபரம்.
அது இடைக்கால உத்திரவே, அதனை எதிர்த்தே மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான் இப்போது வந்தே மாதர உத்திரவு.
இது நாள்தோறும் இந்தியா வானொலியில் நாம் கேட்கும் பாடல்.

பாடலின் முழு வடிவம்:
வந்தே மாதரம்
சுஜலாம் சுபலாம் மலயஜ சீதளாம்
சஸ்யஷ்யாமளாம் மாதரம்

ஷுப்ரஜ்யோத்ஸ்னா புலகிதயாமினீம்
புல்லகுசுமித த்ருமதள ஷோபினீம்
சுஹாசினீம் சுமதுர பாஷினீம்
சுகதாம் வரதாம் மாதரம்
சப்தகோடி காந்த காலகால நிநாட கராலே
த்விசப்த கோடி புஜேர் த்ருதகர  கர்வாலே
அபல கேன மா ஏதா பலே
பகுபல் தாரிணீம் நமாமி தாரிணீம்
ரிபுடலவாரிணீம் மாதரம்
வந்தே மாதரம்

துமீ வித்யா துமீ தர்மா
துமீ ஹ்ரிதீ துமீ மர்ம
தவம் ஹி ப்ராணாஹ் சரீரே

பஹுதே துமீ மா ஷக்தி
ஹ்ருதயே துமீ மா பக்தி
தோமாராயிப்ரதிமா கரி
மந்திரே மந்திரே

த்வம் ஹி துர்கா தசாப்ரஹார நாதாரிணீ
கமலா கமலதள விஹாரிணீ
வாணீ வித்யாயினீ நமாமி த்வம்

நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
சுஜலாம் சுபலாம் மாதரம்
ஷ்யாமளாம் சரளாம் சுஷ்மிதாம் பூஷிதாம்
தாரணீம் பரணீம் மாதரம்

முண்டாசு கவியின் மொழி பெயர்ப்பு:
நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
கூடு திண்மை குறைந்தனை என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)
அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே)
திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவோம்! (வந்தே)

பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1875ல் முதலில் இரண்டு கண்ணி அல்லது பத்திகளை எழுதுகிறார். கவிதையில் மிகக் கடினமான வங்க/வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பதாக அவரது மகளும் நண்பர்களும் விமர்சிக்கின்றனர். வேண்டுமென்றே நான் அப்படி எழுதவில்லை, தன்னெழுச்சியாக கற்பனையில் உதித்ததுதான் என்கிறார் பங்கிம் சந்திரர்.
ஏழாண்டுகள் கழித்து அவர் வெளியிட்ட ஆனந்த மடம் நாவலில், மேலும் சில கண்ணிகளுடன், வந்தே மாதரம் பாடல் இடம் பெறுகிறது. அதுவரை அக்கவிதை வெளியிடப்படவில்லை.
பிறகு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்துப் பாட, வந்தேமாதரம் இசைத் தட்டாக வெளியாகி, பிரபலமானது.
1905ல் வங்காளம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டபோது கிளர்ச்சியாளர்கள் தெருவெங்கும் வந்தே மாதரம் என முழங்கினர்.
வ உ சி கப்பல் வாங்கியது அந்தக் கட்டம்தான் எனவேயே கப்பலோட்டிய தமிழனில் ’வந்தேமாதரம் என்போம்’ எனும் பாரதி பாடல் ஒலிக்கிறது.

