முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரலாறு முக்கியம் நீதியரசரே


maxresdefault
கல்விக்கூடங்களில், அலுவலகங்களில், அங்கிங்கெனாதபடி எங்கும், வந்தே மாதரம் பாடப்படவேண்டும் என மாண்புமிகு நீதியரசர் முரளிதரனய்யா உத்திரவிட்டுவிட்டார்.
பெரிய மனது வைத்து, நீதியரசர் நியாயமான காரணங்களுக்காக பாடாமலும் இருக்கலாம் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் எது நியாயமான காரணம் என்பதை இன்னொரு வழக்கு தொடுத்துத்தான் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஏற்கெனவே அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வந்தேமாதரம் பாடப்படவேண்டும் எனக் கோரும் மனு ஒன்று உச்சநீதி மன்றத்தில் தாக்கலாகி, , மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.  அடுத்த மாதம் அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
யோகியார் உ.பி முதல்வரான பின் அங்கே தேசபக்தி பீறிட்டெழுகிறதா, மீரட் மேயர், வந்தே மாதரம் பாட மறுத்த முஸ்லீம் உறுப்பினர்கள் சிலருக்கு  மாநகராட்சி மன்ற நடவடிக்கைகளில் பங்கு பெற அனுமதி மறுக்க, முதல்வர் ஆதித்யநாத், ஆஹா, இதென்ன கொடுமை என அங்கலாய்த்திருக்கிறார். பாட மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்குப் போகலாம் எனச் சொல்லவில்லை நல்லவேளையாக.
ஆனால் உத்தராகண்ட் கல்வி அமைச்சர் ஏறத்தாழ அப்படித்தான் சொல்லியிருக்கிறார். இந்தப் பின்னணியிலேயே உச்ச நீதி மன்றத்தில் வழக்கு. இப்போது தமிழகமும் நாட்டுப் பற்றில் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது.
இதெல்லாம் போக திரையரங்குகளில் தேசியகீதம், ஜன கண மனஇசைக்கப்படவேண்டுமென்ற உச்சநீதிமன்ற உத்திரவால் விபரீத விளைவுகளை நாடு சந்தித்து வருவது நமக்குத் தெரியும். எழுந்து நிற்காதவர்களுக்கு தேசபக்த குண்டர்கள் தர்ம அடி கொடுக்கின்றனர். உடல் ஊனமுற்றவர் ஒருவரும் சிக்கியிருக்கிறார்.
பக்தாஸ், இப்டியெல்லாம் அடிச்சிடப்டாது எனும் ரீதியில், ஊனமுற்றோர் எழுந்து நிற்கவேண்டாமென்றும், திரைப்படத்திலேயே தேசிய கீதம் பாடப்படுமானால், அப்போதும் எழுந்து நிற்கவேண்டாமென்றும் உச்சநீதி மன்றம் கூறியது.
ஜனகனமணதான் நாட்டின் அதிகாரபூர்வ தேசிய கீதம் (National Anthem), வந்தேமாதரத்தின் முதல் இரு கண்ணிகள் தேசியப் பாடல் (National Song).
துர்கா தேவி என விதந்தோதப்படும் அன்னை இந்திராவின் ஆட்சியில்தான் தேசத்திற்கு அவமரியாதை இழைப்பதைத் தடுக்கும் சட்டம் (Prevention of Insults to National Honour Act, 1971) என ஒன்று இயற்றப்பட்டது. அதாவது அவசர நிலைக்கு முன்பே.
அச் சட்டத்தின் கீழ்தான் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்குமானால் உரிய மரியாதை செலுத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும் எனக் கோரி  வழக்கு தொடரப்பட்டது. கேட்டது ஒலிக்குமானால் உரிய மரியாதை என்பது மட்டுமே. கனம் உச்ச நீதிமன்றமோ திரைப்படம் துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும், அப்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும், எனக் கூற, ஒரே களேபரம்.
அது இடைக்கால உத்திரவே, அதனை எதிர்த்தே மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான் இப்போது வந்தே மாதர உத்திரவு.
இது நாள்தோறும் இந்தியா வானொலியில் நாம் கேட்கும் பாடல்.