வந்தே மாதரத்தில் லஷ்மி, துர்கை, சரஸ்வதி எல்லாம் வருகின்றனர், அது முஸ்லீம்களின் ஏக இறை நோக்கிற்கு எதிரானது. பழமைவாதத்தில் ஊறிய முஸ்லீம்கள் இதனை எதிர்க்காமல் விடுவார்களா, எனக் கேட்கின்றனர் வலதுசாரி சிந்தனையாளர்கள். ஜின்னா வேறு ஆட்சேபித்திருக்கிறார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்னொருபுறம் முரளிதரனாரின் நாட்டுப் பற்றை வளர்க்கும் நேற்றைய தீர்ப்பிற்குப் பின், நமது தௌஹீத் போன்ற அமைப்புக்கள், ஆ ஊ எனக்  குதிக்கின்றனவா, சரி இந்த முஸ்லீம்கள் இப்படித்தான், என எண்ணத் தோன்றும்.
ஆனால் பிரச்சினை லஷ்மி வகையறாக்களால் மட்டும் இல்லை. சரியாகச் சொல்லவேண்டுமானால், பாடல் இடம் பெறும் ஆனந்தமடமே அனைத்து விமர்சனங்களுக்கும் காரணமாக அமைந்தது.
வங்கத்தை உலுக்கிய 1770 பஞ்சத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் அந்த நாவல் முஸ்லீம்களை மோசமாக சித்தரிக்கிறது. பஞ்சத்தின் போது சன்னியாசிகளுக்கும் பிரிட்டிஷாருக்கும் கடும் மோதல் மூள்கிறது – சன்னியாசிகளுக்கு அப்போதெல்லாம் யாத்திரைகளின் போது கிஸ்தி வசூலிக்கும் உரிமை இருந்தது. பஞ்சம், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கட்டவேண்டிய வரி, இந்நிலையில் விவசாயிகள் சாமியார்களுக்கு எங்கிருந்து கொடுப்பது? நாங்கள் என்ன செய்வோம் என மன்றாடுகின்றனர். கொதிக்கின்றனர் சன்னியாசிகள்.  கஜானாக்களை சூறையாடுகின்றனர். கிழக்கிந்தியக் கம்பெனி சிப்பாய்களுடன் நிகழும் மோதல்களில்  நூற்றுக்கணக்கில் இந்த சாமியார்கள் கொல்லப்பட்டனர்.
இந்து, முஸ்லீம் சாமியார்கள் இருவருமே இந்த புரட்சியில் பங்கேற்றிருந்தனர். ஆனால் ஆனந்த மடமோ அதை ஒரு இந்து சன்னியாசிகளின் புரட்சி, விவசாயிகளைக் கொடுமைப் படுத்தியது நவாப்கள்தான், பிரிட்டிஷாருக்கும் அப்போது நடந்த படுகொலைகளுக்கும் சம்பந்தமில்லை, என்று கூறுகிறது. குறிப்பாக முஸ்லீம்களை வங்க மக்களின் எதிரிகளாகக் காட்டுகிறது. முஸ்லீம்களை வீழ்த்துவோம், மசூதிகளைத் தகர்ப்போம்,  கவலை வேண்டாம் இந்துக்களே நம்மைக் காப்பாற்ற பிரிட்டிஷார் வந்துவிட்டனர் என்றெல்லாம் சொல்கிறது.
இன்னொன்றையும் நாம் நோக்கலாம். பாரதமாதா அன்னியனுக்கு அடிமைப்படமுடியுமா என்று தன்னை மறந்து உணர்ச்சி ததும்ப பாடிய பங்கிம் சந்திரரும் நீண்ட காலம் துணை ஆட்சியராகப் பணியாற்றினார். இறுதிவரை விசுவாசமாகவும் இருந்திருக்கிறார். காலனீய அரசு அவருக்கு விருதெல்லாம் வழங்கி கௌரவித்திருக்கிறது.
அப்படிப்பட்ட  ஒரு நபர் முஸ்லீம்கள் மீது விஷத்தைக் கக்கி எழுதியுள்ள நாவலில் இடம்பெறும் ஒரு பாடல், பாரதமாதாவை இந்துக் கடவுளாகவும் சித்தரிக்கும் ஒரு பாடல், அதனை நாட்டு விடுதலை முழக்கம் என்றால்  முஸ்லீம்கள் ஆத்திரப்படுவதில் வியப்பென்ன?
1905 கட்டத்தில் காங்கிரஸ் மாநாடுகளில் வந்தே மாதரம் பாடப்படத் தொடங்கியது. ஆனால் முஸ்லீம்களிடமிருந்து எதிர்ப்பெழ, முதல் கண்ணியோடு நிறுத்திக்கொண்டனர்.
1937ல் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரசும் வந்தேமாதரம் வானொலியில் ஒலிபரப்பக்கூடாதென தடைவிதித்தது.
இன்றளவும் அகில இந்திய வானொலியிலும் சரி நாடாளுமன்ற அவைகளிலும் சரி, முதல் இரண்டு கண்ணிகள் மட்டுமே பாடப்படுகின்றன.