பாடலின் முழு வடிவம்:
வந்தே மாதரம்
சுஜலாம் சுபலாம் மலயஜ சீதளாம்
சஸ்யஷ்யாமளாம் மாதரம்

ஷுப்ரஜ்யோத்ஸ்னா புலகிதயாமினீம்
புல்லகுசுமித த்ருமதள ஷோபினீம்
சுஹாசினீம் சுமதுர பாஷினீம்
சுகதாம் வரதாம் மாதரம்
சப்தகோடி காந்த காலகால நிநாட கராலே
த்விசப்த கோடி புஜேர் த்ருதகர  கர்வாலே
அபல கேன மா ஏதா பலே
பகுபல் தாரிணீம் நமாமி தாரிணீம்
ரிபுடலவாரிணீம் மாதரம்
வந்தே மாதரம்

துமீ வித்யா துமீ தர்மா
துமீ ஹ்ரிதீ துமீ மர்ம
தவம் ஹி ப்ராணாஹ் சரீரே

பஹுதே துமீ மா ஷக்தி
ஹ்ருதயே துமீ மா பக்தி
தோமாராயிப்ரதிமா கரி
மந்திரே மந்திரே

த்வம் ஹி துர்கா தசாப்ரஹார நாதாரிணீ
கமலா கமலதள விஹாரிணீ
வாணீ வித்யாயினீ நமாமி த்வம்

நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
சுஜலாம் சுபலாம் மாதரம்
ஷ்யாமளாம் சரளாம் சுஷ்மிதாம் பூஷிதாம்
தாரணீம் பரணீம் மாதரம்

முண்டாசு கவியின் மொழி பெயர்ப்பு:
நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
கூடு திண்மை குறைந்தனை என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)
அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே)
திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவோம்! (வந்தே)

பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1875ல் முதலில் இரண்டு கண்ணி அல்லது பத்திகளை எழுதுகிறார். கவிதையில் மிகக் கடினமான வங்க/வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பதாக அவரது மகளும் நண்பர்களும் விமர்சிக்கின்றனர். வேண்டுமென்றே நான் அப்படி எழுதவில்லை, தன்னெழுச்சியாக கற்பனையில் உதித்ததுதான் என்கிறார் பங்கிம் சந்திரர்.
ஏழாண்டுகள் கழித்து அவர் வெளியிட்ட ஆனந்த மடம் நாவலில், மேலும் சில கண்ணிகளுடன், வந்தே மாதரம் பாடல் இடம் பெறுகிறது. அதுவரை அக்கவிதை வெளியிடப்படவில்லை.
பிறகு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்துப் பாட, வந்தேமாதரம் இசைத் தட்டாக வெளியாகி, பிரபலமானது.
1905ல் வங்காளம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டபோது கிளர்ச்சியாளர்கள் தெருவெங்கும் வந்தே மாதரம் என முழங்கினர்.
வ உ சி கப்பல் வாங்கியது அந்தக் கட்டம்தான் எனவேயே கப்பலோட்டிய தமிழனில் ’வந்தேமாதரம் என்போம்’ எனும் பாரதி பாடல் ஒலிக்கிறது.