மன்மோகன் சிங் அரசு 2006ல் வந்தே மாதரம் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட நூறாவது ஆண்டு எனக் கூறி அதைக் கொண்டாடியது. உடனே சில முஸ்லீம் தலைவர்கள் வழக்கம்போல எதிர்க்க, பிரச்சினை மீண்டும் தீப்பிடித்துக்கொண்டது.
வந்தே மாதரம் மட்டுமல்ல ஜனகன மண கூட நாடாளுமன்றத்தில் இசைக்கப் படத்துவங்கியதே 1992ல்தான், அதுவும் பாஜக தலைவர்களில் ஒருவரும் இன்றைய உ.பி ஆளுநருமான வி பி நாயக்கின் வற்புறுத்தலின் பேரில்தான். பிரணாப் முகர்ஜி கூட அவருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார். தேச, மத வெறிக்கு தூபம் போடுகிறது பாரதீய ஜனதா, ஆஹா சபாஷ் சபாஷ் என்கிறது காங்கிரஸ். இந்நிலையில் முஸ்லீம்கள் மத்தியில் தௌஹீத் போன்ற இயக்கங்கள் வளர்வது இயற்கைதானே.
இஸ்லாத்தைத் தழுவிய நம் ஏ ஆர் ரெஹ்மானும் நமக்கொரு வந்தே மாதரம் அளித்திருக்கிறார் என்பதையும் நாம் மறக்கலாகாது
ஆனால் சமூக விரோதிகளான சங்கிகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வந்தேமாதரத்தைப் பயன்படுத்தி, முஸ்லீம்களுக்கெதிராக துவேஷ ப் பிரச்சாரம் செய்கின்றனர்.
சரி அவர்கள் ஆட்சி இப்போது.  முன்னெப்போதையும்விட அவர்கள் வலிமையுடன் திகழ்கின்றனர். 2019ல் கூட மீண்டும் மோடிதான் எனக் கணிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்னுமொரு தமிழர், அதுவும் தலித், சதாசிவத்தாரின் பாதையில் பயணித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகலாம். ஆகட்டுமே. மகிழ்ச்சிதான்.
ஆனாலும் எதற்கும் இருக்கட்டுமே என்றுதான் இக்கட்டுரை. ஏதாவது ஒரு கட்டத்தில் இதுவும் தேவைப்படக்கூடுமே.
(பி.கு. தன் செலவில் கட்டுரையாளர் நீதியரசர் முரளிதரன் அவர்களுக்கு ஆனந்த மடம் புதினத்தின் தமிழ் அல்லது ஆங்கில வடிவை அனுப்பிவைக்கத் தயார்.)
த.நா.கோபாலன்.
T N Gopalan
T.N. Gopalan is a senior journalist based in Chennai

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

லாஞ்சரி(Lingerie)

சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட்  ஜெபராஜ்  ஒரு லாஞ்சரி ( lingerie )பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில் என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து , கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா ? என்றார் சித்ரா பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா ? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் Linge என்றால் ' துவைக்கக்கூடியது ' என்று பொருள். ”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது. 20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்...

ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!

தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’ சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது??  இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள  ‘தோசா ப்ளாசா ’, உலகளவில் 1 500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல  கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் ...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

Flitring - டெக்ஸ்ட் - ஆடியோ - விடியோ செக்ஸ் -

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன. 5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது. லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்...