வந்தே மாதரத்தில் லஷ்மி, துர்கை, சரஸ்வதி எல்லாம் வருகின்றனர், அது முஸ்லீம்களின் ஏக இறை நோக்கிற்கு எதிரானது. பழமைவாதத்தில் ஊறிய முஸ்லீம்கள் இதனை எதிர்க்காமல் விடுவார்களா, எனக் கேட்கின்றனர் வலதுசாரி சிந்தனையாளர்கள். ஜின்னா வேறு ஆட்சேபித்திருக்கிறார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்னொருபுறம் முரளிதரனாரின் நாட்டுப் பற்றை வளர்க்கும் நேற்றைய தீர்ப்பிற்குப் பின், நமது தௌஹீத் போன்ற அமைப்புக்கள், ஆ ஊ எனக்  குதிக்கின்றனவா, சரி இந்த முஸ்லீம்கள் இப்படித்தான், என எண்ணத் தோன்றும்.
ஆனால் பிரச்சினை லஷ்மி வகையறாக்களால் மட்டும் இல்லை. சரியாகச் சொல்லவேண்டுமானால், பாடல் இடம் பெறும் ஆனந்தமடமே அனைத்து விமர்சனங்களுக்கும் காரணமாக அமைந்தது.
வங்கத்தை உலுக்கிய 1770 பஞ்சத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் அந்த நாவல் முஸ்லீம்களை மோசமாக சித்தரிக்கிறது. பஞ்சத்தின் போது சன்னியாசிகளுக்கும் பிரிட்டிஷாருக்கும் கடும் மோதல் மூள்கிறது – சன்னியாசிகளுக்கு அப்போதெல்லாம் யாத்திரைகளின் போது கிஸ்தி வசூலிக்கும் உரிமை இருந்தது. பஞ்சம், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கட்டவேண்டிய வரி, இந்நிலையில் விவசாயிகள் சாமியார்களுக்கு எங்கிருந்து கொடுப்பது? நாங்கள் என்ன செய்வோம் என மன்றாடுகின்றனர். கொதிக்கின்றனர் சன்னியாசிகள்.  கஜானாக்களை சூறையாடுகின்றனர். கிழக்கிந்தியக் கம்பெனி சிப்பாய்களுடன் நிகழும் மோதல்களில்  நூற்றுக்கணக்கில் இந்த சாமியார்கள் கொல்லப்பட்டனர்.
இந்து, முஸ்லீம் சாமியார்கள் இருவருமே இந்த புரட்சியில் பங்கேற்றிருந்தனர். ஆனால் ஆனந்த மடமோ அதை ஒரு இந்து சன்னியாசிகளின் புரட்சி, விவசாயிகளைக் கொடுமைப் படுத்தியது நவாப்கள்தான், பிரிட்டிஷாருக்கும் அப்போது நடந்த படுகொலைகளுக்கும் சம்பந்தமில்லை, என்று கூறுகிறது. குறிப்பாக முஸ்லீம்களை வங்க மக்களின் எதிரிகளாகக் காட்டுகிறது. முஸ்லீம்களை வீழ்த்துவோம், மசூதிகளைத் தகர்ப்போம்,  கவலை வேண்டாம் இந்துக்களே நம்மைக் காப்பாற்ற பிரிட்டிஷார் வந்துவிட்டனர் என்றெல்லாம் சொல்கிறது.
இன்னொன்றையும் நாம் நோக்கலாம். பாரதமாதா அன்னியனுக்கு அடிமைப்படமுடியுமா என்று தன்னை மறந்து உணர்ச்சி ததும்ப பாடிய பங்கிம் சந்திரரும் நீண்ட காலம் துணை ஆட்சியராகப் பணியாற்றினார். இறுதிவரை விசுவாசமாகவும் இருந்திருக்கிறார். காலனீய அரசு அவருக்கு விருதெல்லாம் வழங்கி கௌரவித்திருக்கிறது.
அப்படிப்பட்ட  ஒரு நபர் முஸ்லீம்கள் மீது விஷத்தைக் கக்கி எழுதியுள்ள நாவலில் இடம்பெறும் ஒரு பாடல், பாரதமாதாவை இந்துக் கடவுளாகவும் சித்தரிக்கும் ஒரு பாடல், அதனை நாட்டு விடுதலை முழக்கம் என்றால்  முஸ்லீம்கள் ஆத்திரப்படுவதில் வியப்பென்ன?
1905 கட்டத்தில் காங்கிரஸ் மாநாடுகளில் வந்தே மாதரம் பாடப்படத் தொடங்கியது. ஆனால் முஸ்லீம்களிடமிருந்து எதிர்ப்பெழ, முதல் கண்ணியோடு நிறுத்திக்கொண்டனர்.
1937ல் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரசும் வந்தேமாதரம் வானொலியில் ஒலிபரப்பக்கூடாதென தடைவிதித்தது.
இன்றளவும் அகில இந்திய வானொலியிலும் சரி நாடாளுமன்ற அவைகளிலும் சரி, முதல் இரண்டு கண்ணிகள் மட்டுமே பாடப்படுகின்றன.
மன்மோகன் சிங் அரசு 2006ல் வந்தே மாதரம் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட நூறாவது ஆண்டு எனக் கூறி அதைக் கொண்டாடியது. உடனே சில முஸ்லீம் தலைவர்கள் வழக்கம்போல எதிர்க்க, பிரச்சினை மீண்டும் தீப்பிடித்துக்கொண்டது.
வந்தே மாதரம் மட்டுமல்ல ஜனகன மண கூட நாடாளுமன்றத்தில் இசைக்கப் படத்துவங்கியதே 1992ல்தான், அதுவும் பாஜக தலைவர்களில் ஒருவரும் இன்றைய உ.பி ஆளுநருமான வி பி நாயக்கின் வற்புறுத்தலின் பேரில்தான். பிரணாப் முகர்ஜி கூட அவருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார். தேச, மத வெறிக்கு தூபம் போடுகிறது பாரதீய ஜனதா, ஆஹா சபாஷ் சபாஷ் என்கிறது காங்கிரஸ். இந்நிலையில் முஸ்லீம்கள் மத்தியில் தௌஹீத் போன்ற இயக்கங்கள் வளர்வது இயற்கைதானே.
இஸ்லாத்தைத் தழுவிய நம் ஏ ஆர் ரெஹ்மானும் நமக்கொரு வந்தே மாதரம் அளித்திருக்கிறார் என்பதையும் நாம் மறக்கலாகாது
ஆனால் சமூக விரோதிகளான சங்கிகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வந்தேமாதரத்தைப் பயன்படுத்தி, முஸ்லீம்களுக்கெதிராக துவேஷ ப் பிரச்சாரம் செய்கின்றனர்.
சரி அவர்கள் ஆட்சி இப்போது.  முன்னெப்போதையும்விட அவர்கள் வலிமையுடன் திகழ்கின்றனர். 2019ல் கூட மீண்டும் மோடிதான் எனக் கணிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்னுமொரு தமிழர், அதுவும் தலித், சதாசிவத்தாரின் பாதையில் பயணித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகலாம். ஆகட்டுமே. மகிழ்ச்சிதான்.
ஆனாலும் எதற்கும் இருக்கட்டுமே என்றுதான் இக்கட்டுரை. ஏதாவது ஒரு கட்டத்தில் இதுவும் தேவைப்படக்கூடுமே.
(பி.கு. தன் செலவில் கட்டுரையாளர் நீதியரசர் முரளிதரன் அவர்களுக்கு ஆனந்த மடம் புதினத்தின் தமிழ் அல்லது ஆங்கில வடிவை அனுப்பிவைக்கத் தயார்.)
த.நா.கோபாலன்.
T N Gopalan
T.N. Gopalan is a senior journalist based in Chennai

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.  அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே ஒ வ்வொரு பத்திரிகையும் சில விஷயங்களைப் பெருமிதமாய்ச் சொல்வார்கள். தாங்கள் தான் முதன்முதலில் போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தோம், வீட்டு வசதி வாரிய  முறைகேட்டினை அம்பலப்படுத்தினோம், இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாய்ச் செய்து வருகிறோம் என்று, அவர்களுக்கு அதில் உரிமை இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உரிமை கோருவார்கள்,அதில் பெருமிதமும் சாதித்து விட்ட திருப்தியும் வெளிப்படும். ஆனால் இந்த 'இந்தியா டுடே'காரர்களுக்கோ வேறு விதமான உரிமை கோரல். பாலியல் இச்சைகளின் ஆய்வுகள் தொடர்பான நீண்டகால உரிமை கோரல் தான். தாங்கள் தான்  11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தேசத்தின் தலையணை பேச்சுகளை படம் பிடித்துக் காட்டி வருகிறோம் எங்க‌ளை விட யாருக்கு இதில் தகுதியும் அனுபவமும்  இருக்கிற‌து என . உங்களுக்கு இது வக்கிரமாகவும் கழிசடையின் பிறப்பிடமாகவும் தெரியலாம்,ஆனால் அவர்களுக்கோ அது பெருமிதம். ஆனால் அவர்களுக்கே இந்த வழக்கமான பள்ளிய‌றை, கழிப்பறை பாலியல் தொடர்பு ஆய்வுகள்,இட்டுக்கட்டல்கள் அதைத்தொடர்ந்த  பூச்சுகள் அலுத்து விட்டதா என்று தெரியவில்லை.புதிய...